PrabhuNagu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  PrabhuNagu
இடம்
பிறந்த தேதி :  04-Apr-1992
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Mar-2016
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  29

என் படைப்புகள்
PrabhuNagu செய்திகள்
PrabhuNagu - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2016 10:23 pm

ஆயிரம் காரணம் உண்டு
நான் உன்னை விட்டுச் செல்ல
இருந்தும் ஒரே ஒரு காரணம் மட்டுமே
சொல்வேன்-நான் உன்னோடு வாழ


நீ என் உடல் அல்ல உயிர் ...................

மேலும்

காதலின் ஆழம்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Aug-2016 10:15 am
PrabhuNagu - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Aug-2016 10:11 pm

மனைவி கூறுவது தர்மம்,அவள் தரப்பில் நியாயம் உண்டு ,என்றாலும் உறவுகளுக்கிடையில் தர்மம் ,நியாயம் பார்த்து நடந்து கொள்ள வேண்டுமா அல்லது கண்முன் தவறு என்று தெரிந்தும் அமைதியாக செல்ல வேண்டுமா ????

மேலும்

கனவன் மனைவிக்குள் ஏதேனும் பிரச்சனையென்றால் இருவரும் நல்ல மனநல மருத்துவரிடம் செல்லலாம் 30-Aug-2016 10:10 pm
PrabhuNagu - PrabhuNagu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2016 9:46 pm

ஒரே ஒரு உறவுக்காக தன் முகவரியையே மாற்றி வரும் மனைவி, தன் கணவனிடம் எதிர் பார்க்கும் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும்???

மேலும்

என்னுடைய மன குழப்பத்திற்கு தீர்வு காணவே இந்த கேள்வி. கேள்விக்கு விடையளித்த அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி.... 25-Aug-2016 10:00 pm
அதிகபட்ச எதிர்பார்ப்பு ஒண்ணே ஒண்ணுதாங்க.! "தன் கை பிடித்தவன் தன் கைக்குள்"... முக்கியமாக தாரத்துக்கு பின் தாய்.! 24-Aug-2016 4:19 pm
புகுந்த வீட்டு புது உறவு உனது குடும்பமாக ஏற்று அன்பு இல்லமாக ,அனைவரும் போற்றும் புதுமைப் பெண்ணாக வாழ விருப்பம் தமிழ் அன்னை அருளால் வாழ்க வளமுடன் 24-Aug-2016 9:12 am
தன்னை நேசிக்கும் உன்னதமான அன்பு 23-Aug-2016 8:58 pm
PrabhuNagu - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 7:40 am

இக் கேள்விக்கான தங்களின் பார்வையிலான பதில்களை பகிருங்கள் தோழர்களே........

மேலும்

காதல் என்பது அவரவர் உரிமை எனலாம். ஆனால் காதலில் காதலிக்கோ,காதலனுக்கோ த்ரோகம் இல்லாமல் இருக்க வேண்டும்…இது பெற்றோருக்கு செய்யும் த்ரோகம் அல்ல…எனினும் அவர்கள் சம்மத்ததோடு திருமணம் செய்து கொள்ள மேலும் சிறப்பு. 25-Sep-2018 4:28 pm
அன்பிற்கு சட்டங்கள் ஏது, நாம் அனைவரும் ஒரு உண்மையை ஆராய்ந்து பார்க்க மறந்துவிட்டோம். என்னவென்றால், எந்த ஒரு பிள்ளையும் தன் பெற்றோர்க்கு துரோகம் இளைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நம் பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்க வேண்டு என்று பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள். ஆக தங்களால் இயலாத பட்சத்திற்கு ஒருவருக்கொருவர் சங்கடமான சூழலை கொடுத்து விடுகிறோம். இப்படி ஒரு சூழல் அமையும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை தன் காதலை தன் பெற்றோரிடம் சொல்ல வரும்போது அதன் மனது படும் பாடு அதற்க்கு மட்டுமே தெரியும், அதே நேரத்தில் பெற்றோரின் நிலையையும் அறிவர். வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்க போவதை யாரும் விரும்பி நாடுவது இல்லை. ஆனால் இத்தகைய சங்கடமான சூழலை சமாளிக்கும் மனப்பாங்கு இருவருக்கும் வேண்டும். எப்படி பட்ட சங்கடமான சூழலையும் சுமூகமாக மாற்றும் எண்ணம் அனைவருக்கும் வேண்டும். அது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமையும் கூட. நான் பிள்ளைகள் செய்யும் தவறை நியாயப்படுத்துவதற்காக இல்லை, மாறாக தன்னை மீறி தவறு செய்து விடுகின்ற பிள்ளைகளின் இக்கட்டான சூழலை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறேன். பிள்ளைகளின் காதலை அவமானம், தோல்வி என்று நினையாமல் "என் பிள்ளையின் மனதிற்கு பிடித்த இடத்தில் நான் திருமணம் செய்து வைத்தேன்" என்று அனைவரிடத்திலும் பெருமையாக கூறிக்கொள்ள வேண்டும்(முடியாவிட்டாலும்). அதே நேரத்தில் பெற்றோர் தான் தேர்ந்தெடுத்த ஒருவரை வெறுத்து விட கூடாது என்பதிலும் பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும். முடிவு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, சகித்து நடந்துகொள்ள வேண்டும். 29-Sep-2016 7:41 pm
துரோகம் தான், ஏன்/ தன்பிள்ளை தனக்கு மட்டும் சொந்தம் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள் தங்களுக்கு தெரியாமல் எதுவும்செய்ய மாட்டார்களென்று பிள்ளைகள்மீது முழுநம்பிக்கை அன்பு gவைத்துச்செல்லமாக வளர்க்கிறார்கள் , ஆனால் ஒருசில பிள்ளைகள் துணிச்சல் மிக்கவர்களாகி தன் எண்ணப் படி காதலிக்க தொடங்கி விடுகிறார்கள் ,காதலிப்பது தப்பு இல்லை , நம் பெற்றோர் இதற்கு சம்மதிப்பார்களா அவர்களை மனம் வருந்த பண்ணலாமா /உண்மையான அன்பும் அக்கறையும் பெற்றோர் மீது இருந்தால் நிச்சயமாக பிள்ளைகள் தன் அற்ப ஆசைக்கும் காதலுக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள் 31-Aug-2016 1:57 pm
மிக்க நன்றி தோழி..... 28-Aug-2016 2:26 pm
PrabhuNagu - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Aug-2016 9:46 pm

ஒரே ஒரு உறவுக்காக தன் முகவரியையே மாற்றி வரும் மனைவி, தன் கணவனிடம் எதிர் பார்க்கும் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருக்க வேண்டும்???

மேலும்

என்னுடைய மன குழப்பத்திற்கு தீர்வு காணவே இந்த கேள்வி. கேள்விக்கு விடையளித்த அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி.... 25-Aug-2016 10:00 pm
அதிகபட்ச எதிர்பார்ப்பு ஒண்ணே ஒண்ணுதாங்க.! "தன் கை பிடித்தவன் தன் கைக்குள்"... முக்கியமாக தாரத்துக்கு பின் தாய்.! 24-Aug-2016 4:19 pm
புகுந்த வீட்டு புது உறவு உனது குடும்பமாக ஏற்று அன்பு இல்லமாக ,அனைவரும் போற்றும் புதுமைப் பெண்ணாக வாழ விருப்பம் தமிழ் அன்னை அருளால் வாழ்க வளமுடன் 24-Aug-2016 9:12 am
தன்னை நேசிக்கும் உன்னதமான அன்பு 23-Aug-2016 8:58 pm
PrabhuNagu - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2016 9:33 pm

கனவுகளுடன் நீ
காதலுடன் நான்

கண்ணில் நீ
கண்ணீருடன் நான்

இசையில் மிதந்து நீ
திசையை மறந்து நான்

மொத்தத்தில்,
என்னை மறந்து
தூக்கத்தில் நீ
உன்னை நினைத்து
ஏக்கத்தில் நான்.........

மேலும்

காதலின் சோகங்கள் காலம் கடக்கையில் இன்பமாகும்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2016 6:46 am
PrabhuNagu - PrabhuNagu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 10:36 pm

ஒவ்வொரு நொடியும்
இருவரும் சண்டையிட்டாலும்
ஒரு நொடி உன்னை காணாவிட்டால்
பதறுகிறது என் உள்ளம்
நான் தொலைத்தது
உன்னையா?? என்னையா?? என்று...

மேலும்

நன்றி அன்பரே !!! 18-May-2016 4:13 pm
இருவரும் தொலைந்தே போகின்றனர் 11-May-2016 11:24 am
PrabhuNagu - PrabhuNagu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2016 9:29 am

காதலும் கள்ளத்தேனும்
ஒன்றுதான் ,
பிறர் அறியாமல்
பருகினால் மட்டுமே
அதன் ஆழமான
ருசி தெரியும்.....

மேலும்

நன்றி அன்பரே!! 09-Apr-2016 9:18 pm
உண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Apr-2016 11:39 am
PrabhuNagu - PrabhuNagu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2016 8:09 am

தேடாமல் கண்டெடுத்த
தெய்வத்தைவிட்டு
தேடித் திரிந்தேன்
தெருக்கள் எல்லாம்...

அம்மா!!!
நீ திட்டும் பொழுதெல்லாம்
சீண்டினேன் -இன்று
உன் திட்டல் என்னைத் தீண்ட
வேண்டினேன்...

காற்றுடன் போட்டியிட்டேன்
சுற்றித்திரிய - இன்று
காத்திருக்கிறேன் உன்
கட்டுப்பாட்டில் கிடக்க...

ஆசைகள் ஆயிரம் உண்டு
அன்னை உன் மடியில் படுத்து பேச,
இருந்தும் நாட்கள் கிடைக்கவில்லை
உன்னை காண...

அம்மா ,
உன்னை கட்டியணைத்து
கதைகள் பல பேசவேண்டும்,
உன்னை பிரிந்து நான்
பட்ட வேதனையையும்
தொட்ட துயரத்தையும்
கண்ணீரில் பேச வேண்டும்..
எங்கேயோ நீ- உன் நினைவில்
இங்கே நான்.
வாழ்க்கை தேடி வந்தேன்
வழி

மேலும்

அருமை! 17-Mar-2016 9:35 pm
PrabhuNagu - PrabhuNagu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2016 11:55 am

மரணத்தின் முடிவில்
வாழ்வின் அருமை
நம் மனித வாழ்க்கை !!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே