ராஜேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ராஜேஷ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 158 |
புள்ளி | : 24 |
இல்லாதவன் வீட்டில்
ஆண்டில் அநேக நாட்களில்
தீபாவளி
பட்டாசாய் கவலைகள்
வெடிக்க
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
கையெட்டும் இனிப்புகள்
தீபங்கள் கையில் ஏந்த
நினைக்க
எரிபவைகளோ
தீபந்தங்கள்
தீபாவளிகள்
கடக்கும் வேளைகளில்
தீயப்பா வலிகள்
என்ற புலம்பல்களே
மிச்சம்
[முன் குறிப்பு : இன்று பெங்களூரில் 4 வயது சிறுமியை அந்த பள்ளியின் ஆசிரியரே பலாத்காரம் செய்த கொடுமையை செய்தியில் பார்த்து மனம் வெறுத்து எழுதியது... நானும் பெங்களூரிலேயே இருப்பதால் இந்த நிகழ்வு என் நெஞ்சில் ஈட்டியை பாய்த்தது... தாங்க முடியாமல் வரிகளில் ஆறுதலை தேடுகிறேன்...]
ஆசிரியர் என்பது
.
.
.
.
.
வாழ்கையில் கணக்கை சொல்லி தருவதா
இல்லை
வாழ்க்கை கணக்கையே கொள்ளி இடுவதா?
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதா
இல்லை
குழந்தையை காமமும் மென்று திண்பதா?
ஓடி விளையாடும் பாப்பாவா
இல்லை
ஓடி ஒளிந்திடும் பாப்பாவா
கல்வியை கண்திறந்து வைப்பீரா
இல்லை
கலவியை கண்திறந்து வைப்பீரா
ஒழுக
மழை நாள் இரவு
மின்வெட்டு
மெழுகுவர்த்தி வெளிச்சம்
நீ
நான்
விடுதலை வேட்கையை விதைத்துச் சென்றது
ஒவ்வொரு புகைப்பிலும்
விட்டுசென்ற சாம்பல்.....
மழை நாள் இரவு
மின்வெட்டு
மெழுகுவர்த்தி வெளிச்சம்
நீ
நான்
போராளியின் படம் கேட்டாய்
கொடுத்தேன்.
இவன் எப்படி போராளியாக முடியும் ?
என்றாய்.
இவன் எப்படி போராளியாக முடியாது
என்றேன்?
சீருடை எங்கே?
கோபப்பார்வை எங்கே?
பரந்த தோள்கள் எங்கே?
துப்பாக்கி எங்கே?
என்றாய்.
இவையெல்லாம் எதற்கு என்றேன்?
போராட என்றாய்.
கடைசி குடிமகனுக்கு உடையில்லாமல்
அரைநிர்வானமாய் இருந்தபோது
இவனும் சுயமாக துகிலுரித்து
அரைநிர்வானமாய் நின்றானே! அதுதான் சீருடை.
எதிரியையும் நேசித்தானே
அதுதான் போர் யுக்தி!
அகிம்சையையும், அன்பையும் தாங்கிச் சென்றானே
அதுதான்
அவன் துப்பாக்கியும் தோட்டாக்களும்! என்றேன்.
இப்போது நீ சொல்,
உன் போராளியின் நோக்கம் என்னவென்றேன்?
போராளியின் படம் கேட்டாய்
கொடுத்தேன்.
இவன் எப்படி போராளியாக முடியும் ?
என்றாய்.
இவன் எப்படி போராளியாக முடியாது
என்றேன்?
சீருடை எங்கே?
கோபப்பார்வை எங்கே?
பரந்த தோள்கள் எங்கே?
துப்பாக்கி எங்கே?
என்றாய்.
இவையெல்லாம் எதற்கு என்றேன்?
போராட என்றாய்.
கடைசி குடிமகனுக்கு உடையில்லாமல்
அரைநிர்வானமாய் இருந்தபோது
இவனும் சுயமாக துகிலுரித்து
அரைநிர்வானமாய் நின்றானே! அதுதான் சீருடை.
எதிரியையும் நேசித்தானே
அதுதான் போர் யுக்தி!
அகிம்சையையும், அன்பையும் தாங்கிச் சென்றானே
அதுதான்
அவன் துப்பாக்கியும் தோட்டாக்களும்! என்றேன்.
இப்போது நீ சொல்,
உன் போராளியின் நோக்கம் என்னவென்றேன்?
நண்பர்கள் (51)

C. SHANTHI
CHENNAI

கே-எஸ்-கலைஞானகுமார்
இலங்கை (கொஸ்லந்தை)

மீ மணிகண்டன்
தமிழ்நாடு, இந்தியா
