vinoth - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vinoth
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-May-2014
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  2

என் படைப்புகள்
vinoth செய்திகள்
vinoth - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2016 12:15 pm

அடியே, உனையே
நினைத்தேன் மழையே
அடியே, எனைஏன்
கெடுத்தாய் சிலையே

உயிரிலே உணர்விலே
கலந்த ஓர்
பதுமையே
வரிகளில் கவிகளில்
நுழைந்த நீ
புதுமையே

என்னென்ன செய்தாயடி
காதல் மரமேறி
கொய்தாயடி
வண்ணங்கள் தந்தாயடி என்
வாழ்வை விழி
கிண்ணத்தில் கொண்டாயடி

உருகியே போகிறேன்
பறவையாய் ஆகிறேன்
பணிகளை மறக்கிறேன்
தனிமையில் தவிக்கிறேன்

அஞ்சாத நானே
பஞ்சாங்கம் பார்த்தேன்
ஏதேதோ என்னுள்
செஞ்சாளே பூர்த்தேன்

மேலும்

அழகான காதல் வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2016 11:45 am
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2015 2:04 pm

கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................

எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................

கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................

கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
...............................

மேலும்

மனதோடு பேசியது வரிகள் அத்தனையும் உண்மை நட்பே!! 25-Jul-2015 5:50 pm
நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 12:09 pm
நன்றி தங்கள் வரவில் மகிழ்ச்சி நட்பே 10-Jul-2015 12:09 pm
நல்ல ரசனை தோழரே மிக அழகான வரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் 10-Jul-2015 10:32 am
vinoth - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2015 1:25 pm

அகரமுதலியிலும் பொருள் இல்லை நின்
அல்லிவிழி பார்வை
சொல்லியது யாது ..............?

பித்தும் பிடித்துவிட்டது
அதை எண்ணி எண்ணி காச்சலில்
பத்தும் கிடைத்துவிட்டது

சத்தம் அற்ற பொருள் உள்ளே
யுத்தம் நடத்துதடி
நித்தம் உன் நினைவு மனதை
குத்தி குடையுதடி

இரவில் உறக்கம் இல்லை
அதற்கும் இரக்கம் இல்லை
மனதில் பறக்கும் மின்மினிக்கு
என்னில் விளக்கம் ஏதும் இல்லை

காதல் சதை கிழித்து, பெருகும் குருதியை
காமம் அனுபவித்து ருசிக்கிறது
பரிதவித்து நிற்கும் எனக்கு உந்தன்
வெகுதொலைவு வலிக்கிறது

மேலும்

அருமை 04-Feb-2015 3:47 pm
vinoth - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 2:24 pm

ராமனாய் வாழ் என
சொன்னார்கள் வில் எடுத்தேன்
மோசமானவன் என்றார்கள்

கிருஷ்ணனை கடவுள் என்றார்கள்
இருமணம் புரிந்து கொள்ள கேட்டேன்
பாவி என்றார்கள்

ஏசு போல் இரு என்றார்கள்
மறு கன்னம் காட்டினேன் கோழை
என்றார்கள்

புத்தனை சிறந்தவர் என்றார்கள்
மரத்தடி அமர்ந்தேன் பைத்தியம்
என்றார்கள்


அதுபோல் வாழ் இதுபோல் வாழ்
என முன்னுதாரணம்
காட்டினர்

அதுபோல வாழ
நினைத்தால் பின் இருந்து
தூற்றினர்

அதுபோல் இதுபோல்
என சொல்லும் முன்
எவனிடம் குறையே இல்லை ..........?

என பார்த்து சொல்
நான் அதுவரை
நானாகவே வாழ்கிறேன்

மேலும்

கருத்து பொதிந்த வரிகள் அழகு! 06-Apr-2015 10:00 pm
நன்றி நண்பரே 23-Jan-2015 11:09 am
அருமை 23-Jan-2015 11:06 am
நன்றி நண்பரே 23-Jan-2015 10:42 am
vinoth - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2015 9:27 pm

விண்டதொரு உலகில் தண்டது நிமிர்த்தி
கண்டது இங்கு உயரிய சிறப்பு
கொண்டதன் பெயரோ மானிட பிறப்பு

நாலும் தெரிந்திட ஆறதை பெற்று
நால்திசை சென்று பாரதை கற்று
சொல் முதல் வில் வரை
நாளும் வளர்த்து உலகை
காலடி வீழ்த்திய இனத்தோன்

தொழில்வழி வகுத்த பிரிவினை இன்று
தொடர்வழி வருகையில் சாதியாய் நின்று
இடர்தனை கொடுக்குது உயிர்தனை கொன்று
நடந்திடும் போர்களோ முடிவது என்று......?

இறையது வழிபடும் முறைதனை தேடி
மனமதை ஒருநிலை படுத்திட நாடி
மதமதை தொடர்ந்திட்ட மானுடம் கோடி
மனிதத்தை இழந்திட்ட சோகமே மீதி

பிரிவினை வளர்த்திடும் சாதிகள் வேண்டாம் தன்
பிறப்பை மறந்திட்ட மதங்களும் வேண்டாம்
பிரியமும் நேசமும

மேலும்

நன்றி தோழரே மகிழ்ச்சி 06-Jan-2015 10:08 pm
கவிதை அருமை நண்பரே - சு. சங்கு சுப்ரமணியன். மற்றும் ச.சந்திரமௌலி 06-Jan-2015 7:47 pm
நன்றி நண்பரே 06-Jan-2015 3:52 pm
//தொழில்வழி வகுத்த பிரிவினை இன்று தொடர்வழி வருகையில் சாதியாய் நின்று இடர்தனை கொடுக்குது உயிர்தனை கொன்று நடந்திடும் போர்களோ முடிவது என்று......? // கருத்துள்ள வரிகள் ! கவிதை அருமை ! வாழ்த்துக்கள் ! 06-Jan-2015 3:48 pm
vinoth - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2014 8:50 am

கள்வனே
மது கள்வனே

என் இதழ் தீண்டி அதில்
உன் கரம் தோண்ட
உடையும் தேகத்தில்
உடைத்தெழும் மோகத்தில்
மெய் சிலிர்த்து நான் முனகலிட

நீயோ
ஆர்பாட்டம் இன்றி
அமைதியாய்
உன் மென்கரம்
கொண்டு விளையாடி
சத்தமின்றி ஓர்
முத்தம் கொடுத்து என்
மொத்த பெண்மையை
சுத்தமாய் ருசித்து

பசி தன்னையாற்றி
மலர் தேகம் வாட்டி
பறந்துவிடும் கள்வனாய்............

தப்பி போகிறாயே
நானோ தப்பாய் நினையாது
தினம் தினம் உனக்காக ரொப்பி
வைக்கிறேனே நீ குடிக்க
மதுவோடு என்
ஆசைகளையும் அதை
உணர்வாயா...........?

என் மன கள்வனே
மது கள்வனே
இதழ் கள்வனே
இம்மலரின் இதய கள்வனே............!

மேலும்

நன்றி நட்பே 07-Jul-2014 4:40 pm
அழகிய படைப்பு இரட்டை பொருள் தந்து முடிவில் நந்தவனத்தை அடைந்தது .....வாழ்த்துகள் நண்பா .... 07-Jul-2014 4:02 pm
நன்றி நட்பே 07-Jul-2014 8:54 am
அழகு நட்பே!! 07-Jul-2014 8:53 am
vinoth - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2014 10:19 pm

இடை தெரிகிறது
இருந்தாலும் என்
உடை தவறில்லை

நடை பாதையில்
நான் நடை போகையில்
கடை பார்வையில்
என் உடை பார்க்கையில் காமம்
உடைப் பவன்
தவறு.............!

விவாதம் செய்வது
மகளிர் சங்கம்
விட்டு கொடுத்தால்
அது அவர்களுக்கு பங்கம்.......!

திரை போடு
மறைவிடத்திற்கு நீ
திரை போடு
ஆக்கத்தில் உரிமை கொள்
ஆடைகளில் எல்லாம்
ஈடு கொடுக்காதே

ஆணுக்கொரு சட்டம்
பெண்ணிற்கு ஒரு சட்டமா
அடிமைத்தனம் செய்கிறீர்

அடிப்படைகள் சரி செய்கிறோம்
அடிமைத்தனம் செய்யவில்லை. .........

பண்பாடு காப்பதும் உன்
கடனே
பெண் தன்னோடு காண்பதை
வெளிகாட்டாது இருப்பின்
மிக நலனே.............

ஆண் இழக்க ஏதுமில்லை

மேலும்

ம்ம்ம் ஆம் எது நடைமுறையில் நம் கையில் இருக்கிறதோ அதை முதலில் சரி செய்ய பாப்போம் ................. எனபது என் நிலை ............. கடுமையான சட்டம் வரட்டும் வேண்டாம் என சொல்லவில்லை ................ வரட்டும் ஜனநாயக நாட்டில் தூக்கு தண்டனைக்கு ஆயிரம் முறை யோசிக்கும் நாட்டில் அது எப்போது சாத்தியம் என்பதே என் கேள்வி 10-Jul-2014 4:05 pm
நான் சொன்னது " 'பெண்ணே,நீ ஒதுங்கி போ,போர்த்திக்கொண்டு போ' என்று சொன்னால் எல்லாம் மாறிவிடுமா? " என்பது தான் நீங்க சொல்ற மாதிரி போர்த்திக் கொண்டு ஒரு பெண் வீட்டுக்குள் இருந்தால் கூட விடாது துரத்தும் மிருகங்கள் இருக்கிறார்கள்.... கடுமையான தண்டனைகள் மற்றும் சுயஒழுக்கம் மட்டுமே இதிலிருந்து கொஞ்சம் காப்பாற்றும்... 10-Jul-2014 3:56 pm
இங்க போதுமான விளக்கங்கள் கொடுத்துவிட்டேன் இனியும் என் நிலையை உணர்த்த தேவை இல்லை என நினைக்கிறேன் ................... கருத்துக்களை ஏற்று கொள்வதும் ஏற்காததும் அவர் அவர் விருப்பம் ஆனால் என் நிலைப்பாடு ஒன்றே அவற்றை கிழே சொல்லிவிட்டேன் ......................... நன்றி 10-Jul-2014 3:51 pm
இங்க போதுமான விளக்கங்கள் கொடுத்துவிட்டேன் இனியும் என் நிலையை உணர்த்த தேவை இல்லை என நினைக்கிறேன் ................... கருத்துக்களை ஏற்று கொள்வதும் ஏற்காததும் அவர் அவர் விருப்பம் ஆனால் என் நிலைப்பாடு ஒன்றே அவற்றை கிழே சொல்லிவிட்டேன் ......................... நன்றி 10-Jul-2014 3:51 pm
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) பசப்பி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2014 10:33 am

செந்தமிழ் எந்தன் மொழி ஆகும்
தமிழினம் எந்தன் வழியாகும்
அறிவியல் அறவியல் இரண்டிலுமே
மூத்தது எங்கள் குடியாகும் .....................!

இலக்கியம் வடிப்போம்
இலக்கணம் கொடுப்போம்
சிற்பக்கலையில் சரித்திரம் படைப்போம்
காதலை வளர்ப்போம்
காவியம் படைப்போம்
அனைத்தும் அறிந்தவன் தமிழனடா
அவன் சிறப்பினை சொல்கிறேன் கேளுமடா......!

கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!

கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மன

மேலும்

நன்றிபா 27-Jul-2014 10:43 pm
மகனே! உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ! உன் தந்தையின் வாழ்த்துக்கள் ! 27-Jul-2014 7:33 pm
அருமையான படைப்பு நண்பரே.. 27-Jul-2014 7:02 pm
நன்றி தோழரே 16-Jul-2014 8:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
சரவணகுமார்

சரவணகுமார்

திண்டுக்கல்
பசப்பி

பசப்பி

சவுதி பணி (அரும்பாவூர்)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சரவணகுமார்

சரவணகுமார்

திண்டுக்கல்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பசப்பி

பசப்பி

சவுதி பணி (அரும்பாவூர்)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பசப்பி

பசப்பி

சவுதி பணி (அரும்பாவூர்)
சரவணகுமார்

சரவணகுமார்

திண்டுக்கல்
மேலே