sathyaswaroop - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sathyaswaroop
இடம்:  nagercoil
பிறந்த தேதி :  12-Dec-1965
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Aug-2013
பார்த்தவர்கள்:  317
புள்ளி:  78

என்னைப் பற்றி...

தமிழ் என் உடன் பிறந்தவள் ..உயிரோடு கலந்தவள் .. ...பாரதியின் கவிதை களே என் இள வயது தோழி...இன்றும் என் இள ந்தோழி .....

என் படைப்புகள்
sathyaswaroop செய்திகள்
sathyaswaroop - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2018 11:00 am

ஏ புள்ள என்ன மச்சான்
வா புள்ள எங்க மச்சான்
தென்ன மரத்தோப்புக்குள்ள
தன்னந்தனிமையிலே
குச்சிவீடு கட்டிக்கிட்டு
கொழந்த குட்டி பெத்துக்கிட்டு

ஏ மச்சான் என்ன புள்ள
வா மச்சான் எங்க புள்ள
வெவசாயம் பாத்து க் கிட்டு
வௌ நெலத்த சேத்துக்கிட்டு
புள்ளகள படிக்க வச்சு
புது வாழ்க்க தொடங்கிடுவோம்

ஏ புள்ள என்ன மச்சான்
போ புள்ள எங்க மச்சான்
மழ மேகம் காங்கலியே
மண்வெட்டிக்கு வேல இல்ல
வெள்ளாம பொய்த்து ப்போச்சு
வெடிச்சுக்கெடக்கு நெலங்களெல்லாம்

ஏ மச்சான் என்ன புள்ள
வா மச்சான் எங்க புள்ள
மரங்கள நாம் நட்டு வைப்போம்
மழ மேகம்

மேலும்

sathyaswaroop - sathyaswaroop அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2017 3:23 pm

தந்தையர் தினத்திற்கு
அப்பாவிற்கு என்ன தரலாம்
கைக்கடிகாரம் கூட சுமையாக
தெரிந்த உன் கைகளுக்கு
பேரப்பிள்ளைகளை தூக்கிச் சுமப்பது
மட்டுமே சுகமாக இருந்தது
புத்தகம் ?படிக்காத புத்தகங்கள் ஏதும் இல்லை
பணமோ பகட்டோ பதவியோ
என்றுமே பிடித்ததில்லை
பாட்டு ?
நீ கேட்காத பாடாத பாடலில்லை
பல்கலைக்கழகத்தில் ஒலித்த கம்பீரக் குரல்
தொண்டைக்குள்ளேயே சுருண்டு கொள்ளும் போது

தோல் சுருங்கி ..எடை குறைந்து
குரல் இழந்து நீ துயருறும் போது
அப்பா
என் ஆரோக்கியத்தின் பாதியையும்
என் ஆயுளின் பாதியையும் உனக்கு த் தருகிறேன்,
என் வாழ்வு முடியும் வரை நீயும் இரு .
by
A ,P ,Sathya Swaroop

மேலும்

அருமையான பதில் ... 20-Sep-2017 9:40 pm
ஆயுளைத் தருவது ஆகுமா ? தந்தாலும் தந்தைக்குப் போதுமா ? சிறப்பு ! 12-Sep-2017 3:51 pm
sathyaswaroop - sathyaswaroop அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2017 11:13 pm

அப்பா
உன் கடைசிப் பார்வை
தொட்டிலிலிருந்து தூக்க ச்சொல்லும்
குழந்தையின் கள்ளமில்லா பார்வை
வாசல் வரை கூட
வழியனுப்ப வர இயலாத
ஏக்கப்பார்வை

உனைப்பார்ப்பேனா மறுபடியும்
எனும் கண்ணீரப் பார்வை
குழி விழுந்த கண்களுக்குள்
சோர்ந்து போன இமைகளுக்குள்
எனை முழுக்க உள்வாங்கி
இதயத்தில் இருத்தி க்கொண்ட உன்
கடைசிப் பார்வை ..
ஒவ்வொரு கணமும்
அப்பார்வையின் ஏக்கத்தில்
என் கண்கள் கசிகின்றன
உனைத்தொலைத்து விட்ட
என்னிடத்தில்
நீ விட்டு ச் சென்ற பார்வை மட்டும்
பரிதவிக்கும் இதயத்துள் .
இன்னும் பத்திரமாய் இருக்கிறது

by ,
ஏ .பி .சத்யா ஸ்வருப்

மேலும்

நன்றி 20-Sep-2017 9:36 pm
பார்வைகள் மனசுக்குள் இறங்கிக் கலக்கும் இழந்தது அன்பெனில் நெஞ்சை உருக்கும் நெகிழ்வு . 12-Sep-2017 11:21 pm
sathyaswaroop - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2017 11:13 pm

அப்பா
உன் கடைசிப் பார்வை
தொட்டிலிலிருந்து தூக்க ச்சொல்லும்
குழந்தையின் கள்ளமில்லா பார்வை
வாசல் வரை கூட
வழியனுப்ப வர இயலாத
ஏக்கப்பார்வை

உனைப்பார்ப்பேனா மறுபடியும்
எனும் கண்ணீரப் பார்வை
குழி விழுந்த கண்களுக்குள்
சோர்ந்து போன இமைகளுக்குள்
எனை முழுக்க உள்வாங்கி
இதயத்தில் இருத்தி க்கொண்ட உன்
கடைசிப் பார்வை ..
ஒவ்வொரு கணமும்
அப்பார்வையின் ஏக்கத்தில்
என் கண்கள் கசிகின்றன
உனைத்தொலைத்து விட்ட
என்னிடத்தில்
நீ விட்டு ச் சென்ற பார்வை மட்டும்
பரிதவிக்கும் இதயத்துள் .
இன்னும் பத்திரமாய் இருக்கிறது

by ,
ஏ .பி .சத்யா ஸ்வருப்

மேலும்

நன்றி 20-Sep-2017 9:36 pm
பார்வைகள் மனசுக்குள் இறங்கிக் கலக்கும் இழந்தது அன்பெனில் நெஞ்சை உருக்கும் நெகிழ்வு . 12-Sep-2017 11:21 pm
sathyaswaroop - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2017 3:23 pm

தந்தையர் தினத்திற்கு
அப்பாவிற்கு என்ன தரலாம்
கைக்கடிகாரம் கூட சுமையாக
தெரிந்த உன் கைகளுக்கு
பேரப்பிள்ளைகளை தூக்கிச் சுமப்பது
மட்டுமே சுகமாக இருந்தது
புத்தகம் ?படிக்காத புத்தகங்கள் ஏதும் இல்லை
பணமோ பகட்டோ பதவியோ
என்றுமே பிடித்ததில்லை
பாட்டு ?
நீ கேட்காத பாடாத பாடலில்லை
பல்கலைக்கழகத்தில் ஒலித்த கம்பீரக் குரல்
தொண்டைக்குள்ளேயே சுருண்டு கொள்ளும் போது

தோல் சுருங்கி ..எடை குறைந்து
குரல் இழந்து நீ துயருறும் போது
அப்பா
என் ஆரோக்கியத்தின் பாதியையும்
என் ஆயுளின் பாதியையும் உனக்கு த் தருகிறேன்,
என் வாழ்வு முடியும் வரை நீயும் இரு .
by
A ,P ,Sathya Swaroop

மேலும்

அருமையான பதில் ... 20-Sep-2017 9:40 pm
ஆயுளைத் தருவது ஆகுமா ? தந்தாலும் தந்தைக்குப் போதுமா ? சிறப்பு ! 12-Sep-2017 3:51 pm
sathyaswaroop - யாழ்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jan-2015 2:32 pm

அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....

பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....

இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட

மேலும்

அருமையான வரிகள் 24-Nov-2017 5:55 pm
மனம் தொடும் கவிதை 27-Aug-2015 4:35 pm
மனம் தத் கவிதை பாராட்டுகள் 02-Aug-2015 8:04 pm
படைப்பு என்பது துளியேனும் நெகிழ்த்த வேண்டும்.உங்கள் கவிதை துளியல்ல...மழையாய்... 11-Jun-2015 12:16 pm
sathyaswaroop - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2015 5:11 am

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை

மேலும்

திரு அன்பு அழகன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி 03-Jun-2016 12:39 am
தங்கள் கருத்துக்கு நன்றி மு.ரா 03-Jun-2016 12:38 am
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் 26-May-2016 11:48 am
என்ன சொல்ல, படிக்க படிக்க கண்களில் நீர் - மு.ரா. 13-Mar-2016 9:32 pm
sathyaswaroop - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2015 1:42 pm

மழை நாள் இரவினிலே
மன்னன் முகம் கண்டு
மங்கை நான் லயித்திருக்க
கொஞ்சு தமிழ் பேசிடவே
கோதை நான் துடித்திருக்க
பிஞ்சு விரல் நீ பிடித்து
பித்தனாய் பிதற்றுகிறாய்
பக்கத்துணை நீயிருந்தால்
பகலிரவாய் அருகிருந்தால்
பட்டினியிலும் பகிர்ந்தளித்து
பசியினை மறந்திருப்பேன்
முடியனைத்தும் நரைத்தபின்னும்
உன் முகத்தை நான் ரசிப்பேன்
ஊன்றி நடக்கும் கம்பாய் நான்
உன் கையில் ,,, தான் இருப்பேன்
பொக்கை வாய் சிரிப்பினிலே
பொங்கிவரும் மகிழ்ச்சியிலே
நித்தம் நீ சிரித்திருந்தால்
நிம்மதியாய் நான் செல்வேன்
வந்து விடு விரைவில் என்று
விடை பெற்று நான் நடப்பேன்
சென்று விட்ட இடத்தினிலும் -எனை
வென்று விட்ட உன் வருக

மேலும்

நன்றி...தோழரே ... 28-Feb-2015 7:59 pm
அருமை தோழரே.. 28-Feb-2015 3:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

sarvan

sarvan

udumalpet
தோழமையுடன் ஹனாப்

தோழமையுடன் ஹனாப்

இலங்கை - சாய்ந்தமருது
ஒருவன்

ஒருவன்

மெல்பேர்ண், அவுஸ்ரேலியா

இவர் பின்தொடர்பவர்கள் (22)

nisha meharin

nisha meharin

trichy
ஒருவன்

ஒருவன்

மெல்பேர்ண், அவுஸ்ரேலியா

இவரை பின்தொடர்பவர்கள் (22)

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மேலே