சங்கர்சிவகுமார்- கருத்துகள்

ஆமா....ஆனா அதுக்காக அத ஏத்துக்க முடியாதுல...இந்த கவித பயத்துக்கு எதிரான கண்ணோட்டத்த கொடுக்க..ட்ரை பண்ணது....நன்றி

நன்றிகள் ..அன்பர் சிவா மற்றும் ஜின்னா

நன்றி தோழரே...எழுத்து பிழை கொஞ்சம் அதிகம் தான்...முயற்ச்சிக்கிறேன்


மனிதம் மந்தையாகி திரிந்திருக்காது

வெகுண்டு நோக்குவதேனோ தலைவா ?
---எனக்கு பிடிச்ச வரி...
அதாவது பாரதி ரசனைல வந்தவங்க மட்டும் தான் இயற்கையோட வித்தெல்லாத்தையும் ஒய்யாரமா உரிமை கொள்ள முடியும் ங்குறது...என்னோட தனிபட்ட நம்பிக்கை..
நீங்க அப்படிதான்னு நினைக்கிறேன் தோழி...கவித அழகு

நன்றிகள் அக்கா...
உள் அடர்த்தியை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...(பொதுவாகளுடன் ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம்)
மனிதத்திற்கு ஒரு விதமான உந்துதலை இது போன்ற கவி வழங்கும் என்ற நம்பிக்கை எனக்குள்..
மிக்க நன்றி...அக்கா

நல்ல கவி தோழி...
நம்பிக்கை ஒருமுறை மட்டுமே பூக்கும்..

குருவி,குயில்களுடன் பேச பாஷை ஒன்றுண்டு....
அது வார்த்தைகளால் பின்னபட்டதல்ல,
வாயால் பேச படுவதுமல்ல...
அது நரம்பினால் புலப்படும் உணர்வின் பாஷை...
குருவி,மைனா இன்ன பிற ஜடப்பொருள்களுடன் கரிசனமாய் உரையாட வாய்த்த மொழி அது...
அந்த மொழியை இயல்பாய் தினித்திருக்கிறீர்கள் இக்கவியில்.
அருமை கவிதை ஐயா...


தேடல் முயற்சியாய்
தீக்குச்சி கொளுத்த.... பின்னிலிருந்து
பிரம்மாண்டமாய் பதில்...

நான் உன்னுடையவன்
அல்ல....
வெளிச்சத்தினுடையவன்..
-அழகு,அழகு.. தோழமையே

Athinada அவர்களே கோபத்தை தாழ்த்தி கொள்ளுங்கள்...
எமக்கும் சாதி என்ற சாக்கடையின் மேல்
அபிப்ராயம் கிடையாது.
முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்..
மேலும் பாரதி இயற்றிய கண்ணன் பாட்டில் -கண்ணன் என் ஆண்டான் என்ற தலைப்பிலான கவியை வாசித்து
பாருங்கள் ....
அதில் பாரதி தன்னை பஞ்சைப் பறையன் என்று குறிப்பிட்டிருப்பான்.
அங்கு அவன் என்ன உள்ளுனர்வில் அப்படி எழுதியிருப்பான் ...என்று என்னுள் உருத்தியதனால்........
அதனுள் ஏதோ ஈர்ப்பு பூண்டமையால்
அவனுக்கு அவன் இட்ட பெயரையே தலைப்பாய் வார்த்தேன்.
மேலும் நான் தனி ஒரு குலம் சார்ந்தவன் என்று கூறி கொள்ள வெட்க படுபவன்..என்று எம் உணர்வு அறியும்..
ஆக தங்கள் ஏசல் எம்மை தொந்தரவு செய்யாது.நன்றிகள் பல

தோழர்கள் ஜின்னா...
மற்றும் குமரேசன் அவர்களுக்கு நன்றிகள் பல...

நீங்கள்
உளறும் மொழிகள் கூட
உண்மையாகவே இருக்கும்...
நாங்கள்
உண்மையைக் கூட
உளறிக் கொண்டிருகிறோம்
-அழகு தோழரே

மழையின் அடிப்படை நெகிழ்ச்சி உணராதவர்கள். பிசாசை கண்டது போல் பரிதவிப்பார்கள்.
இதில் அருமையான சித்தாந்தம் ஒழிந்துள்ளது தோழரே...கவியின் வரிகள் நடை முறை என்றாலும்....
உட்பொருள் பெரிது..நன்று தோழரே...


சங்கர்சிவகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே