BABUSHOBHA - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  BABUSHOBHA
இடம்:  அவிநாசி,திருப்பூர்
பிறந்த தேதி :  06-May-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jan-2018
பார்த்தவர்கள்:  1347
புள்ளி:  277

என்னைப் பற்றி...

தாய் மொழி கன்னடமாயினும்,
அறிவும்,செறிவும்,
தந்த தமிழ் பால்
பற்று மிகுந்தவன்.
பள்ளி படிப்பு
பாதியாயினும்,பிறர்
சொல்லியது படிக்க
ஆர்வம் அதிகம்
இளையராஜா இசையில்
மூழ்கிப்போதலில் இன்பம்,அண்ட சராசரங்களை ஆட்டி படைக்கும் சக்தி ஒன்று நமக்கு மேலே இருந்து நம்மையும் பாதுகாத்து வருகிறது என்று நம்பி அதற்கு கடவுள் என்று பெயர் வைத்து வணங்கும் பக்தியுடையோன். நம்மால் முடிந்த உதவி பிறருக்கு செய்ய வேண்டும் என்று எண்ணி வாழ்பவன்.
இந்த ஹேவிளம்பி வருடத்தில் கவிதை விளம்ப விழைந்துள்ளேன்🙏

என் படைப்புகள்
BABUSHOBHA செய்திகள்
BABUSHOBHA - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2023 9:08 pm

மெய் எழுத்து நான் ,என் உயிர் எழுத்து நீ
***************. ***********************
வா இருவரும் இணைந்து உயிர் மெய்யெழுத்தாய் தமிழில் காதல் காவியம் படைப்போம் !

மேலும்

BABUSHOBHA - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2023 9:01 pm

நான் உனை நேசிப்பதும்
உன் காதல் யாசிப்பதும்
எனக்கு வாடிக்கையாகி விட்டது.
என் காதல் யோசிப்பதும்
சுடுமொழி வாசிப்பதும்
உனக்கு வாடிக்கையாகி விட்டது.
நான் உன் பெயரை சுவாசிப்பதும்
நீ எனை தூஷிப்பதும்
என்றென்றும் நிகழும் அன்றாட நிகழ்வானது
நான் உன் அன்பு திரட்டி காமன் தேர் ஏற நினைக்கிறேன்.
நீயோ எனை விரட்டி காலன் தேர் ஏற வைக்கிறாய்

மேலும்

BABUSHOBHA - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2023 8:54 pm

இறைவா உனை வணங்கி நின்றேன்.
நிறைவாய் வாழ வரம் தாராய்
குறையாய் எனக்கேதும் இல்லாமல்
மறைவாய் இருந்தாவது அருள் புரிவாய்
மறை நான்காய் நிற்கும் தெய்வமே
பறை கொட்டி பாடுவேன் உன் திருநாமம்
சிறை வைப்பேன் பக்தியை என் நெஞ்சகலாது
இரைக்கென்று ஆகாரம் தந்திடுவாய் என்
அரைக்கென்று சிற்றாடை கொடு அது போதும்
உரைப்பேன் ஆபத்தில் அபயம் வேண்டி உன் பெயரை
விரைவாய் வந்தெனை காத்தருள்வாய்
புரையோடிக் கிடக்குதய்யா பாவங்கள் பூமியிலே
பிறை சூடி பித்தனே நெற்றிக்கண் திறந்து பாராய் நீ
தரை மேல் இப்பிறவி போதுமய்யா இறைவா
கரை சேர்ப்பாய் இப்பிறவி பெருங்கடலில் இருந்து
நரை வந்து தள்ளாடினும் உனை மறவேன்
நுரை கக்கி உயிர் விடு

மேலும்

BABUSHOBHA - BABUSHOBHA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2018 5:07 pm

அம்மாவைப் பற்றி எப்போதும் பேசும், எழுதும் நாம் அப்பாவைப்
பற்றி நினைப்பது குறைவே;
தானே கலங்கி விட்டால் குடும்பம்
தாங்காதென தூங்காது தன்னை
கல்லாக்கி கொண்டவர்;
ஆதலின் அவர் கல்லாய் கண்டோம்★
தன் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்ச தெரியாதவர்,ஆனால் நம்மை நெஞ்சில் வைத்து தாங்கியவர்★
நாம் அழுதால் கடுமுகம் காட்டும் அவர் உள்ளே அழுவார், வெளியே
தெரியாது★
அவர் சொல் மந்திரம் என்று எண்ணாமல் தொந்தரவு என நினைத்து விலகி ஓடி, வாழ்க்கையில்
துன்பப்பட்டு அவர் மடி தேடும்போது
அவர் மடிந்திருப்பார்★
அப்போதும் அவர் சிரித்திருப்பார்;
புகைப்படத்தில்★
நாம் சுகத்தில் குளித்ததும், ஆனந்தத்தில் திளைத்ததும் அவர் வேர்வைய

மேலும்

BABUSHOBHA - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2019 11:56 am

விபத்து பகுதி மெதுவாக
செல்லவும். அறிவிப்பு பலகை பேருந்து மோதி
சேதம்.

மேலும்

BABUSHOBHA - BABUSHOBHA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2018 3:35 am

வாழ்க்கையில் நாம் கடந்து வந்த
நிகழ்வுகளை நடந்து கொண்டே
நினைக்கையில் வசந்தங்களும்
உண்டு, வலிகளும் உண்டு,
வசந்தங்களின் புன்னகை ஆயுள்
கூட்டிட, வேதனை நினைவுகளின்
வாதனைகள் வாழ்வைக் குறைக்கும்,
ஆக, எதிர் வரும் வலிகளையும்
கடந்து விட்ட வசந்தமாய் நினைத்து
இன்னும் நீள வாழ்வோம், இவ்வுலகம் வலி மீள ஏதாவது
செய்வோம்🌷

மேலும்

வலி கண்டு கிலி கொள்ளாது,மன உறுதி எனும் கழி கொண்டு விரட்டி வழி காண்போம்,கருத்துக்கு நன்றி🙏 15-May-2018 10:00 am
வலியை சுமந்து வாழும் வாழ்க்கை வலிகள் இழந்த வாழ்க்கை எங்கும் இல்லை.மாற்ற முயற்சி செய் வலிகளின் உணர்வு அருமை 15-May-2018 9:27 am
BABUSHOBHA - BABUSHOBHA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2018 9:57 pm

உனை நினைத்தேன்-
கவிதை அருவியாக கொட்டியது●
உனைச் சந்தித்தேன்-
பேச வார்த்தை கூட வரவில்லை●
உனை நினைத்தேன்-
சிறகின்றி வான் பறந்தேன்●
உனைச் சந்தித்தேன்-
என் கால்கள் ஒரு அடி கூட நகரவில்லை●
உனை நினைத்தேன்
வீரமாய் நெஞ்சு நிமிர்ந்து நடந்தேன்,
உனை சந்தித்தேன்
கோழையாய் குறுகி
குழைந்தேன்●
உனை நினைத்தேன்-
ஆனந்த நடனம் புரிந்தேன்●
உனை சந்தித்தேன்-
உன் பார்வைபட்டதும்
கை கால்கள் நடுக்கத்தில் ஆட்டம் கண்டது●
உனை நினைப்பதே பேரின்பம்-
உனை சந்தித்து காதல்
சொல்லும் தைரியம் வரவில்லை●

மேலும்

படைப்பு எதுவென தெரியப்படுதுங்கள், எனக்கு சரியாக புரியவில்லை 02-May-2018 8:53 am
சென்ற வார எழுத்து தள சிறந்த இலக்கிய படைப்பாக தேர்ந்தேடுத்த எழுத்து தள நம் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள் 01-May-2018 6:45 pm
BABUSHOBHA அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Apr-2018 6:14 pm

இக்காலத்தில் இளைஞர்கள்
Wifeஇன்றி இருப்பார்கள்,
ஆனால், Wi-fi. இல்லாதிருப்பாரோ?
இன்டர்நெட் உடன் உறவாடும் அளவு
இல்லத்தரசியிடம்
உறவாடுவதில்லை
இன்றைய கணவர்கள்●

மேலும்

ஆம் தோழர் ...அருமை...தோழர் 24-Apr-2018 11:47 am
பறந்து திரிய வேண்டிய பறவை கூண்டில் அடைத்தது போல இன்று மனிதனின் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Apr-2018 11:30 am
Single ஆக இருந்தாலும் செல் போன் துணை உள்ளதல்லவா? கவிதை களத்தில் mingle, ஆகி கருத்து சொல்ல அது போதுமே!! any how, thanks for your comment 🙏 23-Apr-2018 9:05 pm
அப்படியா..?இதில் என்ன கருத்து பதிப்பது என தெறியவில்லை... I'm single 23-Apr-2018 6:40 pm
BABUSHOBHA அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Apr-2018 2:29 pm

தரகின்றி தகைந்த தங்கச் சிலையே,
மனமிணைந்து மடியேறிய மங்கையே,
என் கனவு கன்னிகளை என்மனமிருந்து களைந்தெடுத்த
காரிகையே,
சித்திரை வெயிலில் நான் ஒதுங்கும்
வேப்ப மரமே,
அமாவாசை இருட்டில் என் வழி காட்டும் மின்மினியே,
என் துன்ப வெள்ளத்தை தடுத்தேற்கும் அணைக்கட்டே,
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கும் போது உயிர் இணையும் சுவாசமே,
நீயின்றி என் உயிர் கடிகாரம் ஒரு
நொடியும் ஓடாதம்மா உண்மையே!

மேலும்

நேசங்கள் சுவாசங்கள் நிற்கும் வரை ஓயாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Apr-2018 11:33 am
என் கனவு கன்னிகளை உனக்கு வெண்சாமரம் வீசும் மங்கைகளாக்கி, அதன் கிறக்கத்தில் எனக்கு காதல் சாமரம் வீசும் காதல் ராணியே, நாடாளுவதா?,உனை நாடி ஆளுவதா?புரியாமல் என் நாடி தாறுமாறாக துடிக்குதடி, இப்படி தொடர்ந்து கொண்டே கற்பனை குதிரை ஏறலாம், கருத்திற்கு நன்றி🙏 23-Apr-2018 9:00 pm
நன்று இது எப்படி என்று பாருங்கள்... இது கருத்து மட்டுமே தோழர்... என் கனவு கன்னிகளை வெறும் காரிகைகளென மாற்றி என் மன சாம்ராஜ்யத்தை ஆட்கொண்ட காதல் இராணியே..! 23-Apr-2018 6:48 pm
BABUSHOBHA - பாலமுருகன்பாபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2018 8:55 am

பேரின்பம் !🌟 இறைவா!
நின் கழல் அணைந்த தண்டை
தொட்டதால் விழலாய் இருந்த
என் வாழ்வு வயலாய் ஆனது!
🌸்்🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
சிற்றின்பம்! 🌸 பெண்ணே!
நின் கழலணைந்த கொலுசொலி கேட்டதில்
விழலாய் இருந்த நான் , நெல்
விழையும் நல் வயலாகிப்
போனேனடி!

மேலும்

BABUSHOBHA - பாலமுருகன்பாபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2018 12:08 pm

வினை விதைத்தவர் வினை
அறுத்தார்! தினை விதைத்தவர்
தினை அறுத்தார்!.
உனை,எனை விதைத்தவர்
எதை அறுத்தார்! இணை சேர்ந்த நம் காதலை கருவறுத்தார்! இன மான வெறியில் நம் உயிரறுத்தார்!
வினை மனம் கொண்ட அவர்
காதலுக்குப் பொருந்தார்!
அவரை ஒறுத்தாலன்றி திருந்தார்! இவ்வுலகம்
வெறுத்தாலன்றி வருந்தார்!
சாதிதனை மறந்தார் என்றும்
மேதினியில் சிறந்தார்!
இல்லை அவர் உயிரிருந்தும்
இறந்தார்! அவர் என்றும் மனிதநேயம் இரந்தார் நிலையிருந்தார்!

மேலும்

BABUSHOBHA - பாலமுருகன்பாபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2018 9:06 am

மனிதனுக்கு உணவாகும்
விதை (பயிர்) ஒன்று விழிப்பது
மண்ணிலே!
முடிவில் உயிர் துறந்து மனித
உடல் கழிப்பதும் அதே மண்ணிலே! இடையில் ஏன் கூடா பேராசைகள்?
🌸🌸🌸🌸🌸🌸
உயிர்ச்சத்தற்ற உணவு உண்டு
களிப்பது தவறு!
அது நம் உயிரெடுக்க காலனை
விளிப்பது போல!
🌸🌸🌸🌸

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (16)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
jana.raider

jana.raider

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (16)

மேலே