சொ பாஸ்கரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சொ பாஸ்கரன்
இடம்:  விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
பிறந்த தேதி :  04-Jun-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jul-2015
பார்த்தவர்கள்:  347
புள்ளி:  398

என்னைப் பற்றி...

நான் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறேன். எனது ஊர் விளந்தை
ஆண்டிமடம்.

என் படைப்புகள்
சொ பாஸ்கரன் செய்திகள்
சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2025 6:58 pm

கடமைவீரர் காமராஜர்

அன்புடன் தமிழ்மண் ஆண்டவராம்
அன்னமிடும் திட்டம் தந்தவராம்
ஒன்பது ஆண்டுகள் நாடண்டு
ஓய்வின்றி உயர உழைத்தவராம்

ஏழைகள் வாழ்வில் ஒளியேற்ற
ஏற்றம்தரும் சட்டம் செய்தவராம்
ஏற்றத் தாழ்வுகள் பார்க்காமல்
ஏணிப்படி போன்று நின்றவராம்

அதிகம் அவரிடம் படிப்பில்லை
அரசியல் வாழ்வில் நடிப்பில்லை
பதவிக்கு என்றும் துடித்தில்லை
பந்தத்தில் பாசத்தில் பிடிப்பில்லை

சூதுகள் சூழ்ச்சிகள் மனதிலில்லை
சோம்பல் எப்போதும் உடலில்லை
பேசிடும் பேச்சில் துடுக்கில்லை
பொருளிலும் புகழிலும் பற்றில்லை

பிரதமர் பதவியை இரண்டுமுறை
பிறருக்கு விட்டுக் கொடுத்தவர

மேலும்

சொ பாஸ்கரன் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2016 7:36 pm

அன்புள்ள உறவுகள் தனியழகு
ஆழிக்கு அலைகள் தனியழகு
கனிவுடன் கண்ணியம் கடமையுமே
மனிதர்க்குத் தந்திடும் தனியழகு

மலர்களில் பனித்துளி தனியழகு
மாலையில் பலவண்ணம் தனியழகு
தீபத்தின் வடிவினில் ஒளிகொடுக்கும்
தீக்கதிர் தந்திடும் தனியழகு

மின்னிடும் விண்மீன் தனியழகு
மின்னலின் கோடுகள் தனியழகு
சுற்றிடும் பூமியில் நாள்தோறும்
சுடுகதிர் உதிப்பது தனியழகு

தவழ்ந்திடும் மழலை தனியழகு
தங்கத்தின் நிறமும் தனியழகு
தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும்
தடாகம் கண்ணுக்குத் தனியழகு

வெண்ணிறம் நிலவுக்கு தனியழ

மேலும்

நலம் 12-Dec-2025 6:48 pm
உண்மைதான்..அழகான எண்ணங்கள் மனதில் விளையும் நேரம் மனிதன் மனதிலும் மனிதம் வாழும்..நீண்ட நாட்களின் பின் உங்கள் வருகை..எப்படி இருக்கீங்க 14-Nov-2016 8:54 am
சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2025 6:46 pm

சிரித்து வாழவேண்டும்

சிரித்து வாழ்ந்தால் போதுமடா
சீருடன் சிறப்பும் சேருமடா
புன்னகை என்ற பொன்நகையே
பூமியில் இனிமை சேர்க்குமடா

நன்றாய் நாளும் சிரித்தாலே
நாடியும் நரம்பும் பலமடையும்
சுற்றமும் நட்பும் விலகாமல்
பற்றுடன் நம்மை சுற்றிவரும்

நெஞ்சின் கவலைகள் சிரித்தாலே
பஞ்சாய் பறந்தே மறைந்துவிடும்
வஞ்சக எண்ணத்தை வடிகட்டி
சஞ்சலம் விலகி பறந்தோடும்

பொன்னும் பொருளும் நிறைந்தாலும்
போற்றும் பட்டங்கள் பெற்றாலும்
புன்னகை இல்லா வாழ்வினிலே
புத்தொளி தோன்றிட வழியேது

உறவுகள் உன்னை சுற்றிவர
புறத்திலும் மற்றவர் பற்றிவர
என்றும்

மேலும்

சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2025 7:07 pm

தமிழன் தரணியில் சிறந்தவனாம்
தாழ்ந்து பணிந்திடும் பண்பினனாம்
யாரையும் உறவாய் நினைப்பவனாம்
நீரையும் நிலத்தையும் துதிப்பவனாம்

கோழை குணத்தை வெறுப்பவனாம்
மேழித் தொழிலில் உயர்ந்தவனாம்
அகிலத்தின் கலைபல அறிந்தவனாம்
ஆடிப் பட்டத்தில் விதைப்பவனாம்

நிமிர்ந்து நிற்கும் அடையாளம்
நிலையாய் ஆயிரம் கொண்டவனாம்
இயலிசை நாடகம் இன்தமிழை
அயலவர் வியந்திட மொழிபவனாம்

ஈனச் செயல்களை புறம்தள்ளி
மானம் பெரிதென வாழ்பவனாம்
ஈந்திடும் குணத்தை இயல்பாக
இதயம் தன்னில் கொண்டவனாம்

மற்றவர் துயரம் போக்கிடவே
மகிழ்ந்து தன்னையும் தருபவனாம்
ஏற்பது இகழ்ச்சி என்றெண்ணி
எளிய வாழ்க்கை வாழ்பனாம்.

மேலும்

சொ பாஸ்கரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2025 7:06 pm

விழித்தெழு தமிழா விறுவிறுப்பாய்
வினைபுரி தினமும் சுறுசுறுப்பாய்
உனக்குள்ள இருவிழி அனல்விழி
உனைதினம் வாட்டும் கலக்கமழி

ஈரைந்து கைவிரல் உன்சொத்து
இளந்தமிழ் மொழியே உன்சத்து
விடியும் உன்கிழக்கு நம்பியிரு
வீண்வம்பு வழக்கில் விலகியிரு

மின்னல் கீற்றே உந்தேகம்
என்றும் இதிலென்ன சந்தேகம்
வியர்வையை உடலில் வடியவிடு
வெற்றியுன் கையில் கவலைவிடு

புதுமையை உன்னில் புரளவிடு
பூமிஉன் கையில் உருளவிடு
சிகரம் உனக்கே காத்திருக்கு
சிந்தையில் கனவுகள் பூத்திருக்கு

அறிவால் உலகை வென்றுஎடு
அயலவர் சூழ்ச்சியை கொன்றுவிடு
உன்னால் உலகம் ஒளிபெறட்டும்
உலகில் உன்புகழ் வலம்வரட்டும்

மேலும்

சொ பாஸ்கரன் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2018 6:37 am

எரிமலை நிகர்த்த இளையவனே – நீ
இன்னும் ஏனிங்கு உறங்குகிறாய்
கடமைகள் கோடி கிடக்கையிலே – உன்
கண்மூடி எதற்கு பதுங்குகிறாய்?

ஒன்றும் என்னிடம் இல்லையென – நீ
உளறித் திரிவது சரிதானா?
வென்றிட வையகம் இருக்கையிலே – நீ
வேதனை கொள்வது முறைதானா?

பாறையில் ஒன்றும் விளையாது - நீ
படுத்தே கிடந்தால் வாழ்வேது
மாலையின் பரிதியில் சூடேது – நீ
மலைத்தால் வெற்றியும் தீண்டாது

கால்கள் இரண்டையும் முன்னெடுத்து – நீ
கடலலை போன்று புறப்படு
தடுத்திடும் தடைகளை தவிடாக்கி – இந்த
தரணிக்கு யாரென காட்டிடு

மேலும்

நன்றி 14-Sep-2018 11:58 am
நன்றி 14-Sep-2018 11:56 am
Vira varikal nanpare 01-Sep-2018 10:39 pm
ஆஹா ஆஹா அருமை . அதிலும் இறுதி நான்கு வரிகள் 14-Aug-2018 7:17 pm
சொ பாஸ்கரன் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2018 4:05 pm

திருநங்கை

ஆணும் பெண்ணும் கலந்த கலவை – இது
ஆண்மை குறைத்த ஆண்டவன் சலவை

முள்ளுள் மலரை மூழ்கச் செய்து - புது
மூன்றாம் பாலாய் செய்தான் கைது

நளினம் மிகுந்த நர்த்தனப் பிறவி - கவி
நயமிகுப் பேச்சால் கவரும் குலவி

கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது
கடவுள் தெரிந்தே செய்த கலப்படம்

கள்ளம் கபடம் இல்லா சிந்தை – இவர்
உள்ளம் எங்கும் கவலையின் மந்தை

முக்கனி மூன்றும் இணைந்த கலப்பு - இது
முன்னாள் தொட்டே தோன்றிய பிறப்பு

பாறையும் பூவும் கலந்த தேகம் - இது
பிரம்மன் செய்த

மேலும்

நன்றி 14-Sep-2018 11:53 am
வார்த்தைகள் , வரிகள் , கவிதை சுமந்த கரு ... அனைத்தும் அருமை . 31-Aug-2018 5:49 pm
அருமை ...அருமை ! மிக அருமை.கவிதை மிக அழகாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள். நான் மிகவும் இரசித்த வரிகள் ..., அல்லும் பகலும் இணைந்தால் அந்தி - இது அள்ளிப் புசித்திட இயலாப் பந்தி கருவறை தானே அவர்க்கும் பிறப்பிடம் – இது கடவுள் தெரிந்தே செய்த கலப்படம் ...சூப்பர் !!! 31-Aug-2018 3:23 am
நன்றி 30-Aug-2018 6:46 pm
சொ பாஸ்கரன் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2018 7:06 pm

நாட்டில்பல நன்மைகள் நடந்த தெல்லாம்
---------நாள்தோறும் எழுந்தபல கேள்வி யாலே
பூட்டிவைத்த கேள்விகளால் விளைவ தென்ன?
--------பூமியிலே மாற்றமில்லை கேள்வி இன்றி
வாட்டுகின்ற வேதனைகள் விலகிச் செல்ல
-------- வினவுகின்ற கேள்வியில்தான் விடைகள் கிட்டும்
மாட்டுகின்றார் கயவர்பலர் உலக மெங்கும்
----------மதிநிறைந்த கேள்விபல கேட்ப தாலே

விடைகிட்டும் கேள்விகள்கேள் என்று சொன்னார்
-----விண்ணுலகம் சென்றுவிட்ட சாக்ரட் டீசும்
உடையினிலே கருப்பணிந்த வைக்கம் வீரர்
------ உள்ளத்தில் மாற்றம்வர வினவச் சொ

மேலும்

Thamizh therikkirathu... Arumai nanpare 01-Sep-2018 10:44 pm
mikka nanri 28-Jun-2018 7:42 pm
அருமை.வார்த்தைகளின் அலங்காரம் நாட்டின் அலங்கோலத்தை எடுத்துரைக்கிறது. 22-Jun-2018 8:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (103)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
கௌடில்யன்

கௌடில்யன்

சென்னை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .

இவர் பின்தொடர்பவர்கள் (106)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (107)

ராம்

ராம்

காரைக்குடி
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே