pari elanchezhiyan V - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  pari elanchezhiyan V
இடம்:  erodai
பிறந்த தேதி :  18-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jul-2014
பார்த்தவர்கள்:  215
புள்ளி:  24

என்னைப் பற்றி...

*

என் படைப்புகள்
pari elanchezhiyan V செய்திகள்
pari elanchezhiyan V - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2015 7:25 am

அந்த பீச்சில் தானே அதிக போலித்தனத்தை பூசிக் கொண்டு அமர்ந்திருப்பதாக ராஜனுக்குத் தோன்றியது.இது ஒன்றும் புதிதல்ல என்றாலும்,
இன்று இப்படி அவன் நடந்து கொள்வது அவனுக்கே ஆத்திரமாக வந்தது.தன் ஃபோனில் எடுக்கப்பட்ட எல்லா புகைபடங்களையும்
திரும்ப,திரும்ப பார்த்து சலித்துப் போனவனாய்,அதை பாக்கெட்டில் வைத்து விட்டு சுற்றும்,முற்றும் வேடிக்கை பார்க்க ஆயத்தமானான்.

அங்கு 3-4 இளைஞர்கள் ரேஸ் பைக்குகளை,பீச் ரோட்டின் இருபுறமும் மாறி,மாறி ஓட்டிக்கொண்டும்,அவர்களுக்குள்ளே விரட்டிக் கொண்டும்
வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தனர்.அங்கு சிலர் மட்டும் அதை கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.நிச்சயமாக
அந்த இ

மேலும்

pari elanchezhiyan V - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2015 1:17 pm

சில நாட்களாகவே காயத்ரி தனக்குள் பல கேள்விகளை கேட்கத் தொடங்கிருந்தாள்.அதற்கான பதில்களும் கூட,சில கேள்விகளாய் வந்து விழுந்து அவளை மேலும்
குழப்பியிருந்தது.இதை எதையும் அவளால் தவிர்க்கமுடியாது என்பது தான் உண்மை.ஏனென்றால்,அவளின் கேள்விகளுக்கு சொந்தமானவள் வேறு யாருமல்ல,தன்னை இரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளே..அவளே தான்.சில மாதங்கள் முன்பிலிருந்தே அத்தனை கேள்விகளும் தனக்கானதாக மாறிவிட்டதும் கூட
ஒரு காரணமாக இருக்கலாம்.

தன்னை தானே ஏன் கேள்விகளுக்குள் புதைத்துக் கொள்ளவேண்டும்?"வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்று குதித்து நீந்த பழகிக் கொள்ளவேண்டியது தானே?-இப்படியாக
தன்னையும்,தன்னுடன் சில மாதங

மேலும்

pari elanchezhiyan V - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 12:17 pm

இது 1980-களில் என் தந்தைக்கு நடந்த உண்மை கதையின் சுருக்கம்.

"இன்னு(ம்) கொறஞ்சது மூனு மணி நேரமாவது ஆவும்" என அருகில் உள்ள பாட்டி சொன்னாள்.இந்த மூன்று மணி நேரத்தில் எத்தனை முறை,
அவன் தொலைத்த அடையாளங்களையும்,அதனால் கண்ட அவமானங்களையும் இந்த குரங்கு மனம் இரயில் புகையினூடே புகைக்க போகிறதோ?
தெரியவில்லை!!எதில் எதிலோ தன் கவனத்தை திசைத்திருப்ப முயன்றும்,எண்ண ஓட்டங்களிடம் தோற்றவனாய்த் தத்தளித்தான்.அடிக்கடி அழும் குழந்தையின்
அழுகையிலும்,ஒவ்வொரு ஸ்டாப்பிலும் ஜன்னல் கம்பிகலின் குறுக்கே கை நீட்டும் சிறுவர்களின் ஏக்கக்குரல்களிலும்,கம்பார்ட்மெண்ட் குப்பைகளை
துண்டில் ஒதிக்கிவிட்டு காசு கேட்கும் வயதானவரி

மேலும்

pari elanchezhiyan V - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 1:48 pm

பல வருடங்களாய் நானே புணைந்துக் கொண்ட பல கேள்விகளுக்கான பதில்கள்..என் பல நாள் முடிக்கப்ப-டாத கதைகளின் முடிவுகள்...என் பால்ய விசித்திரத்தின் வேலியைக் கட்டவிழ்க்கும் கைகள்...என் கருத்த வெறுமை வெளிகளின் விடியலுக்கான துளிகள்...அது உடைத்தெரிய வேண்டிய பொய்யான பிம்பத்தின் மெய்யாகக் கூட இருக்கலாம்..சரியாய் தெரியவில்லை..இன்னும் சரியாய் தெரிவதற்க்கில்லை...ஆனால்...அதற்கான நிகழ்வு இன்னும் சில நிமிடங்களுக்குள் நடந்துவிடலாம் என்பது மட்டும் கண்முன்னே தெரிகிறது.அதனை ஏற்படுத்திக் கொடுத்த பெருமிதமோ என்னவோ,பேருந்து நல்ல வேகம் பிடித்திருந்தது..இன்று எனக்கும் கூட அந்த வேகம் பிடித்திருந்ததுதான் உண்மை.

இருக்காதா எ

மேலும்

ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2015 3:14 am

கலைவது அழகு - அழகின் மேல் ஆசை
களைவது அழகு.....!! என்றும்
நிலைப்பதை பழகு - அகத்தில் அமைதி
நிலைப்பதே அழகு ..!!

மேலும்

நன்றி 27-Apr-2015 12:40 pm
அருமை 27-Apr-2015 11:31 am
நன்றி 17-Apr-2015 2:34 am
நன்றி 17-Apr-2015 2:33 am
pari elanchezhiyan V - pari elanchezhiyan V அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2015 12:10 pm

இன்று மில்லில் இரண்டாவது ஷிஃப்ட் என்பதால்,வீடு கிளம்ப மணி 10 ஆகியிருந்தது.என்றும் இல்லாததாய் காற்று இன்று பலமாய் வீசத்தொடங்கியதைக் கண்டு,வேகமாய்
நடையைத் தொடர்ந்தேன்.தெருவிளக்கின் வெளுச்சத்தில்,காய்ந்த சரகுகள் காற்றின் இசைக்கேற்ப தன் மரணத்திற்கான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தன.

அந்த ஆட்டமானது,இன்னும் சற்று நேரத்தில் மழை வரப்போவதை காற்றிடம் சொல்லிக் கொண்டிருந்தன. இயற்க்கையின் ஆட்டம் பொய்யாகிவிடுமா என்ன??
ஆம்..ஒழுங்காய் பின்னாத ஒலைக்குடிசைக்குள் ஒழுகும் நீரைப்போல் தொடங்கி,இப்போது நன்றாகவே பிடித்துவிட்டது மழை......என் மனதிலும் கூடத்தான்.

அங்கிருந்த பெரிய ஆலமரமானது,மழைத்துளிகளை தனக்குள் அங்கும

மேலும்

pari elanchezhiyan V - pari elanchezhiyan V அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2015 1:15 pm

கதிரவன் தன் கதிர்க்கீற்றலை மேகத்தினுள் புணர்ந்து, பூமிக்கு புனிதம் புகைத்துக் கொண்டிருந்த காலை வேளை அது.
கோடங்கி தன் அலுவகத்திற்கு செல்வதற்காக பேருந்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான்.மனிதர்களின் இன்பம்,துன்பம்,எதிர்ப்பு,கோபம்...என எல்லா உணர்வுகளிலும்,கடந்த 40-50 வருடங்களாக, தான் பங்குகொண்ட கர்வத்தோடு அங்கும், இங்குமாய் சரியாய் சவரம் செய்யப்படாத சாலைகளில் ஓடிக்கொண்டிருந்தன.
கோடங்கி..அவனான வாழ்க்கைப் பயணத்தில்,தனியே பயணம் செய்யும் ஒண்டிக்கட்டை.அதில் இரவுப் பயணங்களில் மட்டும் சிலர் துணைக் கொண்டு தனிமையும்,அதன் வேட்க்கையையும் துரத்திக் கொள்ளும் சாமர்த்தியவாதிதான்.நிலம் பதிவாளர் அலுவலகத்தில் கு

மேலும்

pari elanchezhiyan V - pari elanchezhiyan V அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2015 10:55 am

தாயின் வற்றிய மார்பை
எவ்வளவு அழுத்திப் பார்த்தும் -வராத
பாலிற்கு அழும் பச்சிளங்குழந்தையின்
பசியின் மீதான கோபம்!

அவன் ஆண்மகன் அல்லான்
என்றே கோர்ட்டில்-மனைவி
சொல்லித் தூற்றிய அவனான
இயலாமையின் மீதான கோபம்!

அவள் பால்சுரப்பிகளை வளம்பெற
எண்ணி மாற்றான்-மடியைத்தேடி
ரோட்டில் செய்கை செய்யும்
கற்பின் மீதான கோபம்!

இப்படி எல்லோர் கோபமும்
தநிந்திட அந்த ''ஓர் இரவு''
அரணாய், ஆதாரமாய் இருந்தது!

இதில் ஏன் கதிரவனுக்கு மட்டும்
இத்தனை ஆதிக்க கோபம்!
பொழுது விடிகிறது!

மேலும்

pari elanchezhiyan V - pari elanchezhiyan V அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2015 11:35 am

இடுகாட்டுத் தீயில்
இடப்பட்டத் தன்னுடலைப் பார்க்க
மனிதன் வந்தான்!

சூனியம் தேடி
சுழல்கின்ற உலகில்
சுதி சேர்த்து,தன் முன்னே
ஆடுகிறான் ஒராட்டம்!

மாயவலைகுள்ளே மங்கிட்ட
தன் வாழ்வையெண்ணி,பலர்
கண்முன்னே நீரோட்டம்!

ஏன் எவர்க்கும் புரியவில்லை?
இந்த மனித வாழ்க்கை
என்னும் கல்லாட்டம்!

ம்...
தன்னை தரம்பிரித்த
தரகர்கள் மத்தியில்,
நெருப்புழுதியில் மடிந்துக்கிடப்பதை
கேவலமாய் என்றெண்ணியோ,
அங்கே புறப்படத் துடிக்கிறான்!

ஐயோ!
சிறகொடிந்து பறக்கிறதே!

காலத்தை இன்னும்
சிலகாலம் சுமக்கின்ற
எவனோ புதியவனைத் தேடி,
அவன் சித்தாந்தம் பறக்கிறதே!

மானங்கெட்டவை!
மனிதன் வகுத்த,

மேலும்

C. SHANTHI அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Sep-2014 7:58 pm

கார்மேகம் மழை பொழிந்தே யெனை தழுவ
நனைந்தேன் நானும் மனமில்லை நழுவ..
நோய் சூல் கொண்டதில் வந்ததே மயக்கம்
சுற்றிய நடவுகள் எதுவுமே புரியவில்லை எனக்கும்!!!

மழலை சூல் பிரசவிக்க மாதங்கள் பத்து
நோய் சூல் பிரசவிக்க நாளில்லை கணக்கு
தேகமது காய்ச்சலில் இதழ் அனத்தல்களோடு
ஒவ்வாமை உடல் தழுவி உணவோடு பிணக்கு!!!

நோய்க்கரு குலைத்திட மருத்துவத்தின் நாடல்
ஊசியின் வலியோடு இம்சையின் தேடல்
பச்சை மஞ்சள் சிவப்பென எத்தனை மருந்து
உட்கொண்டும் கலையவில்லை சூலெனை பிரிந்து!!!

அசதியும் சோர்வும் நிதமெனை தாக்கி
கொல்கிறது கொல்கிறது மெதுவிடமாகி
நாளொரு பொழுதுமாய் நலிந்திடும் தேகம்
என்று

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனிமீ. 01-Oct-2014 8:52 pm
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா. 01-Oct-2014 8:51 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இமாம். 01-Oct-2014 8:50 pm
அன்பை அன்பாய்ச் சொல்லும் அழகிய கவி மருந்து வாழ்க வளமுடன் 01-Oct-2014 6:32 pm
pari elanchezhiyan V - lambaadi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2014 8:28 pm

நல்ல மேய்ப்பனில்லா
மந்தைகள்
மேய்ச்சலுக்கு ஆளில்லா விட்டாலும்
தனத்துக்குத் தானே மேய்ப்பனாகி
மேய்ந்து கொண்டுதானிருக்கிறது !

புல்லோ , முள்ளோ
காய்ந்த சருகுகளோ
கிடைப்பது உண்டு
தறி யறுத்து
துள்ளிப்பாயும் தந்திரங்க ளறிந்து
உணவிருக்கும் இடமறிந்து
பின்னர் -
பட்டினியில்லா மலிருப்பது மட்டுமே
மேய்ச்சலின் தாரக மந்திரமென்றறிந்து
அதன் வழியே சென்று
மேயதலறிந்து கொள்கின்றன
மந்தைகள் ...

பாதுகாப்பாய் பட்டியில்
அடைக்கின்ற மேய்ப்பனில்லா
மந்தைகள்
செல்லுமிடங்களி லெல்லாம்
துணை சேர்த்து
ஈணும் பருவமறியாது
குட்டியீணி -
கூட்டம் கூட்டமாய்
பல்கிப் பெறுகின்றன ...

நகரத்தில் கசா

மேலும்

நன்றி தோழமையே 16-Sep-2014 8:15 pm
நன்றி நண்பரே , அகன் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 16-Sep-2014 8:15 pm
சிறப்பான ஆக்கம்! சிந்தனை சிறப்பு! 15-Sep-2014 7:47 am
ஆளுமை கவி ஆளுமை உங்களை கண்டுகொள்ளாமல் விட்டது எனக்கு நட்டம்.. அகன் அய்யா அவர்கள் -உங்கள் முகம் காட்டினார்கள்.. இனி பகிர்வோம் ..! 14-Sep-2014 10:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே