கவிஞன் நவீன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/xscjy_34360.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : கவிஞன் நவீன் |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 27-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 4 |
காதல் உறவு ....!!!
---------
பலமுறை ஏங்குவதும்
ஏங்க வைத்து பின் ....
வார்த்தையில் தூங்குவதும் ....
தூங்கிய வார்த்தையை ....
துலங்கமாய் கூறுவதும் ....
காதல் உறவு ....!!!
அழகே...
உன் பாதசுவடு தோறும் போர்வை
மூடும் எனது வேர்வைதுளிகள்...
கனவு பூக்களோடு
கை நிறைய நந்தவனம்...
கதவு திறந்தும் காணவில்லையே
என் தென்றல் முகம்...
கடைசி விடிவெள்ளியும் அனுதாபத்துடன்
நெடு மூச்சை எரிந்தது...
வெண்ணிலவும்
மறைய தொடங்குது...
இன்னும் கண்ணீர்
புல்வெளியில் நான்...
என் ஆவிபோகுமேன்னே
வருமோ என் வசந்த ஊர்வலம்...
ஒருமுறை
நான் பார்த்து செல்ல.....
விழியொழுகும் ஓர் இரவுக்கான காத்திருப்பு எனக்கும் என் கவிதைக்கும் உண்டு
பரிமாண சுவர்களின் வழியே கவிதை
வரிமாறி வருகின்றன
அரங்கேற்றம் அடுத்த கட்டம் தான்
என்னால் எழுதப்படுபவை என்னாலேயே தூவப்படுகின்றன
என் கவிதை வீதிகளுக்கென தனியொரு தேசம் தேவையில்லை
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
இடையிலொரு மின்னல் கீற்று
என் வரிவழியே ஓடிச் செல்கின்றன
ஒவ்வொரு கவிஞனுக்கும் அவனது விரல் பிடிக்கும் எழுத்தானி தான் அவன் சிந்தனையை தெளிக்கும்
ஏர் கலப்பை
விடிந்தால் கல்யாணம்
கல்யாணமண்டபத்தில்
தவிப்புடன் நான் என்கண்கள்
அவனை தேடுகிறது
என்னையே ஏக்கமாக பார்த்துக்கொண்டு அவன்
நான் பார்க்கும் நேரம் பார்த்து
மின்னலென திருப்பி கொள்கிறான் முகத்தை
என் மனசுக்குள் கண்ணீர் அணைகள்
உடைந்து போன பிரளாயம்
ஊமையாக அழுகிறேன்
விரக்த்தியோடு மண்டபத்தின் மொட்டைமாடியில்
போகிறேன வானத்தை பார்க்கிறேன்
இறைத்து போட்ட தங்க காசுகளாக
வீண்மீன்களின் வர்ண ஜலம்
பிரகாசமாய் பொன் நிலவு
அதில் அவனோட.முகம் என்னை பார்த்து
சிரிக்கின்றன
கீழே பார்க்கிறேன்
வரிசையான கார்களுக்கு இடையில் அவன்
திகைத்து போகிறேன்
ஓடிபோக நான் வருவேன் என்று காத்திருக்கானோ
மன துள்ளலுடன் இறங்கி ஓடுக
எத்தனையோ இல்லங்களுக்கு
காவலாய் நானிருந்தாலும்
அத்தனை இல்லத்தோரும்
இணைந்து கூட என்
ஓருயிரைக் காக்க மனமில்லை!
இல்லங்கள் முழுக்க
இடம்பெற்றாலும்
அது என் அழிவே!
ஒரு ஓரத்தில்
இடம் தந்து வளர்த்திடுங்கள்!
இறந்து போன நினைவுகள்
இடம் பெயர்தலில் தேவையில்லை!
பிறந்த நாளுக்காக அல்ல
பிறக்கும் நாளுக்காய் காத்திருக்கிறேன்!
கடந்துநிற்கும் கனவுகளின் எச்சங்கள்
கடைந்து குடிக்கின்றன உயிரை
விட்டுச்சென்ற ஞாபக புதையலை
கட்டிக்காக்கின்றன கனவுகள்
பருவத்து சிறகுகளில் அன்று
குறுகுறுத்த ஆட்டங்கள் இன்று
நித்திரை சந்தைகளின் வீதிகளில்
கூறுகட்டி விற்கப்படுகின்றன
வழிமறந்து ஓடிய வாழ்க்கை இன்று
விழிவழியே கசிகின்றன
கதைகேட்ட காலமெண்ணியே என்
சதை சற்று சிலிர்க்கிறது
ஆத்தோர மணல்விரிப்பில் கொஞ்சி
காத்தாட விளையாடியது இன்னமும் நினைவிருக்கு
கடிதம்வழியென் காதலைவழியனுப்பி
காத்திருந்த காலம் உண்டு
எத்தனையோ எண்ணமெண்ணி
இத்துனை நாளை கழித்துவிட்டேன்
இனி வரப்போகும் நாளெழுத
இன்னொரு பக்கம் விட்டுவிட்டேன்
நிழலுக்காக இல்லை
நிஜத்திற்காகவே வழக்காடுகின்றேன்
சொப்பண அதிகாரங்களில்
சொர்க்கத்தை காணவிரும்புகிறேன்
பக்குவச் சுவர்களில் நேசத்தை
தேடுபவன் நான்
ஆளப்பட்ட வர்க்கத்திற்காக
துயரப்பட்டு துவண்டுவிடவில்லை
ஆண்டவனை ஆட்டிவைக்க
அதிகாரம் கேக்கிறேன்
எந்த வேள்வியினாலும்
எரிக்கமுடியாத எண்ணம் தேவை
ஏட்டெடுத்து படித்தவரெல்லாம்
ஏர்பிடிக்கும் உத்தியை தேடுகிறேன
கீழ்விழுந்த நிலவொளியில்
வானிற்கு அடையாளம் கேக்கிறேன்
வர்ணிப்பு சங்கதியெல்லாம்
தடுக்காத கவிதை கேட்பேன்
நண்பர்கள் (4)
![ஆனந்தி](https://eluthu.com/images/userthumbs/f2/yijos_20888.jpg)
ஆனந்தி
வடலூர்/கடலூர்
![வசந்த நிலா](https://eluthu.com/images/userthumbs/f3/vckhw_33916.jpg)
வசந்த நிலா
தஞ்சை
![வே புனிதா வேளாங்கண்ணி](https://eluthu.com/images/userthumbs/b/bkifj_17177.jpg)
வே புனிதா வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு
![செல்வம் சௌம்யா](https://eluthu.com/images/userthumbs/f3/kvupl_34369.jpg)