தமிழன்பன் என்றும் புதியவன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழன்பன் என்றும் புதியவன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  19-Oct-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Nov-2012
பார்த்தவர்கள்:  512
புள்ளி:  196

என்னைப் பற்றி...

என்றென்றும் தமிழன்னையின் கருவறையில்
குழந்தையாக தமிழை சுவாசிப்பவன் !

என் படைப்புகள்
தமிழன்பன் என்றும் புதியவன் செய்திகள்

கந்தல் துணியாய்
கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது
கடந்த காலத்தின் எச்சங்கள் ...

கண் முன்னே உணவிருந்தும்
எடுத்து உண்ண இயலா நிலைபோல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
இறைந்து கிடக்கின்றன அன்பின் நேசங்கள் ...

தொலைதூர சொந்தங்கள் எல்லாம்
எதையோ தொலைத்து விட்டது போல்
தூர நின்றே வேடிக்கை பார்க்கின்றன ...

கண்களில் சுழலும் கண்ணீர்த் துளிபோல்
இன்னும் சிலரின் நினைவுகள்
என்னை விட்டகலாமல்
வினாக்கள் தொடுக்கின்றன ,,,

அன்பின் வடுக்கள் இங்கு
ஏராளம் ஏராளம் ..
மரத்தின் கணுக்கள் போல்
அவை பெருகிக் கிடக்கின்றன ...

மாற்றம் ஒன்றுதான் மாறாதது - என்று
யார் சொன்ன கூற்றோ ?
அது கூட மாறிப் போனது
என் வ

மேலும்

முழு உலகமும்
ஓரணியாய் திரண்டு
மூன்றாம் உலகப் போரைத்
தொடங்கியிருந்த
அன்றைய நாளில்...
====
நெல் தின்று
பழகியவனெல்லாம்
கல் தின்னப் பழகியிருந்தான்!
====
கோதுமை தின்று
கொழுத்தவனெல்லாம்
கோது தின்னப் பழகியிருந்தான் !
====
பல ஆயிரம்
அடிகளைத் தாண்டி
ஆழ்துளைக் கிணறுகள்
தோண்டியும்
தோல்வி வென்றிருந்தது !
====
புழுதிப் பேரலையின்
தாண்டவத்தில் தாக்குண்டு
சக்கரம் பூட்டிய கப்பல்களில்
புலம்பெயர்ந்துக் கொண்டிருந்தார்கள்
ஓரிரு கண்டத்தவர்கள்...
====
செம்மரம்
வெண்மரம் ஏதுமற்ற
அந்த சாலையோரத்தில்
அனாதையாய் நிற்கும்
ஒற்றைச் சவுக்கு மரத்திற்கு
ஏழடுக்கு பாதுகாப்பும்...
“தொட்டாலே சுடு” என்

மேலும்

அருமை. 13-May-2015 8:41 pm
அற்புதமான படைப்பு 24-Apr-2015 4:00 pm
அண்ணா நீண்ட நாட்களுக்கு முன் , "மனம் இது ஒரு மாயக் குரங்கு " என்று என் தலைப்புகளுள் ஒன்றை தெரிந்தெடுத்து எழுதுவேன் என்று சொன்னீர்களே ..நானும் எதிர்பாத்து காத்திருக்கிறேன் ..மறந்துவிட்டீர்களா? 24-Apr-2015 3:16 pm
இவையெல்லாம் எழுத்தாக மட்டுமே இருந்துவிட்டுப் போனால் போதும் தம்பி.... மழை மனிதனை மறந்துவிடாமல் இருந்தால் போதும்....நன்றி தம்பி கருத்திற்கு ! 24-Apr-2015 8:12 am
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) rameshalam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Mar-2014 9:18 am

மலைமுகட்டில் பனியிறங்கும் வேளை - கிழக்கில்
தலை துவட்டிப் பரிதிவரும் காலை -
முகிலெடுத்து முகம்துடைக்கும் சோலை - உழவன்
முனைப்போடு தொடங்கிடுவான் வேலை !

கோவணத்தைக் கட்டிக்கொண்ட உழவன்- வயது
ஏழுபத்து தாண்டிவிட்ட கிழவன் !
ஆவணமாய் வயல் எழுதும் மறவன் - அவனே
அண்டமகிலம் அத்தனைக்கும் அரசன் !

உடல்முழுதும் பூசி நிற்பான் சேறு-அவன்
உள்ளத்திலே இருப்பதில்லை ஊறு !
சளைக்காமல் ஓட்டிடுவான் ஏரு - ஊருக்கு
களைக்காமல் ஊட்டிடுவான் சோறு !

கடலாக திரண்டோடும் வேர்வை- அவன்
கண்டதில்லை ஒருபோதும் சோர்வை !
வறுமையவன் போர்த்திக் கொள்ளும் போர்வை
அதை- கிழித்தெறிய அரசிற்கில்லை பார்வை !
===
பச்சைசேலை கட்டிக் கொ

மேலும்

மிக்க நன்றி தோழரே ! 29-Mar-2014 8:55 am
மிக்க நன்றி தோழரே ! 29-Mar-2014 8:55 am
கருதுள்ள கவிதை வாழ்த்துக்கள் 29-Mar-2014 6:46 am
உழவை உற்சாக படுத்தும் உங்கள் கவிதை. 28-Mar-2014 1:09 pm
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) Rozhan A.jiffry மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Mar-2014 5:03 pm

செவ்வானம் சிரிச்சிருக்க பனிப்பூவு பூத்திருக்க
காட்டுவழி ஒத்தயடி நடந்துபோன காலமது !
ஆண்டுபல அழிஞ்சாலும் மனசுக்குள்ள இந்நாளும்
அழியாம தேங்கிநிக்கும் அந்தநாள் ஞாபகங்கள் !

ஒருவேள சோத்துக்கு மூவேள யோசிக்கும்
ஏழக்குடும்பத்து ஏழு பேரில் நானொருத்தன்
கூழ்குடிக்க வக்கில்லாம திண்டாடி வாழ்ந்தாலும்
பள்ளிக்கூடம் போய்ப்படிக்க மறக்காத காலமது !

பால்குடுத்துப் பசியாத்தி வளத்துவிட்ட அம்மாவும்
பாடுபட்ட கஷ்டத்த மறச்சிகிட்டு அப்பாவும்
அட்டைக்கு ரத்தங்குடுத்து அல்லோடு பகலொழச்சி
அஞ்சிப்பேர படிக்கவைக்க அல்லபட்ட காலமது !
===
ரோட்டோர வாகமரம் கூதகாத்த வீசுரப்போ
தேவார திருப்பதிகம் மனசுக்குள்ள பேசுறப்போ

மேலும்

அந்தநாள் ஞாபகம் அருமையான பதிவு. 30-Mar-2014 8:13 am
மிக்க நன்றி தோழரே ! 28-Mar-2014 8:33 am
மிக்க நன்றி ஐஸ்சு ! 28-Mar-2014 8:33 am
அருமையான நினைவுகள்.. வாழ்த்துக்கள் நீங்கள் பெற்ற விருதுக்கு.. 27-Mar-2014 6:41 am
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2014 9:51 pm

ஊரினில் ஆயிரம் ஊறுகள் மேய்ந்திட
ஊமையாய் இருப்பதுவோ? - வெறும்
ஊனமாய் பாயிரம் நூறுகள் செய்திட
ஊருக்கும் விடிந்திடவோ?-

மடமைகள் சூடிய மூடர்கள் கூடிய
மடமென ஆவதுவோ ?- தமிழர்
கடமைகள் மறந்த சந்ததி வளர்த்து
விடமென போவதுவோ ?

சாதிகள் போரிட வீதிகள் சிவந்திட
வீழ்வதும் நம்மினமே - பெரும்
மோதலில் ஒருபுறம் காதலில் மறுபுறம்
மடிவதும் தமிழினமே !

பாரினில் பன்மொழி வீறென மேவிட
செம்மொழி வீழ்வதுவோ? - தினம்
அந்நிய மொழியொடு உன்னகம் தாவிட
பொன்மொழி வீழ்வதுவோ ?

தீதெல்லாம் யாதென திறம்பட கூறிடும்
கடமைகள் மறந்ததுவோ? - வெறும்
போதையில் உளறிடும் பாதையில் சென்றிட
திறமைகள் ஒளிந்ததுவோ?

மூ

மேலும்

பழங்கதைப் பேசியே சுயமதை இழக்கும் பாவிகள் வாருங்கள் - உங்கள் புரட்சிகள் முளைக்கும் பாக்களைத் தூவி சரித்திரம் செய்யுங்கள் முதல் முழக்கம் முறையான முழக்கம். 08-May-2014 1:28 pm
படைப்பு மிகவும் சிறப்பு தோழரே! 27-Mar-2014 8:54 am
உங்கள் கவிதை உணர்வுகளை உறங்கவிடாது உண்மைப் பாடமதை உலகம் அறிய விடும் ! 24-Mar-2014 10:45 pm
ஆதங்கமான உணர்ச்சிப்பூர்வமான வரிகள்...., அருமைத்தோழரே! 22-Mar-2014 12:54 pm

காரிருள் கிழித்து
காட்சிக்கு வந்துதித்த
மின்னல் போல் ...

கண்முன்னே காணாமல்
கருவில் உதிக்காமல்
பாலூட்டி வளர்க்காமல்
நீயும் வளர்க்கிறாய்
உந்தன் அன்பென்னும்
அமுதூட்டி ...

இல்லையொரு
பிள்ளையென்று
இனி ஏங்கித் தவிக்காதே ...
இதோ நானிருக்கிறேன்
உந்தன் உத்தம மகனாக ...

“அம்மா “
உன் உதிரம் குடிக்கவில்லை
பிறவி வலி கொடுக்கவில்லை
ஆனால் அன்பெனும்
உயிர் வலி கொடுக்கும்
பாவி நான் ...

உந்தன் பாதம் தலைசாய்த்து
கண்ணுறங்க நான்
விழித்திருக்க ...
நீ என் மடி சாய்ந்து
கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ ...

மேலும்

வருகைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே ... பூக்கள் என்றும் புன்னகைக்க வேண்டும் ... 10-Mar-2014 11:49 pm
நல்ல படைப்பு தமிழன்பா.... இப்படியான உறவுகளில் ஓராயிரம் இன்ப பூக்கள் பூக்கும் ! 10-Mar-2014 11:48 pm
மிக்க நன்றி நண்பரே .. 10-Mar-2014 11:23 pm
அழகு..!! 10-Mar-2014 11:01 pm

தோள் சாய் என்றேன் – உன்
தோள் சாய்த்து
எனை இம்சிக்கிறாய் ...

அடி கள்ளி
உன் கருங்குவளை விழிகொண்டு
கள்வன் என்னையே
களவாடிச் செல்கிறாய் ...

கனியிதழ் வருட
என் விரல் துடிக்க – உன்
ஓரப் பார்வை அதை
ஒடித்துப் போடுகிறதே....

பூக்களெல்லாம்
செய்த சிகையழகும்
உன் மத்தாப்புச் சிரிப்பின் முன்
மங்கித்தான் போனதடி !

பசுமையெல்லாம்
ஆடையாகி - உந்தன்
மேனியைத் தழுவுதடி ...

கர்வம் கொண்டு
இருந்த என்னைக்
கைகட்டி நிற்க வைத்தாய் ..

ஆசை முத்தம் ஒன்று கேட்டேன்
அதில் அனலாகித் தகிக்கிறாயே ...
சிக்கி முக்கி கல்லைப் போல
கிட்ட வந்து வந்து உரசுறியே ...!

மேலும்

ஆகா தமிழ் . 11-Jan-2014 12:16 am
வருகைக்கு நன்றி நட்பே ! ஆனால் வில்லங்க விளக்கம் எதற்கு ? 10-Jan-2014 8:18 am
காதலில் விழுந்து விட்டாய் கண்ணா , கவிதையில் சொல்லால் சொல்லுகிறாய் உந்தன் இதய அழகிய தேவதை யாரோ . என்றும் அவளின் நினைவாகவே அவள் பக்கம் இருக்கிறாய் . கரு விழி கொண்டே அவள் உன்னை நேசிக்கிறாள். உன் சொல்லில் அன்பில் விழுந்தவள் யாரோ. சொல்லு கண்ணா சொல்லு .கெட்டி மேளம் கேட்கட்டுமே... 10-Jan-2014 5:07 am
வருகைக்கு நன்றி ! 05-Jan-2014 3:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (142)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
user photo

விஷ்ணு

மதுரை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (142)

karthikjeeva

karthikjeeva

chennai
சுபத்ரா

சுபத்ரா

திருநெல்வேலி
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (142)

ஜோதி

ஜோதி

Nagercoil
செந்தீ சூரியன்,,

செந்தீ சூரியன்,,

புதுக்கோட்டை
பிரபு  தமிழன் ...

பிரபு தமிழன் ...

புதுக்கோட்டை
மேலே