praveen குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  praveen குமார்
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  09-Sep-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Feb-2014
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  10

என்னைப் பற்றி...

தொழிலில் கல்லூரி பேராசிரியர் நான்..கவிஞன்...நல்ல ரசிகன்..

என் படைப்புகள்
praveen குமார் செய்திகள்
praveen குமார் - எண்ணம் (public)
25-Dec-2014 9:27 am

இன்றைய காலகட்டத்தில் நான் பலரிடம் பொதுவாக பார்க்கக் கூடிய ஒரு விஷயம் பற்றாக்குறை .ஆம் எல்லோருடைய மனதிலும் ஏதேனும் ஒரு குறை இருக்கிறது .குறிப்பாக 20 வயதிலிருந்து 27 வயதுக்கு உட்பட்டோரிடம் .எனக்கு கணக்கே வரவில்லை .நான் கருப்பாய் இருக்கிறேன் . என்னிடம் எந்த பெண்ணும் பேச வில்லை .அப்பா எப்போதும் திட்டுகிறார் .என் காதலி பிரிந்துவிட்டாள் . வாங்கும் சம்பளம் போதவில்லை .இல்லை... இல்லை ...இல்லை ..
இதுதான் இன்றைய கோடிக்கணக்கான இளைஞரிடத்தில் கொட்டிக் கிடக்கும் ஒரு குவியல் ..

‪#‎நம்மவர்க்கு‬ கவலை படுவதற்க (...)

மேலும்

praveen குமார் - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2014 8:57 am

நதிகளும் கைகோர்க்கும்.

வெற்றி வெற்றி என்றே வீறு கொள்ளுவோம்.
சுற்றி சுற்றி வென்றே பாரு வெல்லுவோம்..
கொட்டிக் கொட்டி கைகள் கொட்டி குலவை செய்யுவோம்.
தட்டித் தட்டி தாளம் தட்டி தமிழை வாழ்த்துவோம்.
தலை தலையாய் தமிழ் புவி எங்கும் சிறக்கட்டும்..
அலை அலையாய் நதிகளும் பொங்கி இணையட்டும்..

தமிழே வாழ்வே என்றே ஆடிப் பாடுவோம்.
தரணி ஏற்றி ஒன்றே நாமே கூடுவோம்.
விழலாய் வீணே சுயநலம் ஆடும் கூட்டத்தை
சுழி போட்டுப் பூஜ்ஜியமாய் விரட்டி ஓட்டுவோம்.
தலை தலையாய் தமிழ் புவி எங்கும் சிறக்கட்டும்..
அலை அலையாய் நதிகளும் பொங்கி இணையட்டும்..

வல்லரசு இந்தியாவை வடிவில் காணுவோம்.
நல்லரசு தமிழகத்தில் நாளும

மேலும்

சிறப்பான படைப்பு தோழரே ........ 24-Dec-2014 9:33 am
அருமையான படைப்பு ஐயா ! 24-Dec-2014 9:02 am
praveen குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2014 1:32 pm

வீசி எறிந்தனர் கறிவேப்பிலையாய்...
வாடிப்போனேன் வதங்கிய இலையாய்..
சாட்சிகள் சொல்லவே யாரும் இல்லை...
சங்கடம் உற்றேன் சன்னிதி அடைந்தேன்...
தோற்றது கூட வருத்கங்கள் இல்லை-இவன்
ஏற்றது இல்லை என்றதே வலிகள்...
வீசிவிட்டோமென எக்காளம் வேண்டா..!!
விதையாய் தானிங்கு விழுந்துள்ளேன்..
மறுமுறை எழுந்திடுவேன்!!
மரமாய் வளர்திடுவேன்!!
எதிரியும் வந்திடுவார்!!
எந்தன் நிழல்களை வேண்டி நின்று!!!!
-ம.பிரவீன்குமார்

மேலும்

அருமை பிரவீன் குமார் 11-Mar-2014 3:05 pm
மிக அருமையான வார்த்தை பிராவகங்கள் 11-Mar-2014 2:38 pm
praveen குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2014 7:49 am

என் நரைமுடியை நீ கோத!!
உன் நரைமுடியை நான் தேட!!
சிறு கன்னக்குழியில் நான் ஓட!!
என் நெஞ்சுக்குழிக்குள் நீ தேட!!
காதல் மட்டும் போதுமடி!!
நம் ஊடல் கூட கூடுமடி!!!

மேலும்

அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) kppayya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Feb-2014 4:40 pm

உணவு உடை உறையுள் வேண்டும்
-ஏழையின் வறுமை

காசு பணம் சொகுசு வேண்டும்
- நடுத்தர வறுமை

அன்பு காதல் கனிவு வேண்டும்
- பணக்காரன் வறுமை

கல்வி செல்வம் புகழும் வேண்டும்
- இளைஞனின் வறுமை

கனிவோடு காதல் கணவன் வேண்டும்
- கன்னியின் வறுமை

கையும் கோலும் துணையும் வேண்டும்
- முதுமையின் வறுமை

நேரம் காலம் சந்தர்ப்பம் வேண்டும்
- திறமையின் வறுமை

நலவு நாடும் நல்தலைவர் வேண்டும்
- அரசியல் வறுமை

திட்டம் சிந்தனை சிறப்பு வேண்டும்
- நாட்டின் வறுமை

நம்மை நாமே நம்ப வேண்டும்
- நம்மில் வறுமை

மற்றவரை நம்பி வாழ்தல் கொள்கை
- வாழ்க்கையின் வறுமை

மேலும்

நன்றி தோழமையே :) 29-Sep-2014 11:26 am
மிக அருமை தோழா !!! 29-Sep-2014 11:25 am
நன்றி தோழமையே :) 17-Jul-2014 10:24 am
praveen குமார் - praveen குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2014 7:56 pm

குருதி யாற்றில் நீந்திக் கடந்து
குடும்பத்தை யெல்லாம் மறந்து கிடந்து
சத்திய சோதனை தாங்கி நின்று
பெற்றிட்ட சுதந்திரம் கண்டீரோ!!

அன்னை பூமியயை அடிமைக ளாக்கி
அயலா னெல்லாம் ஆண்டு நிற்க
எங்கள் சக்தியை கண்ட உடனே
எடுத்த ஓட்டம் அறிவீரோ!!

இன்றோ,
சாதிப் பூசலும் சமய வெறிகளும்
சாக்கடை போல புரண்டு நிற்க
காந்தியின் இலட்சியம் கனவாய் போவதோ!
பாரதிக் கனவு மண்ணில் புதையவோ!!

இளைஞனே,
உன்னில் உள்ளது தீயின் வேகம்
உறங்க வைப்பது விதன்டா வாதம்
தட்டி யெழுப்பினால் சுடர் விடு!
கொட்டி யெழுப்பினால் சுட்டு விடு!!

இறப்பு என்பது ஒரு முறை தான்!!
அது இன்றே னேரினும் நன் மு

மேலும்

நன்றி தோழரே!! 14-Feb-2014 8:24 pm
வீர வரிகள் தோழா 14-Feb-2014 12:33 am
praveen குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2014 8:14 pm

மழைத்துளியாய் என் முத்தம்...
மௌனத்தில் உன் வெட்கம்!!!

**********************************************
காலையில் ...சிறு சாலையில்
ஒரு வானவில்!!!!
**********************************************

உன் கழுத்தோர தேமலில் ஒன்று கண்டுகொண்டேன்..
கடவுளும் கண்ணதாசன் தான்...கவிதை எழுதுவதில்!!!

மேலும்

praveen குமார் - praveen குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2014 6:04 am

உனக்கு நான் முக்கியமா...இல்லை உன் கவிதை முக்கியமா??என்னவள் கேட்கிறாள்..

அவளுக்கு எப்படி புரிய வைக்க..
அவள் கண்கள் தான் என் கவிதை என்று!!!

மேலும்

பாடும் ஐயா...நாம் ரசனையோடு பார்த்தால்.. 14-Feb-2014 6:55 am
கண்களும் கவிபாடுமோ 14-Feb-2014 6:42 am
praveen குமார் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2014 10:16 am

மொழியின் கர்ப்பம்!!!
என் தமிழென்னும் கற்ப பையில்
கவி என்னும் சிசுவும் வளர!!!
ஆணா பெண்ணா கேட்கிறார்கள்...
சிலர் ஸ்கேன் செய்தும் பார்க்கிறார்கள்!!

வலிகள் அதிகம்...அதனால்
வார்த்தைகள் தடிக்கும்-சில நேரம்
பரவசம் அதிகம்...அதனால்
பனித்துளி பரவும்!!!

வெகுஜன பார்வையில் நான் மலடு!!
நான் மட்டும் அறிவேன் எந்தன் சுவடு!!
வலித்திடும் போது ஆறுதல் வேண்டாம்
சிறு அரவனை போதும் உள்ளம் மகிழ!!

உணர்வுகள்- அது ஊமையாக!!
உவமைகள்- அது நீங்கலாக!!
நலமாய் பெற்றெடுப்பேன்-என்
கவியென்னும் குழந்தையை!!!

மேலும்

அருமை தோழா, நீர் பெற்ற உமது கவி மகள் மிகவும் அழகை இருக்கிறாள் 03-May-2014 8:57 am
அருமை . 13-Feb-2014 7:55 pm
அழகு 13-Feb-2014 7:45 pm
கவி குழந்தையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் 13-Feb-2014 3:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

user photo

amrita

chennai
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (10)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே