Vallanadan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Vallanadan
இடம்:  திருச்சிராப்பள்ளீ
பிறந்த தேதி :  15-Aug-1954
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Nov-2013
பார்த்தவர்கள்:  168
புள்ளி:  3

என்னைப் பற்றி...

இலக்கியத் தேடலுடன் ஒரு
ஆத்மா.

என் படைப்புகள்
Vallanadan செய்திகள்
Vallanadan - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2014 2:32 pm

மண்ணில் ஈரம்
பயிரை வளர்க்கும்
விண்ணில் ஈரம்
மழையை கொடுக்கும்
கண்ணில் ஈரம்
கல்நெஞ்சை உருக்கும்
உன்னில் ஈரம்
உறவை வளர்க்கும்
என்னில் ஈரம்
சிந்தை தெளிவிக்கும்
நெஞ்சில் ஈரம்
மனிதம் வளர்க்கும்
என்பதனால்..மனதில்
எங்கேனும் ஒரு மூலையில்
ஈரம் கொண்டே வாழ்ந்திட
இனித்திடும் வாழ்வு
ஒவ்வொரு பொழுதுமே!

மேலும்

மிக்க நன்றி அய்யா .. தங்கள் கருத்தும் வாழ்த்தும் ஊக்கம் தருவதால் அன்புடன் ஏற்கிறேன் 29-Nov-2014 5:31 pm
கருணா , உங்கள் பேருக்கு ஏற்றார்ப் போல் , உங்கள் கவிதையிலும் ஈரம் . ஈரம் உங்கள் கவிதையின் சாரம் . மானுடம் பேணுதற்கு இது போன்ற கவிதைகள் மிக அவசியம். நன்றி நண்பரே . வல்ல நாடன் ,இல. கணேசன் 29-Nov-2014 5:10 pm
நன்றி நண்பரே! 29-Nov-2014 9:29 am
நன்றி நட்பே 29-Nov-2014 9:29 am
Vallanadan - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2014 2:32 pm

மண்ணில் ஈரம்
பயிரை வளர்க்கும்
விண்ணில் ஈரம்
மழையை கொடுக்கும்
கண்ணில் ஈரம்
கல்நெஞ்சை உருக்கும்
உன்னில் ஈரம்
உறவை வளர்க்கும்
என்னில் ஈரம்
சிந்தை தெளிவிக்கும்
நெஞ்சில் ஈரம்
மனிதம் வளர்க்கும்
என்பதனால்..மனதில்
எங்கேனும் ஒரு மூலையில்
ஈரம் கொண்டே வாழ்ந்திட
இனித்திடும் வாழ்வு
ஒவ்வொரு பொழுதுமே!

மேலும்

மிக்க நன்றி அய்யா .. தங்கள் கருத்தும் வாழ்த்தும் ஊக்கம் தருவதால் அன்புடன் ஏற்கிறேன் 29-Nov-2014 5:31 pm
கருணா , உங்கள் பேருக்கு ஏற்றார்ப் போல் , உங்கள் கவிதையிலும் ஈரம் . ஈரம் உங்கள் கவிதையின் சாரம் . மானுடம் பேணுதற்கு இது போன்ற கவிதைகள் மிக அவசியம். நன்றி நண்பரே . வல்ல நாடன் ,இல. கணேசன் 29-Nov-2014 5:10 pm
நன்றி நண்பரே! 29-Nov-2014 9:29 am
நன்றி நட்பே 29-Nov-2014 9:29 am
Vallanadan - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 8:48 am

இன்றைய பட்டி மன்ற கேள்வி.

நம் வாழ்கையில் முன்னேற்றம் பெற அதிகம் தேவை படுவது..

கல்வியா? இல்லை முயற்சியா?

கருத்துகளை கவிதைகளாய் களத்தில் இறக்குங்கள்..

பெரும் தலைவர் காமராஜர் கல்வி அறிவு இல்லாமலே தனது சொந்த முயற்ச்சியால் தமிழகத்தில் முதலமைச்சர் ஆக பதவி புரிந்து உள்ளார் என்பதை நினைவில் வைத்து கருத்துகளை பரிமாறலாமே.

மேலும்

நன்றி 29-Nov-2014 9:00 am
இன்றைய சமுதாயத்தில் , வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றவர்கள் எல்லோரையும் பட்டியலிட்டுப் பார்த்தால், அவர்களின் முன்னேற்றம் , அவர்களின் முயற்சியால்தான் அவர்களின் கல்வித்தகுதியின் பங்களிப்பு குறைவுதான். எடுத்துக்காட்டாக, இன்றைய காலகட்டத்தில், சுயதொழில் முனைவோர் மிகவும் குறைவு. இந்திய வணிக மேலாண்மை நிறுவனத்தில், பட்டம் பெற்று வெளியே வந்தாலும் ,முயற்சி இல்லை என்றால் முன்னேற்றம் இல்லைதான்.விஞ்ஞானிகளில் , எடிசன் ; மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் , ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் , அரசியல் கக்கன் , எழுத்துலகின் ஜாம்பவான்கள் பலர் என்று ,நீட்டிக்கொண்டே போகலாம். கோழையாக்கும் கல்வியை விட , வீரனாக்கும் முயற்சியே முன்னேற்றம் காண சிறந்தது , உகந்தது . வல்ல நாடன் .இல. கணேசன் 27-Nov-2014 11:25 pm
தாங்கள் முன் வைத்த கருத்தில் முயற்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளீர்கள் , இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் கல்வியே. எப்படி என்றால் இன்றைய கால கட்டத்தில் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால் அறிவு முக்கியத்துவம் பெறுகிறது, அதை நாம் கல்வி அறிவு என்றே எடுத்து கொள்ளலாம், அது மட்டுமல்ல இதில் விடா முயற்சியும் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் கல்வியும், முயற்சியும் தான் நம் வாழ்கையில் முன்னேற தேவை படும் கருவிகள் ஆகும். 27-Nov-2014 7:43 pm
முயற்சி தான் வாழ்கையில் முன்னேற உறுதுணையாக இருக்கும் .கல்வி என்பது கூடுதல் பலம்.... 27-Nov-2014 5:43 pm
Vallanadan - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 10:34 pm

இன்றைய உலகத்தில் முதியோர் இல்லத்தில் அதிகமாக வசித்து வருவது

ஆண்களா? இல்லை பெண்களா ?

இந்த பட்டி மன்ற கேள்விக்கு பதில் கூற முதலில் வருவது உங்களில் ஆண்களா இல்லை பெண்களா பார்போமே..

வாருங்கள் உங்கள் கருத்துகளை அள்ளி தாருங்கள்..சுவை மிகுந்த கருத்துகளை ருசிக்க காத்திருக்கிறேன்.

மேலும்

இது ஒரு வேதனையான கேள்வி. ஆனால் எங்களின் கருத்துக்களை ருசிக்க காத்திருக்கிறேன் என்று கேள்வியில் இருப்பது சற்றே மனதை நெருடுகிறது. 30-Nov-2014 8:34 am
பால் நிலையை கடந்த பெரிய குழந்தைகள் அவர்கள். ஆனோ பெண்ணோ, அங்கே இருப்பது விழுதுகள் முளைத்துவிட்ட சமுதாயத்தின் பழைய வேர்களே. 29-Nov-2014 10:04 am
Pengalay....... 29-Nov-2014 3:35 am
பிணங்கள். 28-Nov-2014 5:58 pm
Vallanadan - செல்விபிரியங்கா சண்முகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 9:38 am

மாம்பழம் புடிக்குமுங்க என் மாமனுக்கு...
ஆச பட்டு கத்துகிட்டேன் அதில் அல்வா செய்ய....

எங்கூரு ஆத்தோரம் வளந்திருக்கு மாமரம்.....
உச்சி மர கொப்பில் பறிச்ச நல்ல பழுத்த மாங்கனி ஒன்னு...

தை மாச பொங்கலுக்குன்னு தனிய எடுத்து வெச்ச
பத்தையூர் பனங்கருப்பட்டி ரெண்டு....

மணக்க மணக்க செஞ்சா தான்
மாமனுக்கு புடிக்கும் எடு புள்ள அந்த ஏலக்கா நாலு....

எங்கூட்டு லட்சுமி தாயி தந்த பாலுல
கடைஞ்செடுத்த நெய் கொஞ்சம்...
அலங்கரிக்க முந்திரி மூணு....

பறிச்ச மாங்கனியும் இடிச்ச வெல்லமும்
சேர்த்து அரச்சு எடுத்து வெச்சேன்....

பாத்திரத்தில் நெய் ஊத்தி பழக்கூழ அதில் சேர்த்து
கலவையா அது சேர இன்னும் கொஞ

மேலும்

ரெசிபி என்றால் உணவு தயார் செய் முறை என பொருள் . 28-Nov-2014 10:20 am
ரெசிபிக்கு தமிழ் என்ன வார்த்தை???????? 28-Nov-2014 9:03 am
எச்சி ஊறுகின்றது தங்களின் மாம்பழ அல்வாவின் ரெசிபியை படிக்கும் போழ்தே . கவிதை இனிக்கின்றது மாமனுக்காக செய்து வைத்திருக்கும் அல்வாவைப் போலவே . தங்களின் கவிதைகளில் நாட்டுப்புறப் பாடல்களின் சாயல் தெரிகின்றது. மேலும் , மேலும் கிராமீய மணம் சுமந்து வரும் கவிதைகள் தங்களிடமிருந்து கருத்தரிக்கட்டும் வல்ல நாடன் .இல. கணேசன் 27-Nov-2014 5:36 pm
வருகை தந்தமைக்கு நன்றி தோழியே..... 27-Nov-2014 3:32 pm
Vallanadan - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
21-Nov-2014 6:36 pm

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுதுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்கும் மத்திய அரசின் திட்டம்

மேலும்

Vallanadan - இன்பகுமார்.மு அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 3:53 pm

அரசு பதவியில் இருக்கும் அதிகாரிகள் மக்களை மிகவும் அலட்சியப்படுத்துகிறார்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பி டி ஒ அலுவலகத்தில் நான் திருமண உதவிதொகைக்காக பதிவுசெய்தேன் பின் அதில் நான் கொடுத்த மதிப்பெண் (ம) மாற்றுச்சன்றிதலை சரிபார்க்கவும் மற்றும் தேவையானதை சான்றிதல்களை பெருவதர்க்ககவும் எனது வீட்டிற்கு வந்தார்கள் . வந்தவர்கள் ரூபாய் . 500 வாங்கிக்கொண்டு அனைத்தும் சரியாக உள்ளது மதிப்பெண் (ம ) மாற்றுச்சன்றிதலில் attested வாங்கிக்கொண்டு வந்து நாளை பி டி ஒ ஆபீஸ் சில் வந்து கொடு மற்றும் 2000 பணத்துடன் என்றார்கள் நான் மறுநாள் சென்றேன் சான்றிதல்களை கொடுத்தேன் என்னால்

மேலும்

நான் கடந்த மாத சமர்பித்த *அரசு அதிகாரிகள்* என்னும் மனு வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சென்னங்குப்பத்தில் நடைபெற்றது இங்கு என்னை போல் பலர் பாதிக்க படுகின்றனர். இதற்க்கு உங்களால் நடவடிக்கை எடுக்கமுடியுமா ? எப்போது நடவடிக்கை செயல்படுத்துவிங்க ? 23-Nov-2014 11:04 am
Kadentha moonru varudingal lancjam. Mika kodumayaka ullathu..Nooru rupees kodutha idathil ayuram rupees kadkiranka inntha athikarikal.sorry makkal servant. 22-Nov-2014 7:41 am
Vallanadan - Vallanadan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2014 1:19 pm

ஜடம்


கலவியின் போழ்தில் கண்ணாடி வளையலோசை

தொட்டிலில் சிணுங்கிடும் மழலையின் கீதம்

திண்ணையில் படுத்திருக்கும் கிழங்களின் இருமல், செருமல்

கோயில் கொடையின் நையாண்டி மேளச்சத்தம்

தெருமுனையில் ஊளையிடும் நாயின் ஓலம்

இழவுவீட்டின் பறைஒலி

ராப்பிட்சையின் உடுக்கையுடன் கூடிய ஆரோஹணம், அவரோஹனம்

அர்த்தஜாமத்தில் குருட்டுச்சேவலின் காமக்கூவல்

மழைக்காலத் தவளைகளின் தனி ஆவர்த்தனம்

இருட்டுவானில் திரியும் ஒற்றைக் காகத்தின் கரைதல்

ஆகாயத்திலிருந்து பூமியில் வந்திறங்கும் பேரிடி ---என

இவற்றில்,

ஏதாவது ஒன்றினைக் கேட்டபின்னும்

பாதிதூக்கம் பாதிக்கப்ப

மேலும்

நன்றாக இருக்கிறது தோழரே....... 20-Nov-2014 3:23 pm
Vallanadan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2014 3:18 pm

வித்தியாசம்


வாசற்ப்படியை மிதிக்கும் போதே,

''வணக்கம், வாங்க"

கூண்டுக்கிளி கீச்சிட்டது வராண்டாவில்;

இனிய உபசரிப்பை எதிர்பார்த்து உள்ளே போனால்[?]

அப்பாவோ செல்பேசியில்;

அம்மாவோ சின்னத்திரை சிரீயலில்;

மகனோ மடிக்கணினியில்;

மகளோ செல்லப்பிராணியின் அரவணைப்பில்;

எல்லோருமே மும்முரமாய்.........

ஓரமாய்ப் படுத்திருந்த

கண் தெரியாத பாட்டி மட்டும் வரவேற்றாள்;

"வணக்கம்,வாங்க" சன்னமான குரலில்.


ஒரே ஒரு வித்தியாசம்.........

வெளியே , பழக்கப்பட்ட கிளி ;

உள்ளேயோ , கிழிக்கப்பட்ட பழக்கம் .

மேலும்

என்ன அருமையான குடும்பம் பாட்டி மட்டும் பழமை மாறாமல். . . . 01-Dec-2014 7:26 am
அருமை அழகு .... இன்றைய நிலை பல வீடுகளில் :( 29-Nov-2014 11:02 am
Vallanadan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2014 1:19 pm

ஜடம்


கலவியின் போழ்தில் கண்ணாடி வளையலோசை

தொட்டிலில் சிணுங்கிடும் மழலையின் கீதம்

திண்ணையில் படுத்திருக்கும் கிழங்களின் இருமல், செருமல்

கோயில் கொடையின் நையாண்டி மேளச்சத்தம்

தெருமுனையில் ஊளையிடும் நாயின் ஓலம்

இழவுவீட்டின் பறைஒலி

ராப்பிட்சையின் உடுக்கையுடன் கூடிய ஆரோஹணம், அவரோஹனம்

அர்த்தஜாமத்தில் குருட்டுச்சேவலின் காமக்கூவல்

மழைக்காலத் தவளைகளின் தனி ஆவர்த்தனம்

இருட்டுவானில் திரியும் ஒற்றைக் காகத்தின் கரைதல்

ஆகாயத்திலிருந்து பூமியில் வந்திறங்கும் பேரிடி ---என

இவற்றில்,

ஏதாவது ஒன்றினைக் கேட்டபின்னும்

பாதிதூக்கம் பாதிக்கப்ப

மேலும்

நன்றாக இருக்கிறது தோழரே....... 20-Nov-2014 3:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே