எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இன்றெனக்கு
இரட்டிப்பு மகிழ்ச்சி;
அதிசயமாய்
முகம்கொடுத்து
பார்த்தோ
புன்னகைத்தோ
விசாரித்தோ
விடவில்லை நீ
அணிந்திருந்த
உடையின் நிறம்
நமக்குள்
ஒன்றானதால்...
=============
ப்ரியன்
சட்டியில் இல்லாமலே
அகப்பையில் வருகிறது
அவளை நினைக்க நினைக்க
கவிதை
==================
ப்ரியன்
நிறம் மாறுமோ பூக்கள்
இந்த ஆண்டு என்னவள்
வேறுநிற சீருடையில்
===================
ப்ரியன்
ஏதோ இப்ப சொல்லனும்னு தோனிச்சி: - ப்ரியன்
====================================
FAKE ID வைப்பு பற்றிய ராம் வசந்தின் அவர்களின் எண்ணத்திற்கு பின்னூட்டமாய் ஜின்னா அவர்கள் எழுதியது.
====================================
மிகவும் பிடிக்காத அதுவும் அருவருவக்க தக்க செயல்களில் ஒன்று போலி பெயர்களில் உலாவருவது...
அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்....
இங்கே யாரும் திருடர்கள் அல்ல... மப்டியில் வந்து எங்களை பிடிக்க...
ஏன் உங்களுக்கு இந்த போலி நாடகம்...
இப்படி போலியில் இருக்கும் நீங்கள் என்ன உண்மையை சொல்லி கிழிக்க போகிறீர்கள் ?
கவிஞர்களுக்கு அழகே உண்மை முகம்... அதுவே இல்லை எனும்போது எப்படி உங்கள் எழுத்தை (...)
தோழர்களுக்கு காலை வணக்கம்...
திருவிழாவுக்கு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளேன்.
"இது திருவிழா காலம்" (246971) என்ற என் கிறுக்கல் கவி வாசிக்காதவர்களுக்காக இந்த "திருவிழா" படம். செல்லியம்மன் ஆண்டவர் அனைவரையும் ஆசிர்வதிப்பார். நன்றி.
படம் : ப்ரியன் (03.06.15)
வாழ்த்துக்கள்...
கவியிங்குநீ எழுதிடவே
கண்டெடுத்த உனைத்தான்
புவியெங்குநீ சென்றாலும்
புகழ்ந்திடுமே கைகொடுத்து
உன்னெழுத்தில் காதலால்
உறவுகளை ஈர்க்கின்றாய்
உன்வயதில் எனைக்காண
உவகைகள் தருகின்றாய்
என்பிள்ளை பெயர்வைத்து
இருக்கின்றாய் நீயும்தான்
இனும்சிறப்பாய் வாழ்ந்திடவே
இறைவனிடம் வேண்டுகிறேன்
அன்புடன்... ப்ரியன்.
தளத்தார்/தோழர்கள் கவனத்திற்க்கு:
(நியூட்டன் 3 ஆம் விதிப்படி...)
எழுத்து தளம் வருவதற்க்கு முன்பு கூட நான் பேதங்களுடன் (அதிகம்) இருந்ததில்லை. இங்கு வந்த பிறகு அதிகமாகி விட்டது. எழுத்திலேயே சுற்றிக்கொண்டு இருப்பதால் பிறர் கூற்றை படிக்க படிக்க, அது நானொரு இந்து என்பதை நினைவுபடுத்துகிறது. நன்றி...
பெண்ணே ஏனிப்படி - ப்ரியன்
என்னையுன் நினைவுக்கு
இரையாக்கி விடுகின்றது
நீ தவறவிடும்
கைகுட்டையும்
உன் கூந்தலுதிர்
பூக்களும்...
புதியதோர் உலகு உனக்கு - ப்ரியன்
கிரிக்கெட் சீரியலில்
யாவரும் மூழ்கிட
விளம்பரங்களில்
விருப்பம் உனக்கு
காலை மாலை
வைத்திருந்தாலும் ஓட
கண்டுதும் பெரியது
தாய்தான் உனக்கு
தேனும் பாலும்
கொடுக்க இருந்தும்
திண்றிட பிடிக்கும்
மண்தான் உனக்கு
பகல் முழுவதும்
விழித்து இருந்தாலும்
இரவிலும் விளையாடிட
ஏக்கம் உனக்கு
பஞ்சு மெத்தை
பட்டு இட்டாலும்
அன்னை மடியில்தான்
ஆசைகள் உனக்கு