veyyon- கருத்துகள்

யாரெல்லாம் இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டார்களோ, சம நீதி மறுக்கப்பட்டவர்களோ, அவர்களுக்கு போய் சேர வேண்டும். அது இன்னும் முழுமையாக போய் சேரவில்லை.

அம்பேத்கார் தலித்களுக்கு மட்டும் கேட்கவில்லை, மற்ற பிற்படுத்தபட்ட சாதியினருக்காகவும் தான் இட ஒதுக்கீடு கேட்டார்.

முன்னேறிய வகுப்பில் ஏழைகள் உள்ளனர் தான் மறுப்பதற்கில்லை, அனால் இட ஒதுக்கீடு என்பது என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
சமூக ரீதியாக மறுக்கப்பட்ட உரிமைகளை, அந்த மக்களுக்கு மீண்டும் பெற்று தருவதற்காக தான் இந்த இட ஒதுக்கீடு நமது நாட்டில் வழங்கப்படுகிறது.

மேலும் விபரம் தேவைபட்டால் தருகிறேன் தோழி.

மதம், மத ஊர்வலம், ரெண்டுமே தேவை இல்லாத ஆணி தான்.

மதம், மத ஊர்வலம் ரெண்டுமே தேவை இல்லாத ஆணி தான்.

இந்த கும்பிடை மே மாசம் வச்சு பாருங்கள். கடைகள் அருள் கேடகுதாணு பாப்போம்..

ஆதங்கத்தின் வெளிப்பாடாய் வரிகள்.. எச்சரிக்கும் சொற்கள்..

வாழ்த்துக்கள் தோழி.

குப்பைகளை
"அதைச்சுற்றி" போடும்
தொட்டி...

உண்மைதான்.
ரசித்தேன்

அருமையான, அழகான முயற்சி..பாராட்டுக்கள் தோழி.

மண் வாசனையுடன் கூடிய படைப்பு ..நன்று.

ஆடை குறைப்பு தான் கரணம் என்றால் கிராமபுறங்களில் நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம்?

3, 4, 5 வயது சிறுமிகளெல்லாம் கூட காமுகர்களால் சீரழிக்க படுவதற்கு என்ன காரணம்?. அவர்கள் அணியும் ஆடையா ??

முறையான பாலியல் கல்வி அவசியமாகிறது.

இன்றைய ஆணாதிக்க சமூகத்தில் பெண் என்பவள் மோக பொருளாக சித்தரிக்கப்படுகிறாள்.

ஒரு பெண் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகிறாள் என்றால். "கற்பழித்தவனை தூக்கில் போடு " என்று கூக்குரல் இடும் ஊடகங்கள் தாங்களும் அதற்கு ஒரு உடந்தை என்று உணர்வதில்லை.

ஒரு துணி விளம்பரம்னா, நகை விளம்பரம்னா, சோப்பு விக்கனும்னா ஏன் ஆண்கள் உள்ளாடை விளம்பரத்திற்கு கூட ஒரு பெண்ணை அரை குறை ஆடையோடு ஆடவிடும் இந்த விளம்பரங்கள், பெண்களை ஒரு கவர்ச்சி பொருளாகவே காண்பிக்கிறது.

நம்ம சினிமா பத்தி எல்லாம் சொல்லவே தேவ இல்லை.. (உதாரணத்திற்கு சமீபத்தில் வந்த "தீயா வேல செய்யணும் குமாரு" போன்ற கருத்தாழம் மிக்க திரை காவியங்களை சொல்லலாம்.)

விகடன், குங்குமம் குமுதம் போன்ற தமிழ் "கலாசார பத்திரிகைகள் கூட நடுபக்க கில்மா போஸ்டர் இல்லாமல் வருவதில்லை..

இதெல்லாம் பார்த்து வளரும் ஒரு ஆண், பெண்களின் மீது எந்த மாதிரியான அபிப்ராயத்தை கொண்டிருப்பான்?...தான் ஆன் என்ற அகந்தையையும் எதிர் பாலினம் மீதான அடக்குமுறையையும் தன்னை அறியாமலேயே கற்றுகொண்டிருக்கிறான்.

(சில பெண்கள் தகலுக்கு தெரிந்தோ தெரியாமலோ இதற்கு உடந்தையாகிறார்கள் )

"வேலை கொடுக்க நீங்கள் தயாரா
சமுதாயமே.............. "
சவுக்கடி போன்ற வரிகள்...
அருமை..

கோபம் வேண்டாம் தோழி...உங்களிடம் மட்டும் அல்ல.பல இடங்களில் இப்படி தான் விளையாட்டாக பதிலளித்துள்ளேன்.யார் மனதையும் புண்படுத்த அல்ல...தங்களுக்கு வருத்தம் நேர்ந்திருந்தால் மன்னிக்கவும்...


veyyon கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே