சக்கரைவாசன் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : சக்கரைவாசன் |
இடம் | : தி.வா.கோவில்,திருச்சி |
பிறந்த தேதி | : 13-Sep-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 2981 |
புள்ளி | : 2209 |
ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி ஊழியர்.
மணியோசை ஒலித்திட மந்திரங்கள் முழங்கிட
அணிகின்ற எழில்முத்தின் ஆரம்மார் பினில்துலங்க
பிணிதன்னைப் போக்கிடுமென் பேரெழிலாள் அபிராமி
இணைத்தாளைப் பணிந்தேன்நான் இப்பிறவிப் பிணிநீங்க
கொள்ளையர் என்றே கூறு -- நேரிசை வெண்பா
*******"**********
வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனைக்
கொள்ளையர் என்றேநீ கூறு!
******
கொள்ளையர் என்றே கூறு -- நேரிசை வெண்பா
*******"**********
வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனைக்
கொள்ளையர் என்றேநீ கூறு!
******
பிளேட்டோ சொன்னான் காதலைத் தொட்டால் நீகவிஞன்
நோட்டாவை நீதொட்டால் யாருக்கும் ஓட்டு இல்லை
கூட்டணி என்பது அரசியல் கூட்டு அவியல்
நாட்டைக் காக்க நல்லவனுக்கே நீ ஒட்டுப் போடு !
வணங்காது ஒடுக்கிடுவோம் -- தரவு கொச்சகக் கலிப்பா
******************
குடிப்பதற்கு வழிவகுத்துக் குடிமகனை அடிமையாக்கி ;
படிப்பதற்கு அமைத்திட்ட படிப்பகங்கள் முழுவதுமே,
குடிப்பழக்கம் தடம்பற்றும் கொடுமையது பெருகிடற்கு ;
வடிவமைத்த அரசியலை வணங்காது ஒடுக்கிடுவோம்!
விளக்கம் : குடிமகனை = சிடிஸன்ஸ், நாட்டின் பிரஜைகள்
படிப்பகங்கள்= பள்ளி மற்றும் கல்லூரி
(அனைத்து சீர்களும் கலித்தளை பயின்று வந்துள்ளது)
ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு மோனை
அடி எதுகை)
வணங்காது ஒடுக்கிடுவோம் -- தரவு கொச்சகக் கலிப்பா
******************
குடிப்பதற்கு வழிவகுத்துக் குடிமகனை அடிமையாக்கி ;
படிப்பதற்கு அமைத்திட்ட படிப்பகங்கள் முழுவதுமே,
குடிப்பழக்கம் தடம்பற்றும் கொடுமையது பெருகிடற்கு ;
வடிவமைத்த அரசியலை வணங்காது ஒடுக்கிடுவோம்!
விளக்கம் : குடிமகனை = சிடிஸன்ஸ், நாட்டின் பிரஜைகள்
படிப்பகங்கள்= பள்ளி மற்றும் கல்லூரி
(அனைத்து சீர்களும் கலித்தளை பயின்று வந்துள்ளது)
ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு மோனை
அடி எதுகை)
பாவகை மூன்று கருத்து ஒன்று
********
1. கலிவிருத்தம் --- ( காய் 4 )
******
ஆக்கமிலாப் பாவியராய் ஆட்சியுற்று ஆர்ப்பரிப்போர் ;
ஊக்கமிலாச் செய்முறைகள் ஊர்முழுதும் சேர்த்தபின்பு ;
நாக்கினிடை தேன்குழைத்து நாலுவிதம் பொய்பரப்பி;
வாக்களித்த மக்களுக்கு வாக்கரிசி போடுவதேன்!
(அனைத்து சீர்களும் கூவிளங்காய் ஆக உள்ளது.
ஒவ்வொரு அடியும் நேரசையில் தொடங்க 16எழுத்துக்கள்)
ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு மோனை)
2. வஞ்சி விருத்தம் -- (காய் 3.)
*******
ஆக்கமிலாப் பாவியராய் ஆட்சியுற்றோர்
வாக்குறுதிப் பொ
பாவினம் மூன்று கருத்து ஒன்று
*********
1. ( நேரிசை வெண்பா )
நாயினை வைப்பராம் நன்றாக வீடுகளே,நல்
தாயினைத் தூற்றுவர் தாங்காது-- தூயவர்,
நேயமிகுந் தோரென நின்றிடும் நீசரை
பேயினம் என்றுநீ கூறு !
( தாங்காது = போற்றிப் பராமரிக்காது)
2. (கட்டளைக் கலித்துறை)
நேயமி குந்தோராய்ப் பூமியில் சேர்ந்திட்ட நீசரினம் ;
நாயினை வைப்பராம் சோடித்து வீட்டின் நடுவறையில்!
பேயின மாய்த்தி கழுமிவ் வரக்கப் பிறப்பினங்கள் ;
நாயினை ஓரங் கடத்தி மகிழ்வர் தரங்கெடவே !
3. (குறள் வெண்பா)
தாய்தனைத் தூற்றும் தரங்கெட்ட வாரிசோ
நாய்தனை வைப்பராமில் லத்து !
நேரிசை வெண்பா
சமயச்சார் பற்றதோர் சட்டமென்றார் என்ன
சமயசாதி காத்திடும் சட்டம் -- சமயசாதி
இங்கொழிக்கா காக்க இயற்றிய சட்டமடா
அங்கதம் பாட அழுத்து
மூடர்காள் மதச் சார்பற்ற அரசு என்றால் சாதிமதம் கூடாது என்று அர்த்தம் கற்பிக்காதீர்.
சாதி இருக்கும் மதம் இருக்கும். ஆனால் அரசு அவர்களிடம் பாரபட்சம் ஓரவஞ்சனை காட்டாது
செயல் பட வேண்டும் என்றே சட்டம் சொல்கிறது. சட்டத்தை முறையாய் ஆய்ந்து படித்து செயல்
படடுதல் சிறந்தது..
...
கற்றவர் திரிவது காணு
*****
உற்றது தவிர்த்து ஒவ்வாமை பற்றியே
கற்றவர் திரிவது காணு !
கட்டளைக் கலித்துறை
தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ ளாலபி ராமி கடைக்கண்களே
ஒன்று மூன்றில் ஐந்தில் மோனை அமைந்த பாடல்
நேரிசை ஆசிரியப்பா
(இது ஒழுகிசை அகவல் ஓசை)
முயற்சி விட்டு குட்டி சூட்டிகை
யொதுக்கி கவித்தமிழ் நினைக்கா காலி
டப்பா வாகி வெற்றுப் பேச்சு
வெறும்கிறுக் கலென தமிழில் பாட்டென
வெளியே சொல்லுதல் நகைப்பு நீயும்
கம்பனோ புகழேந் திப்புல வனோசொல்
வள்ளுவப் பெருந்தகை யாவையோ
மூடனே தமிழை முடமாக் கிடாதே