இளந்தென்றல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இளந்தென்றல்
இடம்:  ஆலங்குளம்
பிறந்த தேதி :  04-Jul-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jan-2014
பார்த்தவர்கள்:  177
புள்ளி:  13

என்னைப் பற்றி...

எழுத்து ஆர்வலன்

என் படைப்புகள்
இளந்தென்றல் செய்திகள்
இளந்தென்றல் - எண்ணம் (public)
08-Nov-2017 5:16 pm

 கல்லூரி சுவற்றில் 

உன்  பெயரையும் 
என் பெயரையும் இணைத்து
கரி கொண்டு கிறுக்கியிருந்தான்
ஒரு அநாமதேயன்.

 நீயும் நானும் எழுதாத
நமக்கான முதல் காதல் கடிதம்
அது!

நம்மை ஆப்பிள் கடிக்க செய்த
அந்த சாத்தானை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
கடவுள் கிரீடம் சூட்டுவதற்காக!  

மேலும்

காதலின் நினைவுகள் உள்ளங்களுக்குள் தேங்கிக் கிடக்கிறது அவைகள் மரணம் வரை அழியாத நாட்குறிப்புக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Nov-2017 8:38 am
இளந்தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2016 1:13 pm

மின் தட்டுப்பாடு
மிக சாதாரணமாகிவிடும்,
ஒட்டு மொத்த குடி நீர்
தட்டுப்பாடு வரும் போது

உலகில் முக்கால் பங்கு
நீர் இருந்தும்
கால் பங்கு நிலத்தை
கனவாய் கண்ட
மீன் செத்தது!

கடல் நீர்
உலக அளவு
ஆர்வத்துடன் தான்
இருக்கிறது...
நமக்கு தான்
முழங்காலுக்கு மேல்
நனைவதற்கு ஆர்வமில்லை

காய்ந்த பாலையில்
கானல் நீர் பார்க்கிறேன்...
ஈர சாலையில் கானல் தாகம் பார்க்கிறேன்


பிரபஞ்சமே நம்மை பாதுகாக்க
சுழல்கிறது
பிரபஞ்சத்தின் ஒற்றைத்துளியை பாதுகாக்க
நமக்கு எத்தனை சவால்கள்

நீங்கள் வற்ற வைத்த
நதிகளுக்கும்
விட்டு வைத்த நதிகளுக்கும் சேர்த்தே

மிகப்பெரிய கண்ணீருடனும்
பேர

மேலும்

கவிதை வரிகளில் மனம் நெகிழ்ச்சியாகிறது. பாராட்டுகள். 29-Apr-2016 10:06 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் 23-Apr-2016 11:51 pm
அதுவும் இன்று வற்றிக் கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Apr-2016 11:48 pm
உண்மையின் பதிவு ............... படிப்பிற்கு வாழ்த்துக்கள் ! 23-Apr-2016 5:21 pm
இளந்தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2015 2:05 pm

குருவி பறந்த பின்
கிளை ஆடுகிறது....
சொந்தம் கொண்டாட
தென்றல் ஓடுகிறது..
கிளையின் பூவுக்கோ
ஊஞ்சலாடும் மகிழ்ச்சி!

ஆலகால விருட்சம்
வெட்டப்படுகிறது
ஒட்டு மொத்த உயிர்களுக்கும்
சேர்த்த ஒப்பாரியாய்
ஓவென்ற இரைச்சலுடன்
சாய்ந்து விழுகிறது மரம்..
ஆலமரத்தில் அடைக்கலமிருந்த
ஆந்தை சொன்னதாம்
ஆலமரத்துக்கு என்னை விட
குறைவான ஆயுசு என்று

கொட்டும் மழையில்
குயில் நனையுமென்று
கவிஞன் வருந்தினான்
மழை முடிந்த மறுநாளில்
ஜூரம் மாத்திரை வாங்க
குயில் இல்லை
இவனே நின்றான் மருந்து கடையில்

பாறையில் விழுந்த விதை
என்பது உங்கள் விரக்தியின்
வாக்கியம்
காங்கிரிட்டில் முளைத்த மரம்
தான் முயற

மேலும்

இளந்தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2015 9:10 pm

ஒரு பலூன் உடையும் பொழுது

வண்ணங்களின் வடிவமெடுத்தக் காற்று
மீண்டும் உருவமிழக்கிறது.

ஒரு பலூன் உடையும் பொழுது

புவீஈர்ப்பை கேலி செய்து
புன்னகைத்த இழைகளின் மிச்சம்
பூமியின் காலில் விழுகிறது


ஒரு பலூன் உடையும் பொழுது

சிறைபட்டக் காற்று சத்தம்போட்டு சிரித்து
சுதந்திரம் பெற்று உணர்கிறது

ஒரு பலூன் உடையும் பொழுது

உன்னோடு விளையாடிக்கொண்டிருந்த
பலூனிற்குள் இருந்த என் சுவாசம்
தனியே விசும்பிக்கொண்டிருக்கிறது.

மேலும்

முடிவு நன்று.... 23-Aug-2015 9:27 pm
ஆஹா மிக சிறப்பு... ஒரு காற்றின் சிறையை விடுதலையாகும் தருணத்தை விவரிக்கும் அழகு மிக அருமை... அதிலும் முடிவில் சொன்னால் விசும்பல் நல்ல அழுத்தம்... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:57 pm
இளந்தென்றல் - Kanmani அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2014 5:45 pm

முனிவர் Vs துறவி - வித்தியாசம் சொல்லுங்களே ப்ளீஸ் .....

மேலும்

முற்றும் துறந்தவர் முனிவர் சுற்றம் துறந்தவர் துறவி பற்றும் துறந்தவர் முனிவர் பட்டம் தேடுவபர் துறவி மழித்தலும் , நீட்டலும் அற்றவர் முனிவர் அழித்தலும், வாழ்த்தலும் பெற்றவர் முனிவர் மடத்துக்கு அதிபதி துறவி ஜகத்துக்கு பசுபதி முனிவர் வல்ல நாடன் . இல . கணேசன் . 21-Nov-2014 4:07 pm
துறவி - நகரத்தில் வாழும் முனிவர் முனிவர் -காடுகளில் அல்லது யாரும் இல்லா இடத்தில் மட்டும் வாழும் துறவி .. 18-Nov-2014 6:43 pm
துறவி என்பவர் சந்நியாசத்தின் தொடக்கநிலையில் இருப்பவர் முனிவர் என்பவர் சந்நியாசத்தின் உச்சநிலையைத்தொட்டவர் 18-Nov-2014 6:23 pm
முனிவர் முற்றும் துறந்து தவம் இருந்து வலமையோடு வாழ்பவர் துறவி முற்றும் துறந்தவர் அவ்வளவே 18-Nov-2014 6:05 pm
இளந்தென்றல் - ஹரினி - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2014 9:35 am

விதி என்றால் என்ன ?


விதியின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளதா ?

மேலும்

விதியின் மீது நம்பிக்கை இல்லை.... ஒருவன் செய்த வினையின் பலனை இன்னொருவன் தண்டனை அனுபவிக்கிறான்...அதாவது இன்னொருவன் அவனுக்கு இடையூறு செய்கிற்ான் என்றே வைத்துக்கொள்வோம் அந்த இன்னொருவன் எந்த முகாந்திரமுமின்றி பாவியாகிவிடுகிறான் அப்படி என்றால் விதி என்பது செய்த பாவங்களினிமித்தம் யாரையேனும் பாவியாக்கிக்கொண்டே இருப்பது தானா? விதி என்று நம்பப்படும் ஏற்றத் தாழ்வுகள் சோசலிசத்தால் அரசியலால் வென்றெடுக்கப்பட்டுள்ளன வியாதியாய் நம்பப்படும் விதிகள் அறிவியலால் வென்றெடுக்கப்பட்டுள்ளன மொத்தத்தில் விதி ஒரு வியாபார யுக்தி அப்பாவியின் மனதில் எழும் கேள்வித்தீயின் மீது ஊற்றப்படும் தண்ணீர் விதியை வென்றதாய் சொல்லிப்பாருங்கள் அதுவே உன் விதி என்பார்கள் விதியை மீறுவது என்பதும் வெல்வது என்பதும் விதியை அலட்சியம் செய்வதன் மூலமே சாத்தியமாகும் அதற்கு விதி என்றோ திமிர் என்றோ அசட்டு தைரியம் என்றோ பெயர் வைத்து அழைக்கட்டும்.,,, விதி வலியது என்பது பழம் மொழி..அதாவது பழழமை வாதிகளின் மொழி விதி மீறல் வலியது என்பது தான் மாறா நியதி... 18-Nov-2014 5:58 pm
விதி என்பது மனிதனை பொய்யாக்கும் ஒரு மூட நம்பிக்கை 18-Nov-2014 4:24 pm
ஆமா தோழா.. விதி’ யை பார்த்து பார்த்து ரசித்தவன் தான் நானும் டைகர் தயாநிதி.......... மறக்க முடியுமா .. ? அந்த நீதிமன்ற காட்சிகள்.. ம்ம்ம் 18-Nov-2014 2:57 pm
நீங்க 'விதியை' பல தடவ பார்த்து இருப்பீங்க தான சந்தோஷ்...! நல்லா தான இருந்தது. 18-Nov-2014 2:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
குணசேகரன்

குணசேகரன்

புதுக்கோட்டை
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (11)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே