divya shri - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  divya shri
இடம்:  chennai
பிறந்த தேதி :  31-Aug-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Nov-2013
பார்த்தவர்கள்:  190
புள்ளி:  9

என் படைப்புகள்
divya shri செய்திகள்
divya shri - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2019 2:32 pm

உன் வருகைகான தினம் தினம்,
ஏக்கம் கொண்டது ஏனது விழிகள்.
நீயோ தரிசனம் தர மனமில்லாமல்,
மேக திரை மறைவில்.

அன்று ஒருநாள் ஏதிர்பாராய் மேகம் விட்டு,
மண்ணில் வந்தாய் மழைத்தூளியாய் நீ.
மழலையாய் குதூகலம் கொள்கிறேன்
ஜன்னல் வழி உன்னைக்கண்டு நான்.

-இப்படிக்கு மழை காதலி.

மேலும்

divya shri - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2017 1:01 pm

உல்லாசமாக இருந்த நாட்டை விட்டு இங்கு உரிமை
இழந்து சுற்றி திரிகிறோம் இன்னொரு நாட்டில் .
இதயம் கனத்து கனவுகள் கொண்டு இங்கே வந்து
மகிழ்ச்சி மறந்து சிரிப்பை துறந்து வாழ கற்றோம் .
தினம்தினம் தொலைபேசி உரையாடலில்
தொலைந்த சிரிப்பை தேடுகிறோம் உறவுகளிடம் .
கண்களில் கண்ணீர் கொண்டும் வார்த்தைகளில் மகிழ்ச்சி கொண்டும்
நீள்கிறது எங்கள் தொலைபேசி உரையாடல்கள் பல நேரம் .
தினம்தினம் ஓடும் வாழ்கையில் நித்தம்நித்தம் வருகிறது வீட்டு ஞாபகம்
வெளியே அழுதாள் வெட்கம் என்று கண்ணீர்க்கு கூட கரைஅடைப்பு செய்யப்படுகிறது .
இருந்தும் ,விழிகளில் கனவுகள் சுமந்து இதழ்களில் சிரிப்பை கொண்டு
எங்கோ ஒரு மூலையில் வ

மேலும்

divya shri - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2016 3:00 pm

கடல்நீரை உறிஞ்சி குடிச்சி மேகமான நீயே மழையாய்
மண்ணில் வர உனக்காகதானே காத்துக்கிடக்கின்றோம்.
வெச்சபயிர் எல்லாம் கருகாம இருக்க வானத்தை பார்த்துதான
தினம் மண்மேல காத்துக்கிடக்கின்றோம் .
சோறுபோட்ட பூமி இப்போ வறட்சிலே சாகமா இருக்க
உனக்காகதானே மண்மேல காத்துக்கிடக்கின்றோம் .
குடிநீருக்கு பஞ்சம் வரம குலசாமியா நீ வந்து இறங்க
உனக்காகதானே மண்மேல காத்துக்கிடக்கின்றோம்.
சாரல் மழையா நின்னுடாம சனங்க மனசு மகிழிந்துட
உனக்காகதானே மண்மேல காத்துக்கிடக்கின்றோம்.
சேதியேதும் சொல்லாம மௌனமா நீ இருக்க தாயி
உனக்காகதானேஇன்னும் மண்மேல காத்துக்கிடக்கின்றோம்.

மேலும்

divya shri - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2015 8:38 pm

காதலை சொல்லவும் காதல் கொள்ளவும்
பல கவிஞர் தோன்றியதுண்டு காதல் கடிதத்தில் .
இதோ இங்கு ஒரு கவிஞ்சி தோன்றினால்
கடிதத்திற்கு பதிலாக புத்தகத்தில் இருந்து ...

அன்று ஒரு நாள் அவன் மேஜையில் என் புத்தகம்
அவனை கவர்வதற்காக சின்ன கவிதை கிறுக்களில்.
அன்று தான் எழுதினேன் என் முதல் கவிதை
என் கவிதை பயணத்தின் தொடக்கமாக..

முதல் கவிதை என்னமோ அவனிடம் சென்றதொ இல்லையோ
என் புத்தகம் மட்டும் எனிடம் பத்திரமாக வந்தது .

மேலும்

இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2014 8:53 pm

வழக்கத்திற்கு மாறாக நேற்று மாலை எனக்கு ஒரு மாயை. கதிரவன் அந்தி மாலையாய் மறையும் தருணம் , எனக்கு மட்டும் உதயமானதாக ஒரு மாயை. எனக்கும் கூட இப்போது என்னில் தோன்றிய நேற்றைய மாயை வியப்பாக இருக்கிறது. ஆனாலும் மகிழ்ச்சியாக.. மனம் நிறைவாக இருக்கிறது.

ஏதோ ஒன்று சாதித்த பிறகு ஒரு வெற்றி களைப்பில் குதூகலமாய் உற்சாகமாய் உணர்வோமே.. அந்த கலை இப்போது என் முகத்தில்..! இருந்தாலும் நான் இன்னும் சாதனையின் முதல் பக்கத்தை கூட விரிக்கவில்லை. என்பதே உண்மை.

சமீபநாட்களாக சென்னை மெரீனா கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்காவும் ..கவிதை எழுதுவதற்கும் செல்வதுண்டு.. அப்படி சென்று நடைப்பயிற்சியின் மூலமாகவே எனக்கு புதிதாக அறி

மேலும்

நன்றி நன்றி என் இனிய தோழா/ தம்பி..! பார்த்து வெகுநாட்கள் ஆயிற்று நலம் நலமறிய ஆவல் ! 27-Dec-2014 10:14 pm
கண்டிப்பா ஒரு நாள் ஆட்டோகிராப் போடுகிறேன் தங்கையே.. மிக்க நன்றி..! 27-Dec-2014 10:13 pm
வாழ்த்துகள் அண்ணா ,எனக்கும் ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ் ..... 27-Dec-2014 6:53 pm
விதைகள் விதைகளாக மட்டும் இருப்பதில்லை என்று உணர்த்தும் ஒருநிகழ்வு. வாழ்த்துகள் 27-Dec-2014 4:04 am
divya shri - divya shri அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2014 8:36 pm

ஆர்வம் தான் எங்களுக்கு ...
வகுப்பு அறையை காட்டிலும் தேர்வு அறையில்
கொஞ்சம் அதிகமாக தெரித்து கொள்வதிற்கு ....
அதனால்தான் எனவோ வெறும்தாளை மட்டும்
கட்டிக்கொடிகிறோம் உங்கள் விடைகளுக்காக .....

தேர்வுகளால் நீங்கள் எங்களை பரீசித்திர்கள்...
ஈதோ வருகிறது எங்கள் விடைத்தாள்
உங்கள் அறிவை பரீசிப்பதிருக்கு ................:)

மேலும்

divya shri - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2013 2:42 pm

காதல் மொத்த கவலைகளின் ஏடு
நட்பு நித்த மகிழ்ச்சிகளின் வீடு!
காதல் ஒரு கைம்பெண்
நட்பு ஒரு சுமங்கலி!

காதல் கண்ணீராலானக் கடல்
நட்பு பன்னீராலானக் கடல்!
காதல் தூக்கத்தை தினம் கெடுக்கும்
நட்பு தாலாட்டை தினம் படிக்கும்!

காதல் என்பது மரணப் பயணம்
நட்பு என்பது வாழ்வின் தொடக்கம்!
காதல் என்பது வாய்க்கரிசி
நட்பு என்பது கூட்டாஞ்சோறு!

மொத்தத்தில் காதல்
ஒரு கழித்தல்...
நட்பு ஒரு கூட்டல்...!

மேலும்

வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி தோழி 29-Sep-2014 8:39 am
காதல் கண்ணீராலானக் கடல் நட்பு பன்னீராலானக் கடல்! அருமையான வரிகள் தோழரே... வாழ்த்துக்கள்...... 29-Sep-2014 8:25 am
வருகை தந்து ரசித்தமைக்கும் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழரே...! 21-Sep-2014 9:50 am
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி கீர்த்தனா...! 21-Sep-2014 9:49 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2014 1:29 am

தூக்கம்..!

உடலின்
தற்காலிக மரணம்.
மூளையின்
தற்காலிக சுதந்திரம்.

நம் உடலை
மரணிக்கவைத்து
மூளை எழுதும்
மகாகாவியமே கனவுகள்..!

நேற்றிரவு என்னை
மரணிக்க ஊதியது
கொட்டாவி சங்கு..!

என்னுடல் மரணித்தது
எனதுமூளை என்னிடமிருந்து
விடுதலை அடைந்து
விடைதேடி அலைபாய்ந்தது


எனது மூளை
கனவு காட்டில்
ஆடிய ஆட்டத்தை..!
இதோ ...!
காட்சிப்படுத்துகிறேன்



மிக நீண்டதொரு தாள்
இந்த பிரபஞ்சத்தின்
அளவை மிஞ்சியிருக்கும்.

ஒரு அழகான எழுதுகோல்
அந்த பாரதியின்
மீசையின் பாதியளவு இருக்கும்.

அந்த சூரியனிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
அக்னி மையும்.
அந்த நிலவிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
குளிர் மையும்

மேலும்

நன்றிகள் தோழா..! 12-Mar-2014 1:36 pm
பிறமொழியின் தூசியை என்விழியில் தூவாதே..! பிடித்தவரிகள் ! 12-Mar-2014 1:32 pm
எழுதிய வரிகளுக்கான சரியான அர்த்தத்தை பிடித்து விட்டீர்கள், மிக்க மகிழ்ச்சி தோழமையே..! நன்றிகள்! 25-Feb-2014 8:28 pm
பரீட்சை எழுத முடியலை.. படிச்சா புரியல என்ன செய்ய? என்று கேட்கும் மாணவனிடம் போய் அடிப்படையை நன்றாக படி புரியும் என்று ஆசிரியர் சொல்வது நினைவுக்கு வருகிறது இதைப் பார்க்கும் போது.. //கற்றுகொள்ளும் ஆர்வமிருக்க கத்திக்கொண்டு ஆர்ப்பரிக்கிறாயே... இயலாமையை எண்ணி வருந்துவதை விட்டு ஆர்வத்தை அதிகபடுத்தினால் எதுவும் எளிது என்று எடுத்துறைக்கிறது... கனவிலும் நீங்காத ஆர்வம்... நன்றாக உள்ளது.. 25-Feb-2014 8:23 pm
ஈஸ்வரன் அளித்த படைப்பில் (public) sharmi karthick மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2014 9:03 pm

------------"சிவனுக்கு வந்த சிக்கல்"-------------

கழுத்தை சுற்றிய பாம்பை
கழற்றி வைத்துவிட்டு -
சிவபெருமான்,
சிந்தித்து கொண்டிருந்தார்.

ஓசோன் உடைத்து
கைலாயம் புகுந்த,
கழிவுக் காற்று,
காசிநாதனின்
நாசியையும் விட்டுவைக்கவில்லை!!.

ஊரெல்லாம் பெருகிவிட்ட,
ஊர்திகளின் ஓங்காரம்,
உடுக்கொலியையும் தாண்டி
கிழிக்கிறது - அவன்
தோடுடைய செவிப்பறைகளை!!!.

கொண்டைவாழ் கங்கையும்,
சளி முற்றிப்போய்
இருமுகிறாள் - தன்
தொண்டைசூழ் நெகிழிகளால்!!.

அதிவிரைவு ரயிலுக்காய் - தன்
அரசமரத்தை இழந்து,
அநாதையாகிவிட்டேனென்று
அலறுகிறான்,
ஆனைமுகன்!!.

கார்பைடு சுடாத
பழங்கேட்ட அவ்வைக்காய்,
காயாத கானக

மேலும்

கடவுள்களுக்கு இத்தனை சிக்கல்களா... சிந்தனை சிறப்பு..!! 19-Jun-2014 6:38 pm
படைப்பு சிறப்பு 30-Mar-2014 4:33 pm
சிவனுக்கும் சவம் கட்ட துணிந்துவிட்டான் மனிதன் ,,,அருமை ,, 28-Mar-2014 5:13 pm
மனிதனால் படைக்கப்பட்ட தெய்வங்கள் இன்று, மனித இன்னலால் தங்களை மறைத்துக் கொண்டன --- நன்று நண்பரே 17-Mar-2014 7:19 pm
மேலும்...
கருத்துகள்

மேலே