ஈஸ்வரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஈஸ்வரன்
இடம்
பிறந்த தேதி :  25-Mar-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Aug-2013
பார்த்தவர்கள்:  1950
புள்ளி:  533

என் படைப்புகள்
ஈஸ்வரன் செய்திகள்
ஈஸ்வரன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Jul-2015 10:10 pm

நான் இத்தளத்தில் இணைந்து ஏறக்குறைய இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு வந்து கொண்டிருந்த படைப்புகள் தொடர்ந்து வருவதற்கான தூண்டுதலாயும், கருத்தளிக்க முனைப்பூட்டவதாயும் அமைந்திருந்தன. அதற்கும் ஒரு வருடத்திற்கு முன்பான படைப்புகள் மொழிஞானமற்றவனாயிருந்த என்னையும் வாசிக்கவுந்தி, கவிதை(கவிதைதானே?!?!?!) எழுதக்கூடியவனாய் வளர்க்கும் அளவிற்கு இருந்தன. ஆனால், தற்போது என்னால் அதிகமாக தளத்திற்கு வரமுடியாவிட்டாலும், அவ்வப்போது வரும்போது வாசிக்கும் பெரும்பான்மையான படைப்புகள் அயர்ச்சியளிப்பதோடில்லாமல் கற்று இன்புற்று கருத்தளித்து செல்லும் ஆர்வத்தையும் குறைத்து அடுத்த வருகைக்கான இடைவெளியை

மேலும்

அது ஒன்னும் இல ப்ரோ.. நமக்கு வயாசிகிடுச்சு போல.. இப்போ வாரவங்க ஆக்டிவா தான் இருக்காங்க.. நமக்கு தான் போர் அடிச்சு போச்சு.. ! ======================== சில சமயங்களில் இல்லை இல்லை பல சமயங்களில் நம் இருவருக்கும் ஒரே சிந்தனை தான் போலும். நான் நினச்சத நீங்க அப்டியே சொல்லி இருக்கீங்க.. நானும் கூட இதை எண்ணத்தில் போட்டு இருந்தேன்.. இப்போ தான் பார்கிறேன் நீங்களும் அதே கேள்வி கேட்டு இருக்கீங்க..! 21-Aug-2015 11:02 am
காலம் கரைய கற்றல் கூட வயது முதிர அனுபவம் சேர கேள்விகள் குறைய தேடுதல் குறையும் நோக்கம் மாறும் எதிர்பார்ப்புகள் வேறாகும் மனம் மாறும் தளம்...தரம்.... கூடும்... குறையும்... குறையும் ... கூடும்... மாறியது மனம் மட்டுமே... 18-Jul-2015 8:02 pm
கனவுகள் மலர்கள் எனில் கவிதைகள் மலர்ச் சரங்கள்...! கணா கண்டவை மணம் பேசும் கருத்தினில் தெளிந்தால் வாசம் வீசும் கவிஞர் அனைவரும் தாயுருவென்பேன் அவர் படைத்த கவிதைகள் யாவும் மழலைகள் என்பேன்.....!!! மழலை மேனியில் கடன் கழிக்கும் மனமும் கொஞ்சம் முகம் சுழிக்கும் மறுகணம் மழலை அது சிரிக்கும் மறுபடி நம் மனம் தாயாகும்.....! எனவே மழலைகளை தரமுள்ளக வளர்க்க வழி காட்டுவது ரசிகராகிய வளர்ப்புத் தாயிடமும் உள்ளது நன்றி ராஜா நற் சிந்தனை....! 18-Jul-2015 8:02 am
. முன்பு இருந்த ஆற்றல்மிக்க படைப்பாளிகள் இப்போது அதிக அளவிலோ அல்லது முற்றிலுமாகவோ இத்தளத்தில் எழுதுவதில்லை. அதனால் கூட ஏற்பட்ட வெற்றிடம் ,உங்களுக்கு படைப்பு, கருத்து ஊக்கங்கள் தரமில்லாது போன்று தோன்றலாம். இப்போது இத்தளத்தில் பதிவாகும் படைப்புகளின் தரம் முற்றிலும் சரியில்லை என கூறிவிட முடியாது நண்பரே. ....இருக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்டிருந்தப்போது நீங்கள் எதிர்பார்த்த தரத்திற்கும்.. இப்போது தேர்ந்த சிறந்த ஒரு படைப்பாளியாக நீங்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கும் வித்தியாசம் இருக்கும். முதலில் வார்த்தை ஜாலங்களில் மயங்கி கவிதை என ரசித்த எனக்கு.. இப்போது படிமங்கள், உருவகங்கள், உவமைகள், குறியீடுகள் என இருக்கும் கவிதைகள் தான் சிறந்த கவிதையென என் மனம் ஏற்கிறது .. காரணம் ஆரம்பக்கட்டத்தில் படிமங்கள் உள்ளிட்ட யாவும் எவ்வாறு இருக்குமென கூட அறியாத நிலையும்.. இப்போது அறிந்து கற்றுக்கொண்டிருக்கிற நிலையும் தான்.. நன்றி.. நண்பரே..! 17-Jul-2015 11:22 pm
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Jun-2015 7:49 pm

என்றோ நானழுத
ஊமைக் குரலின்
உறுத்தல்
இப்போதும் நெஞ்சுக்குள்...

என்
காட்டுமலை கிராமத்தின்
தேயிலைத் தோட்டங்களில்
பள்ளி விடுமுறை நாட்களில்
சுற்றித் திரிந்த
கன்றுகுட்டிப் பருவங்கள்...

என்னோடு சுற்றும்
அந்த மூன்று சிறுவர்களும்
என்னைப் போலவே
சிட்டுக் குருவிகள்

பந்தாட்டங்கள் தவிர்த்து
பறவைக் கூடுகளைத்
தேடிக் கண்டு ரசிக்கும்
வினோத ஆசைகள்

ஒரு நாள்..
தூரத்து மலைச்சரிவில்
ஆரஞ்சுமரக் கூட்டிலிருந்து
ஒரு புறாக் குஞ்சு
கொண்டு வந்தேன்
வீட்டிலே வளர்க்க

'சிறகு விரியாத
சின்னக் குஞ்சு'
சித்தப்பா அடித்தார்
அப்போது அழவில்லை

தன்னந் தனிக்குஞ்சை
தாய்க்கூட்டில் விட்டுவ

மேலும்

தோழரே.. "காற்றின் கவிதைகள் "" நேற்று முன்தினம் மறு பதிவானது. எளிய ரிலாக்ஸ் ' கவிதை. ..நீங்கள் படிக்கவேண்டும் என்று ஆசைப் படுகிறேன் 04-Jul-2015 9:26 am
சரி... தொடர்வேன்... நன்றி..கவிதசபபதி அவர்களே 03-Jul-2015 11:22 pm
நீங்கள் வரும்போதெல்லாம் வருகை களிம்பு போல் பூசி வரும் .... வருடும் கருத்துக்கு காயங்களின் நன்றி 03-Jul-2015 1:56 pm
வலி வேண்டுமென சில சினிமாக்களை வலியச்சென்று பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு !!(என்றேனும்) எப்போது தொற்றியதென தெரியவில்லை!! மீண்டும் தங்களின் இந்தப் படைப்பிற்குள் திரும்பி வருவேன் என்பது மட்டும் நிச்சயம் !!! //ஊமைக் குரலின் உறுத்தல் அப்போதும் நெஞ்சுக்குள்.....// 03-Jul-2015 1:21 pm
ஈஸ்வரன் - ஈஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jun-2015 11:22 pm

ஆயிரம்வாலாக்களின் வெடித்த மிச்சங்கள்
பிரியாணி பொட்டலங்கள்
காலி போத்தல்கள்
கொடி வர்ணத் தோரணங்கள்
லட்டு டப்பாக்கள்
கிழிந்த கறைவேட்டிகள்
இன்னபிற நெகிழி எச்சங்கள்
ஆகியவற்றை சுமந்து
புதிதாய் போட்டிருந்த சாலையில்
புதிதாய் விழுந்திருந்த குழியிறங்கி
குலுங்கியபடி செல்லும் குப்பை வண்டியில்
யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கின்றன
கொள்கைகளும் வாக்குறுதிகளும்
குறைந்தபட்ச சமூக பொறுப்புணர்வும்.

மேலும்

அட! இதையெல்லாம்தான் மொத்தமாக அடித்து எடுத்துக்கொண்டுபோய் அருகிலுள்ள சமுத்திரத்தில் இப்போதான் வீசிவிட்டு வருகிறேன் -அடுத்த 'களப்பணிக்காக' ---வந்து அடிக்கடி பாருங்கள்! =இப்படிக்கு வெள்ளம். 22-Feb-2016 7:39 am
புதிதாய் போட்டிருந்த சாலையில் புதிதாய் விழுந்திருந்த குழி.. குப்பைவண்டி.. கொள்கைகள் , வாக்குறுதிகள், குறைந்த பட்ச பொறுப்புணர்வு... சரியான நேரத்தில் கச்சிதமாக வரத்தான் இத்தனை நாளாய் .காணவில்லையோ? நிறைய எழுதுங்கள் தோழரே.... கொஞ்சம் நேரம் எடுத்து.. . 01-Jul-2015 7:32 pm
சிறப்பான சிந்தனை..நல்ல அரசியல் கண்ணோட்டம் உண்மை வரிகள்..அருமை வாழ்த்துக்கள் 01-Jul-2015 6:39 am
ஆளும் அரசின் அட்டூழியங்களை அலுங்காது குலுங்காது அசைபோட்டபடி அடிக்கோடிட்டு செல்லும் அழகிய படைப்பு !! 01-Jul-2015 4:56 am
ஈஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2015 11:22 pm

ஆயிரம்வாலாக்களின் வெடித்த மிச்சங்கள்
பிரியாணி பொட்டலங்கள்
காலி போத்தல்கள்
கொடி வர்ணத் தோரணங்கள்
லட்டு டப்பாக்கள்
கிழிந்த கறைவேட்டிகள்
இன்னபிற நெகிழி எச்சங்கள்
ஆகியவற்றை சுமந்து
புதிதாய் போட்டிருந்த சாலையில்
புதிதாய் விழுந்திருந்த குழியிறங்கி
குலுங்கியபடி செல்லும் குப்பை வண்டியில்
யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கின்றன
கொள்கைகளும் வாக்குறுதிகளும்
குறைந்தபட்ச சமூக பொறுப்புணர்வும்.

மேலும்

அட! இதையெல்லாம்தான் மொத்தமாக அடித்து எடுத்துக்கொண்டுபோய் அருகிலுள்ள சமுத்திரத்தில் இப்போதான் வீசிவிட்டு வருகிறேன் -அடுத்த 'களப்பணிக்காக' ---வந்து அடிக்கடி பாருங்கள்! =இப்படிக்கு வெள்ளம். 22-Feb-2016 7:39 am
புதிதாய் போட்டிருந்த சாலையில் புதிதாய் விழுந்திருந்த குழி.. குப்பைவண்டி.. கொள்கைகள் , வாக்குறுதிகள், குறைந்த பட்ச பொறுப்புணர்வு... சரியான நேரத்தில் கச்சிதமாக வரத்தான் இத்தனை நாளாய் .காணவில்லையோ? நிறைய எழுதுங்கள் தோழரே.... கொஞ்சம் நேரம் எடுத்து.. . 01-Jul-2015 7:32 pm
சிறப்பான சிந்தனை..நல்ல அரசியல் கண்ணோட்டம் உண்மை வரிகள்..அருமை வாழ்த்துக்கள் 01-Jul-2015 6:39 am
ஆளும் அரசின் அட்டூழியங்களை அலுங்காது குலுங்காது அசைபோட்டபடி அடிக்கோடிட்டு செல்லும் அழகிய படைப்பு !! 01-Jul-2015 4:56 am
ஈஸ்வரன் அளித்த கேள்வியில் (public) pollachi abi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Jun-2015 10:13 pm

கோவையில் தமிழ் புத்தகங்கள் வாங்க சிறந்த கடைகள் எவை?

மேலும்

நான் வழக்கமாக வாங்கும் கடைகள் நியூ சென்சுரி புக் ஹவுஸ்,சேரன் மற்றும் மெஜெஸ்டிக் . பெரும்பாலும் எல்லா புத்தகங்களும் இங்கு கிடைக்கும் 03-Jul-2015 8:27 pm
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்- நேரு ஸ்டேடியம்- காந்திபுரம். விஜயா பதிப்பகம் -டவுன்ஹால் டவுன்ஹால் -கோட்டை மேடு சாலை-பழைய புத்தகக் கடைகள். 01-Jul-2015 10:48 pm
சேரன் புத்தக நிலையம் 01-Jul-2015 3:47 pm
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே,, சென்று பார்க்கிறேன். 30-Jun-2015 1:05 pm
ஈஸ்வரன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
29-Jun-2015 10:13 pm

கோவையில் தமிழ் புத்தகங்கள் வாங்க சிறந்த கடைகள் எவை?

மேலும்

நான் வழக்கமாக வாங்கும் கடைகள் நியூ சென்சுரி புக் ஹவுஸ்,சேரன் மற்றும் மெஜெஸ்டிக் . பெரும்பாலும் எல்லா புத்தகங்களும் இங்கு கிடைக்கும் 03-Jul-2015 8:27 pm
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்- நேரு ஸ்டேடியம்- காந்திபுரம். விஜயா பதிப்பகம் -டவுன்ஹால் டவுன்ஹால் -கோட்டை மேடு சாலை-பழைய புத்தகக் கடைகள். 01-Jul-2015 10:48 pm
சேரன் புத்தக நிலையம் 01-Jul-2015 3:47 pm
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே,, சென்று பார்க்கிறேன். 30-Jun-2015 1:05 pm
ஈஸ்வரன் - ஈஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2015 8:24 pm

மூக்கோடு
மூக்குரசி
மாற்றிக்கொண்ட
சுவாசத்திற்கும்

உன் கெண்டைக்காலில்
வழுக்கித் திரிந்து
என் மார்புப்பரப்பில்
மஞ்சளடித்த
குளத்து மீனுக்கும்

என் கைவிசையில்
உயிர் ஏற்றி
உன் கன்னக்குழியில்
தெறித்து மாண்ட
பேருந்து ஜன்னலொழுகு
மழைத்துளிநீருக்கும்

உனக்காக காத்திருக்கையில்
எனக்கும்
எனக்காக காத்திருக்கையில்
உனக்கும்
எப்போதும் நிழலளித்த
மரத்திற்கும்

நீரில்லா காலத்தில்
ஓடிப்பிடித்து விளையாடிய
நம் சுவடுகளை
நதியாக்கிக்கொண்ட
படுகைக்கும்

நீ கைகுவித்து
சிறையெடுத்து
என் கண்ணிரண்டில்
குடியேற்றிய
ஆரத்திச் சூட்டிற்கும்

தெரிந்திருக்குமா?

நீ வேறு சாதி
நான் வேறு சாத

மேலும்

மூக்குரசும் சுவாசமும், மார்பில்மஞ்சளடித்த குளத்து மீனும் ..... ******* ******** ********* **********.. மொத்தக் கவிதையையும் எழுத வேண்டும். கருத்தில் பூங்கவிதை ...பொன் கவிதை புரட்சிப் புதுக்கவிதை... ஏதேதோ செய்கிறது மனதை.. 01-Jul-2015 7:57 pm
ஒரு சமூகச் சிந்தனையுடன் அழகான காதல் கவிதை..அருமை.. 28-Jun-2015 2:51 pm
மிகக் கலக்கலான கவிதை இது ! கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது கவியும் தலைப்பும் !! //என் கைவிசையில் உயிர் ஏற்றி உன் கன்னக்குழியில் தெறித்து மாண்ட பேருந்து ஜன்னலொழுகு மழைத்துளிநீருக்கும்// இவ்வரிகள் அழகோ அழகு !! 28-Jun-2015 12:32 pm
நீ கைகுவித்து சிறையெடுத்து என் கண்ணிரண்டில் குடியேற்றிய ஆரத்திச் சூட்டிற்கும் ரசனை ரசனை ரசனையின் கடைசி ஓரத்திற்கே கைபிடித்து இட்டு சென்றது .... வாழ்த்துக்கள் !! 28-Jun-2015 9:52 am
ஈஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2015 8:24 pm

மூக்கோடு
மூக்குரசி
மாற்றிக்கொண்ட
சுவாசத்திற்கும்

உன் கெண்டைக்காலில்
வழுக்கித் திரிந்து
என் மார்புப்பரப்பில்
மஞ்சளடித்த
குளத்து மீனுக்கும்

என் கைவிசையில்
உயிர் ஏற்றி
உன் கன்னக்குழியில்
தெறித்து மாண்ட
பேருந்து ஜன்னலொழுகு
மழைத்துளிநீருக்கும்

உனக்காக காத்திருக்கையில்
எனக்கும்
எனக்காக காத்திருக்கையில்
உனக்கும்
எப்போதும் நிழலளித்த
மரத்திற்கும்

நீரில்லா காலத்தில்
ஓடிப்பிடித்து விளையாடிய
நம் சுவடுகளை
நதியாக்கிக்கொண்ட
படுகைக்கும்

நீ கைகுவித்து
சிறையெடுத்து
என் கண்ணிரண்டில்
குடியேற்றிய
ஆரத்திச் சூட்டிற்கும்

தெரிந்திருக்குமா?

நீ வேறு சாதி
நான் வேறு சாத

மேலும்

மூக்குரசும் சுவாசமும், மார்பில்மஞ்சளடித்த குளத்து மீனும் ..... ******* ******** ********* **********.. மொத்தக் கவிதையையும் எழுத வேண்டும். கருத்தில் பூங்கவிதை ...பொன் கவிதை புரட்சிப் புதுக்கவிதை... ஏதேதோ செய்கிறது மனதை.. 01-Jul-2015 7:57 pm
ஒரு சமூகச் சிந்தனையுடன் அழகான காதல் கவிதை..அருமை.. 28-Jun-2015 2:51 pm
மிகக் கலக்கலான கவிதை இது ! கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது கவியும் தலைப்பும் !! //என் கைவிசையில் உயிர் ஏற்றி உன் கன்னக்குழியில் தெறித்து மாண்ட பேருந்து ஜன்னலொழுகு மழைத்துளிநீருக்கும்// இவ்வரிகள் அழகோ அழகு !! 28-Jun-2015 12:32 pm
நீ கைகுவித்து சிறையெடுத்து என் கண்ணிரண்டில் குடியேற்றிய ஆரத்திச் சூட்டிற்கும் ரசனை ரசனை ரசனையின் கடைசி ஓரத்திற்கே கைபிடித்து இட்டு சென்றது .... வாழ்த்துக்கள் !! 28-Jun-2015 9:52 am
ராம் மூர்த்தி அளித்த போட்டியில் (public) kiruthiga dass மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .

ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..

அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?

அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ

மேலும்

போட்டி முடிவினைத் தெரிவிக்க இயலுமா?கண்டே பிடிக்க இயலவில்லை. 20-Jul-2015 6:42 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:04 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:03 pm
போட்டியில் எனது கட்டுரையும் சமர்ப்பிக்கக் பட்டுள்ளதால், அதன் முடிவுகள் குறித்து அறிய விரும்புகிறேன். 18-Jul-2015 11:06 pm
ஈஸ்வரன் - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2015 11:07 pm

வீடு கூட பெருக்கல‌
முற்றம் கூட தெளிக்கல‌
கையெல்லாம் நடுங்குது
காலெல்லாம் தள்ளாடுது
கண்ணுகூட மங்கலாகுது
கயிற்றுக்கட்டிலில் ஒடுங்கிட்டேன்
கடுதாசி ஒண்ணு வந்துருச்சி
முறுக்கிக்கிட்டு போன மவன்
குடும்பத்தோட வாரானாம்...
வீடெல்லாம் அழகாச்சி
வாசலெல்லாம் கோலமாச்சி
வாயெல்லாம் பல்லாச்சி
பட்சணங்கள் பலவாச்சி
பாசமுள்ள எம்மவன்.... எம்மவன்
என்னைப் பார்க்க வாரானாம்.....

மேலும்

மிக்க நன்றி தோழி.. 27-Oct-2015 2:01 pm
மிக்க நன்றி ப்ரியா.. 27-Oct-2015 2:00 pm
தாயின் பாசம்...ஏக்கம் வரிகளில்........அருமைத்தோழி.....! 27-Oct-2015 1:27 pm
தெய்வமும் ஈடாகா ஒரு தாய்க்கு 11-May-2015 8:11 pm
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Apr-2015 3:24 pm

வணக்கம் தோழர்களே..!
யுகம் தாண்டும் சிறகுகள்..பகுதியில் நானும் எழுதுவதற்கு தோழர் கவித்தா சபாபதி வாய்ப்பு அளித்த போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.மேலும் அழகான எல்லை மீறலில்..என்று அவர் குறிப்பிட்டிருந்தது கூடுதல் மகிழ்ச்சி. காரணம்,குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் நின்று எழுதுவதென்ற இறுக்கம் தளர்ந்துவிட்டது.அதனால்,சுதந்திரமாகப் பேச எனக்யொரு வாய்ப்பு.

இயல்பாக எழுதத் துவங்கி,இக்கட்டுரை முடிவுற்றபோது,அதனை மூன்றுபாகங்களாகப் பதிவு செய்யவேண்டிய அளவில் இருந்தது.அதனால் என்ன..? எல்லைமீறல் என்பது இங்கு அனுமதிக்கப்பட்டு விட்டபடியால், நானும் எனது சுதந்திரத்தின் எல்லையை சற்று பரவலாக்கிக் கொண்டேன். 17,18,19

மேலும்

அருமை ....யுகங்களை தாண்டும் இப்படைப்பும் நம் தோழர்களின் கவியும் ...நன்றி அபி ஐயா...வாழ்த்துக்கள் தாகு ...வாழ்த்துக்கள் வெள்ளூர் ராஜா ... 20-Apr-2015 12:22 am
உங்கள் வரவும்,கருத்தும் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது..வாய்ப்பு இருக்கின்றபோதெல்லாம் எழுதவே விருப்பப் படுகிறேன் தோழமையே..! மீண்டும் பேசுவோம்.! 18-Apr-2015 9:47 pm
திரு.தாகு என்பவரின் கவிதைகளை இதுவரை நான் படித்ததில்லையே என்ற வருத்தம் இப்போதுதான் அதிகரிக்கிறது.ஆப்கோ ஹிந்தி மாலும் கவிதை ,வாசிக்க எளிமையான் வார்த்தைகளில் உள்ள வரிகள்,மனதை என்னவோ செய்கிறது. திரு.பொள்ளாச்சி அபி அவர்கள் இதனை எடுத்துக் காட்டிய விதம் அக்கவிதைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. தொடர்ந்து இதுபோல நிறைய கட்டுரைகளை திரு.பொள்ளாச்சி அபி அய்யா எழுதவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.உங்களுக்கும்,திரு .தாகு அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.! 18-Apr-2015 10:49 am
மிக்க நன்றிகள் தோழரே..! "எத்தனையோ கவிதைகளை இனம் காட்டி யுள்ளமை குறித்து மகிழ்கிறேன் ,சிலவற்றை இனிமேல்தான் பார்க்கப் போகிறேன்..!"----- மிக நல்ல பணி..செய்யுங்கள்..தட்டிக் கொடுங்கள்..வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் நானும் உங்களுடன் வருகிறேன்..! உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..! 17-Apr-2015 10:41 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (105)

பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்
புதியகோடாங்கி

புதியகோடாங்கி

யாதும் ஊரே யாவரும் கேளீா்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
user photo

தமிழச்சி

இந்தியா
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்

இவர் பின்தொடர்பவர்கள் (105)

krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
Jegan

Jegan

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (105)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே