பட்டினத்தார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பட்டினத்தார்
இடம்:  தென் துருவம்
பிறந்த தேதி :  26-Jul-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jun-2015
பார்த்தவர்கள்:  337
புள்ளி:  119

என்னைப் பற்றி...

இது மூன்றாம் பிறப்பு

என் படைப்புகள்
பட்டினத்தார் செய்திகள்
ஆனந்தி அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 19 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Mar-2016 6:19 am

இரைப்பை முழுவதும்
நிரம்பி இருக்கிறது
பசி...

நம்பி நெருங்கியவர்களை
விட்டு விடுவதில்லை
நெருப்பு...

கண நேரத்தில்
நூறு பிறவி
உடைந்த கண்ணாடி...

இன்று யாரோ
நாளை நானும்
மரணம்...

பிரிவில் கிடந்தும்
நம்மை சேர்க்கிறது
தண்டவாளம்...

முதியோர் இல்ல கனவு
பதறும் தாய் -பரவாயில்லை
தூங்கு மகன்...

சாலைகள் முழுவதும்
பூக்களின் மழை
விதவையின் இறுதி யாத்திரை...

ஊர் காக்கும் கடவுளுக்கு
அழகாய் போட்டனர்
ஏழெட்டு பூட்டு...

நிலவு சிறைப்பட்டு
கலங்குகிறது
குளத்தினில் கல்...

பூதாகரமாய் தெரிகிறது
காட்சிகள்
அப்பத்தாவின் கண்ணாடி...

மேலும்

நன்று ! சிறப்பு !! 24-Jun-2016 2:22 pm
அருமை 10-May-2016 12:54 am
நன்று .பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துகள் 20-Apr-2016 6:24 pm
நம்பி நெருங்கியவர்களை விட்டு விடுவதில்லை நெருப்பு... அருமையான வரிகள் ! 29-Mar-2016 3:49 pm
ஜி ராஜன் அளித்த எண்ணத்தில் (public) karunanidhy மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2016 12:58 pm

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

அருமையான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் இளம்கவிஞர் நிலாக்கண்ணன் (கலாரசிகன் கண்ணா) அவர்களுக்கு நண்பர்கள் சார்பாக இதயபூர்வமானஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ்க !தங்களின் எழுத்துப் பணி இனிதே தொடர்க ! 


அன்புடன் ராஜன் 

மேலும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா.. இன்னும் சிகரம் பல தொட இந்த சிறுவனின் அன்பான வாழ்த்துக்கள்... வாழ்க பல்லாண்டு... 04-Mar-2016 2:19 am
என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கலாரசிகனுக்கு 03-Mar-2016 9:33 pm
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , நிலா கண்ணன் ! வாழ்க வளமுடனும் நலமுடனும்! 03-Mar-2016 5:02 pm
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா... தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழா.. 03-Mar-2016 11:45 am
C. SHANTHI அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 20 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Feb-2016 8:19 am

நடமாடும் நதிகள் - 14 - சொ. சாந்தி
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

"ஆணவம்பிடித்தவர்" குற்றச்சாட்டுகளில்
அடக்கம் செய்யப்படுகிறது
திறமைகள்..!!  (1)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

ஏறிக்கொண்டே இருக்கிறேன்
இறங்கிக்கொண்டே இருக்கிறது
படிகள்..!!  (2)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

உயரத்திலிருந்து விழுந்தாலும் ஊனமாவதில்லை
உற்சாகமுடன் ஓடுகிறது
அருவி..!!

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி அமுதா..! 29-Mar-2016 9:54 pm
கருத்திற்கு மிக்க நன்றி கார்த்திகேயன்..! 29-Mar-2016 9:53 pm
அத்தனை வரிகளும் மனதை அள்ளிக் கொண்டு போகிறது ! 29-Mar-2016 3:14 pm
ஏறிக்கொண்டே இருக்கிறேன் இறங்கிக்கொண்டே இருக்கிறது படிகள்..!!...வெகு அருமை. முரண்களுடன் வரிகள் அமைப்பு இதம் சேர்க்கிறது. 29-Mar-2016 10:49 am
பட்டினத்தார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2016 5:42 pm

மகன் பேய்க் கதை கேட்பான்
நான் உடனே கதை சொல்லிவிடமுடியாது
இரண்டு கடைவாய் ஓரங்களிலும்
செயற்கைப் பல் வைத்து
கண் இமைகளின் உள் சிவப்பினை மடித்து
கைவிரல்களை விரித்து
கண்களை உருட்டி
கதையை ஆரம்பிக்க வேண்டும்,
அவனோ என் கைவிரல்கள் விரியும் முன்னமே
தன் இருகைகளாலும் கண்களை மூடிக்கொண்டு
கதை கேட்கத் துவங்குவான்
இதுவரை என் கதை சொல்லும் உடல்மொழியை
அவன் பார்த்ததேயில்லை
இருந்தும் ஒருவேளை அவன் கண்திறக்க நேர்ந்தால்
ஒரு தகப்பனின் உண்மை என்ற பிம்பம்
அவனுள் உடைந்து விடாதிருக்க
அடுத்தடுத்த நாட்களிலும் அப்படியே தொடர்கிறது
அவனின் பேய்க்கதை கோரிக்கையும்
என் கதை சொல்லும் வாடிக்கையும்.

மேலும்

பட்டினத்தார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2015 2:28 pm

என்னால் `மெழுகை`
அப்படியே திண்ணமுடியாது
எனத் தெரிந்த நீங்கள்
ஆப்பிள் பழமொன்றின் மேலே
தடவிக்கொடுத்தீர்கள்

மிளகாய்த் தூளில் கலக்கும்
செங்கல் தூளும்
சிவப்பாக கிடைக்காத
உங்கள் கவலையை
`சூடான் ரெட்` ரசாயனம்
போக்கியிருக்கக் கூடும்

பறித்த காய்களை
`கார்பைட்` துணையோடு
அன்றே பழுக்க வைத்து,
எங்களைப் பசியாற்றும்
கூடுதல் ஆவல்
எப்போதும் உங்களுக்கு

இன்னும் துளசியைக்கூடப்
பருகப் பழகாத எங்களை
தேயிலையோடு
`மஞ்சனத்தி` மர இலையையும்
பருகப் பழக்கியது
உங்களுக்கு பெருமைதான்

இருப்பினும்,
என் மரணத்தின் பேரில்
உங்களின் அவசரம்
எனக்கொன்றும் புரியாமலில்லை...!

மேலும்

அழகு :) 03-Jan-2016 1:48 pm
நிதர்சனம் நண்பரே!! நல்ல சிந்தை என்னையும் சிந்திக்க வைக்கிறது 18-Dec-2015 9:55 pm
பட்டினத்தார் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2015 2:55 pm

கொஞ்சம் உணவுக்காகவும்
நிறைய சுயமரியாதைக்காகவும்
நடக்கிறது,
தாக்குதல் தொடர்பான
திட்டமிடல்கள் யாவுமே

கூரிய பற்களையும்
திணவெடுத்த தோள்களையும்
எதிரியின் குடல் சரிக்கும்
கால் நகங்களையும்
நேரில் பார்க்கும் திராணியில்லை
உங்களுக்கு...,

ஆனால்,
நிறைய மஞ்சளும்
கொஞ்சம் கருப்பு வர்ணமும் இருந்தால்
பயமில்லாமல் புலியை
வரைந்துவிடுகிறீர்கள்...

வெளிக் காற்றுக்குப் பயந்து
பூட்டிய ஓர் அறையிலிருந்து
வியர்வை ஏதும் சிந்தாமலே
புலிகள் எம்மை
`பூனை` வகைக் குடும்பம் என்று
வகைப் பிரித்த
உங்களின் ஏளனத்தை மட்டும்
எங்களால்
தாங்கிக்கொள்ளவே முடியவில்லை...

மேலும்

மகிழ்வாக உள்ளது நண்பரே 18-Dec-2015 1:29 pm
மாற்றம் ஒன்றே மாறாதது . போகும் போது எதுவும் கொண்டு போவதில்லை . இருக்கும் வரை அனைவருடன் நண்பனாக இருக்க வேண்டும் என் கருதுகிறேன் தோழா. வருத்தம் இன்றி இனி உங்கள் படைப்பை தொடர்வேன் 18-Dec-2015 10:54 am
விளிம்பு நிலை மனிதனுக்கு கருத்து பதிவிட்டமைக்கு நன்றிகள் நண்பரே 18-Dec-2015 8:03 am
நன்றி நண்பரே..... கரும்புக் காரனுக்கு கருத்துச் சொல்ல பெரிய மனசு வேண்டும் அது உங்களுக்கு இருக்கிறது 18-Dec-2015 8:01 am
பட்டினத்தார் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2015 2:41 am

சூரியன் வந்து சுடும்போது
அலவாங்கு போட்டு நெம்பினாலும்
எழும்பாமல் புரண்டுபடுக்கும்
கும்பகர்ணர்கள்
அதிகாலையில் எழுந்து குளித்து
அழகிய ஆடையுடுத்து
கண்ணாடி முன் நீண்டநேரம்
செலவிட்டு
காலத்துக்கேற்ப தலைவாரி
வாசனை திரவியமிட்டு
பள்ளிக்கூடம் போகும்
பழக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள்
தெருவிற்கு புதிதாய்
குடிவந்துவிடும் அழகிகள்!

*மெய்யன் நடராஜ்.

மேலும்

அலவாங்கு =கடப்பாரை நன்றி வேளாங்கண்ணி 16-Oct-2015 3:17 am
அதே... அதே... நன்றாகச் சொன்னீர்கள் ஐயா... அலவாங்கு என்றால் என்ன ஐயா? 10-Oct-2015 7:25 am
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
10-Oct-2015 5:57 am

என் அடையாளங்கள்
என்னோடு இருக்கட்டும்
எவர்மீதும் அதைத் திணிக்கவோ
எவருக்கும் தாரைவார்க்கவோ
எனக்கு விருப்பமில்லை ...

உன் அடையாளங்களை
நீ பத்திரப்படுத்து...
வேட்டியணிந்தவன்
கோமணவாதிகளின் ஊரில்
கேவலமாயின்று
தெரியலாம் ...?

நல்லவனாய் நீ
நடக்கையில்
நமட்டுச் சிரிப்புடன்
நகரும் மனிதர்களால்
உன் முகங்கள்
சிலநேரம் சிதையலாம்

முகமூடி மனிதர்களின்
முகம் உணரும் முன்னரே
குரூர மனிதர்களின்
குழந்தை சிரிப்பினில்
உன்னை ..நீ
தொலைக்கலாம்

'தான் வாழ '
பிறர் இதயத்தை
குத்திக் கிழிக்கும்
குள்ளநரி கூட்டத்தின்
அடையாளங்கள்
உனக்கெதற்கு ...

உன் இதயம் குத்திக்கிழிக

மேலும்

நன்றி நண்பரே , தங்களோடு இருந்த பொழுதுகள் சுகம் , மறுபடியும் சந்திப்போம்.வாழ்த்திற்கு நன்றி நட்பே . 08-Nov-2015 6:40 am
நன்றி நண்பரே 08-Nov-2015 6:39 am
நன்றி 08-Nov-2015 6:38 am
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! அருமையான உணர்ச்சி கவிதை, மின்வாரிய ஊழியரின் மின்சார வரிகள்! கருப்புக்கடல் கடைந்தெடுத்த தத்துவ வெண்ணை குமுறல்கள். 30-Oct-2015 7:52 pm
பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Oct-2015 7:34 am

இன்று 10.10.2015 ....என்னைத் தேடி வந்த உறவுகள் .....என்னை நம்பி நாடி வந்த நட்புகள் 

மேலும்

உங்கள் வாழ்த்திற்கு மிகவும் நன்றி வேலாயுதம் 11-Oct-2015 7:19 am
மிக்க நன்றி அகன் சார் 11-Oct-2015 7:19 am
மிகவும் நன்றி முரளி சார் 11-Oct-2015 7:18 am
பறவைகளின் சரணாலயம். உறவுகள் மேம்படட்டும். அழகு பறவை மலர்கள் பூத்து உங்கள் தோட்டம் மலரட்டும் பாராட்டுக்கள் நன்றி 10-Oct-2015 3:07 pm
பட்டினத்தார் - கோபிநாத் த அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1) "தோல்வி கண்டு துவளாதே " என்ற தலைபில் 10 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுத வேண்டும் .
2) பிர மொழி கலவாமல் இருக்க வேண்டும்.
3) கவிதை சமர்பிபவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) பதிவு (Register) செய்தல் வேண்டும்.
இப்படிக்கு
கோபிநாத் து .-7502391454

மேலும்

ஹா ஹா ஹா... "நிங்கள்" ஐயோ இந்த தலைப்பில் நான் குழம்பிவிட்டேன் நீங்கள் என்று நீங்களே திருத்திக் கொள்ளுங்கள் தோழமைகளே!!! உங்கள் கருத்து படிக்க படிக்க மனம் சிரிப்பை அடக்கமுடியாது கொட்டிவிட்டது.. அன்று முச்சு கொண்டு புலியை விரட்டிய தமிழ் பெண்போல் இன்று முச்சு கொண்டு முச்சை யே விரட்டுகிறீர்களா !!! ஆகட்டும் ஆகட்டும் ... "முச்சு" கண்டு "துவளாதே" ! "துவளாதே"கண்டும் துவழாதே மனமே!! எப்படியாவது மூச்சை பிடித்து "முச்சை" விரட்டி துவழாது துரத்துவோம் "துவளாதே"யும்... 16-Nov-2015 12:32 am
ஆஹா.. தலைப்பில் இருப்பது முச்சு அல்ல மூச்சு என்பது இப்போதுதான் புரிகிறது. இதுதெரியாமல் இதற்கு முன் கீழே நான் கேட்ட கேள்வியை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.. 12-Oct-2015 12:08 pm
உங்கள் போட்டியின் தலைப்பை பார்த்த பொழுது என் மூச்சு ஒரு நொடி நின்று போனது .தயவு செய்து பிழைகளை திருத்துங்கள் தோழரே 12-Oct-2015 10:12 am
தோழ்விகள் கண்டு துவளாதீர்கள் சகோ ! ( முற்றும் தெரிந்தவர்கள் மத்தியில் பிழைப்பு நடத்துவது கொஞ்சம் கடினம்தான்). 11-Oct-2015 11:12 am
பட்டினத்தார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2015 9:55 am

சமூகம் என்பது நான்கு பேர்
அந்த நான்குபேரில்
ஒருவர் குறைந்தாலும்
என் பாடை கவிழ்ந்துவிடும்

நம்பிப் பாடையிலும் ஏறமுடியவில்லை
நான்குபேரும் நான்குவிதமாக
எந்தத் திசையில் பயணிப்பாா்கள்
என்றே தெரியவில்லை

நல்ல வேளையாக
ஆறுக்கு நான்கு அடி குழிவெட்ட
இரண்டு பேர்தான் அனுப்பப்பட்டுள்ளாா்களாம்
இல்லையென்றால்
நான்குவித யோசனையில்
வெட்டப்படும் அரைகுறை குழியில்
உடல் அரிக்கும்வரை
கால்நீட்டிக் கூடக் கிடக்கமுடியாது

பதினாறாம் நாள் காாியத்தை
உடன்பாலாக முடித்துவிடுங்களேன்
பேயாகும் வாய்ப்புப் பெற
சில அதிகாாிப் பேய்களின்
அனுமதிக்கு அலைய வேண்டும் நான்...!

மேலும்

நன்றி சூர்யா 08-Oct-2015 11:09 pm
நன்றி திரு ஜன்னா அவர்களே உங்கள் நல்ல ரசனையில் மகிழ்ந்தேன் நான் 08-Oct-2015 11:09 pm
நன்றி யாழ்வேந்தரே 08-Oct-2015 11:06 pm
arumai arumai 08-Oct-2015 8:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (91)

தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (92)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
krishnan hari

krishnan hari

chennai
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (91)

மேலே