நேசன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f0/pznky_3371.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : நேசன் |
இடம் | : திருவாரூர் |
பிறந்த தேதி | : 23-Jun-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 137 |
புள்ளி | : 6 |
கவிதைகள், இசை,புகைப்படம் எடுத்தல் , நடை பயணங்களை நேசிக்கும் ஒருவன்
நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை
பின் நடை பழகிய பின்னும்
செந்தமிழ் எந்தன் மொழி ஆகும்
தமிழினம் எந்தன் வழியாகும்
அறிவியல் அறவியல் இரண்டிலுமே
மூத்தது எங்கள் குடியாகும் .....................!
இலக்கியம் வடிப்போம்
இலக்கணம் கொடுப்போம்
சிற்பக்கலையில் சரித்திரம் படைப்போம்
காதலை வளர்ப்போம்
காவியம் படைப்போம்
அனைத்தும் அறிந்தவன் தமிழனடா
அவன் சிறப்பினை சொல்கிறேன் கேளுமடா......!
கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!
கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மன
(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )
அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!
பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே
ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!
நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!
செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!
இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!
நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உண
கவிதை எழுத முயற்சித்தேன்
பல வார்த்தைகள் கிடைத்தும்
மனதில் ஒரு தயக்கம்!
எதை பற்றி எழுதுவது,
நட்பு,காதல்,இயற்கை என மாறி மாறி
மனம் குழம்பிக்கொண்டிருக்க,
பேனா மையில் ஈரம் காய்ந்தது
வார்த்தை வரவில்லை!
சில நேர நிசப்தம்,இறுதியில்
என் கை எதையோ எழுதத்தொடங்கியது!
பின்னர் பார்த்தேன் கண்களில் ஈரம்,
அந்த வார்த்தை அம்மா!!!!
தலைவாரிப் பூச்சூடி
பாடசாலைக்கு செல்ல முடியாப் பிள்ளை..
எழுதுகோலேந்தும் கையில்
கயவரின் நாக்கு போலொரு சாட்டை..
வரிவரியாய் எழுதுமிடமாய்
மாறிப்போன பிஞ்சு முதுகு..
இனிமைத் தமிழாய்
பேசும்வாயில் பிச்சைக்குரல்..
வறுமையின் வரிகளென
வாசிக்கும்போது கசியும் இரத்தத்துளிகள்..
சுதந்திரத்தின் கேவலத்தை
நிரூபிக்கும் உயிர் சாட்சிகள்..!
என் கடவுளேயென
ஒற்றை ரூபாய்க்காய் எம்மையழைத்து
நீளும் கைமுன் உள்ளம்குறுகுதடா..!
கடவுளின் படைப்பில்
பாவப்பலன் இதுவென்றால்
அவனைத் தூக்கில் போடும்வரை
அடித்துக் கொள்ளடா கண்மணி..!
பிள்ளை வயிற்றுப்பசியடங்க
வழிகாணா வல்லமைமிக்க
சுதந்திரநாட்டின் அதிகாரமையங்
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய