muthuIma - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : muthuIma |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 23-Jan-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 117 |
புள்ளி | : 14 |
வரிகளை நேசிப்பவன்
கண்கள் இரண்டும்
பேசிக்கொண்டது போய்-இப்போது
கண்ணீர் துளிகள் மட்டுமே
பேசிக் "கொல்கின்றன"....
ஆம்,
பேசிக்கொண்ட கண்களுக்கு தெரியுமல்லவா
கொல்கின்ற பிரிவின்
வலிகளை பற்றி....
கண்கள் இரண்டும்
பேசிக்கொண்டது போய்-இப்போது
கண்ணீர் துளிகள் மட்டுமே
பேசிக் "கொல்கின்றன"....
ஆம்,
பேசிக்கொண்ட கண்களுக்கு தெரியுமல்லவா
கொல்கின்ற பிரிவின்
வலிகளை பற்றி....
தார் சாலைகளில் நாம்
தடம் பதித்த நான்கு
பாத சுவடுகள் இன்று
இரண்டாக மாறித் திரிகின்றது...
என் துன்பம் துடைக்கும்
உன் விரல்கள் இன்றி
தூங்காத இரவுகளை
தூண்டிலிட்டு பிடிக்கின்றன
என்னிரட்டை விழிகள்...
நீரற்ற கிணற்றில் வாழும்
மீனும் நான்
நிழலற்ற நிலத்தில் வாழும்
மானும் நான்
நீயற்ற நிமிடங்களில்...
கண் முன்னே கடக்கும்
காதல் கூட்டங்களுக்குள்
நான் மட்டும் தனிமையுடன்
பொறாமை ஏதும் இன்றி
ஓராமை போல் நகர்கின்றேன்...
அப்படியே நகர்த்தவும்
செய்கின்றேன் நீயின்றி
நாடி துடிக்கா நாட்களை
சற்று தாடியுடன்...
செ.மணி
திவ்யாவும், அஜினும் நெருங்கிய நண்பர்கள்.இருகுடும்பங்களும் வசதி படைத்தவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாய் படித்துக்கொண்டிருக்கின்றனர். பன்னிரெண்டாம் வகுப்புவரை ஒரே பள்ளி ஒரே டியூசன் பக்கத்து பக்கத்துவீடு.... எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள் இவளுக்கு என்ன உதவி என்றாலும் அவன் செய்து கொடுப்பது வழக்கம் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டதும் இவர்கள் பெற்றோரும் இவர்கள் விருப்பப்படி ஒரே கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளியில் படிக்கும் போதே இருவரும் ஒரே பைக்கில் செல்வது வழக்கம் இப்பொழுதும் கல்லூரிக்கும் இதேநிலைதான்.
படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி இருவரும் ஒன்றாகவே இருந்து வந
இடியும் மின்னலுமாய் பெய்த
கோடை மழையில்
இருவரும் இணைந்து நடந்தோமே
நினைவிருக்கிறதா அன்பே !
சாலையில் விழுந்த
ஆலங்கட்டிகளை சேகரித்து
உன் சட்டைப்பையில் வைத்தேனே
நினைவிருக்கிறதா அன்பே !
சொட்ட சொட்ட நனைந்த
உடையால்
நான் குளிரில் நடுங்க
விரலுக்குள் வெப்பம் பாய்ச்சி
என் கரம் கோர்த்தாயே
நினைவிருக்கிறதா அன்பே !
பேருந்து நிழற்குடையில்
பேசாமல் பேசினோமே
ஒரு கோப்பை தேநீரை
இருவருமே பருகினோமே…
நினைவிருக்கிறதா அன்பே !
ஒவ்வொரு கோடையிலும்
இடியும் மின்னலுமாய்
ஆலங்கட்டி மழை பெய்கிறது…..
ஆனால்….
சேர்ந்து நனையத்தான்
நீயில்லை அன்பே !
இடியும் மின்னலுமாய் பெய்த
கோடை மழையில்
இருவரும் இணைந்து நடந்தோமே
நினைவிருக்கிறதா அன்பே !
சாலையில் விழுந்த
ஆலங்கட்டிகளை சேகரித்து
உன் சட்டைப்பையில் வைத்தேனே
நினைவிருக்கிறதா அன்பே !
சொட்ட சொட்ட நனைந்த
உடையால்
நான் குளிரில் நடுங்க
விரலுக்குள் வெப்பம் பாய்ச்சி
என் கரம் கோர்த்தாயே
நினைவிருக்கிறதா அன்பே !
பேருந்து நிழற்குடையில்
பேசாமல் பேசினோமே
ஒரு கோப்பை தேநீரை
இருவருமே பருகினோமே…
நினைவிருக்கிறதா அன்பே !
ஒவ்வொரு கோடையிலும்
இடியும் மின்னலுமாய்
ஆலங்கட்டி மழை பெய்கிறது…..
ஆனால்….
சேர்ந்து நனையத்தான்
நீயில்லை அன்பே !
காதலில் பிரிவு
நீ என்னை விட்டு போன பின்பும் தெரியவில்லையே எனக்கு
உன் திருமண அழைப்பிதழ் பார்க்கும் வரை ...............
ஒரு காரணமும் இல்லாமல்
என்னை விடு எப்படி போனாய்......
மீண்டும் ஒரு முறை
உன்னை பார்க்கும் சக்தியற்ற
உன் காதலி .............
நண்பர்கள் (14)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

முனைவர் சௌ ரா சூரியக்குமார்
சென்னை

நா கூர் கவி
தமிழ் நாடு
