இராஜ்குமார்- கருத்துகள்

அன்பு கொஞ்சும் நெஞ்சம்
தஞ்சம் கேட்டு கெஞ்சும்
பாச பஞ்சம் வந்த வேலையிலே...

கொஞ்சம் தான் பாசம்
கொஞ்சம் தான் நேசம்
நம் நட்பு வேசம் கலைந்திடுமா..?
நம் நட்பு தேசம் அழிந்திடுமா..?

என்னுடன் பேச
என்ன தயக்கம்..?
எதையும் தருவேன்
என் நட்பு பயக்கும்..!

உன்னுடன் பேச
உள்ளம் விருப்பம்..!
உணர்ந்து கொள்ளடா
உயிரும் கிடைக்கும்..!

இரும்பு பெண்ணென்று
இருமாப்பு கொண்டவள்..!
இலகி தவிக்கிறேன்
இதயம் உனக்கு கிடையாதா..!

கரும்பு சுவையாக
கவியெழுதும் திறனானவள்..!
கவலையில் மூழ்கிறேன்
கருனை உனக்கு கிடையாதா..?

உடும்பு பிடி போல
உறுதியான உறவுதான்..!
உதறிப் போகும் போது
உமியாகிப் போனதடா..!

குடும்ப உறுப்பினராய்
குணம் கொண்ட நட்புதான்..!
குப்பைக்கு சமமாக
குறைபட்டு போனதடா..!

வழி காட்டும் வெளிச்சம்
வாசல் வர மறுத்தால்...
வலியின் வாழ்விடமாய்
வாழுகின்ற நிலை ஆகும்..!

துளியும் இரக்கமின்றி
தூரத்தில் நீ போனால்...
என் விழியின் கண்ணீர்
எங்கென்று உனை தேடும்..!

பசியும் தூக்கமும்
பழி வாங்குது என்னை..!
பழகிய நினைவெல்லாம்
படை சேருது இன்னும்..!

பிரிவும் தனிமையும்
பிழையாக்குது என்னை..!
பிணமாய் மாறிவிட
பிறக்கிறது எண்ணம்..!

பிணமாய் மாறிவிட
பிறக்கிறது எண்ணம்..!!!!

தங்கள் வளமான கருத்திற்கும்
வாழ்த்திற்கும் மிக்க நன்றி அண்ணா

இனி எழுதும் கவிதைகளில் பிழை வராமல் பார்த்துக்கொள்கிறேன் அண்ணா...நன்றி

உண்மை அண்ணா
ஆதவன் நிலவு மறைந்தாலும் ஆகாயம் போல் இருப்பவள் அன்னை

அனைத்து வீட்டின் தெய்வங்களும் ஒரே வீட்டில் வாழுகிறார்கள்

நடைமுறை வாழ்க்கையில் பலருக்கும் உபயோகப்படும் கவிதை
அருமை அண்ணா

அழகான சிந்தனை
வாழ்த்துக்கள்

எழில்மிகு ஏக்கம்
வாழ்த்துக்கள் சகோதரி

எழில்மிகு வேண்டுதல்
அருமை அண்ணா

அருமை அருமை நண்பா
என் கண்ணில் தந்தையின் நினைவுகள் கண்ணீராய் வரவைத்துவிட்டீர்கள்

அருமை அண்ணா
இமை பேசும் மொழிகள் இதயத்திற்கு மட்டுமே புரிகிறது


இராஜ்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே