Arulrathan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Arulrathan
இடம்:  மட்டக்களப்பு
பிறந்த தேதி :  29-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Aug-2013
பார்த்தவர்கள்:  372
புள்ளி:  44

என்னைப் பற்றி...

அலைகிறேன்
கவிதையின் வீட்டுக்கு
முகவரி மறந்து
கற்ககளும்
முட்களும்
கால் தட்டிய படியே
உன்னைமட்டும்
எண்ணியபடியும்
எண்ணாமலும்
என் பயணணம்
தொடர்கிறது
நீ
அழகான தமிழ்

என் படைப்புகள்
Arulrathan செய்திகள்
Arulrathan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 11:22 am

(2014) வருடத்தின் கடைசி ஆசை

இரவுகள் கொலை செய்யும் பகல்களும்
பகல்களை துரத்தி நிற்கும் இரவுகளுமாக
நாட்கள் காயத்தோடே கடந்துவிட்டன

வாரங்கள் கை வெட்டப்பட்டு
வழியேங்கும் இரத்தங்கள் சிந்த
மாதங்களோ மரணித்துபோயின

இன்று வருடத்தின் இறுதி மூச்சு
மரணத்துக்கு சில மணிகள் மட்டுமே
மண்டியிட்டு கேட்டு நிற்கிறது

உயிர் கொல்லும் வன்முறை வேண்டாம்
உயிர் செல்லும் வார்த்தைகளும் வேண்டாம்
என்னோடு முடியட்டும் இந்த வன்முறைகள்

(வன்முறைகள் இல்லா தேசம் படைப்போம்)

மேலும்

வருடத்தின் கடைசி ஆசை அருமை..... தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..! 31-Dec-2014 3:55 pm
அருமையான வரிகள் ! ஆம் ! வன்முறைகள் இல்லா தேசம் படைப்போம் ! வாழ்த்துக்கள் ! 31-Dec-2014 2:17 pm
Arulrathan - எண்ணம் (public)
15-Sep-2014 10:04 am

என்தூக்கத்தில்
தலையணை நீ
புதைந்து போனது முகம்

மேலும்

Arulrathan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2014 12:19 pm

யாருமில்லை
அருகேயும்
அகத்தேயும்
அன்புக்குமட்டுமேனும்

அருகதை இல்லை
அழும் கதைதான்
என்பக்கத்தின்
எல்லா பக்கமும்

அணைத்துக்கொண்டே
அழைத்துக்கொண்டு செல்கிறது
கண்ணீரின் கைகள்
கனலின் வழியே

சிரித்துக் கொண்டே
மறைத்துக்கொண்டேன்
என்னில் சிறைபட்டுபோன
சிறு ரணங்களை கூட

என்றும் விழித்துக்கொண்டே
வலித்துக்கொண்டிருபேன்
விடியலின்
விழுதுகளைநோக்கி...

மேலும்

கண்ணீரின் கைகள் ..கனலின் வழியே .. 29-Apr-2014 6:32 pm
நன்று ... 29-Apr-2014 5:49 pm
மலர்ந்தே இருங்கள் ...ரணங்கள் மறையும். கவி அருமை :) 29-Apr-2014 5:20 pm
கவிதைக்காக வேதனை கூட்டியிருந்தாலும் அந்த நினைவே வேண்டாம் மலர்ச்சியே என்றும் கொண்டிருங்கள் . மனிதன் என்றும் தனியன் ஆவதில்லை . மரம் ஒரு கிளை மட்டும் விட்டு வளர்வதில்லை . ரணங்களை மறைக்கச் சிரிக்க தெரிந்த மனமே வலி மறந்து விழித்துக் கொண்டிரு , வரும் காலம் உனதாகும் பெரும் பேரும் பெருமையும் உன்னை நாடிவரும் . 29-Apr-2014 4:49 pm
Arulrathan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2014 3:25 pm

பெய்யும் மழை
ஒற்றைக் குடை
நட்பு கேட்கும் விரல்கள் மட்டும்

மேலும்

அருமை 27-Mar-2014 3:07 pm
Arulrathan அளித்த படைப்பில் (public) soundar மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Nov-2013 11:25 am

நன்றி
காதலுக்கு
நட்பை
பிரியவைத்ததற்கு
நன்றி
நட்புக்கு
காதலை
புரியவைத்ததற்கு

பிரிதலும் பின்
புரிதலும்
அன்பினால் மட்டுமே

மேலும்

நன்றி தோழா....... 13-Jan-2014 11:12 am
எழுத்து பிழை திருத்தவும்... 03-Dec-2013 9:36 am
நீங்களே அன்பின் ஆற்றலை விளக்கி விட்டீர்கள் நண்பரே: பிரிதலும் பின் புரிதலும் அன்பினால் மட்டுமே 29-Nov-2013 7:23 pm
மிக்கநன்றி தோழமைக்கு 27-Nov-2013 4:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (105)

fasrina

fasrina

mawanella - srilanka
user photo

Anurathan

Batticaloa
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (106)

இவரை பின்தொடர்பவர்கள் (106)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே