VINAYAGAMURUGAN - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  VINAYAGAMURUGAN
இடம்:  PUDHUCHERRY
பிறந்த தேதி :  09-Jun-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jun-2011
பார்த்தவர்கள்:  3668
புள்ளி:  1750

என்னைப் பற்றி...

நான் தமிழ் மீது மிகவும் பற்று கொண்டவன் . தான் வாழ பிறரை ஜெயிக்கும் சுயநல உலகில் பிறருக்காக நான் தோற்கிறேன் தினம் தினம் . நான் இறுக பிடித்தது தன்னம்பிக்கை , நான் மற்றவரிடம் எதிர்பார்ப்பது அன்பு மட்டும் எனது தெய்வங்கள் தாயும் தந்தையும் , எனது பொழுது போக்கு கவிதைகளை படிப்பதும் , பதிவதும் , எனக்கு பெருமை தமிழனாக பிறந்தது , நன்றி rnrnநண்பர்களே அன்பர்களே என்னுடையே முதல் கவிதை நூலான "அர்த்தமுள்ள கிறுக்கல்கள் " வேண்டுபவர்கள் கீழ் காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் . ஒரு புத்தகத்தின் விலை ருபாய் 90/-(நம் எழுத்து தள நண்பர்களுக்கு மட்டும் ருபாய் 70/-) தபால் கட்டணமாக ருபாய் 30/-. புத்தகம் வேண்டும் நபர்கள் தொடர்புகொள்ளவும் :rnrnசு . வினாயகமுருகன் rnஎண் 16. மாரியம்மன் கோவில் வீதிrnகவுண்டன் பாளையம் ,rnபாண்டிச்சேரி -605009rnrne - mail : vinayagamuruganpondy@gmail.com rnrnrn

என் படைப்புகள்
VINAYAGAMURUGAN செய்திகள்
VINAYAGAMURUGAN - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2024 6:34 pm

ரசிக்க தெரியாதவனுக்கு
ஓவியம்கூட கிறுக்கலாகத்தான் தெரியும் !

காலால் உதைத்த கல் சிலையாகிப்போனபொழுது
கைகள் தானாக வணங்கத்தொடங்குகின்றன !

அவமானங்களில் அமைதி -
மாபெரும் வாழ்க்கை ரகசியம் !

வாசல்கள்கூட நேர்கோடுகளை தாண்டி
சிக்கலான கோலங்களைத்தான் ரசிக்கின்றன!

மேலும்

VINAYAGAMURUGAN - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2024 6:21 pm

எவரும் தொடர விருப்பமில்லாத
என் வாழ்வின் இருண்ட பக்கத்தில்
உனக்கும் தொடர விருப்பமில்லாமல்
ஓடி ஒளிந்துக்கொண்டாயோ -நிழலே !

மேலும்

VINAYAGAMURUGAN - VINAYAGAMURUGAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2020 9:24 pm

தோல்விகளை கண்டு துவண்டுவிடாதீர்கள் -
எழுந்து வாருங்கள் மாணவர்களே !

எல்லாம் சிலகாலம்தான் -எதுவும் நிரந்தரம் அல்ல
தோல்விகளை தாண்டித்தான் சாதனைகள் !

இழந்ததை எல்லாம் மீட்டு விடலாம்
இமயத்தையும் கூட எளிதாய் கடந்துவிடலாம் !

கடுமையான பாதைகளில்தான்
காலம் புதையல்களை புதைத்து வைத்திருக்கிறது !

முயற்சியும் பயிற்சியும் முடியும் என்கிற எண்ணமும்
உங்கள் வெற்றியை எளிதாக்கும் யுக்திகள் !

எதிர்மறை எண்ணங்களை இன்றோடு விட்டுவிடுங்கள்
நேர்மறை எண்ணத்தோடு நீங்கள் முயலுங்கள் -வெற்றி நிச்சயம் !

மேலும்

......' முயற்சியும் பயிற்சியும் முடியும் என்கிற எண்ணமும் உங்கள் வெற்றியை எளிதாக்கும் யுக்திகள் ! ' இந்த வரிகள் மாணவ சமுதாயம் நினைவில் கொள்ளவேண்டும். சரியான வழிகாட்டும் கவிதை. வாழ்த்துக்கள் ஐயா . 15-Sep-2020 4:18 pm
VINAYAGAMURUGAN - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2020 10:05 pm

அடே அரசியல்வாதிகளே
நிறுத்துங்கள் உங்கள் ஆட்டத்தை !

காலம் காலமாய் செய்துவரும்
களவாணி அரசியலை என்றைக்குத்தான்
நிறுத்தப்போகிறீர்கள் ?

ஊழலால் உடல்பெறுத்த உள்ளங்களே
உயிர்கள் என்ன அவ்வளவு மலிவாகிவிட்டதா ?

தேர்வுக்கு தீர்வென்றால்
தீர்மானம் போட்டு போராட்டமா ?

அடித்தட்டு மக்களின் அவஸ்தைகள்
அவ்வளவு அலட்சியமாகிவிட்டதா ?

ஊக்கத்தை உடைத்து உயிர்பலியில்
ஓட்டுக்களை சேகரிக்கிறீர்களா ?

சில்லறைகளை செலவழித்து
எத்தனை கல்லறைகளை இன்னும் கட்டப்போகிறீர்கள் ?

அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையே
மறைத்து விட்டீர்கள் , மறந்து விட்டர்கள் !

உயிர்களை கொள்ள ஊக்கம் கொடுப்பதற்கென்றே

மேலும்

'நுழைவுத் தேர்வில்' வெற்றிபெற பயிற்சிக்காக நிலையங்களை தோற்றுவிக்காமல் எதிர்மறையாய் புறம் பேசும் சுயநல அரசியல்வாதிகள் செய்யும் வெட்கக்கேடு . மாணவ சமுதாயம் தீர்மானத்தோடு மனதை ஒருநிலைப்படுத்தி தேர்வில் அமர கல்லூரியில் இடம் வெற்றிநிச்சயம் . இளைய தலைமுறையின் வழிகாட்டலுக்கு நன்றி . ஐயா . 15-Sep-2020 4:33 pm
VINAYAGAMURUGAN - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2020 9:50 pm

குரங்குகளை தேடித்தான்
பூ மாலைகள் போகின்றன !

மேலும்

VINAYAGAMURUGAN - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2020 8:48 pm

நீட் தற்கொலை ,
முக்கிய செய்தி என்று
மீண்டும் மீண்டும் காட்டும் ஊடகங்கள் !

உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஊடக வாதிகள்
மீண்டும் மீண்டும் உணர்வுகளை தூண்டும்
ஊடக செய்திகள் !

வெறும் வாயை மென்ற
அரசியல் கட்சிகளுக்கோ வெற்றிலை மடித்து கொடுத்த மாதிரி
ஆளாளுக்கோர் ஆவேச கருத்து !

உயிர்பலிகளை ஊக்குவிக்க
ஆளுக்கொரு நிதி உதவி -
உண்மையில் நாளையும் ஒரு உயிர்
பலியிடப்பட காத்திருக்கிறது !

நிலைமையை புரிந்து கொள்ளாத போராளிகள் -
நீட் போராட்டமென்று
நீதியற்ற ஓர் போராட்டம் !

என்னதான் நடக்கிறது தமிழகத்தில் ?

நீட் தேர்வு என்ன -
தமிழகத்தை மட்டும்தான் இலக்காக்கி இருக்கிறதோ ?
இந்திய அளவி

மேலும்

உங்கள் கருத்து பகிர்விற்கு மிக்க நன்றி 14-Sep-2020 4:39 pm
தமிழகத்தில் மட்டும் பிரிவு / எதிர்மறை எண்ணங்களை அரசியல் நோக்கத்திற்காக சில தலைவர்களும் ஊடகங்களும் மாணவ சமுதாயத்தில் பரப்புகின்றனர். மற்ற மாநிலங்களில் மாணவர்கள் நன்றாக படிப்பதில் மட்டும் குறியாயிருக்கின்றனர். மாணவர்களுக்கு ஊக்கம் தருவதில் ஆசிரியர் , பெற்றோர் , அனைவரும் உதவி செய்கின்றனர் . ஆனால் தமிழ் நாட்டில் மெடிக்கல் கல்வியை வியாபாரமாக்கி அரசியல் செய்கின்றனர் . மாணவ சமுதாயம் கவனம் தேவை . 14-Sep-2020 4:14 pm
VINAYAGAMURUGAN - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2020 8:09 pm

நிறை வயிறு நிரம்பாத
நீண்ட வறுமை காலத்தில்
அரை வயிறு காஞ்சி கூட
அமிர்தமென்பேன் !!!!!!!!

கோடி கொட்டி வீடுகட்டிகுறைத்தூக்கம் தள்ளிவைத்து
கூரைவீடே பெரிதென்று
நிறைவோடு வாழ்ந்திருப்பேன் !!!!!!!!!!!!!!

ஆசை கொண்டு ஆஸ்த்திதேடி
அத்தனையையும் சேர்த்துக்கொண்டு
வேஷம்போடும் வாழ்க்கையை விட
வெறும் ஆறடியே வேண்டும் என்பேன் !!!!!!!!

மேலும்

அய்யா கருத்து பகிர்விற்கு மிக்க நன்றி 26-Aug-2020 9:54 pm
VINAYAGAMURUGAN - VINAYAGAMURUGAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2020 7:08 am

வாழ்வென்பது ஓர் புரியாத புதிர் -
எதிர்பார்ப்பிற்கும் எதார்த்தத்திற்கும்
வித்தியாசம் அதிகம் ............

கனவுகளையும் கற்பனைகளையும்
பலநேரங்களில் போலியாக்கி இருக்கிறது வாழ்க்கை ................

நடக்குமென்பது நடக்காமல் போவதும்
நடக்காதென்பது நடத்தி காட்டுவதும் வாழ்க்கையின் விசித்திரம் ...............

அதுவழியில் இதோ எனது வாழ்க்கை .............

காலத்தின் பிள்ளையாய் பிறந்து
கட்டுக்கோப்பான வாழ்க்கையில் வளர்ந்தும்
எதார்த்த வாழ்க்கை என்னை
எங்கோ இட்டுச்சென்று விட்டது ................

நேர்மையாய் வாழ்ந்தும்
நேர்மையற்ற இந்த சமுதாயம்
என்னை நம்பிக்கை துரோகத்தால் வீழ்த்தி இருக்க

மேலும்

VINAYAGAMURUGAN - VINAYAGAMURUGAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2020 7:44 am

இருகால் வீழ்ந்து
எண்கால் சுமந்த பயணத்தில்
நன்கால் , தீங்கால் வாழ்ந்த வாழ்வை
முன்கால் பேசி
பின்காலுக்கு புகழும் பிழையும் சேர்த்திடுமே ................

மேலும்

அய்யா உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி 10-Aug-2020 8:02 am
உங்கள் 'கால் ' கவிதை மின்னுகிறது. ம்ம்ம் .. முழுக்கவிதை ஜொலிக்கும் . ஐயமில்லை . வாழ்த்துக்கள் கவிஞரே ! 07-Aug-2020 8:26 am
VINAYAGAMURUGAN - VINAYAGAMURUGAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2020 10:37 pm

நேசிக்க தெரிந்த உறவுகளை விட்டு
ஓர் நெடும் பயணம் -
வறுமையை விரட்ட ஓர்
வாழ்வியல் போர் ..................

பசியை போக்கும் பயணத்தில்
மரணம் கூட மலிவானதாய் -
ஊதியம் கேட்பதோ உழைப்பு
உழைப்பு கேட்பதோ ஊதியம் .............

விரட்டும் வறுமைக்கு பயந்து
முரட்டு பாதையிலும்
பயணிக்க வேண்டிய பரிதாபம் ..............

உயிரை ஒப்பிடும்போது
ஊதியம் குறைவுதான்
மானத்தை ஒப்பிட்டால்
மரணமும் மலிவுதான் ................

ஆட்டிப்படைபவனிடம் அடங்கி கிடக்கிறது காசு -
ஆழ்ந்து உழைப்பானவை
அடிமைப்படுத்துவதும் காசு ..............

உழைத்தவனை உண்மையில்
உறங்ககூடவிடவில்லை இறைவன்
விழிப்பதற்குள் விழிக

மேலும்

VINAYAGAMURUGAN - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2020 7:44 am

இருகால் வீழ்ந்து
எண்கால் சுமந்த பயணத்தில்
நன்கால் , தீங்கால் வாழ்ந்த வாழ்வை
முன்கால் பேசி
பின்காலுக்கு புகழும் பிழையும் சேர்த்திடுமே ................

மேலும்

அய்யா உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி 10-Aug-2020 8:02 am
உங்கள் 'கால் ' கவிதை மின்னுகிறது. ம்ம்ம் .. முழுக்கவிதை ஜொலிக்கும் . ஐயமில்லை . வாழ்த்துக்கள் கவிஞரே ! 07-Aug-2020 8:26 am
VINAYAGAMURUGAN - VINAYAGAMURUGAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2020 6:51 am

கடவுள் கேட்கவில்லை கொடுக்கிறார்கள்
மனிதன் கேட்கிறான் மறுக்கிறார்கள் -
பணம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி 06-Aug-2020 9:24 pm
அருமை 👌👌👌👌👌 05-Aug-2020 3:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (109)

user photo

வீரா

சேலம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மடந்தை ஜெபக்குமார்

மடந்தை ஜெபக்குமார்

மடத்தாக்குளம்,இராம்நாட்.

இவர் பின்தொடர்பவர்கள் (109)

krishnan hari

krishnan hari

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
Irfan u.s

Irfan u.s

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (109)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே