தஞ்சை சதீஷ் குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தஞ்சை சதீஷ் குமார் |
இடம் | : வெண்டயம் பட்டி |
பிறந்த தேதி | : 31-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 200 |
புள்ளி | : 18 |
இருவிழி எய்திடும்
காதல் பாணம்
இதயத்தை கொல்லுதடி...
இரண்டற இதயம்
கிழிந்திடும் தருணம்
நின் பெயர்
சொல்லுதடி...!
விழியில் விழுந்த
உன் பிம்பம்
இதயத்தில் எழுந்தடி...
விழுந்திடும் கல்லடி
ஒவ்வொன்றும்
பூவாயானதடி...!
இதுவரை மீட்டிய
முராரியின்று
பைரவியானதடி...
உன் விழியின் ஒளியில் இன்றெனது
வாழ்க்கை துலங்குதடி...!
விழிகள் உதிர்த்த உவர்நீர் துடைத்து சோர்ந்தே போனேன்
நானன்று...!
பொருள் விளங்கா
கிறுக்கல் வாழ்வும்
அர்த்தம் கொண்டது...
உன்னாலின்று...!
இதயமறுக்கும் காயமினி
வந்தால் வரட்டும்
எனக்கென்ன?
இதுவரை சூழ்ந்த
உறவுகளெல்லாம்
விலகிச் சென்றால்
எனக்கென்ன?!
பூவினிதழாய்
உன் விரல்கள்
பச்சை இலையை பற்றிக்கொண்டேன்
அந்த ஒற்றை ரோஜாவின்
காதல் கலையை காண
தடையாய்
நங்கூரம்
நாசகதி செய்தாலும்
உயிர் பாரம் நெஞ்சை
கொய்தாலும்
அண்ட சராசரம் உருண்டாலும்
அந்த பூமியே
அந்தரங்கத்தில் பறந்தாலும்
உன் இதழ் கூட்டில்
அமிர்தம் எடுக்க
ஆயத்தமாய்
ஆதாம் ஏவாள் உலகத்தில்
சஞ்சரித்தேன்
அங்கே புரியாத மொழியில் நீயும்
நானும் பேச
சங்கமிப்போம்
தினம்தினம் சலித்திடாத
இந்த
காதல் பயணத்தில் !
-தஞ்சை சதீஷ்குமார்
செந்தாமரை நெற்றியில்
செந்நெல் போல
பொட்டு வைத்த செந்தமிழ்க்காரியே
திட்டு திட்டாய்
தெளிக்க வைத்த இரசாயனத்தை
மொத்தமாக நிரப்பிவிட்டான்
உன் கவர்ந்த
விழிகளைக் கண்டு பிரம்மனவன்
மின்கம்பி
தெடர்பில்லா
தொடர் மின்சாரத்தை
தொலை இயக்கி
கருவி(ழி)யைக் கொண்டு
புகுத்திவிட்டாய்
இதயத்தில்
உன்
கலைந்த முடி
கதை சொல்லுதடி கல்வெட்டுகள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல்
மொழிப்பெயர்த்து
காற்றின் உதவியோடு
முக்கனிகளின்
பெயர்களை மாற்றச் சொல்லிவிட்டேன்
எல்லாமே
நீயென்பதாலே
இரு புருவ நாற்றுகளும்
ஒன்றுகூடி
விளைவித்த
வைர நெல்மணியோ
உன் நெற்றிப் பொட்டு
விடை கூறடி
பருவ
விழியாளே
எதிர்பாரா தருணத்தில்
தொலை தூரம் நீயிருக்க
பார்வை பரிமாற்றம்
முதல் சந்திப்பில்
மொழியாய் ....
எதிர்பாரா தருணத்தில்
என் முன் நீயிருக்க
புன்னகை பரிமாற்றம்
இரண்டாம் சந்திப்பில்
மொழியாய் ....
எதிர்பாரா தருணத்தில்
என் அருகில் நீயிருக்க
வார்த்தை பரிமாற்றம்
மூன்றாம் சந்திப்பில்
மொழியாய் ....
எதிர்பாரா தருணத்தில்
என் தோழியுடன் நீயிருக்க
கண்ணீர் பரிமாற்றம்
நான்காம் சந்திப்பில்
மொழியாய் ...
பச்சை நிற உடையழகி
எலு(ழு)மிச்சை இடையழகி
பவளமேனி கொடியழகி
பசி தீட்டும் இதழழகி
பார்த்ததும் மிரளுதடி
பாவி நெஞ்சு
ஒற்றை கற்றை
கூந்தலோடு
ஒய்யார சிலையென
நின்றாய்
விசாலப் பார்வையில்
நீ வெளிக்காட்டும்
இமைகளில்
விலையேறிப் போகாதோ மையெல்லாம்
அது விளம்பரமென்று
விழுந்தேனடி
விதி பார்வையால் உன்
விழி கோர்வையில்
நீ நடந்தாலே
இசை சாத்தியம்
பின்பு ஏனடி
உன் கால்களில்
இசை வாத்தியம்
முன்னங்கால்
முந்தி வைக்க
பின்னங்கால்
பிதற்றுதடி
பிரபஞ்ச அழகியடா இவளென்று
இருந்தும்
ஏதோ ஒரு விசை
மூளைக்கு தந்தி
கொடுக்காமலே
மொத்த சரீரமும்
போதை எழுப்ப
மூச்சடைத்து
பினாத்துகிற
பெண்ணே
எப்போதும்
நீ
பூஜை மலராக
இருக்கவே
ஆசைப்படு
அதை விட்டு
மேசை மீது
சோடிக்கப்பட்ட
அலங்கார மலராக இருக்க
ஆசைப்படாதே
காட்சிப்பொருளாக
மாறிவிடுவாய்
உனக்கென்று
இங்கு மதிப்புண்டு
அதற்கென்றும்
தனி சிறப்புண்டு
உன்னை
நீயே
வீழ்த்திச் செல்லாதே
தாழ்த்திக் கொள்ளாதே
நம் தமிழ் கலாச்சாரம்
உன்னை நம்பி !
உடன் பிறவா
சொந்தமிது
எனை ஊக்குவிக்கும்
பந்தமிது
நிலையில்லா
வாழ்க்கையிலும்
நிஜமுள்ள
உறவு இது !
இரு ரத்தம் வேறு
ஆனாலும்
இந்த அன்பின் வேர்
ஆழமென
நித்தமும்
உணர்விப்பாள் !
பசிக்கு
சோறூட்டினாள்
வளர்ப்புத் தாய்
இவன் ருசிக்க
சோறூட்டினாள்
என் அக்கா !
இவள்
என் மடமைகளை
போக்கி
பாசம் எனும்
உடைமையை
தன் வசம் வைத்து
என்னை
வழிநடத்திக்
கொண்டிருக்கும்
என் அக்கா
எனக்கென்றும்
தெய்வம் !
என் டைரியில் எழுதப்படாத நாள்
ஆகஸ்ட் பதினைந்து !
தப்பென்று தெரிந்து செய்பவனும்
தவறென்று புரிந்து கொள்பவனும்
கேட்கும் ஆறுதல் வார்த்தை !