Glifford Kumar - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Glifford Kumar |
இடம் | : |
பிறந்த தேதி | : 01-Jan-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-May-2013 |
பார்த்தவர்கள் | : 1179 |
புள்ளி | : 78 |
சொல்லுவதற்கு ஒன்றுமில்லை
எட்டு ஆண்டுகள் கழித்து
எதேச்சையாக அவளுக்கு மிக அருகில்
எதிர்படுகையில் என்னால்
அவள் கண்களை பார்த்து அவளிடம்
நான்கு வார்த்தைகள் பேசிவிட முடியுமெனில்
என்னால் சுழலும் இந்த உலகை
ஒரு நிமிடம் நிறுத்த முடியும்.
எனக்கு என்னவோ
சுழலும் உலகம்
நிற்காமல் சுழலவே
ஆசை
மொட்டை மாடியில் நட்சத்திரங்கள் எண்ணுவதை விடவா.......
சந்தோஷம் பெரிதாக இருந்தது விட போகிறது...!!!
நான் சொல்லுவது எல்லாம் உண்மையுமில்லை, உன் காதுகளில் கேட்டது எல்லாம் பொய்யுமில்லை. ஆனால் உன் கண்களும் என் கண்களும் சந்திக்கும் போது உண்மை மட்டுமே பிறக்கிறது........
எப்போதேனும் வரும் மழையை நம்பி
ஏங்கி கிடக்கிறது
என் மனது
தினமும் வந்து மறையும்
திங்கள் போல்
நின் நினைவுகள்
நீண்டு கொண்டேயுள்ளது
இருந்ததும்
நீ இல்லாத உன்
நினைவு இல்லாத
நீண்ட பயணத்தை தொடங்குகிறது மனது
திரும்பியும்
தொடங்கிய இடமே
வந்து சேர்கிறது
தன்னையும் அறியாமலே.
எப்போதேனும் வரும் மழையை நம்பி
ஏங்கி கிடக்கிறது
என் மனது
தினமும் வந்து மறையும்
திங்கள் போல்
நின் நினைவுகள்
நீண்டு கொண்டேயுள்ளது
இருந்ததும்
நீ இல்லாத உன்
நினைவு இல்லாத
நீண்ட பயணத்தை தொடங்குகிறது மனது
திரும்பியும்
தொடங்கிய இடமே
வந்து சேர்கிறது
தன்னையும் அறியாமலே.
உன் கரம் பற்றவே
சுயநலமாய் நானும்
என் சுகம் தொலைக்கிறேன் !
உறவுகளெல்லாம்
மாற்றுக்கருத்துகள் பேசியே
மனதை கலைக்க பார்க்கிறார்கள் !
காத்திருப்பேன் என்றே
கர்வம் கொள்கிறேன்
உன் கருவிழிகளில்
நான் மட்டும் கண்ட
என் நம்பிக்கை மீதமிருக்க !
என்னோடு வா-வித்யா
பூக்களின் காது திருகி
புதுவாசம் கேட்டுப் பருக
என்னோடு வா நீ....!!
அடர் பனித்தூவ
உறைபனியென இறுகி
உலர என்னோடு..........
காற்றைத் துளைத்து
மென் பூட்டைத்திறந்து
உயிர் தொலைக்க
செவ்விதழ் வருத்தி
மெல்லிசை அருந்தி
புது கீதம் இசைக்க
இமைகள் மூடி
இதயம் திறந்து
இனி ஓர் விதி செய்ய
காமம் சிதைத்து
காதல் புதைத்து
உணர்வுகளின் கல்லறை
எழுப்ப வா.......!!
நீ
என்னோடு வா.......!!
என் கணுக்கால் கண்டு
உன் ஆண்மை அஞ்சும்
பலவீனமானவனா நீ....?
ஆம் எனில்
எனைத்தொடரும் உரிமை
உனக்கில்லை....!!
என் காதல்
கூட்டினை
உன் காமத்தீயினில்
கொளுத்த
நான் கருவிலே உருவான போது
பெண்ணாய் பிறப்பேனென்று
யாரும் ஆருடம் சொல்லலையோ
குங்குமப்பூ குடிக்கலையோ
பாட்டி அவள் சொல்லலையோ
பாவி நீயும் கேட்கலையோ?
பகலிலே பிறந்தாலும்
இருட்டா பிறந்தேன்னு
சொந்த பந்தம் பேசலையா
சுத்தி நின்னு சிரிக்கலையா?
கடலை மாவு, பயத்தமாவு
பேபி சோப் இத்யாதி...
சந்தையிலே விற்கலையா
உன் சிந்தைக்கு தான் தோனலையா?
கிடா வெட்டி படையல் போட்டு
குல சாமிக்கு பூசப் போட்டு
ஆசையா நீ வச்சப் பேரு
அய்யோ அது விளங்கலையே
வீதியில சந்தையில
விளையாடப் போகயில
கருப்பின்னு ஒரு பேரு
கப்புன்னு தான் ஒட்டிக்கிச்சு...
செவத்த பிள்ளை கூட்டத்தில
சேர்ந்து விளையாட
கருத்தப் புள்ள எனக்கு தான்
அய்யோ
நண்பர்கள் (99)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

வாசு
தமிழ்நாடு

ஜெகன் ரா தி
மதுரை

விஷாநிதி ரா
தூத்துக்குடி
