Uvasri Natarajan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Uvasri Natarajan
இடம்:  trichy
பிறந்த தேதி :  08-May-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jan-2014
பார்த்தவர்கள்:  224
புள்ளி:  48

என்னைப் பற்றி...

நான் தமிழில் கல்வி பயிலவில்லை... என்றாலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் சில வருடங்களாக...எழுத்துப் பிழை ஏதும் கண்டால் மன்னிக்கவும்...

என் படைப்புகள்
Uvasri Natarajan செய்திகள்
ஜெய்வசந்த் சிவஞானம் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2014 12:06 pm

உன் இதய புத்தகம்
login செய்ய
password தருவாயா!!

like மட்டும்
சொல்லிவிடு.....
ஊருக்கே tag
செய்வேன்
என் status ஐ!!

block மட்டும்
செய்து விடாதே...

செய்தலும்
account ஐ
deactivate செய்துவிட்டு
மீண்டும் வருவேன்
புதிய account இல்!!! ;-)

single
commited ஆவது
எப்பொழுது???

update செய்து
காத்து கிடக்கிறேன்
உன் comment டிர்காக!!!!

மேலும்

நன்றி நண்பா 02-Jul-2014 5:53 pm
update செய்து காத்து கிடக்கிறேன் - சிறப்பு 02-Jul-2014 2:40 pm
நன்று நட்பே 02-Jul-2014 10:08 am
நன்றி தோழா 02-Jul-2014 9:35 am
காதலாரா அளித்த படைப்பில் (public) GURUVARULKAVI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Apr-2014 12:31 am

எனை ஒரு
துகள்
துரத்தி
தூரமாய்
தூக்கி வீச ...

வீசிய வேகத்தில்
தூளாகி ,,,,
தூய்மை அடைந்தேன் ...!
காதலின்
மேன்மை அறிந்து ..!!

அத்துகளின்
வாசம் வாங்கி
வங்கியில் சேமித்தேன்

வட்டி மட்டுமல்ல
முதலீட்டிலும்
முதல் ஆளாய் ..!!

உன் நினைவெனும் சிறகில்
பறவை என பறந்தேன் ..

பறந்து போன என் மனமோ
மீண்டும் வந்தே மிரட்ட
பாதை மறந்தது
பறவைக்கும்
பாவை உனை
பார்த்ததுமே ..!!

உனை
தேடி திரியும் இப்பறவை

சிறகால் சிரித்து
இதழ் பார்த்து
இறங்கி
தென்றல் வீச
கொஞ்சம் கொடுத்தது
காதல் குழந்தையை

இனி
கொல்வதும்
கொஞ்சுவதும்
உன் கையில் ..!!

சொல்லிக்

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி தோழமையே 23-Apr-2014 9:44 pm
வரவிலும் கருத்திலும் மிக மகிழ்ச்சி தோழி .... 23-Apr-2014 9:43 pm
வரவிலும் வாழ்த்திலும் மிக மகிழ்ச்சி தோழமையே 23-Apr-2014 9:38 pm
அருமை தோழரே !! 23-Apr-2014 7:17 pm
அரவிந்த்.C அளித்த படைப்பில் (public) ambiraja மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Mar-2014 9:21 pm

எழுத வேண்டும் என்று என் மனது சொல்லியது..
எதை எழுதுவது என்று என் மூளை வினாவியது..
தோன்றியதை எழுது என்றது என் மனம்..

காகிதத்தை எடுத்தேன்..
கத்தியின் கூர்மை கொண்ட
பேனா முனையை கண்டு நகைத்தேன்..
இந்த கூர்மை எதை கெடுக்கப்போகிறதென்று...

நான் காணும் சமுகத்தை வர்ணிப்போம்
என்றெண்ணி...
தொடுத்தேன் போரினை காகிதத்தின் மேல்,
வார்த்தை வாள் கொண்டு...

அவசர உலகம்..
ஆடம்பர வாழ்க்கை..
பணக்காரர்கள் அதிகமிருக்கும் தேசம்..
ஆனால்..
அன்றாட வாழ்வுக்கு
அல்லல்படும் மனிதனும் இங்கு தான் அதிகம்...
ஏற்ற தாழ்வு கொண்ட நிலை...
இவை இங்கு ஏனோ..
மனித வளத்துக்கு பஞ்சமில்லை...
மனிதநேயமோ கடுகளவும் இல்லை...

மேலும்

நன்றி தோழா... பிழையை திருத்திக்கொள்கிறேன்... 29-Apr-2014 9:02 pm
நன்றி தோழமையே 29-Apr-2014 9:01 pm
மிக்க நன்றி தோழா 29-Apr-2014 9:00 pm
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி 29-Apr-2014 9:00 pm
Uvasri Natarajan அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Mar-2014 9:07 pm

விழி மூடி
உன் நினைவில்
வார்த்தைகள் நான் தொடுக்க...
படிப்பவறேனோ அவற்றை
கவிதை என்றும்
என்னை கவி என்றும் சொல்ல...
என் ஆழ்மனம் ஏனோ
இவை கவிதையானது
உன் காதலால் என்றும்....
நீ கவி என்பதை விட
காதலி என்றும்
உறக்கக் கூற....
சொல்வதறியாது நிற்கிறேன்
அப்போதும் உன் நினைவோடு....

மேலும்

நன்று நன்று 11-May-2014 11:11 pm
நன்றி :) 04-Mar-2014 10:54 pm
மாற்றம் சரியா சகோ ???? 04-Mar-2014 10:53 pm
கவிதை கவிதை ஹிஹி அழகு :) 04-Mar-2014 10:34 pm
Uvasri Natarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 9:07 pm

விழி மூடி
உன் நினைவில்
வார்த்தைகள் நான் தொடுக்க...
படிப்பவறேனோ அவற்றை
கவிதை என்றும்
என்னை கவி என்றும் சொல்ல...
என் ஆழ்மனம் ஏனோ
இவை கவிதையானது
உன் காதலால் என்றும்....
நீ கவி என்பதை விட
காதலி என்றும்
உறக்கக் கூற....
சொல்வதறியாது நிற்கிறேன்
அப்போதும் உன் நினைவோடு....

மேலும்

நன்று நன்று 11-May-2014 11:11 pm
நன்றி :) 04-Mar-2014 10:54 pm
மாற்றம் சரியா சகோ ???? 04-Mar-2014 10:53 pm
கவிதை கவிதை ஹிஹி அழகு :) 04-Mar-2014 10:34 pm
Uvasri Natarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2014 4:34 pm

தான் உண்ணும் அரிசியில
தான் பேரே இருக்குமுன்னு
முன்னோர்கள் சொல்லக்கேட்டு
என் பேர தேடிப்போக
என் பேரிட்ட அரிசியத்தான்
காணலியே என் குலசாமி ???
என்னத்தான் நினைவில்லையா ???
என் குடும்பத்தையே நினைவில்லையா ???
என்ன பாவம் செஞ்சுபுட்டோம் ???
ஏழையா பொறந்தது தான்
பாவமுன்னு நினைசுக்கிட்டோம் ...
மனிஷங்க எங்கள மறக்கையில
இயல்புன்னு தான் நினைச்சிக்கிட்டோம் ...
குலசாமியே மறக்கையில
மூலையில அழுதுகிட்டோம் ...
மூட்ட தூக்கி பிழைக்கிறேனே
வேர்வ சிந்தி ஒழைக்கிறேனே
கள்ளத்தனம் செய்யலியே
இருந்தும் என்ன மறந்ததென்ன ???
கையில் தூக்கும் அரிசி தனை
வாயில வைக்க முடியலையே...
வயிறு ஒட்டிக்கிடக்கும் ப

மேலும்

நன்றி சகோ :) 18-Mar-2014 6:03 pm
அழகு! 18-Mar-2014 4:49 pm
நன்றி சகோ :) 03-Mar-2014 6:53 pm
நன்றி :) 03-Mar-2014 6:53 pm
Uvasri Natarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2014 6:03 pm

காதலொன்றும்
மீள விரும்பாத அளவு மோட்சம் இல்லை....
இருந்தும்
மனம் ஏனோ மீள விரும்புவதில்லை...
காரணம் ஒன்றும் பெரியதல்ல ...
மிகச்சிறிய உன் புன்னகை தான்....

மேலும்

Uvasri Natarajan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 9:43 pm

பொண்ண பொறந்ததியே
பாவமுன்னு நினைச்ச அவ ....
கண்ணாளன் உன்ன
பாக்கையில தவிச்ச அவ ....
தன்னால தன்ன அடக்க முடியா ஆசையோட
மணாளன் உன்ன கைசேர வாறயில ...
தகப்பன் தான் குறுக்க வந்து
கை கழுவச் சொல்லக்கேட்டு
யாருக்குத் தான் பேச என
மனசுக்குள்ள அழுத அவ ....
கண்ணுல நீறு வத்தி
மனசெல்லாம் கல்லாக்கி
மண்ணோட தானும் சேர
கலங்காம நின்னுகிட்டு
மனசத்தான் காதலுக்கும்
மரியாதைய தகப்பனுக்கும்
தந்தே தான் ஆகணும்னு
மண்ணோட சேந்துபுட்ட
மகராசி பெத்த அவ ...
காதல் தான் நிலைச்சுதைய்யா ???
மரியாத நிலைச்சுதைய்யா ???
எல்லாமே நிலைச்ச அவ
உசுரு மட்டும் நிலைகிலியெ ?????

மேலும்

அருமை தோழி ..மனசத்தான் காதலுக்கும் மரியாதைய தகப்பனுக்கும் தந்தே தான் ஆகணும்னு மண்ணோட சேந்துபுட்ட மகராசி பெத்த அவ ... மிக மிக அருமை 25-Feb-2014 4:54 pm
ஆமாம் தோழரே :) 21-Feb-2014 9:10 pm
இப்படி (யாருக்கும் சொல்லாத )உண்மை காதல்கள் ஊருக்குள் எத்தனையோ...? நல்ல படைப்பு! 21-Feb-2014 9:05 pm
நன்றி :) 21-Feb-2014 8:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (41)

எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (41)

செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)
மேலே