geethaa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  geethaa
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Jan-2016
பார்த்தவர்கள்:  229
புள்ளி:  8

என் படைப்புகள்
geethaa செய்திகள்
geethaa - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2019 3:09 pm

வானம் மனம் குளிர்ந்து
தன் நேசமான உறவான
பூமிக்கு பரிசாக அளிக்கும்
அதிசய விந்தையே “மழை”.

மேலும்

geethaa - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 2:14 pm

பொதுவாக உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது எதனால் ???

மேலும்

தங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி .. 26-Sep-2019 3:41 pm
வரவேற்கத் தக்க, இன்றைய நிலையில் உபயோகமான கேள்வி ஒன்று கேட்டிர்கள் பிரியா அவர்களே! உறவினரிடம், சண்டையிட, அறிவுரை கூற, இடித்துரைக்க, உரிமையும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அவர் கருத்தும், நம் கருத்தும் உறவினர் என்பதாலேயே ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை உணர்ந்து அவர் கருத்தை மதிக்கவும் கற்க வேண்டும்! அப்படி செய்தால் உறவுகளுக்குள் விரிசல் வராது! 24-Sep-2019 6:30 pm
ஆகா! சத்தியமூர்த்தி அவர்களே! கறை நல்லது என்பது ஒரு அருமையான உதாரணம்! சண்டை நல்லதுதான்! உரிமையின் பிரதிபலிப்புதான் அது! இல்லை என்று கூறவில்லை! அதே சமயம் எந்த இருவருமே, அவர்கள் எவ்வளவு நெருங்கிய உறவாக இருப்பினும், கருத்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்தால் விட்டுக்கொடுக்கவும் கற்றுக் கொண்டு மனத்தாங்கல்களை தவிர்க்கவும் முடியும்! 24-Sep-2019 6:22 pm
ஆம்! எல்லா உறவுகளிலுமே இந்த பிரச்னை உள்ளது! எல்லா உறவுகளும் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம்! நண்பர்களின் பந்தமும் கூடத்தான்! 24-Sep-2019 6:03 pm
geethaa - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2019 10:38 am

காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி

மேலும்

கனவு சந்நிதி என்றால் காதல் வாழ்வதெப்படி காதல் கனவில் இருந்தால் அது பலித்தால் அன்றி கற்பனையே ...................முழுக்க பாடவில்லையோ? இன்னும் எழுதுங்கள் 19-Jan-2019 2:12 pm
இது பட பாடல் தானே ? 19-Jan-2019 10:57 am
geethaa - ஷிபாதௌபீஃக் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-May-2018 10:01 pm

பிக்பாஸ்#3

U P S C , IAS , IPS போன்ற தேர்வுமுறைகளில் மாற்றம் கொண்டுவருகிறது மத்திய அரசு. 100 நாட்கள் பயிற்சி முகாம்களின் பயிற்சியை வைத்து தேர்வு செய்யப்படுகிறது, அதாவது தேர்வு எழுதி அதில் முதலாம் மாணவன் இறுதி மாணவராக தேர்வு செய்யப்படலாம், அது அங்கு உள்ள தேர்வு அதிகாரிகளின் மனநிலை பொறுத்தது இது சரியான தேர்வுமுறையா? ஏன் இந்த மாற்றம்?

மேலும்

மாற்றங்கள் நன்மை தருவதென்றால் அதனை வரவேற்போம் 31-May-2018 5:15 pm
கண்டிப்பாக நல்ல மாற்றம் .ஏன் என்றால் நாம் வாங்கும் மதிப்பெண்கள் நம் நினைவு திறனுக்கான மதிப்பெண் .ஆனால் நாம் ஒரு நல்ல அதிகாரி ஆக இது போதாதே .இந்த மாற்றத்தை நாம் அனைத்துவிதமான வேலை வாய்ப்பு கல்வியிலும் கொண்டு வந்தால் நம் அதிகாரிகள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் .அந்த பயிற்சி வகுப்பு அது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் இந்த மாற்றத்தை நாம் கண்டிப்பாக வரவேற்கலாம் . 26-May-2018 6:56 pm
நன்கு கற்கும் ஆவலும் தெளிவான சிந்தனையும் இருக்கும் ஆண்மைக்கு முன் எந்த தேர்வும் தூசிதான் ....அதில் சறுக்குவோரும் கையால் ஆகாதவரும் பேசுவதை விட்டு விடலாம் 26-May-2018 11:01 am
இதெல்லாம் ..ரொம்ப ஓவர் ... docter ஆகலாமுன்னு நீட் எழுதி நொந்து போய்.... IAS ஆகா முடிவு எடுத்தா ....அதுக்கும் ஆப்பு வக்கிரனுக ... இவிங்களாம் என்ன பண்றது ..... .............................................. ஒன்னு பண்ண முடியாது ..... 24-May-2018 5:49 am
geethaa - எண்ணம் (public)
12-Apr-2018 10:25 am

விருந்தோம்பளுக்கு பெயர் போன தமிழன் விரட்டுகிறான், வந்தால் காவிரியுடன் வா. இல்லை காலம் உள்ள வரை வராதே.. #GoBackModi

மேலும்

geethaa - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Apr-2018 12:15 pm

தைப்பொங்கல் புத்தாண்டா? சித்திரை வருடம் புத்தாண்டா?

மேலும்

தை தான் 20-Sep-2018 1:43 am
தை புத்தாண்டானாலும் சித்திரை புத்தாண்டாலும் பானையில் போட்டால் பொங்கல் பொங்கத்தான் செய்யும். முதலில் காவிரி நீர் வந்து சேரட்டும்.அப்புறமிலா நெல் வெளைஞ்சு அரிசி குத்தி கண்ணீர் துடைத்து தண்ணீர் ஊத்தி பானையில் பொங்கச் சோறு பொங்கி வரனும் தாயி ! 12-Apr-2018 8:30 am
geethaa - மன்சூர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2017 9:17 pm

திருமணம் ஆனதிற்கு பிறகு மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டுமா?

யாரேனும் கொண்டாடுபவர்கள் இருந்தால் எத்தனை வருடங்கள் கொண்டாடினீர்?

மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வில்லையெனில் தவறாகுமோ?

மேலும்

மனைவிக்கு பிறந்த நாள் கொண்டாடு என்று உலகமே சொல்லிக் கொடுக்கிறது உண்மைதான் தோழரே! 23-Sep-2017 8:30 am
சரியாக சொன்னீர்கள்.. Nanri 23-Sep-2017 8:24 am
ஏன்? தாய் தங்கைக்கும் கொண்டாடலாமே! அவர்களும் செண்டிமெண்ட் உள்ள பெண்கள்தானே! தமையன் தனக்காக கொண்டாடினால் தங்கை ஆனந்தக்கண்ணீர் விட மாட்டாளா? தாய்க்காக மகன் கொண்டாடினால் தாய் பெருமிதம் அடைய மாட்டாளா? வாழ்த்து தெரிவித்து விட்டு ஆசீர்வாதம் கேட்கலாம் தாயிடம்! வாழ்த்து தெரிவித்து விட்டு ஆசீர்வாதம் செய்யலாம் தங்கையை! இன்றைய வாட்ஸாப் யுகத்தில் எல்லா உறவுகளுக்கும் அவரவர் பிறந்தநாள் அன்று வாழ்த்து தெரிவிப்பது சம்பிரதாயமாகி விட்டது! அலுவலக ஊழியர்களுக்கும் வாட்ஸாப் குரூப் மூலம் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்! இவையெல்லாம் வரவேற்கத் தக்க மாற்றங்களே! 22-Sep-2017 11:40 pm
ஆண்களின் பிறந்த நாளை மனைவிகள் என்றும் மறந்ததில்லை! உண்மைதான் கீதா! கேசரி என்ற வார்த்தையைக் கேட்டாலே மகிழ்ச்சியாக இருக்கிறது! 22-Sep-2017 11:29 pm
geethaa - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2017 5:36 pm

கணவன் ஒருவன் குடும்ப பிரெச்சனைகள் காரணமாக தன் மனைவி மற்றும் தனது ஒரு வயது குழந்தையை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.

பஞ்சாயத்துகள் பல. பணம் தான் காரணம். நன்றாக நடந்த திருமணம் தான். கணவன் குடும்பத்தில் 4 பெண்பிள்ளைகள். பெற்றோர் பொறுப்பற்றவர். ஆயினும் 4 சகோதரிகளுக்கும் நல்ல வரன் பார்த்து கல்யாணம் முடித்தனர். அனைவரும் நன்கு செட்டில் தான். கடன் பாக்கிகள் பல.

மனைவி செல்வந்தினி சம்பளம் கணவனை விட உயர்வு. கல்யாணம் முடிந்தது. குடும்பத்திற்குள் சகோதரிகளின் ஊடுருவல், மாமனார் மாமியார் மகன் சம்பாத்தியம் முழுவதும் செலவு செய்யவே பார்க்கின்றனர். சேமிப்பு கிடையாது. சந்தோசமாக தான் சென்றது வாழ்க்கை. பெண் தன

மேலும்

அவரை துரத்த துரத்த தூர தான் போவார்.. அவர் மூலம் அந்த பெண்ணுக்கு தொல்லை இருந்தாலோ அல்லது அந்த பெண்ணுக்கு வேறு மணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தாலோ விகாரத்து பற்றி யோசிக்கலாம். மற்றபடி பிடி எப்போதும் பெண் கையில் இருப்பதே நல்லது. பெண்ணை மீறி அவர் வேறு திருமணத்துக்கு முயற்சிக்க முடியாது.சட்டம் எப்போதும் பெண்ணுக்கு சாதகமாகத்தான் உள்ளது. பெண் மிகுந்த தன்னம்பிக்கையோடும் மன வலிமையோடும் சிறிது காலம் காத்திருப்பது நல்லது. அவர் திருந்தும் பட்சத்தில் ஏற்கவும் அப்படி இல்லாதா பட்சத்தில் அவரை சட்டத்தின் பிடியில் கொண்டு வரவும் முடியும். எல்லாரிடமும் ஆலோசனை கேட்பதை விட ஒரு நல்ல தொண்டுள்ளம் கொண்ட மன நல ஆலோசகரிடம் யோசனை பெறுவது சிறந்தது. 01-Mar-2017 1:53 pm
உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் தற்போது பெருகி வருகின்றன . வாசிக்கும்போது அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து மிகவும் வருந்தினேன் . ( அது யாராக இருந்தாலும் ....) இந்த காலத்தில் காதல் திருமணங்களில் தான் இது போன்ற பின்விளைவுகள் அதிகம் காணப்படுகின்றன. மறுக்க முடியாது. அடிப்படைக் காரணம் ஒன்று பணம் ...மற்றொன்று புரிதலின்மை . அதனாலதான் சில குடும்பங்களில் மணம் முடிந்த தனியாக வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். தவறில்லை . இதற்கு தீர்வு காண .....முதலில் கணவன் மனைவி தனியாக சந்திக்க ஓர் வாய்ப்பு உருவாக வேண்டும் அல்லது யாராவது ஒருவர் மூலம் உருவாக்கப்பட வேண்டும் . மனம்விட்டு பேசி இருவரும் இணைந்திட வழி வகுக்க வேண்டும் . அதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் . ஏனெனில் அந்த குழந்தைக்காக வருங்காலத்தை நினைத்து இதனை செய்திடல் அவசியம். முயற்சி செய்தல் தவறில்லை . முனைந்திட வேண்டும் முதியோரும் பெரியோரும் . அடுத்து சரியாக அமையவில்லை எனில் தனிக்குடித்தனம் போக நினைக்கவேண்டும் . இரு புறங்களிலும் ஏனைய குடும்ப உறவுகள் தலையீட்டு இல்லாமல் நடக்க வேண்டும் ...சில காலமாவது . அப்படி எதற்குமே ஒத்துவாராதவர் என்ற நிலை வந்தால் மட்டுமே விவாகரத்து என்று முடிவை எடுங்கள். வேறுவழியில்லை என்று தீர்மானிக்கும்போது , அவ்வாறான சூழ்நிலை உருவாகும்போது விவாகரத்து என்ற முடிவு எடுப்பதில் தவறில்லை . அந்தப் பெண் எடுத்த ஒரு தவறான முடிவும் , பாதை மாறிய காரணமும் இந்த நிலை இன்று., எதையுமே சட்ட ரீதியாக அணுகுவதும் செய்வதுமே அந்தப் பெண்ணுக்கு நல்லது . ஒரு சமுதாய பாதுகாப்பு . ஏதாவது பெண்கள் னால அமைப்பின் மூலம் செய்தால் நல்லது என்பது என் கருத்து. விரைவில் ஒரு நல்ல முடிவு கிடைக்க விழைகிறேன் . நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை பெறுவதே சாலை சிறந்தது . பழனி குமார் 28-Feb-2017 2:48 pm
அந்த பெண்ணின் கணவரிடம் பொதுவான ஒருவரை பேச விடுங்கள். கணவன் மனைவி இருவரும் தனிமையில் சந்திக்க நேர்ந்தால் இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். ஒருவரை ஒருவர் குறை கூறுவது வீண் விவாதத்தில் தான் முடியும். முதலில் குழந்தையின் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு ஒரு தந்தையாக அந்த ஆண் மகனுக்கு பொறுப்பு வேண்டும். இருவருக்கும் தனித் தனியாக ஒரு ஆலோசகர் மூலம் அவர்களின் கடமையை புரிய வைக்க வேண்டியது அவசியம். நாட்டில் எவ்வளவோ குழந்தைகள் குடும்பம் இல்லாமல் அனாதையாக ஆதரவிற்கு ஆள் இன்றி இருக்கிறார்கள். இவ்வளவு அழகான குடும்பம் இருக்கிறது, வாழ தெரிந்தால் இவர்கள் மிக அழகாக வாழ்வை வாழலாம்.. நன்றி, தமிழ் ப்ரியா.. 27-Feb-2017 9:08 pm
தோழி கீதா அவர்களே இந்த பிரச்னை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று சிந்தியுங்க அங்கேயே முடிய வாய்ப்புள்ளது 1- பிரச்சனைக்கு முக்கிய காரணம் அவர்களின் குடும்பம் ஆதலால் பெண் வீட்டாரும் ஆண் வீட்டாரும் ஒன்றாக கலந்து பேசி அவர்களில் எதிர்ப்பார்ப்பை தெறித்துக் கொள்ளலாம் 2- அவர் சுயமாக சிந்திக்க வில்லை ஆடிகையால் அவர்களில் கட்டுக்கோப்பில் இருந்து அவரை வெளியேற்ற தொடர்ந்து முயற்சிக்கவும் முக்கியமாக அவருடன் அந்த குழந்தையை பேசவிடுங்கள் நிச்சம் அவர்கள் ஒன்றுசேர்வார்கள் மனதார சொல்ற அவங்க கண்டிப்பா சேருவங்க 27-Feb-2017 7:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா

இவரை பின்தொடர்பவர்கள் (3)

பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
சேகர்

சேகர்

Pollachi / Denmark

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே