jbaburaj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jbaburaj
இடம்:  புதுவை
பிறந்த தேதி :  18-May-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2012
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  19

என்னைப் பற்றி...

சொல்ல பெருசா ஒன்னும் இல்ல..

என் படைப்புகள்
jbaburaj செய்திகள்
jbaburaj - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 12:26 pm

உறங்க விடாக் கனவுகள்
காணச் சொன்ன
உன்னத அறிஞனே!

எளிமையின் உருவம் நீ
எல்லோருக்கும்
ஆசிரியனும் நீ!

மாணவனின் பிரியமாய்
இளைஞர்களின் நம்பிக்கையாய்
உயர்வாய் உயர்ந்தாய்!

இலக்கிலாமல் பயணித்தவருக்கு
இலக்கானாய்
இனிய தமிழின் தொன்மையை
நானிலம் ஏற்றி விளக்கானாய்

அறிவின் ஒளி
அறிவியலின் வெளி
அரசியல் வழி
திறன் மிகு சான்றானாய்
சாண்றோனாய்

"கலாம்" என்றே
இதயத்தில் இருந்தே
இவ்வுலகில்
சரித்திரமானாய் நீயே!

மேலும்

jbaburaj - Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2015 8:14 pm

பழகிய நாள் கிடைத்த இதம்...
பார்த்த நாள் கொண்ட ஈர்ப்பு ...
பிரிந்த பின்னும் பிரியாத பந்தம் ...
பீடமேறி நீ என்னில் நாடிய சொந்தம்...
புகலிடமாகி நான் உன்னில் தேடிய நெருக்கம்...
பூவென என்னை நீ பூசித்த நிமிடம்...
பெண்ணிவள் உன்னை நேசித்த நொடிகள்...
பேதையிவள் அறியாத தவிப்பு...
பைத்தியமாக உன்னில் நான் கொண்ட மையல்...
பொக்கிஷமென உன்னால் கிடைத்த அன்பு....
போதையென நான் கொண்ட மயக்கம்...
பௌர்ணமியாகி நீ என்னில் ஒளிர்ந்த நாட்கள்...

மரணத் தருவாயிலும், மறக்கா தருணங்களே....

மேலும்

மறக்கமால் இருப்பது தான் வலியே!!! 30-Nov-2015 10:46 am
மறக்காத தருணங்களில் சொற் கோர்ப்பு அருமை தோழமையே 19-Jun-2015 7:19 pm
தப்பு அர்த்தம் கொள்ள வேண்டாம்,.. இது யாருக்காக எழுதப்பட்டதென்று எனக்கு மாற்றுமே தெரியும்.. 17-Jun-2015 11:03 pm
"மரணத் தருவாயிலும், மறக்கா தருணங்களே" இவ் வார்த்தை ஒன்றே போதுமடி 17-Jun-2015 12:26 pm
jbaburaj - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2015 9:47 am

கன்னியிடம் கவிஞன்
ஏன் வீழ்ந்தானென தெரிகிறது...
கவிதையின்
கற்பனையு மிங்கே தோற்கிறது

கண்கள் தொடுக்கும் வீச்சே
கவர்கின்ற போது
கவிண் தொடுக்கும் விரல்களில்
நிள்வதோ மேலும் இளமை

இதழ்களின் உறையில்
உறைகிறதோ அம்பு.. அடடா!!
மன்மதனும் வீழ்கிறானே
எனக்கில்லை என்று

குறியினில் தப்பிட
முயல்வாருண்டோ?
பெண்ணே! நீ
ஏவாமலே சிதைக்கிறாயே
அணுக்களை
அணு அணுவாய்....இன்று

மேலும்

jbaburaj - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2015 9:51 am

கடைத் தேடி பூ வாங்கி
நடை யாய் ஓடி வந்தேன்
இடை சிறுத்த கொடியாள்
கடைக் கண்ணால்.. தாமதமேன்?
விடைச் சொல்! என்றாள்
கடைப் பூவை நீட்டி.. அன்பே!
விடைச் சொல்ல வருத்தாதே
தடை சொல்லாதே உன்
கடை விழியில் கனிவு காட்டு
மேடை யிட்டு சொல்வேன் என்
உடை யவள் நீயே! என்றேன்

அடை மழையின் குளிரென
புடை சூழும் அன்புனது அறிவேன்
தடையில்லை! தடையில்லை! யென
இடைப் பொழுதில் ஊடல் விட்டாள்

கோடை வெயிலை குளிர்விக்கும்
நடை எழிலாய்! உன் முத்தம்
தடை யின்றி தந்து விடு என்னை
உடை யாய் உடுத்திவிடென்றேன்

முடையும் உணர்வுகளில் காமம்
கடையாதே! காத்திரு ! பொறுத்திரு!
மேடையில் யாவர் முன் மாலையிட்டால்
மடை திறந்த வெள்ளமா

மேலும்

முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கிருஷ்ணா புத்திரன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Mar-2015 9:28 pm

மாதவச் செல்வியே மாண்புறு மங்கையே
மேதக மிக்கநல் மித்திரையே !- பூதலத்தில்
சாதனைகள் செய்யும் சகலகலா வல்லியே
கோதகற்றும் உந்தன் பணி .

தெள்ளியநின் சொற்பொழிவு தேனருவி யாய்ப்பாயும்
கொள்ளையின்பம் உன்பேச்சில் கூடிவரும் - உள்ளத்தில்
வஞ்சமின்றி யாவரையும் வாஞ்சையுடன் பேணுமுனை
மிஞ்சிடவே யாருளர் சொல் ?

தொண்டுள்ளத் தோடுபிறர் துன்பந் துடைத்தாய்ப்பூச்
செண்டுதந்து வாழ்த்துவேன் செம்மொழியால் ! - வெண்பாவில்
போற்றியுனைப் பாடிடப் பொன்மகளே, உற்சாகம்
ஊற்றெடுக்கும் என்னுள் சிறந்து .

பன்முக வித்தகியே பைந்தமிழ்ச் சாரலே
கன்னல் குரலால் கவர்ந்திழுத்தாய் -இன்பக்
கவின்கலையாம் நாடகத்தைக் கண்போல்

மேலும்

மிக்க நன்றி பிரியா ! 21-Mar-2015 7:56 pm
சிறப்பான வெண்பா அம்மா தங்களின் தோழிக்கு ... தரம் மேலோங்கி தமிழ் சிறக்கிறது தங்களின் கை வண்ணத்தில் .. அருமை அருமை அம்மா .... 20-Mar-2015 11:39 am
மிக்க நன்றி 11-Mar-2015 4:09 pm
அருமையான குறட்பா. வாழ்த்துகள். 10-Mar-2015 9:56 pm
jbaburaj - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2015 10:00 am

விழி விரிய பேரழகாய்
இருக்கின்றாய்
இலையணைத்தே இன்முகம்
காட்டுகின்றாய்
யாரை உன் மனதில் வைத்தாய்?
முழுதாய் மகிழ்கின்றாய்

பெண்ணென்றே நீ
ரகசியம் காக்கின்றாய்
பறித்திட தூண்டும் மனதில்
உன் சுதந்திரம் கேட்கின்றாய்

தொடாமல் செல்கிறேன்
வாடாமல் இருப்பாயோ?
வெண்ணிறப் பூவே

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (11)

Kumari

Kumari

kumbakonam
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

Kumari

Kumari

kumbakonam
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
மேலே