பாம்பாட்டி- கருத்துகள்

ஐயா உள்ளத்து வரும் கவி அனைத்தும் உன்னதமே, உள்ளன்போடு தமிழ் ஈர்த்தது நம்மை,ஆதலாலே நாம் நம் உரையாடல், கவி இவற்றிற்கு வடிகால் தேடுகிறோம். மரபுகளை நேசிப்போம், அன்பரே உங்கள் கவி அருமை முயலும் மயிலும் அயில் தனில் உறங்கலாம், உம் கவியில் வெளிப்படுவது ஆச்சரியம்......நன்று

பொம்மைகளை புறங்கண்டு என எதனை குறிப்பிடுகிறீர்

எனக்கு, எனக்கு, என தன்னோடு முடித்து விடாமல். உன்னோடு நான், என்னோடு நீ, என முடித்த பாணி அழகு...நல்ல கவி...வாழ்த்துக்கள்,.

தோழமையே அனைவருக்கும் புரியும் விதமான உங்கள் கவியே, உங்களின் பலம்..நல்ல கவி.. வாழ்த்துக்கள்...

விளங்க ,மறந்தேன்
விளங்கிய பின் நிலம் உள்ளவர்க்கு
விளக்கவும் மறந்தேன்
விளைவுகள் சுடும் என தெரிந்தும்,...

அழகிய உணர்வு கவி...குறிப்பாய் இரண்டாம் பா நல்ல ரசனை...வாழ்த்துக்கள்

ஐயா இது என் கருத்து.....
ஏங்குதோ வாழ்க்கை
தோள் சுருள் கிழவர்க்கும்
காமம் ஒட்டாது மாண்டு,
தொங்குதோ நரைதாடி,
தலைவழுகி மூப்பாகி
கூன் விழுந்து நொந்தாலும்
என்றுமே சாகாதாம் ஆவி.
ஆவியேன் பாவியேன்
ஆட்படா அடியேனுக்கு
ஆண்டவன் போட்டதாம் முடிச்சு
முன்னதோ பின்னதோ
முழுமையோ செழிமையோ
ஆவிக்கு உள்ளிருக்கும் ஐயா
காதலும் கவிதையும் சாகாத பரிசு....

உண்மை தான் தோழரே தற்பெருமையே தாழ்வு நிலை..

மிக்க நன்றி தோழரே. ஒரு மிகப் பெரிய கவிஞனாகும் தகுதி உங்களுக்கு இருக்கிறது.ஏனெனில்,உளமாற பாராட்டும் குணம் யாவர்க்கும் வாய்க்காது.தமிழை ஆழமாக நேசிக்கும் தமிழனுக்கு என் வணக்கம்.இந்த தமிழனால் உங்களுக்கு வழிகாட்டுதல் கிடைத்தால் பெரு மகிழ்ச்சி அடைவேன்...

சகோதரி மலர் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.மனப்பாட கல்வி முறை எதற்கு.ஏட்டுச் சுரைக்காய்..அறிவை வளர்க்கும் கல்வியால் சமுதாயம் சீராகும்.

அழகிய செவ்வானத்தில் ஆரம்பித்து, கடலில் கொண்டு போய் இறக்கி விட்டது இக்கவி, அருமை.....

தங்களின் கவிதையிலும் வரிகளிலும் மனம் மகிழ்ந்தேன்..


பாம்பாட்டி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே