krishnan hari - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : krishnan hari |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 03-Apr-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 11647 |
புள்ளி | : 5716 |
உங்கள் கருத்து பகிர
rudhran198134@yahoo.com (or)
rudhran198134@rediffmail.com
rudhranhari198134@gmail.com
rudhrahari198134@sify.com
ஒரு துளி விஷமென்றாலும் அதன் வீரியம் அது காட்டும்
மனிதா ..........
உனக்குள் ஆயிரம் திறமை உண்டு அதில் ஒரு துளியேனும் நீ காட்டு .........
கனவுகளே கனவுகளே
கலைந்து போக சொல்கின்றேன்
நிதர்சன உண்மை என்னவென்றால்
எதுவும் எளிதல்ல இங்கே...
கனவுகள் நிஜமாக முயல்கிறோம் நாம்
இங்கு நிஜமே கனவாய் போகிறதே
முயல்வதே முதல் வெற்றி என்று
முயன்று முயன்று தோற்க்கிறோம் நாம்
ஏற்றத்தில் சரிவு இயல்பு
எதுவும் தடையல்ல முயலு
வெற்றி உன்னைத் தேடி வரும்
விடியல் நாளை உனது வசம்
வலிகளுக்காக வார்த்தை தேடி
உணர்வுகளுக்கு உரு கொடுத்து
சொல்ல வந்ததை சொல்லி முடித்து
சுய சூளுரை அதில் உறைத்து
எட்டுத்திக்கும் என் கவிதை
எட்டி நடக்கும் என எத்தனிதது
பறை ஒலித்து முரசு கொட்ட
என்றாவது ஒரு நாள்...
நிச்சயம் கேட்கும் என் பாடல்....
அப்போது புரியும் என் கவிதையின் காதல்
ஆயிரம் கனவுகள்....
நிறைவேறாத ஆசைகள்
எண்ணற்ற முயற்சிகள்
வெளி சொல்லா தோல்விகள்
சொல்ல முடியாத துயரங்கள்
விதைக்க முடியாத வலிகள்
உடனிருக்கும் சதிகள்
உருவமில்லா எதிரிகள்
எத்தனை எதிர்ப்பினும்
எத்தனை மறுப்பினும்
என் சிந்தனை என்றும்
மீண்டும் முயல்வதே...
ஒரு நொடி உன் இமை
நொடிக்கிற தருணம்
மரணம் எனக்கு தானாய் நிகழும்
காதலை சொல்லும் முன்
கணக்கிடும் மனமது
வார்த்தையை தேடி மனம் கனத்திடும் பொழுது இது
மறுத்திட ஒரு மனம்
விரும்பிட ஒரு மனம்
எனக்கும் இருந்தால் காதலை மறுப்பேன்
எதையும் உண்ணிலிருந்து தொடங்கு
குறை என்பதெல்லாம்
மற்றவர் குற்றம் காணும்வரை
நிறை என்பதெல்லாம்
மற்றவர் உன்னை புகழும்வரை...
எதையும் ஏற்காமல்
எங்கும் பாராமல்
எவன் சொல்லும் கேளாமல்
உன்னில் நீ தொடங்கு
வெற்றியும் தோல்வியும்
காலம் சொல்லும்
வென்றிட அனுபவம்
பாடம் தரும்
உன்னை உலகம் உற்று
நோக்கும் காலம் வரும்
அதுவரை போராடு
உன்னில் இருந்து தொடங்கட்டுமே..
சூரியன் அனைந்துவிட்டால்
நாட்கள் நகராது
கிழமைகள் இருக்காது
விடியும் என்ற சொல்லே
புழக்கத்தில் இருக்காது
பகல் கனவு பொய்யாகும்
இரவு கனவு நிஜமாகும்
வானம் இறந்து போகும்
வண்ணம் களையொழந்து போகும்
வேளாண்மை இறந்து போகும்
வெள்ளாமை மறந்து போகும்
இரவில் பயிர் செய்யும் பழக்கம் உருவாகும்
செய்யர்க்கை ஒளி கொண்டு எல்லாம் அரங்கேறும்
காலம் மூன்றாகும்
கணிப்புகள் காலம் வெல்லும்
ஜோசியம் பிரதான தொழிலாகும்
இரவில் நடந்த எல்லாம்
காலமின்றி அரங்கேறும்
அதுதான் இயல்பு என
பழக்கம் உருவாகும்
பகல் கனவு பழமொழியை
வழிமொழிய வாய்ப்பின்றி போகும்
கண்காணிப்பில் உலகம் வரும்
கண்ணயரும் நேரம் எல்லாம்
க
வலிகள் ஆயிரம் தீர்க்க
வழிகள்தான் தேடணும்
மனதின் நெருடலை
நேர்பட பேசினால்
காயங்கள் தோன்றுமே என
தயக்கம் நம்மை தடுக்குமே
தயக்கங்கள் தடுப்பினும்
சரியென இருந்திடின்
அதே காயங்கள் திரும்புமே
மனதினை கிழிக்குமே
இதற்க்கு தீர்வுதான்
எதுவென தடுமாறும் மனதினை
கொஞ்சமாய் அழவிடு
கொஞ்சமாய் புலம்பிடு
கொஞ்சமாய் கதறிடு
கொஞ்சமாய் சிரித்திடு
பிறகு ஒரு பதில் வரும்
மனதினில் தெளிவுறும்
அப்போது முடிவெடு
அதில் தெளிவாய் இருந்திடு
நானும் தோழியும் பேசுகையில்
அவள்.....
எல்லாம் கவியாக்கி
என்னை அசர வைத்தாய்
என்னை பற்றி
ஒரு கவிதை சொல் என்றாள்
புன் சிரிப்பை உதிர்த்து விட்டு
சொல்கிறேன் என்றேன் சில நொடி
மௌனமாய் நின்றேன் --
அவள்.....
கவிதை வரவில்லையா
நான் ரசிக்கும் பொருளில்லையா
என்று கேட்டு சிரித்தாள்
கவிதைக்கு கவிதை சொல்ல
எப்படி நான் தொடங்க
என்று யோசித்தேன்
வார்த்தையை யாசித்தேன்
இயற்கை ஒரு கவிதை
நிலவும் ஒரு கவிதை
காதலும் ஒரு கவிதை
பெண்ணும் ஒரு கவிதை
மேற்சொன்னவை எல்லாம்
ஒவ்வொன்றும் ஒரு அழகு
என் தோழி நீ மட்டும்
எல்லாமே அழகு...
உன்னை பற்றி என்றால்
என் கவிதைகளின் தாயகம்
உன் நிழல் என நானும்
என் நிழல் என நீயும்
மனதில் எழும் ராகம்
சேர்ந்திட மனம் ஏங்கும்
தனிமையில் சில நேரம்
உன் முகம் வந்து போகும்
காதலில் பல நேரம்
தனிமையில் புலம்ப தோன்றும்
கண்களின் வார்த்தையை
மாற்றிட பார்க்கிறேன்
வாய்மொழி வந்திடுமா
உன் காதலை கேக்கிறேன்
உணர்வுகள் உண்டிடும்
பழக்கத்தை வாங்கினேன்
அதன்பேர் காதல்
என்றே மாற்றினேன்
என் நேசம் புரியுமா
என்று நான் கேட்கவே
பெண் பூவே உனக்கென
கவிதைகள் எழுதினேன்
கவிதையில் காதலை
சொல்வது பழமைதான்
இருந்தும் நான் சொல்கிறேன்
அனைத்துமே உண்மைதான்
உண்மைகள் கூடிய
காதல் என்னுடையது
என் கவிதைகள் அனைத்துமே
உனக்கென இருக்குது ......
படிக்கவும்