கலைப்ரியா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கலைப்ரியா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 175 |
புள்ளி | : 8 |
வித்தெடுத்து விதை விதைத்து,
விவசாயி, அவன் துயர் அறிந்து,
ஏக்கத்தோடு காத்திருந்தோம்
துளிர்விடும் நாள் எந்நாளோ?
"மண்ணிற் புதைந்து துவண்டாயோ?"
என்றெண்ணிச் சோர்ந்திருக்க,
துணிச்சலோடு எழுந்ததுபார்,
தாவரமே! இருவித்திலைத் தாவரமே!
தாவி வந்த புயலிலே,
தேங்கிய தண்ணீர் வயலிலே!
தேறிவிடுமோ? அழுகிவிடுமோ?
ஆயிரமாயிரம் கவலைகள் நொடிப்பொழுதினிலே,
உழைப்பொன்றையே முதலீடிட்ட நெஞ்சங்களிலே!
பார்த்துப் பார்த்துப் பாதுகாத்து,
பக்குவமாய் களையெடுத்து,
பூப்பூத்துக் காய் காய்த்ததும்,
பூரிப்படைந்தோம், மகிழ்ச்சி பொங்க!
புழு வேட்டைக்குச் சென்றிடுவோம்;
புழுக்கள் வேண்டாமென வேண்டிடுவோம்,
வயலிலே, எங்கள் வயலிலே!
பசிக்காக எடுப்பவன்
பயத்தில் ஒளிய,
பதுக்க நினைப்பவன்
பதவியில் திரிய,
பார்க்க மனமின்றி
கண் கட்டிய நிலையில் அவள்...
பருவம் அறியாமல் காதல் விதைத்தாய் ;
பக்குவம் அறியாமல் வாட விட்டேன் !
சின்னஞ்சிறு அகவையில் சிறைகொண்டாய்;
தவிக்கவிட்டுத் தவறிழைத்தேன் !
நிலா கண் கசக்கிய தேய்பிறை இரவில்,
நினைவுகளை ஏந்திய நீர் கசியும் விழிகள்
நீ வருவாயென வாயிலை நோக்கி.....
பன்னாட்டு நிறுவனங்களுக்குப்
படியளக்கும் தாமிரபரணி ராணியே!
பாமர விவசாயிகளையும் திரும்பிப்பாரம்மா
பாவம், என்ன செய்வாய் நீயும்
பிடியோ ஊழல்வாதிகளிடம் இருக்கையிலே....
ஒற்றை திண்ணையே ஒரு நாள் வீடு!
வெட்டிப் பேச்சும் வெடிக்கும் சிரிப்பும்,
மொக்கைப் படமும் மொட்ட வாத்தியார் கடையும்,
ஓராண்டு காத்திருப்போம் ஒரு நாளிற்காக !
அழியா உறவுகள், ஆழமான நினைவுகள்!
நினைக்க நினைக்க கலங்கும் கண்கள்
நினைவுகளைச் சுமையாக்கியதன் மாயம் என்னவோ?
என் கண்கள் ஏமாற்றம் கொள்கிறது !
என் இதயம் வலியால் துடிக்கிறது!
நீ இங்கு இல்லாததால் !
உன்னை தேடும் கண்களை என்னால்
தடுக்க இயலவில்லை
உனக்காக ஏங்கும் இதயத்தை
தடுத்து நிறுத்த முடியவில்லை
உன்னோடு இங்கு வாழ்ந்த நொடிகளை
நினைத்து நினைத்து
என் மனதை தேற்றி கொள்கிறேன் !!!!
தமிழன் ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும் ?
தமிழன் நாடாளும் நாள் விரைவில் வருமா
தமிழ் தான் எம்மொழி என மார் தட்டி சொல்லும் காலம் வருமா?
கதை , கருத்துக்கள், கவிதை எழுதவும்