சுகன்யா G - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுகன்யா G
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  13-Apr-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Apr-2018
பார்த்தவர்கள்:  159
புள்ளி:  7

என் படைப்புகள்
சுகன்யா G செய்திகள்
சுகன்யா G - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
சுகன்யா G - சுகன்யா G அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2018 10:11 am

உன்னோடு நான்
வாழ நினைக்கிறன்
ஆனால் நீயோ,
என் நெஞ்சை வாழை இலையாக
கிழித்து விட்டு செல்கிறாயே !!..... ஏன் ?

மேலும்

நன்றி சகோ... 24-Aug-2018 2:48 pm
மெய்யான அன்புக்கு கிடைக்கும் பரிசு கண்ணீர் துளிகளும் வலிகளும் தானே தோழி..... அருமை... 06-Aug-2018 12:54 pm
மெய்யான அன்புக்கு கிடைக்கும் பாசிச கண்ணீர் துளிகளும் வலிகளும் தானே தோழி..... அருமை... 06-Aug-2018 12:53 pm
நன்றி சகோ 06-Aug-2018 10:24 am
சுகன்யா G - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2018 10:11 am

உன்னோடு நான்
வாழ நினைக்கிறன்
ஆனால் நீயோ,
என் நெஞ்சை வாழை இலையாக
கிழித்து விட்டு செல்கிறாயே !!..... ஏன் ?

மேலும்

நன்றி சகோ... 24-Aug-2018 2:48 pm
மெய்யான அன்புக்கு கிடைக்கும் பரிசு கண்ணீர் துளிகளும் வலிகளும் தானே தோழி..... அருமை... 06-Aug-2018 12:54 pm
மெய்யான அன்புக்கு கிடைக்கும் பாசிச கண்ணீர் துளிகளும் வலிகளும் தானே தோழி..... அருமை... 06-Aug-2018 12:53 pm
நன்றி சகோ 06-Aug-2018 10:24 am
சுகன்யா G - Elamathi அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2018 1:08 pm

Ovoru   Nodi  Pozhuthilum!!!!!!!!!!!!!


En kannin imaigal  Kooda...........!!!!!!!!!!!

Nee Parkkum Dhisaiyil than irukirathu.!!!!!!!!!!!
En kathalane.........kalvane......
Siru koottukul  sikki thavitha 
Paravayayai  thavikuthada en manathu.............
Oru muraiyenum Kathal seivaya.................Ennai..........
Un karam pidipaya...............Ennai..............

Un moochu Kattril .ennai puthaithu vaipaya.....................yekkathil nan............

மேலும்

நன்றி சகோ 07-Aug-2018 1:36 pm
அழகிய வரிகள்.. காதல் வார்த்தைகளின் இனிமை 02-Aug-2018 4:46 pm
Nanri sagothari............tamilil eluthugirean 30-Jul-2018 12:49 pm
அருமை, அழகான வரிகள் சகோதரி தமிழில் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் ,...... 28-Jul-2018 5:23 pm
சுகன்யா G - Sivasankari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2018 9:11 pm

என் தோழியே ,

நான்
உன் மேல் வைத்த அன்பு
உனக்கு புரிந்தால் மட்டும்
போதும், ...

நீ என் மேல்
அதை திருப்பி காட்ட வேண்டிய
அவசியம் இல்லை..

ஏனெனில்,

என் அன்பு விற்பனைக்கு அல்ல....

மேலும்

நன்றி சகோதரி..... 28-Jul-2018 6:12 pm
அருமை சகோதரி ......... 28-Jul-2018 5:04 pm
அன்பைக் கூட இங்கே பலர் குப்பை போல தூக்கி வீசி விட்டுப் போகிறார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jul-2018 11:57 pm
சுகன்யா G - Roshni Abi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2018 9:42 am

2000 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் ஊரும், உறவும் ஒன்று கூடி நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆடம்பரமாக நடந்து முடிந்தது. மணப்பெண் கங்காவுக்கும், மணமகன் ராமுக்கும் புது வாழ்க்கை ஆரம்பமானது.

வீட்டில் இளையவன் ராம். ஒரு அக்காவும், அண்ணாவும் வெளியூரில் திருமணமாகி குடும்பத்தாேடு இருந்தார்கள். ராமுக்கு திருமணம் முடிந்ததும் அம்மாவும், அப்பாவும் அக்காவுடன் வெளியூருக்கு சென்று விட்டனர். கங்காவை தனது வீட்டிற்கே கூட்டி வந்தான் ராம். இருவரும் அரசாங்க உத்தியாேகம். காலையில் புறப்பட்டால் பாெழுதுசாய வீடு வந்து மிகுதி வேலைகளை முடித்து களைப்பாேடு தூங்கி எழ காலை புலர்ந்திடும். வாரம் ஒரு நாள் விடுமுறை நாளென்றாலும் ஏதா

மேலும்

நன்றி நண்பா 28-Jun-2018 4:42 pm
தலைலப்பை படித்ததும் எதோ முக்கோண காதல் கதை என்று நினைத்தேன்; ஆனால் காதலைலயும் கல்யாணத்தின் கடமையையும் சொல்லி கதையை சிறப்பாக்கிவிட்டிர். நல்ல கதை. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் அபி. 28-Jun-2018 4:15 pm
Thank you 27-Jun-2018 4:33 pm
அருமை........ 27-Jun-2018 12:17 pm
சுகன்யா G - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2018 3:56 pm

என் ஒவ்வொரு
இதய துடிப்பும்
இனிய ஓசையாகிறது
உன் ஞாபகத்தில்.........

மேலும்

சுகன்யா G - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2018 12:12 pm

விண்ணில் இருப்பதெல்லாம்
விண்மீனும் அல்ல
இரவில் மின்னுவதெல்லாம்
மின்மினியும் அல்ல
எனக்கு தெரிந்த
விண்மீனும், மின்மினியும்
உன் சிரிப்பு தான்....

மேலும்

மழலையின் சிரிப்பு அருகிலஅருகிலேயே இருக்கும் விண்மீன்கள்....நன்று 26-May-2018 1:26 pm
நன்றி சகோதரரே 26-May-2018 12:03 pm
அருமையான வரிகள் சகோதரி 25-May-2018 9:30 pm
Nanru 25-May-2018 2:39 pm
சுகன்யா G - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2018 7:13 am

காவிரி தீர்ப்பு முடிவா ...தொடக்கமா ?
------------------------------------------------------------

பல ஆண்டுகளாக நடந்து வந்த உரிமைப்போர் சட்டத்தின் மூலமாக வழக்குகளின் வழியாக அது சரியோ ,தவறோ அல்லது குறை நிறை உள்ளதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டது .இந்த விவகாரத்தில் இனியும் ஒருவரை ஒருவர் 
தாக்கிக்கொள்ளவோ ,அவதூறுகள் பேசிடவோ ,அறவழிப் போராட்டங்கள் நடத்தவோ நிச்சயம் நடைபெறாது என்றே நினைக்கிறேன் .காலம் ஒன்றே பதில் கூற முடியும் .மேலும் இதுவே முடிவின் முடிவா அல்லது மாற்றத்தின் தொடக்கமா என்றும் தெரியாது .அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் .

காரணம் இந்த ஒரு பிரச்சினையோடு நமது வாழ்க்கை ,ஏன் தமிழ்நாட்டின் நிலையே மாற்றம் அடையும் என்று கூறுவதற்கில்லை .முற்றுப்பெறாத பல்வேறு பிரச்சினைகளும் தெளிவு கிடைக்காத பல குழப்பங்களும் இன்னும் இருக்கவே 
செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை தொலைக்காட்சிகளில் விவாதங்களில் வேண்டுமானால் இனி இந்த தலைப்பு வராமல் இருக்கலாம் .மேலும் நமது மக்கள் எதையும் எளிதில் மறந்துவிட கூடியவர்கள் .மாற்றுக கருத்து இல்லை .இந்த தீர்ப்பால் நாளையே காவிரி நீர் விரைந்து வந்து நம் எல்லையைத் தொட்டு பாய்ந்து ஓடி விவசாயிகளை விவசாயத்தை நாளை மறுநாளே வாழவைக்கும் என்றும் கூறமுடியாது. ஆனாலும் இந்த செய்தி ஒரு ஆறுதல் அளிக்கும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் .

இனி அடுத்தகட்டப் போர் துவங்கும் கட்சிகளின் இடையே ....இதை யார் கொண்டு வந்தது யாரால் பெற்றோம் என்று அவரவர் தன்னைத்தானே காரணமும் கூறுவார் .அது வர உள்ள தேர்தலுக்காக பிரச்சார உத்தியே தவிர வேறல்ல .வருக வருக விரைந்து வருக காவிரிப் பெண்ணே !

விவசாயிகளின் முகம் மலர்ந்தால்தான் வாழ்கின்ற அனைவரின் அகமும் குளிரும் வயிறும் நிறையும் பஞ்சமும் வஞ்சமும் வாழ வழியின்றி தமிழ்நாட்டைவிட்டு விலகி ஓடும் .கடந்ததும் நடந்ததும் பாடமே தமிழக மக்களுக்கு . இனி யார் தேவையில்லை என்பதையும் யார் தேவை என்பதையும் தீர்மானிப்பார்கள் என்று நம்புகிறேன் .

அதுமட்டுமல்ல ,இனி தமிழ்நாட்டை யார் ஆளப்போகிறார்கள் என்பதைவிட நாம் இனி அடுத்து யாரின் கீழ் வாழப்போகிறோம் என்பது சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய ஒன்றாகும் .நம்மால் யார் என்பதைவிட நமக்காக யார் என்பதை சிந்தியுங்கள் நல்ல முடிவு எடுங்கள் .

வரும்தலைமுறை வாழ வேண்டும் குறைகள் ஏதுமின்றி .

பழனி குமார்  

மேலும்

மிக்க நன்றி வேலாயுதம் அவர்களுக்கு .உண்மைதான் ஐயா கலாம் கண்ட கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் . 31-May-2018 6:56 am
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் :-தங்கள் போற்றுதற்குரிய படைப்பு தேர்ந்தெடுத்த எழுத்து தள குழுவினருக்கும் பாராட்டுக்கள் காவேரி அன்னை பொங்கி எழுந்து வர தமிழ் அன்னை கங்கை அன்னை அருளை வேண்டுகிறேன் அன்றும் இன்றும் தமிழகம் கண்ட கனவு நிறைவேற பாடுபடுவோம் அரசியல் திருவிளையாடல்களை கண்டு மனம் வருந்துகிறேன் கலாம் கண்ட நதி நீர் இணைப்பே சிறந்த தீர்வு என நம்புகிறேன் 31-May-2018 2:27 am
நம் அரசியல் மாற்றங்களை சொன்னேன் பழனிக்குமார் தவறாக எண்ணிவிடாதீர்கள் வாழ்த்துக்கள் 20-May-2018 2:02 pm
நான் அப்படி என்ன மாற்றி செய்தேன் .சொல்லிலும் செயலிலும் ?எந்த தவறாகினும் கூறுங்கள் பரவாயில்லை திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன் சகோ 20-May-2018 1:58 pm
சுகன்யா G - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2018 6:53 pm

ஒருபுறம் முதலமைச்சர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு என்கிறார். ஆனால் அதையே காரணம் காட்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி யை பணிமாற்றம் செய்திருக்கிறார்.ஏன் இந்த இரட்டை வேடம் ?


யாரை ஏமாற்ற இந்த துரோக செயல் ?
யாரை திருப்திப்படுத்த இந்த துப்பாக்கிச் சூடு ?
மக்கள் உயிர் அவ்வளவு மலிவாகி விட்டதா ?
மக்களை காக்க வேண்டிய அரசாங்கம் இந்த காரியங்களை செய்ய துணிந்தது ஏன் ?

மறுபடியும் நீங்கள் மக்களை சந்திக்க வேண்டும் ஓட்டுக்களை பெற்றிட என்பதை மறந்து விட்டீர்களா ?உங்களை நம்பி வாக்களித்த மக்கள் எப்படி நம்புவார்கள் என்பதை ஒரு நொடி சிந்திக்க வேண்டாமா ?

இதை ஆளுங்கட்சியை சார்ந்த நண்பர்களும் யோசிக்க வேண்டும்.தமிழ்நாடு பாதாளத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
தமிழ்நாட்டில் தமிழர்களே இரண்டாந்தர குடிமக்களாக மாறி வருகிறோம் என்பதை நினைத்து பார்க்கும்போது இதயம் வலிக்கிறது. 
நமது அடுத்த தலைமுறையை நினைத்து பாருங்கள். 
இதோடு நமது இனம் , மொழி, தலைமுறை அழிவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.ஈழத்தில் தமிழர்க்கு ஏற்பட்டுள்ள நிலையை இன்று நீங்கள் உருவாக்கி வருகிறீர்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 

நமது உரிமைகளை பறிப்பதில் மத்திய அரசு குறியாக இருக்கிறார்கள். அதற்கு நீங்களும் உங்கள் அரசும் உதவியாக இருப்பது வரலாற்று பிழையாகி இருக்கிறது. இதுதான் உண்மை.மக்களும் சிந்திக்க வேண்டும். மாற்றம் வேண்டும் நாம் வாழ. நமது வருங்கால சந்ததியினர் வாழ்ந்திட. 

தமிழ்நாட்டில் தமிழர்களே இல்லாமல் இருக்கும் நிலை வராமல் தடுக்க.உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தாய்வீடு , சொந்த மண் , இரத்த உறவு, நம்பிக்கை ஒளி தமிழ்நாடு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி மக்களுக்காக தான் என்பதை மறந்து, மக்களுக்கு எதிராக எந்த ஒரு ஆட்சியும் அரசாங்கமும் நிலைத்து இருக்க முடியாது என்பதை உணர்ந்திட வேண்டும் ஆட்சியாளர்கள். 

மக்கள் விரோத அரசும் சட்டங்களும் ஆபத்தில் முடியும் அது யாராக இருந்தாலும் என்பது நடைமுறை விதி.


பழனி குமார்  

மேலும்

மிக்க நன்றி வேலாயுதம் அவர்களுக்கு .உங்கள் கருத்தையும் ஏற்கிறேன் 31-May-2018 6:54 am
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் :-தங்கள் போற்றுதற்குரிய படைப்பு தேர்ந்தெடுத்த எழுத்து தள குழுவினருக்கும் பாராட்டுக்கள் தமிழ் அன்னை இரத்தக் கண்ணீர் சிந்துகிறாள் ! அரசியல் அறிஞர்கள் நம்மை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டுவோம் 31-May-2018 2:31 am
மேலும்...
கருத்துகள்

மேலே