சுரேஷ் ஸ்ரீனிவாசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுரேஷ் ஸ்ரீனிவாசன்
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  20-Mar-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-May-2013
பார்த்தவர்கள்:  182
புள்ளி:  110

என் படைப்புகள்
சுரேஷ் ஸ்ரீனிவாசன் செய்திகள்
சுரேஷ் ஸ்ரீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2018 11:45 am

படித்தால் மட்டும் போதுமா
பாதியில் விட்டால் நட்டமா
அடிபட அடிபட கற்களும்
அழகிய வடிவம் பெற்றிடும்
துடிப்பாய் உழைத்து வாழ்ந்திட
துன்பம் நம்மை நாடுமா
மடிவோம் நாமும் நிச்சயம்
மாண்புடன் வாழ்வோம் இலட்சியம்

சுரேஷ் ஸ்ரீனிவாசன்

மேலும்

சுரேஷ் ஸ்ரீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 12:21 pm

பறை சாற்றவா பக்தி
கரையேற்றவே பக்தி
கறை பூசவா நெற்றி
ஒளியேற்றவே நெற்றி

சுரேஷ் ஸ்ரீனிவாசன்

மேலும்

நெஞ்சில் எண்ணம் தூய்மையாக உள்ளவரை நாம் வாழும் வாழ்க்கை நெறியானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Mar-2018 7:34 pm
சுரேஷ் ஸ்ரீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2018 12:44 am

ஆயுதமென்றும் அழிவினைத் தருமே
    அதனால் அதற்கு முற்றுப்புள்ளி
பாயும் கணைகள் யாவும் குருடு
     அதனால் அதற்கு முற்றுப்புள்ளி
சாயும் கோபுரம் வெடியது வெடிக்க
      அதனால் வெடிக்கு முற்றுப்புள்ளி
நோயும் வந்திடும் உறவினைக் கொல்லும்
    போருக்கு வேண்டும் முற்றுப்புள்ளி

நம்மினம் நாமே அழிப்பது முறையோ
   வெறுப்புக்கு வேண்டும் முற்றுப்புள்ளி
தம்நலம் மட்டும் பேணுதல் அழகோ
    சுயநலம் அதற்கும் முற்றுப்புள்ளி
எம்மதம் எனினும் சம்மதம் என்போம்
    பிரிவினை அதற்கு முற்றுப்புள்ளி
உம்மால் முடியும் முயன்றிட வேண்டும்
    தயக்கம் அதற்கு முற்றுப்புள்ளி

உழைத்தால் உயர்வு உண்மை அறிவோம்
  சோம்பல் அதற

மேலும்

சுரேஷ் ஸ்ரீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2018 6:19 am

மாற்றம் கொடு ஆண்டவா
மனமே தடை அல்லவா
ஆற்றல் கொடு ஆண்டவா
அகிலம் உனதல்லவா
உற்ற துணை அல்லவா
ஊக்கம் கொடு ஆண்டவா
ஏற்றம் கொடு ஆண்டவா
எதிலும் உள்ளாயல்லவா

சுரேஷ் ஸ்ரீனிவாசன்

மேலும்

மாற்றத்தை காத்திருக்கும் பாதையில் ஒவ்வொரு சுவாசங்களும் போராட்டத்தைக் கடந்து ஏதோ ஒரு வேதனையை உணர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Mar-2018 6:43 pm
சுரேஷ் ஸ்ரீனிவாசன் - சுரேஷ் ஸ்ரீனிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2018 1:48 pm

தடம் மீது தடையாக
மலையொன்று நின்றாலும்
நில்லாது நிமிடங்கள்
விரைவாகப் விரைந்தாலும்
கலங்காத உள்ளங்கள்
கரையேறி மலையேறும்

வான் என்றும் வீழாது
நிலம் என்றும் நீங்காது
துன்பங்கள் வந்தாலும்
துயரங்கள் தொடராது
அயராது நம் பாதை
செல்வோம் நாமே

- சுரேஷ் ஸ்ரீனிவாசன்

மேலும்

இயைபு அமைந்து வந்துள்ளதால் பாடலாகிவிட்டது 16-Mar-2018 4:40 pm
இது பாடலா அல்லது கவிதையா? 16-Mar-2018 4:07 pm
கோபி சேகுவேரா அளித்த படைப்பில் (public) mathiazhagan01 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Feb-2015 8:35 pm

எரிமலையின் சீற்றமாய் எழுகிறேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எங்கிருந்து வீழ்தனோ
அங்கிருந்தே எழுகிறேன்
எரிமலையின் சீற்றமாய்
எழுகிறேன்...

சாதி மத இனப்
பிரிவினை ஒழித்து
சமத்துவ சமுகம்
அமையவே எழுகிறேன்...

வன்முறை முடக்கி
வான்வரை அன்பினால்
நிறைத்து நாம் வாழவே
எழுகிறேன்...

நாடக அரசியல்வாதிகளின்
வேசம் களைக்கவே
புரட்சித் தீ குடித்து
எழுகிறேன்...

இச்சை வெறி பிடித்து
பெண்களை சீரழித்த
நாய்களின் பிறப்புறுப்பை
வெட்டவே எழுகிறேன்...

கட்டிட காடுகளுக்கிடையே
ஒரு பச்சை காடுகளும்
வேண்டுமென்று பசுமை
வளர்க்கவே எழுகிறேன்...

கருப்பு பணம் ஒழித்து
அதில் ஏழைக்கு பசியாற்றும்
வெள்ளை மனம்
வளரவே எழுகிறேன்..

செந்தமிழ

மேலும்

எழுகிறேன் - ஒறுமை வேண்டாம். எழுவோம் - ஒற்றுமையாய்! 28-May-2015 11:47 pm
நன்றிகள் தோழரே.. 22-Feb-2015 12:07 am
எழுச்சிமிகு கவிதை தோழரே ! தொடருங்கள் ! 21-Feb-2015 7:38 pm
நன்றிகள் தோழரே.. 19-Feb-2015 11:20 pm
சுரேஷ் ஸ்ரீனிவாசன் - சுரேஷ் ஸ்ரீனிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2015 3:10 am

“டாடி இன்னிக்கு சத்யா மிஸ் எனக்கு லன்ச் ஊட்டி விட்டாங்க” என்றாள் மாலு குட்டி.
“யாரையும் தொந்தரவு செய்ய கூடாது குட்டி.”
‘அவங்களே தான் வந்து ஊட்டி விட்டாங்க . நான் கேக்கவே இல்ல டாடி.” மாலு சொன்ன சத்யா மிஸ் மோகனுக்கு தெரியும்.
மோகன் ஒரு ஹார்ட்வேர் கடை முதலாளி. ஏழு எட்டு பேர் வேலை செய்யும் பெரிய கடை அது. மோகன் தினமும் காலையில் மாலினியை பள்ளியில் விட்டு விட்டு வந்து கடை திறப்பது வழக்கம். மாலையில் கடை வேலையாட்கள் எவராவது மாலுவை அழைத்து வருவார்கள்.
அன்று செப்டம்பர் 7 வழக்கம் போல கடைக்கு லீவு விட்டிருந்தான். மாலுவை அழைத்து வர மோகன் தன் புது Honda காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அன்று கணக்கு

மேலும்

மிக்க நன்றி 18-Feb-2015 9:02 pm
மிக்க நன்றி 18-Feb-2015 9:02 pm
மிக்க நன்றி 18-Feb-2015 9:02 pm
மிக்க நன்றி 18-Feb-2015 9:01 pm
சுரேஷ் ஸ்ரீனிவாசன் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2015 2:33 am

புலரும் பொழுதில் பனியில் நனைத்த
மலரென்பார்.மாதுன்னை இன்னும் சிலரோ
நிலவென்பார். நீயோ நிலம்பார்த்து நிற்க
பலதும் நினைப்பார் பசித்து.

கொடியாய் படரும் உனக்கோர் மரமாய்
மடியும் வரையில் இருக்கத் துடியாய்த்
துடிப்போர் துடிப்பின் மடிமேல் சரிந்தால்
விடிவு உனக்கோர் இருட்டு.

திலகம் ஜொலிக்கும் திடலாம் நுதலில்
நிலவாய் மலரும் நினைவோ டுலவும்
உலகாய் வரவே உயிராய் நடிப்போர்
சலனம் அறிந்து விலகு.

மேலும்

இனிய வெண்பாக்கள் வாழ்த்துக்கள் ----அன்புடன்,கவின் சாரலன் 27-Feb-2015 10:07 pm
படைப்பு சிறப்பு ஐயா! 27-Feb-2015 9:22 pm
நன்றிகள் வெங்கடேஷ் 22-Feb-2015 9:45 am
நன்றிகள் ப்ரியா 22-Feb-2015 9:45 am

“பொங்கல் கவிதைப்போட்டி 2015”

சாதி ஒழி! மதம் அழி! சாதி
---------------------------------------

சாதிகள் இல்லாச் சமுதாயம்
சாத்தியம் என்று தோன்றவில்லை
மதங்கள் மறையும் காலம் ஒன்று
மலரும் என்று நினைக்கவில்லை

பள்ளம் மேடும் உள்ளது தான்
பாரினில் நாடென்று காண்கின்றோம்
நிலமது சமநிலை என்றிருந்தால்
நீர்நிலை அதனின் நிலையென்ன

உயரத்தில் வாழும் நல்லவனை
தாழ்ந்தவன் உயர்த்தி பேசட்டுமே
தாழ்ந்து கிடக்கும் மகன் அவனை
உயர்ந்தவன் தூக்கி நிறுத்தட்டுமே

சாதி என்பது ஒரு குறியே
மதம் என்பதும் ஒரு பெயரே
உடலில் ரத்தம் ஒரு நிறமே
உயிரும் வலியும் ஒன்று தானே

சாதியும் மதமும் இருக்கட்டும்
சார்ந்து வா

மேலும்

நல்ல படைப்பு தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 11-Jan-2015 11:06 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பகவதி லட்சுமி

பகவதி லட்சுமி

தமிழ்நாடு
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (21)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
Ram

Ram

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (21)

Ram

Ram

சென்னை
சத்யா

சத்யா

panrutti
மேலே