கனகசபாபதி செல்வநேசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கனகசபாபதி செல்வநேசன்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  18-Jun-1962
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-May-2013
பார்த்தவர்கள்:  723
புள்ளி:  219

என்னைப் பற்றி...

இலக்கண இலக்கியம் தெரிந்தவனில்லை. எனக்குத் தெரிந்ததையும்,உங்களிடமிருந்து கற்றதையும் எனக்குத் தெரிந்த வடிவில் பதிவு செய்கிறேன்.

என் படைப்புகள்
கனகசபாபதி செல்வநேசன் செய்திகள்
கனகசபாபதி செல்வநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2017 4:50 am

பேசுவதற்குத் துணை
யாரும் இல்லையெனில்
தமிழோடு பேசு
தனிமையும் அர்த்தப்படும்.

மேலும்

கனகசபாபதி செல்வநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2017 11:56 am

குழந்தைகளை
அனுப்பி வைக்கிறோம்
இயந்திரங்களாய்
திருப்பித் தருகிறது
கல்விச் சாலை.
_/ _/ _/

மதக் குப்பைகளை
கிளறி எறிந்தேன்
மனிதன் தெரிந்தான்,
மனிதக் குப்பைகளை
விலக்கிப் பார்த்தேன்
உலகத்தை காணவில்லை.
_/ _/ _/

சீண்டிக் கொண்டேயிருந்தால்
வளர்த்த கடாவும் முட்ட வரும்.
_/ _/ _/

சிந்தையில் தெளிவும் இல்லை
சீரான எண்ணமும் இல்லை
சித்தமெல்லாம் பித்தங் கொண்டு
சிவன் கரம் பற்றுகிறார் பராபரமே.
_/ _/ _/

உறவுகளில் பிளவு
மவுனமாய் வேடிக்கை,
ஊர் கூடும் வேளையில்
பக்கம் சார்ந்து
நியாயம் பேசும் விளம்பரதாரர்கள்,
வேடிக்கை மனிதரல்ல - இவர்கள்
பெற்றோல் ஊற்றும் விஷமிகள். .
_/ _

மேலும்

கனகசபாபதி செல்வநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2017 11:49 am

ஆழமாய் ஊடுருவும் படையணி
கண்கள்.

மேலும்

கனகசபாபதி செல்வநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2017 11:44 am

இளகியது பாறை
நிழல் கொடுத்தது
மரம்.
_/
மரம் உலகின் வரம்
பாறைக்கு புரிந்தது
மனிதர்க்கு.....?
_/
வீரியமுள்ள விதைக்கு
அனைத்தும் விளை நிலமே.
_/
போராளிகள் வேர்கள்
இலைகள் அரசியல்வாதிகள்.
_/
கல்லான இதயத்தில்
காதல் (க)விதை
விருட்சம்.
_/
வந்தாரை வாழவைத்து
தன் இருப்பை இழக்கும்
தமிழனாய் பாறை.
_/_/ _/

மேலும்

கனகசபாபதி செல்வநேசன் - கனகசபாபதி செல்வநேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2015 10:10 am

இடது புஜத்தில்
கவுரி காப்பு
எச்சரிக்கிறது.

வலது புஜத்தில்
வரலட்சுமி காப்பு
எதற்கும்
தயார் என்கிறது.

மணிக்கட்டில்
ஏகப்பட்ட
தெய்வங்களின்
பாது காப்பு .

பெண்ணே......

இத்தனை
காவல் இருந்தும்
அலட்சியமாய் உந்தன்
சுயமரியாதையுடன்
அடிமை கொண்டது
ஆணாதிக்க காப்பு
தாலி.
@

மேலும்

அபிபாரதி உங்கள் மகிழ்வில் இணைந்து கொண்டேன், வரவிற்கு நன்றி. 14-Sep-2015 3:23 pm
உங்கள் வாழ்த்துக்களுக்கும் வரவிற்கும் நன்றி ஆசை அஜித். 14-Sep-2015 3:21 pm
நீங்க வரத்சனா வாங்கிட்டு தான அத கட்டிருபீங்க 12-Sep-2015 11:08 am
உயரே எழவேண்டிய எழுச்சி வரிகள் !! வாழ்த்துக்கள் !! 12-Sep-2015 11:06 am
கவியமுதன் அளித்த படைப்பில் (public) Arulmathi மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) kaviyamudhan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jun-2015 12:22 pm

நம்
வீட்டுப் பெண்கள்
இங்கே
இன்புற்றிருக்க ..

காஸ்மீரி
பெண்ணொருத்தி
பாலியல் வன்முறைக்கு
பலியானால் நமக்கென்ன ??

* * *

வெளிநாட்டிற்கு
கோடிகளில் ஏற்றுமதிக்காய்
திருட்டாய் நடக்கும்
சந்தனமரக் கடத்தலுக்கு ..

கூலிக்கு
அறுக்கச் சென்ற
தமிழர்களின் உயிர்கள்
சிறிது அறுபட்டால்
அவனுக்கென்ன ??

* * *

கல்வி கற்பிக்கவே
ஆசிரியர்கள்
கல்வித் தொண்டாற்றவே
கல்விக் கூடங்கள் ..

கற்றுக் கொடுப்பவன்
கல்விக் கருவறையில்
மாணவியைத்
தொட்டுப் பார்த்தால்
பிழையா என்ன ??

* * *

மக்களுக்கு
தொண்டாற்றவே
மத்திய அரசு
மாநில அரசு ..

மக்களின்
தாகம் தணிக்கும்

மேலும்

இன்னும் ஆழ்ந்த சிந்தனை தேவை தோழமையே... 05-Aug-2015 11:43 pm
தங்கள் புரிதலான பின்னூட்டத்திற்கு நன்றிகள் தோழரே .. வரவில் மகிழ்ச்சி .. 04-Aug-2015 7:14 pm
"இத்தனை தகுதிகளும் தேவை வல்லரசுக்கு நல்லரசுக்கு அல்ல . மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி . உள்ளக்குமுறலை வார்த்தையில் வடித்தீர் . தாம் நேரடியாக எதை தடுத்தீர்???... புண்பட அல்ல அதே ஆதங்கதொடே .... "- தொடரட்டும் தமது தொண்டு தங்கள் வரிகண்டு நல் புலவன் கண்டதாய் மகிழ்ச்சி அடைந்தேன் . புலவனால் ஆதங்கப்படமட்டுமே இயலும் . 04-Aug-2015 2:49 pm
கேள்விகள் உறங்கும்வரை பதில்கள் விழிப்பதில்லை. எல்லோருமே எண்ண வேண்டிய கேள்விகள் இவை. அருமை . . . . . . . . . . கவியமுதன் 24-Jul-2015 12:52 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Jul-2015 11:34 am

ஈனப்பிறப்பே .
உன் அன்னையின் அங்கங்களை
ரசித்திடு
அவளும் அழகாய் தான் இருப்பாள்
உன் அந்தரங்கத்திற்கு .

அருவருப்பான வார்த்தையை
அவன் முன் வசைபாடிவிட்டேன் .
இப்படி அசிங்கமானவளா நான்
சற்று
தடுமாறி விட்டேன் .

தரம்கெட்டவனுக்கு
தங்கை என்ன
தமக்கை என்ன
பார்வையில் அனைவரும்
தாசிகள் தான்
இதில்
தவறேன் நான் இழைத்தேன்
தாயை இழுத்து .?

பெண்மையின் பெருமையை
மறந்து
பொறுமை இழந்தேனா .?
புனிதமான தாய்மையை
பொய்யாய் இகழ்ந்தேனா .?

பெற்றவள்
ஈன்ற பொழுதினில்
கண்ணே ..கனியமுதே என்றல்லவா
அணைத்து இருப்பாள்
காடையனே களவானியே என்றா
வளர்த்து இருப்பாள் .

மன்னித்து விடுங்கள் அன

மேலும்

ஈனப்பிறவிகளிடம் வார்த்தைகளில் பயனில்லை! அறுத்தெறிவோம், வெறிபிடித்தலையும் அவன் அங்கங்களை! 30-Aug-2015 11:39 am
அசந்துட்டேன்.. என்ன ஒரு சிந்தனை..விரும்கிறேன் வீர தமிழச்சியே.. 29-Aug-2015 4:00 pm
வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி முடிக்க போவதில்லை.... வார்த்தைகளில் வந்ததை வாழ்க்கைக்குள் வர வைப்போம்... வாழ்த்துக்கள் தோழியே.... 27-Aug-2015 10:50 am
நன்றி நன்றி 25-Aug-2015 11:52 am
கனகசபாபதி செல்வநேசன் - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2015 9:18 am

நீ
படைத்தவனோ
இல்லையோ..
நாங்கள் உன்னை
படைத்தோம்..
உன் படைப்பில்..
ஒரே ஒரு
மனித இனம்..
எங்கள்
படைப்பில்
பல
கடவுள்கள்!
என்றபோதும்
நீயும் நானும் ஒன்று!
..
படைப்பவர்கள் என்பதால்!

மேலும்

நன்றி நண்பரே 06-Jan-2015 5:19 pm
சாட்டை. பல கடவுள்கள் வெறி கொண்ட மதங்களுடன். 06-Jan-2015 12:44 pm
மிக்க நன்றி நண்பரே 05-Jan-2015 4:37 pm
மிக்க நன்றி ஐயா! 05-Jan-2015 4:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (32)

சிவா

சிவா

Malaysia
Shyamala

Shyamala

Pudukkottai
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்

இவரை பின்தொடர்பவர்கள் (32)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அகரம் அமுதன்

அகரம் அமுதன்

அகரம் சீகூர், பெரம்பலூர் (
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே