விஜயகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜயகுமார்
இடம்:  Erode, Tamil Nadu, India
பிறந்த தேதி :  13-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Nov-2014
பார்த்தவர்கள்:  126
புள்ளி:  13

என்னைப் பற்றி...

மாணவன்

என் படைப்புகள்
விஜயகுமார் செய்திகள்
விஜயகுமார் - மருதுபாண்டியன்க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2017 10:00 pm

அந்த ஒரு நொடி. . . . .

பிப்ரவரி 14. ......

அவள் முகம் காண
அவள் வீடு நோக்கி
தலை கீழாய் தலை வைத்தான் கதிரவன். . . .
மாலை பொழுதென்று
அவள் வருவாளா ??
ஒரு வேளை கண்ணிமைத்தால் களவாடி கொள்ளலாமே யென்ற
ஆசை சுமந்து .. . .
கதிரவனும் காலம் விற்று காத்திருக்க . . .

எதை வாங்க நான் சென்றேனோ . .
அதை நான் மறந்து ...
அவனோடு
கை கோர்த்து நானும் காத்திருந்தேன்
அந்த புளியங்காய் பூத்து குலுங்கும் பேருந்து நிறுத்தத்தில் . . .
பக்கத்து இருக்கை
பயணி போல். . . .

கதிரவன் கள்வன் மட்டுமா
வஞ்சகனும் கூட. . .
எனக்கு அப்போதுக்கூட
ஐயம் ஏற்படவில்லை
அன்றைய நாளின்
மிக வேக
மாலைப்பொழுதை

மேலும்

நன்றி தோழா!! 07-Feb-2017 9:09 pm
மாலைப் பொழுதின் மயக்கத்திலே !!! தோழா அழகான காவியம் !!! 07-Feb-2017 3:38 pm
விஜயகுமார் - அன்புடன் மித்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2017 2:32 am

உலகில் எந்தவொரு மனிதனாலும் விலை கொடுத்து வாங்கி தப்பித்துக் கொள்ள முடியாத, மாற்ற முடியாத உண்மை எது?

மேலும்

இயற்கை (விலை கொடுத்து வாங்கவும் முடியாது ,தப்பிக்கவும் முடியாது,மாற்றவும் முடியாது ) 28-Jan-2017 7:41 pm
உடல் தளர்ந்தும் உயிர் உணர்த்தும் கலவி இல்லா காதல் தான் உண்மை .... 27-Jan-2017 3:40 pm
விஜயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2017 3:12 pm

தளரா முருக்கம்
வீழா வழக்கம்
வீரம் விதைத்து
வெற்றி பறித்தோம்
ஏறு தழுவியே
பெண் பிடித்தோம்
பிடறி பிடித்து
தொங்கிப் பார்க்கிறாய்
கொடி பிடிக்கும்
தமிழன் யாம்
ஓர் நாள்
முடி பிடித்து
தலை அறுப்போம் ...

மேலும்

விஜயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2017 3:02 pm

திகட்டா பார்வை சுகம்
திகழும் நேசம் சுகம்
வாழ்த்தும் வார்த்தை சுகம்
வழக்கில் மௌனம் சுகம்
மூழ்கா வானம் சுகம்
முழங்கும் மோகம் சுகம்
தீயின் வேட்கை சுகம்
தொடரும் வழிகள் சுகம்
உதிரா பூக்கள் சுகம்
உலகின் வாசம் சுகம்
விலகா சோகங்களிலே
உலவும் வாழ்க்கையிலே
என்றும் என்றென்றும்
எங்கும் எங்கெங்கும்
தாயின் தழுவல் சுகம் ....

மேலும்

விஜயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2016 12:22 pm

தூரல் ஓய்ந்து
துளிர் மிளிரும் நேரம்
மூன்றாம் இருக்கையில்
நான் சன்னலோரம் ...
பேருந்தும் ரதமாக
அவளைச் சுமந்து இதமாக
எதிரெதிர் பேருந்து
சில்லென்ற மழைக்காற்று
மழைச் சாரல் உடல் தழுவ
இதழ் கடித்து முகம் சுளித்தாள்
மாய்ந்து போனேன் அவளில்...
அவளழகில் மழையழகை மறந்தேன்
விழி இணைத்தாள் என்னோடு
ஒரு நொடியை விட குறைவு தான்
ஆகினும் ...
சந்திப்பே பிரிவாய் அமையும்
இந்த உறவும் கூட
இன்றுவரை
அழகானது தான்....

மேலும்

" சந்திப்பே பிரிவாய் அமையும் உறவு!" புதுமையான கற்பனை! வாழ்த்துக்கள்! 24-Jul-2016 11:05 pm
நிகழ்வுகள் என்பது அழகானவை ஆனால் அதில் பலவை காயங்கள் தருபவை 22-Jul-2016 7:41 am
மிக அருமையான கவிதை தோழா.. தங்கள் கவியழகில் நானும் அவளழகை காண மறந்தேன்.. என் மனமார்ந்த பாராட்டுக்கள் 21-Jul-2016 4:21 pm
விஜயகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2016 4:03 pm

என் மரபணு தமிழர் வழி இல்லையெனில்
மரணித்து மறுபடி பிறப்பேன் தமிழனாக

மேலும்

நெஞ்சோடு இறங்கி கலகம் செய்யும் வரிகள் 15-Jun-2016 11:28 pm
விஜயகுமார் - மு குணசேகரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2015 11:52 am

என பாடப்புத்தகத்தில் அச்சிட்டு மாணவர் சேர்க்கைக்கு சாதிச் சான்றிதல் அவசியமாக்குவது நியாயம்தானா ?

மேலும்

காந்தியால் அரசியலமைப்பு சட்டம் குழுவில் இடம் பெற்றவர் அம்பேத்கார். சட்டம் எழுதியவர் வேறு ஏழு பேர்கள். தாழ்த்தப்பட்டோருக்கு சலுகைகள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அந்த ஏழுபேர் எழுதிய சட்டத்தை அம்பேத்கா ரிடம் கொடுத்தார்கள். சட்டமேதை தனக்கு வேண்டியதை திருத்தி அமைத்துக் கொண்டார்.. இன்று சட்டம் எழுதியவர் பெயரும் உதவிய காந்தியின் பெயரும் வெளி வரவில்லை. சாதியை ஒழிப்பதால் யாருக்கு லாபம். . எழுபதாண்டாய் வளர்ச்சி பெற்றபின் அவர் மற்ற சாதியினரை ஒழிப்பதற் காகவா சுதந்திரம் பெற்றார். சா தி சாதி சாதிபேசவா சுதந்திரம் பெற்றார்.. ஏறிவந்த ஏணியை உதைத்து தள்ளுவது இயற்கைதானே.. . மற்ற சாதியினர் விட்டுக்கொடுத்த இட ஒதுக்கீட்டில் வளர்ந்து கிளையில் உட்கார்ந்து மரம் வெட்டுவதற்கு சமம்.. தமிழ ரின் கலாசாரம் தேவையில்லை நாங்கள் வாழ்ந்தால் போதும் என்ற கொள்கை எழுதுபவனுக்கும் படிப்பவனுக்கும் தெரிந்தும் கவலை படாது இப்படி கேள்வி கள் எதற்கு. இப்போதே மற்றவரின் மானம் மரியாதை சிம்பு பறப்பது தெரியவில்லையா. சட்டமன்றத்தி லோ பார்லி மெண்ட்டிலோ தலைவரா காமல் எழுவதானடாய் மிரட்டி மற்ற சாதியினரை தாழ்த்தி இப்படி இழிவு படுத்துதல் சரியா. ? அரசிய லமைப்பில் முதல் ஷரத்து சட்டத்தின் கண்முன்னே அனைவரும் சமம் என்றார். ஆனால் மற்ற சாதியினர் தாழ்த்தப் பட்டோ ருக்கு தங்கள் உரிமைகளை எழுபது வருடங்களாக விட்டுக்கொடுத்து வருகிறார்கள். தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனித நேயமற்றது தீண்டாமையை ஒழிக்க மாற்ற சாதியை ஒழிக்க வேண்டுமா. குருவி கூட்டைக் கலைக்க வீட்டைக் கொளுத்த வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது. இருக்க இடம்கொடுத்தால் மடத்தை பிடுங்கியது சரியான உதாரணம். 29-May-2020 10:28 am
It is not wrong because it was introduced in the application to find out the right person and to give scholarship etc., and to educate and eliminate poverty in their caste. but initially it was introduced to totally eradicate poverty and other elements in their caste and bring them at par with other caste in the society but all the facilities are going to the affluent family in their society since the exposure for them is very easy and they are getting high marks and enter into the professional colleges so the under privileged are still suffering. So it is now time to eliminate all the professionals children and affluent families from that list and give priority to the under privileged people in that society and bring them up and then it is easy to remove the caste certificate. The purpose of introducing the caste certificate is only to help that people and no other should enjoy that facility. After 50 years of independence still it persists it is shameful to us. 16-Nov-2015 11:45 am
தவறு.... ஆனால் சில அடிப்படை தேவைகளுக்கு சாதி முறைகள் அவசியமாகிறது........ அப்படி இருக்கும்போது தீண்டாமை பற்றி விழிப்புணர்வு இல்லாதபோது தீண்டாமை மாணவர்களிடையே மேலோங்கி காணப்படும்... 05-Nov-2015 11:21 pm
இங்கு மதச்சார்பற்ற அரசு என்று மார்தட்டிக் கொண்டாலும் எல்லா அரசு விண்ணப்பத்திலும் என்ன ஜாதி என்ற கேள்வி இல்லாமல் அச்சடிக்க மாட்டார்கள். இந்த அழகில் மூன்றாம் பாலினரை சேர்க்க போராட்டம் வேறு. நல்லவேளை அது பள்ளி, ரயில் முன்பதிவு விண்ணப்பத்தில் இன்னமும் கேட்கப்படவில்லை. 04-Nov-2015 11:26 pm
விஜயகுமார் - விஜயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2015 11:31 am

-24,மார்ச்,2015.சென்னை,தோரயமாக மாலை 7 மணி,அந்த தெருவின் கடைசியில் கண்கள் மலைத்துப் போகும் அளவிலான வண்ணங்கள் நிறைந்த பளைகைகள் மின்னிக்கொண்டு இருந்தன.அதன் ஓரங்களில் பணக்காரர்களின் ரதங்கலான Benz,BMW,Audi போன்ற கார்கள் நின்று கொண்டிருந்தன.அவற்றிற்கு அழகு சேர்க்க பளிங்குகளுக்கு அரசன் போன்று மற்றுமொரு வெண்ணிற கார் ஒரு வித கர்வத்துடன் வளைந்து நின்றது.அதிலிருந்து பாதி சிரைத்த முகத்துடன் ஒருவர் இறங்கினார் இக்காலத்து வெள்ளைகார துறை போன்று.
"Royal's Pub Welcomes U sir !"
கோட் சூட் போட்ட காவலர்கள்,புன்னகை மலர பணக்கார பாதிச்சிரிப்புடன் வரவேற்றனர்.மற்றொரு காவலாளி
"Sir ! We're sorry,Pairs only a

மேலும்

முடிவு அருமை 04-May-2015 5:18 pm
விஜயகுமார் - விஜயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2015 5:45 pm

அவளு(னு)க்கு பிடிக்குமென்று
பிடிக்காதொன்றை எனக்கும் பிடிக்கும் என்று
தொடங்கும் ஒவ்வொரு பொய்க்கவிதையும்
முடிவடைகிறது குடும்பநல நீதிமன்றத்தில்
"விவாகரத்து கையெழுத்தாக"... !!!

மேலும்

விஜயகுமார் - விஜயகுமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2015 11:50 pm

" யாகவாராயினும் நாகாக்க ! "

மேலும்

விஜயகுமார் - விஜயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2015 9:23 pm

பெண்மையினுள் உண்மைகளாய்
புரியாத சில நொடிகள் !
பளிச்சிடும் வெண்பளிங்குகளாய்
சிரிப்பூட்டும் சில நொடிகள் !
சிதறுண்ட நெல்மணியாய்
கலைந்து போன பல நொடிகள் !
நொடிகள் வந்த பாதையிலே
என்னவளின் சிறு நொடிகள் !
கடைசியாய் கொடி காட்டி
முடித்து வைக்க சில நொடிகள் !
நொடிகள் தந்த வாழ்க்கையிலே
தடமரியா ஓடத்தின் மேல் !
தலைவனாக நானொருவன் !
எனினும் பயணம் என்றும் முடிவதில்லை !

மேலும்

ரொம்ம நல்லாயிருக்கு தொடருங்கள் நம்ம ஊரு மகாராணி எனும் புதிய நகைச்சுவை எழுதினேன் படித்து பாருங்கள் 19-Mar-2015 10:24 pm
விஜயகுமார் - வாசுகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2015 11:25 am

இன்றைய நடை முறை வாழ்கையில் ஒரு விதவை பெண் போட்டு வைத்து கொள்வதும் வண்ண உடை அணிவதும் சகஜமாகி விட்ட போதும் ஒரு சிலர் அதை இழிவாக பேசுவது தூற்றுவதும் சரியா???????

மேலும்

எந்தன் பார்வையில்,"முட்டாள் தனமான உணர்வுகளின் வெளிப்பாடே இந்த மூடநம்பிக்கைகள் !!!" . 13-Mar-2015 9:10 pm
யாழ் மொழி உங்கள் கருத்துதான் எனக்கும் தோன்றியது 13-Mar-2015 10:54 am
கணவனை இழந்த பெண் செந்தூரப் பொட்டையும், வண்ண உடையையும் இழக்க வேண்டுமா ? அவள் நேர்மையைச் சரி பாருங்கள் நெற்றியை ஏன் பார்கிறீர்கள் ? வெள்ளை உடை அணிவதால் இந்த உலகம் ,அவளுக்கு என்ன வெகுமதி தரப் போகிறது. இழிவாகப் பேசுவதும்,தூற்றுவதும் தான் கலாச்சாரக் கேடு. 12-Mar-2015 7:09 pm
முற்றிலும் தவறு. பொட்டு என்பது தனி மனித உரிமை.. அதில் தலையிட யாருக்கும் அனுமதி இல்லை, அருகதயும் இல்லை... 11-Mar-2015 10:54 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே