ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீ
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  28-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Oct-2013
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  16

என்னைப் பற்றி...

அனைவரிடமும் நட்பு பராட்ட விரும்பும் ஒரு மனிதன்.

என் படைப்புகள்
ஸ்ரீ செய்திகள்
ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 9:45 am

இதற்க்கு முன் நான் உணர்ந்ததில்லை,
அனைத்துமுள்ளது,
இருப்பினும் உணர்கிறேன் வெற்றிடம்.
கலப்படம் நிறைந்த உலகில்,
காவல் பணியை கொள்கிறேன்!
கடுங்குளிரா? கவலையில்லை!
சுடும் வெயிலா? பரவாயில்லை!
கொட்டும் மழையா? கணக்கேயில்லை!
தாயவள் மடியில் கொண்ட உறக்கம்,
போனதன் காரணம்
தாய்நாட்டின் மீது கொண்ட கிரக்கம்,
வெற்றிடம் நிறைந்தது
விடுமுறை கிடைத்தது
ஆனந்ததிற்க்கு வார்த்தைகளில்லை
ஊர் போகும் தூரமது தெரியவில்லை
தாயவள் முகம்கான பொறுக்கவில்லை
கடகடவென ரயில் ஒட
படபடவென ஊர் சேர
தாயவள் முன் நின்றேன்
வீட்டில் கரிசோறு
நண்பனுடன் சுற்றும் பல ஊரு
ஊருக்குள் காட்டும் பல ஜோரு
மாமன் மகள்களோ எத்துனை பேரு
ஊர

மேலும்

Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) GURUVARULKAVI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Apr-2014 8:32 pm

திங்கள் மும்மாரி
பொழிய மறந்ததேன் ...??

கதிரவன் காட்டமாய்
சுட்டெரித்துக் கொதிப்பதேன் ....??

ஓசோன் படலத்திலும்
ஓட்டை விழுந்ததேன் ....??

இறுகிய மலைகளும்
சீற்றமுடன் சரிவதேன் ....??

கரைபுரளும் நதிகளும்
காய்ந்தே போவதேன் .....??

சுகமான காற்றும்
சூறாவளியாய் அழிப்பதேன் ...??

நிலமகள் நடுங்கி
அதிர்ந்து பிளப்பதேன் .....??

எரிமலை ஆவேசமாய்
நெருப்பை உமிழ்வதேன் ....??

கட்டுக்கடங்கா காட்டாறு
வாரிசுருட்டிச் செல்வதேன் ....??

வனம்வாழ் உயிரினமும்
மெல்லமெல்ல அழிவதேன் .....??

சீறியெழும்பும் கடலலைகள்
ஊருக்குள் புகுவதேன் ....??

இயற்கை சினமுற்றால்
இழப்பு யாருக்கு

மேலும்

கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டும் கண்ணம்மா ...!! திருப்பி கேட்கக் கூடாது ! 22-Apr-2014 12:28 pm
ஏன் ஏன் ஏன்................? ஏன்? 22-Apr-2014 11:42 am
மிக்க நன்றி ப்ரியா !! 21-Apr-2014 3:55 pm
உண்மை படைப்பு அருமை அம்மா! 21-Apr-2014 12:52 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Apr-2014 10:09 pm

பாசக்கயிறு காலன்வீசி
பரலோகம் அழைக்கும்போது
பணம்காட்டி மறலியிடம்
பேரம்பேச முடியுமா ...??

மரிக்கமாட்டேன் இன்றென்று
மமதையால் மறுத்தாலும்
மன்றாடிக் கேட்டாலும்
மரணவோலை போய்விடுமா ....??

கூடிசுற்றம் அழுதாலும்
கூப்பாடுபோட்டு தடுத்தாலும்
கூற்றுவன் கூப்பிட்டால்
கூடத்தானே போகவேண்டும் ....??

மாற்றாக ஓருயிருக்கு
மற்றோருயிர் தயாரெனினும்
அவ்வுயிர்விடுத்து இவ்வுயிரெடுக்க
அந்தகனும் சம்மதிப்பானோ .....??

இப்புவியில் பிறவியெடுத்தால்
இறந்துதானே ஆகவேண்டும்
இரக்ககுணம் எமபடரிடம்
இருக்குமோ எள்ளளவும் .... ??

மரணத்தை எதிர்கொள்ள
மனதிலே துணிவுவேண்டும் !
மரணமிலா பெருவாழ்வுகிட்

மேலும்

மிக்க நன்றி ப்ரியா !! 21-Apr-2014 3:56 pm
மிகவும் நன்றி சதுர்த்தி ! 21-Apr-2014 3:56 pm
அழகிய படைப்பு அம்மா மிகவும் ரசித்தேன்! 21-Apr-2014 12:53 pm
வாழ்கையின் உண்மையின் முக்கியத்துவத்தை அழகாக உணர்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்... 21-Apr-2014 4:27 am
a.lawrence அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Apr-2014 12:10 am

எல்லாமே இங்கு ஞாயம் தான்
தவறு என்று எதுவுமில்லை

சூரியன் குளிர்வதும் தனிமையில்
நிலவு சுடுவதும் இங்கு இயல்பானது

காதலில் நல்லது - நல்லது
அல்லாது யார் பிரிக்கக் கூடும் ?

வண்டுக்கு தந்தம் முளைப்பதும்
யானையை மயிலிறகால் கட்டி
இழுப்பதுவும் இங்கு சாத்தியம் தானே ?

இங்கு இருக்கும் உன்னை எங்கோ
இருந்து ஆட்டுவிக்கும் சக்தி
காதலுக்கு உண்டு என்றால் பொய் இல்லையே ?

கல்லையும் சிலையாய்
சிலையையும் சின்னாபின்னமாய்
மாற்றும் வல்லமை காதலுக்கன்று யாருக்குண்டு ?

மேலும்

அருமை தோழரே.. 22-Apr-2014 11:21 am
பொருத்தமான தலைப்பு.. இனிய கவிதை 18-Apr-2014 10:15 pm
வரவுக்கு நன்றி சகோதரா . 18-Apr-2014 1:51 pm
உண்மை தான் நாகூராரே . இன்னும் சொல்ல வேண்டியது மீதம் உள்ளது . எது காதல் என்பதை சொல்ல வாஞ்சிக்கிறேன் . 18-Apr-2014 1:49 pm
அஹமது அலி அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Apr-2014 8:34 am

என் அறையின்
வெற்றிடங்களில்
வெறிச்சோடிக் கிடக்கும்
தனிமை!
(=)
வெற்றிடங்களிடையே
வெட்டிக் கதை பேசியே
பொழுது கழிக்கும்
பொழுதும் கழியாமல்
போட்டி போடும்!
(=)
அறையின்
அறுபக்கமும்
வெறுப்பேற்றி சீண்டும்
பொறுப்பின்றி
தனிமை நினைவு தூண்டும்!
(=)
ஆற்றுப்படுத்தி
விசிறிடுமந்த மின்விசிறி
இடவல புறங்களில்
விசிறியே தேற்றும்!
(=)
உழைப்பின்
அயர்ச்சியை போக்க
முயற்சிக்கும் படுக்கை!
(=)
தலையணைகள்
அணைபோட மறுத்து
ஏகாந்தத்தை
ஏகோபித்த வண்ணம்
மொட்டைப் பாறைகளாய்
சுட்டெரிக்கும்!
(=)
வியர்வைச் சுரப்பிகளும்
விதி நொந்து
உப்புத் திரவத்தை
உடலெங்கும் உகுக்கும்!
(=)
ஆணியில் தொங்கும்
கைச்சட்

மேலும்

மிக்க நன்றி தோழரே 01-Sep-2014 9:36 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி 01-Sep-2014 9:36 am
####தலையணைகள் அணைபோட மறுத்து ஏகாந்தத்தை ஏகோபித்த வண்ணம் மொட்டைப் பாறைகளாய் சுட்டெரிக்கும்!#### அருமை அருமை.... 01-Sep-2014 12:51 am
தனிமை கொடியது தான். எனினும் அதை அழகு கவியில் வடித்தமைக்கு நன்றி அலி 22-May-2014 2:32 pm
ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2014 9:22 am

முடிவில்லா தொலைவுகள்
அளவில்லா நினைவுகள்
அசைபோடும் பொழுதுகள்
கரைந்தோடும் நிமிடங்கள்
இரயிலின் ஓசையாய் தொடரும் உன் நினைவுகளோடு
புரியாத மனிதர்கள்
விந்தையானது தான் நானா? இரயில் பயணமா?
கேள்விகளுக்கிடையில் மின்னூட்டமற்ற கைப்பேசி
புரியாத பாஷை
புரிந்தும் புரியாமலும்
ஓயாது எண்ணங்களின் ஓசை
நீண்ட உறக்கம்
தீராத ஏக்கம்
விளங்காத உலகில்
புதிதாய் ஒரு பயணம்
இரு தண்டவாளங்களை இணைத்து தொடரும் நினைவுப் பயணம்
இது ஒரு இரயில் பயணம்

மேலும்

ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2014 1:23 pm

பட்டென பார்வையில்,
சிட்டென நடையில்,
சட்டென மாறிப்போனால் அவள் என் தேவதை!!
நேற்று முதல் இல்லை வெகு நாட்களாகவும் இல்லை
இன்றே முதன்முறை மாறிப்போனாள் அவள் என் தேவதை!!
அவள் முக்குக் கண்ணாடியில் குவித்துப் பார்க்கிறாள்
யாரோ இவன் என்று
அவளின் மூக்கின் நுனி அழகில் தவித்துக் கிடக்கிறேன்
பாவம் நான் இன்று
ஆம் அவள் என் தேவதை!!
அவள் கோலம் போட புள்ளி இட்டு
பல கோணங்களில் கோடு போட்டு
வர்ணங்களையும் கூடச் சேர்த்து முடித்தாள்
ஆனால் விளங்காமல் நிற்கிறேன் கோலம் போட்டது
வாசலிலா என் மனதிலா என்று!!!
விடைகள் அறியாமல் விழித்துக் கிடக்கிறேன்
வழிகள் அறியாமல் அவளைத் தொடர்கிறேன்
பல்லவியோ சரணமோ எனக்க

மேலும்

நன்று 28-Jun-2016 8:54 pm
நன்றி தோழமையே!! 18-Apr-2014 8:21 am
நன்று ஸ்ரீ ! 17-Apr-2014 7:27 pm
ஸ்ரீ - Shyamala அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2014 10:16 pm

சற்று சீக்கிரம் தான் சாப்பிடேன்

நிஜத்தில் நீ அதை உருக வைத்து சாப்பிடுகிறாயா? என்னை உருக வைக்க தான் சாப்பிடுகிறாயா?

மேலும்

நிஜமான இன்பம்தான் 08-Apr-2014 9:15 pm
கருத்துக்கு நன்றி 08-Apr-2014 9:14 pm
குழந்தைகள் சாப்பிடுவதை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி தானே!!! எந்த கஷ்டங்கள் வந்தாலும் குழந்தையின் சிரிப்பை பார்கையில் எல்லாம் பறந்து போகும். 08-Apr-2014 8:19 am
உருகுவதைப் பார்ப்பதே இன்பமல்லவா 07-Apr-2014 6:47 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
இராமசாமி

இராமசாமி

பொன்னமராவதி

இவர் பின்தொடர்பவர்கள் (26)

a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
மு முருக பூபதி

மு முருக பூபதி

Perundurai erode district

இவரை பின்தொடர்பவர்கள் (25)

priyalakshmi126

priyalakshmi126

chennai
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மேலே