ரிஸ்வி மொஹம்மத் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரிஸ்வி மொஹம்மத்
இடம்:  காரைக்குடி -இந்தியா
பிறந்த தேதி :  17-Jul-1980
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jun-2015
பார்த்தவர்கள்:  208
புள்ளி:  20

என் படைப்புகள்
ரிஸ்வி மொஹம்மத் செய்திகள்
மலர்91 அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Mar-2016 12:44 pm

டேய் உவராசு, உவராசுக் கண்ணா!
@
யாரத் தாத்தா கூப்பிடறீங்க?
@

யாரக் கூப்பிடுவேன்? எம் பேரனத் தான்.
@
உங்க பேரன்....... அவம் பேரு யுவராஜ் தாத்தா.
@
அட போடா. அந்த இந்திப் பேருங்கெல்லாம் என்னோட வாயில நொழையாது. ஏந்தா நம்ம சனங்க பிள்ளைகங்களுக்கு இந்திப் பேர வைக்கறாங்களோ? படிச்சவங்களே இது மாதிரி செய்யறங்கா. எம் பையன் மணிவேலும் டாக்டருக்குப் படிச்சவம் தா. அவனும் சினிமா மோகத்திலே என் அழகு பேரனுக்கு உவராசு-ன்னு பேரு வச்சிருக்கானே. படிச்ச பைத்தியக்காரன். ஆமாம் உவராசு -ன்னா என்ன அர்த்தண்டா?
@
தாத்தா இந்திலெ யுவராஜ் -ன்னா இளவரசன் -னு அர்த்தம்.
@
அடடா. இளரசங்கறது எவ்வளவு அருமையான தமிழ்ப் பேரு.

மேலும்

நன்றி நண்பரே 09-Mar-2016 7:24 am
காலத்தில் பிடியில் நாம் புரிந்தும் உணராத உண்மைகள் இது போல் பல 08-Mar-2016 11:48 pm
நன்றி நண்பரே 08-Mar-2016 9:49 pm
நன்றி தோழமையே 08-Mar-2016 9:48 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Mar-2016 7:48 am

மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !


உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)

பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)

உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)

புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)

மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)

நிசப்த இரவில்
நிகழும் சுகப்பி

மேலும்

சிறப்பான ஹைக்கூ அனைத்தும் புரட்சி சிந்துகிறது எழுத்தாளனின் வற்றிய பேனா உண்மையான வரிகள்...... 31-Mar-2016 4:04 am
ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை ! 29-Mar-2016 3:45 pm
அருமையான வரிகளுடன் படைப்பு 28-Mar-2016 8:51 pm
அனைத்தும் மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 11:56 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Nov-2015 3:09 pm

கொடுப்பதில் கர்ணனாய்
இருந்த போதும் -என்னிடம்
கஞ்சத்தனம் செய்யும் உன் பார்வைக்காய் காத்திருக்கின்றது
விழிகள் .

இளையராஜாவும் எம்.எஸ்.வியும்
இணைந்தே என்னுள் இசையமைக்கின்றார்கள்
என்னை நீ கடந்துசெல்லும்
இரண்டொரு நொடிகளில் .

உன் தினக்குறிப்பேட்டை
தினமும் முத்தமிட வைக்கிறது எச்சில் தடவப்பட்ட
பக்கங்கள் .

காதறுத்த உன் செருப்பும்
என் மஞ்சத்தோடு ஒட்டிக்கிடக்கிறது
பரதனின் ஆட்சி பீடத்தில்
ராமரின் அடையாளமாய் .

அதிகாலை பனியின் இதமான சுகத்தை மிஞ்சி என் கன்னத்தோடு ஒட்டிக்கொள்கின்றது
குழந்தைக்கென நீ கொடுத்த
பறக்கும் முத்தம் .

தலையணைகள் தன்னை தழுவுதலுக்கு தடைவிதித்துவி

மேலும்

மிக அருமையான கவிதை ! 08-Jan-2020 11:25 pm
வார்த்தைகளில் மிளிர்கிறது காதல்.....செம்ம டியர்...!! 11-Feb-2016 1:38 pm
அருமை தோழி ... 05-Dec-2015 6:01 pm
நன்றிகள் தோழமையே . 22-Nov-2015 5:28 pm
ரிஸ்வி மொஹம்மத் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
ரிஸ்வி மொஹம்மத் - பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2015 8:24 am


நாளை , 18.10.2015 , ஞாயிற்றுக்கிழமை , சென்னையில் நடைபெறவுள்ள ​

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்தநாள் விழா, 

நம் எழுத்து தள நண்பர்களுக்கும் " தமிழன்பன் விருது " வழங்கும் விழா , 

மற்றும்  நூல்கள் வெளியீட்டு விழாவில் , 

அருமை நண்பர் திரு அகன் அவர்கள் முயற்சியால் , 

எனது இரண்டாவது கவிதை தொகுப்பு ,

" நிலவோடு ஓர் உரையாடல் " எனும் நூலும்

வெளியிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . 

நேரம் : மாலை 4 மணி அளவில் 

இடம் : கவிக்கோ மன்றம் , 
            சி ஐ டி காலனி 
            மைலாப்பூர் , சென்னை 600004

           அனைவரும்  வருக !

       பழனி குமார் 
              Palani Kumar N R   
 



மேலும்

கவிதைக்கு தலைப்பு இடுவர் ! 'நிலவோடு ஒரு உரையாடல்' எனத் தலைப்பே கவிதையானால்... உள்ளே இருப்பது ஒரு காவியமோ ! 'நிலவோடு...' நீவிர் கொண்ட அந்த '...ஒரு உரையாடல்' அறிய ஆவல்... வாழ்த்துக்கள் சார் ! 18-Oct-2015 11:05 am
உங்கள் மின்னஞ்சல் முகவரி தந்தால் என் முகவரி அனுப்பிவைக்கிறேன். நன்றி. 18-Oct-2015 11:01 am
வாழ்த்துக்கள் ஐயா,,, இன்னும் பல படைப்புகள் தர வேண்டும் தாங்கள் ....மிக்க மகிழ்ச்சி அய்யா ..... 18-Oct-2015 10:18 am
மிக்க மகிழ்ச்சி அன்பு சகோதரி. முகவரி தந்தால் அனுப்புகிறேன் . நன்றி 18-Oct-2015 7:11 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Aug-2015 1:38 pm

நிழலை விரிக்கும் மரங்கள்
எதிர் எதிரே முகம் பார்க்கிறது
கானகத்தில்........,

புயலாய் வீசிடும் காற்று
சோலையோரம் சாந்தமாய் மாற
மென் மலர்கள் பூத்ததுவா.....?

அல்லிக் குளத்தருகில் செந்தமிழ்
திரைகள் "நாராய் நாராய் செங்காழ் நாராய்"
பாட எந்தப்புலவன் அமர்ந்திருக்கிறான்.

ஏழு துருவங்களிலும் புவியில்
மட்டும் மாந்தன் வாழ்வது எதற்காய்..?

பாவமான உள்ளமும் தீயதை தூண்டும்
பொன்னும் பொருளும் இங்கே தானா உள்ளது.
கடவுளே!! பதிலைச் சொல் மெளனிக்காதே!!

மேலும்

மனம் = இதயம் மூளை = மலம் மனிதச் சாயலில் இருக்கும் கடவுள் என்ற வதந்தியை விசாரித்து உணர்ந்த போது கடவுளுக்கு மனமும் /மூளையும் இல்லை என்ற மகத்தான உண்மை மேதினியை வருடியது. 02-Oct-2015 7:10 am
மிக்க நன்றி ! வாழிய நலம் !! 02-Oct-2015 7:05 am
உங்கள் கருத்தால் தான் என் கவியும் கவிதையாகிறது வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 02-Oct-2015 6:39 am
இறந்தால் இறைவனடி சேர்ந்தார் என்பர். இறந்தவர் இறைவனிடம் பேசுவது இயற்கை இருப்பவர் இறைவனிடம் பேசுவது இயற்கை தான்...இயற்கையான பைத்தியம் அண்டசராசரம் எதிலும் இருப்பது 2 துருவங்கள் தான். 7 துருவம் என்பது...எறும்பின் வயிறில் வளரும் ஆனை சிசு ... 01-Oct-2015 8:50 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Aug-2015 8:22 am

என் கிருஷ்ணனே! மனதினில் புல்லாங்குழல்
வாசிக்கிறாய்.விழி நீரில் நினைவலை அரங்கேற...,

என் மேல் காதல் வைத்து காத்திருந்தாய்.இன்று வரை...,
நான் உன்னை வெறுத்து நோக வெச்சனே!!! நீ
சென்று விட்டாய் நான் உனக்காக காத்திருக்கிறேன்.

என் மனத்திருடன் காண வருவான் என்று....,
அவனுக்கு பிடித்த அலங்காரம் வைத்து
நித்தம் நித்தம் காத்துக் கொண்டிருக்கிறேன்.

இரவில் கண்ணாளன் என்னை பார்த்த பார்வைகள்
கண்ணாம் பூச்சி மூட்டிட..,என் கண்கள் இன்பக்
கண்ணீரை அனுபவிக்கிறது அவன் பிரிவினில்.....,

இனிமேல் அவனை பிரிந்து என்னால் இருக்க முடியாது
கருமேகங்களில் நீராடும் வெண்ணிலவே......!!!
மீண்டும் என்னவன் காண வரு

மேலும்

ரொம்ம நல்லா இருக்கு திருத்திக் கொள்கிறேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Sep-2015 6:14 am
என் கிருஷ்ணனே! மனதினில் புல்லாங்குழல் .விழி நீரில் நினைவலை அரங்கேற..., காதல் வைத்து காத்திருந்தாய். உன்னை வெறுத்து நோக வெச்சனே!!! நீ இப்படி வரிகளை சுருக்கலாமோ என்று எனக்கு தோன்றுகிறது நன்றி நன்றி 17-Sep-2015 10:13 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 15-Aug-2015 11:05 am
நிச்சயம் வருவான் என்றே சொல்ல தோன்றுகிறது வரிகள் .. ம்ம்ம் 15-Aug-2015 7:51 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) கயல்விழி மணிவாசன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Sep-2015 12:09 pm

அன்புக்கு அன்னையாக வருத்தத்தில்
தோல் கொடுக்கும் நண்பனாக
வாழ்க்கைக்கு வழிகாட்டும் தந்தையாக
நினைவுகளில் கலந்த தெய்வம் நீ,

உனக்கு ஒரு பூஜை செய்யவேண்டும்,
நான் பெற்ற பட்டங்களை உன்
காலடியில் வைத்து.................

மலராக சிரிக்கும் மாணவனை
வாசம் மாறாமல் காக்கும் சோலை
அல்லவா நீ......!!!!

உலகம் ஆயிரம் புத்தகம் உள்ள
நூலகத்தை வியப்பாய் பார்க்கிறது,
நடமாடும் அறிவின் அருவியை
யாரும் கண்ணெடுத்து பார்ப்பதில்லை.

விண்ணில் விளக்குகள் ஆயிரம்
இருந்தாலும் ஒற்றை நிலவுக்கு
தான் பெறுமதி அதிகம் என்பதைப் போல்
பள்ளி எனும் நிலவில் அறிவின்
வெளிச்சமாய் மின்னும் ஆயிரம்
தாரகைகள் நீங்கள

மேலும்

மிக்க நன்றி ! 27-Sep-2015 7:21 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Sep-2015 5:41 pm
ரிஸ்வி மொஹம்மத் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2015 4:22 pm

ரசிக்க தெரிந்தவனுக்கு "இருள்"கூட அழகு தான் .
!!!!
சிரிக்க தெரிந்தவனுக்கு "சோகம்"கூட சுகம் தான் .
எனக்கு சிரிக்க தெரிகின்றேன்
அதனால்
சுமக்கிறேன் சோகங்களை சுகமாய் .

மேலும்

ஆறுதல் தரும் செய்தி 26-Jul-2015 7:46 pm
நல்லா இருக்கு நட்பே . 22-Jul-2015 4:55 pm
ரிஸ்வி மொஹம்மத் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2015 6:50 am

அழும் போது தனிமையில்
அழு .
சிரிக்கும் போது நண்பர்களோடு
சிரி.
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு
என்பார்கள் .
தனிமையில் சிரித்தால்
பைத்தியம் என்பார்கள்.

மேலும்

ரிஸ்வி மொஹம்மத் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2015 6:45 am

கணவன் : இங்க வா .என் கண்ணுல என்ன இருக்கு என்று கொஞ்சம் பாரு

மனைவி : வெக்கத்தோட .அது வந்து உங்கட உண்மையான லவ் இருக்கு டார்லிங் .

கணவன்: நாசமா போச்சி .
அடி சனியனே கண்ணுல என்னமோ தூசி விழுந்திடிச்சி எடுடி .

ஹி ஹி ..

மேலும்

நன்றி நட்பே 22-Jul-2015 4:07 pm
நன்றி நட்பே 22-Jul-2015 4:06 pm
மனைவி பாவம் தானே 22-Jul-2015 3:38 pm
மனைவியின் பாசம் கண்ணை மறைக்கிறது. 22-Jul-2015 3:13 pm
ரிஸ்வி மொஹம்மத் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2015 6:39 am

ஒரு கால் இல்ல .
ஒரு sms இல்ல .
ஒரு missed கால் இல்ல
அப்பிடி என்ன தான்
தப்பா சொன்னேன் ?
என்ன கோவம் .?
காலைல brush பண்ணு சொன்னதுக்கு
கொச்சிக்கிட்டியே கண்ணு .

மேலும்

நன்றி நட்பே 22-Jul-2015 4:09 pm
அது மாதிரியெல்லாம் சொல்லாமா? 22-Jul-2015 3:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மலர்91

மலர்91

தமிழகம்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

மலர்91

மலர்91

தமிழகம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே