saranya gpyd - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  saranya gpyd
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-May-2019
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  1

என் படைப்புகள்
saranya gpyd செய்திகள்
saranya gpyd - கேள்வி (public) கேட்டுள்ளார்
26-Nov-2021 5:03 pm

இத்தளத்தில் படைப்புகளை பதிப்பது எப்படி

மேலும்

💓முதல் முத்தம்💓.... வறண்ட நிலத்தில் வானிலை மாறி வந்து விழுந்த மழைதுளியை போல... என் மேல் விலுந்ததடி உந்தன் முதல் முத்தம்💖..... 05-Mar-2022 2:36 pm
கார்மேகம்.....! அவள்... பூத்திருந்தும் மணக்காத பூக்காடு. எரிந்தாலும் ஓளியில்லா குடவிளக்கு. அவள்... விடியும் பொழுதை கனவுகளாலே தள்ளித்திரியும் வீடியோ கன்னி. முடியும் வாழ்க்கைச் சக்கரத்தாலே நசுக்கப்படும் முடியாப் பெட்டகம். அவள்... பணத்தைப் பார்க்கும் பாதகர் மத்தியில் பாடித் திரியும் பாவப் பிறப்பு. நகைகளைப் பார்க்கும் நயவஞ்சகர் நடுவில் நாட்டியமாடும் நல்லதங்காள். அவள்... விதைக்கப்படாத விளைநிலம். விளைந்த பின்னும் விலை போகாத விஞ்சிய பயிர். அவள்... கண்ணீரில் எரிகின்ற கற்பூர தீபம். காலத்து வெள்ளத்தில் கரைகின்ற கரும்பாறை. கரைக்கு வந்துபோகும் கடலின் நீரலைகள். அவள்... ஏலத்தில் எடுக்கப்படாத பட்டுச் சேலை. காலத்தில் தொடுக்கப்படாத மலர் மாலை. அவள்... காற்றுப்படாத கார்மேகம். திருமண காற்றுப்பட்டால் வசந்த கால மழை பெய்யும் அவள் வாழ்வில்...! (கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து கல்லூரி விடுதிகளுக்கான கவிதை போட்டியில் முதற் பரிசும், சுழற் கோப்பையையும் எனக்கு பெற்று தந்த கவிதை. கவிஞர். நா. காமராசன் அவர்களால் மிகவும் பாராட்டப்பெற்ற கவிதை) 31-Jan-2022 6:54 pm
வணக்கம். நான் இத் தளத்திற்கு புதியவன். எனது படைப்புகளை இத்தளத்தில் பதிவேற்ற உதவினால்...மகிழ்வேன். 31-Jan-2022 6:21 pm
Ok 12-Dec-2021 6:52 pm
saranya gpyd - எண்ணம் (public)
26-Nov-2021 4:59 pm

காயம் நீ 

காதல் நீ 
என் வலி நீ
வரமும் நீ
என் உயிரின் உயிரும் நீ

மேலும்

saranya gpyd - தீப்சந்தினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2019 9:05 am

திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?

இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?

மேலும்

கற்பு என்பது இருபாலுக்கும் சமம் என்பது அனைவரும் ஏனோ ஏற்பதில்லை... ஒரு பெண் எது செய்தாலும் அது சமூகத்தில் ஒரு பூதக்கண்ணாடி மூலமாகவே பார்க்கப்படுகிறது... சமூகம் என்பது வேற்று கிரக மனிதர்கள் அல்ல... நாம் அனைவரும் சேர்ந்ததே சமூகம்... ஒரு வீட்டில் ஒரு ஆண் தனது மனைவிக்கு செய்யும் துரோகம் ஏற்றுக்கொள்ளப்படும் பொது சமூகம் அதை பின்பற்ற தொடங்குகிறது... சமூகம் மாற நாம் மாறுவோம்.... கற்பு அனைவர்க்கும் சமம் என்பதை நாம் கற்போம், பின்னே சமூகத்திற்கு கற்பிப்போம்.... 13-Oct-2019 9:51 pm
எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டே வருகிறோம் இம்மறுமலர்ச்சியையும் பேதமின்றி ஏற்றுக்கொள்வோம் 30-Sep-2019 2:06 pm
சில ஆண்கள் மற்ற பெண்கள் மீது காட்டும் இரக்கம் அந்த பெண்ணை அவர் மீது காதல் கொள்ள செய்யலாம்... அவரும் அந்த அன்பு புதிதானதாக எண்ணி திசை மாறலாம்...... ஆனால் அந்த திசைமாறல் தவறு...... அது அவன் தன் மனைவிக்கு செய்யும் துரோகம்...... திசைமாறிய பாதை வாழ்வில் வெற்றியை ஒருபோதும் தரா..... இதை இன்றைய சமூகம் சாதாரண மாகவே பார்க்கிறது...... ஏனென்றால் சட்டமே பச்சை கொடி காட்டுகிறது...... ஆண் பெண் வேறுபாடு என்பது இதில் விலக்கல்ல..... விரும்பினால் யார் யாருடனும் வாழலாம்..... நான் சொல்லவில்லை...... நாசமா போன சட்டம்....... சொல்லுது. தமிழ் பண்பாட்டுடன் பார்க்கும் இது தவறானது மாக்கள் (மனிதம் இல்லாதவர்) பார்வையில் பெண் இந்த தவறை செய்தால் இழிவாகவும்.... ஆண் செய்தால் வீரமாகவும் கருதப்படுகிறது 28-Sep-2019 10:23 pm
வணக்கம் தோழர்களே ....... நிச்சயம் பெண்ணுக்கு கற்பு என்ற ஒன்று உங்கள் கட்டமைப்பில் உள்ளது என்றால் அது ஆணுக்கும் பொருந்தும் அது எப்படி பெண்ணுக்கு மட்டும் தான் அது உள்ளது என்று சொல்ல இயலும் ஆசா பாசங்கள் , வெறுப்பு விருப்பு , என்பதெல்லாம் எல்லோருக்கும் இயல்பு தானே பிறகு கற்பு மட்டும் பெண்ணுக்கு சொந்தம் என்று எப்படி சொல்ல முடியும் கற்பு என்ற வார்த்தையே பெண்ணை அடிமை பண்ண அல்லவா உருவாக்க பட்டது . ஆண் என்ற பாலினம் போல பெண் என்பதும் ஒரு பாலினம் தானே தவிர அவள் ஒன்றும் பூஜிக்கும் பொருள் அல்ல பெண்ணை பெண்ணாக சம உயிராக பார்த்தாலே இந்த கற்பு என்ற வார்த்தையை யாரும் பயன் படுத்த மாட்டார்கள் , இறுதியாக ஒன்று பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அது நமக்கும் பொருந்தும் ஆகவே கற்பு என்ற ஒன்று இருக்கும் என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்........ 24-Sep-2019 1:26 pm
saranya gpyd - பாரதி நீரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2014 4:44 pm

எட்டையபுரத்து கவிஞன்
அவன்!
யாரும் எட்டாத கவிஞன்
அவன்!

தமிழை நாவில்
சுமந்த அக்காலத்திலே
இதயத்தில் சுமந்து சுவாசித்தவன்!

தமிழை எண்ணெய் எனவும்
வார்தைகளை திரி எனவும்
மறு உருவம் தரித்து
கவிதைகளாக பெற்றெடுத்து
உலகிற்கு தத்துக்கொடுத்து
தீச்சுடரென ஓளிரவிட்டான்!

தேனை மட்டுமே
உண்ணுமாம் தேனீ
அவன்
தமிழை மட்டுமே
உண்ணும் ஞானி!

வெள்ளைத்தோல்களை உரிக்க
தன் அணு அளவு சிந்தனைகளையும்
உரித்தெடுத்தான் கவிதைகளாக!

ஆயுதம் ஏந்திய போராட்டங்கள்
அவன்!
கவிதைகளில்

அவன்!
தேன் சிந்தும் வரிகளை
கண்டபோதெல்லாம்
வான் சிந்தியிருக்கக்கூடும்
மழையை!

அவன்!
கவிதைகள் நெருப்

மேலும்

அருமையான படைப்பு.... அழகான வரிகள்.... 03-Feb-2016 8:54 pm
நன்றி அய்யா.... 13-Dec-2015 9:51 am
அழகான சொற்களாலான பாமாலை. 03-Feb-2015 5:49 pm
நன்றி 19-Jan-2015 6:42 pm
saranya gpyd - எண்ணம் (public)
04-Sep-2019 8:05 pm

இமை மூடிய பின்பும் 
விழிகள் விழித்து 
கொண்டு இருந்தது 
கண்மணி இரண்டும் 
விழி நீரில் குளித்து 
கொண்டு இருப்பதால்

மேலும்

saranya gpyd - gowthami அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2015 11:06 am

****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!

****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !

****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!

****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !

****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!

மேலும்

நீங்கள் தமிழ் மேல் வைத்த அன்பு உங்கள் வரிகளில் தெரிகிறது. 29-May-2020 8:44 am
அருமை 31-Aug-2018 7:23 pm
வார்த்தைகள் அழகு!! 20-Aug-2018 1:28 pm
தொடரட்டும். சிறப்பான படைப்பு. 13-Oct-2016 4:01 pm
saranya gpyd - சிவரஞ்சனி பிரசாந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2018 1:19 am

சில தனிமை பொழுதுகளை கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல...
ஆம், அது சுயமானதாக அல்லாது
நம் சிநேகத்திற்கு உரியவர்களால் வழங்கப்படுகின்றபோது...
ஒற்றை கோப்பையில் தேனீருடன், இத்தனிமையை சற்று கூடுதலாக நிறப்பிடும்போதும்,
பிடித்தமான சில பாடல் வரிகள் செவிக்கு மட்டும் எட்டி சிந்தையில் ஒட்டாமல் ஓடிடும் போதும்,
சிலர் அள்ளிக்கொண்டுவந்த அலுத்துப்போன ஆறுதல் வார்தைகளை கேட்க துணிவின்றி கதவடைத்து, நமக்கு நாமாகவே
ஓர் சிறை எழுப்பும்போதும்,
இன்னும் இன்னும் பலவகையில்
இத்தனிமை நம்மை சில நினைவுகளால் நெருக்கிடும்போதும்
அத்தனை சுலபமானதாக இருப்பதில்லை,
இத்தகைய தனிமைப்பொழுதுகள்...

மேலும்

நீ யாரென்று தெரிய வேண்டும் என்றால் தனிமையை நீ உணர வேண்டும்... தனிமை என்னைக்குமே சுகந்தாங்க... 08-Sep-2020 9:58 am
தனிமை சில நேரங்களில் இனிமை...! தனிமை சில நேரங்களில் கொடுமை. ..! 30-Jun-2020 10:34 pm
உண்மை 04-Apr-2020 8:58 pm
உண்மைதான் நட்பே.... ஆனால் கவி உரைநடை வடிவில் இல்லாமல் இருந்திருக்கலாம்..... 30-Aug-2018 11:49 am
மேலும்...
கருத்துகள்

மேலே