மெய்யன் நடராஜ் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மெய்யன் நடராஜ் |
இடம் | : punduloya srilanka |
பிறந்த தேதி | : 18-Aug-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 10043 |
புள்ளி | : 5905 |
எமது இலங்கை வானொலி பத்திரிகைகள் போன்றவற்றிற்கு நீண்ட காலமாக மெய்யன் நடராஜ் எனும் என் சொந்த பெயரிலேயே கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறேன் .சமீப காலமாகத்தான் இணைய சஞ்சிகைகளுக்கும் எழுத ஆரம்பித்துள்ளேன். நாடு கடந்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் எழுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அண்மையில் படிக்கட்டு என்ற எனது முதலாவது கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளேன்
சிரித்த தேனடி சீதள மேமனம்
சிக்கிக் கொளவலை தந்தொரு வம்பொடு
சிறகென இமையுள விழிவழி உயிரினை உரசாதே
*
சிலிர்க்க வேவிடு தேயிரு பூவிழி
சித்தத் துறைநிறை யன்புற வென்றுயிர்
சிசுவென வழுவதை யொருநொடி ஒருதர மறிவாயா
*
எரிக்கு மாவியை யேவிழி யோடிமை
இட்டத் தொடுவுயிர் தந்துய ரன்பொடு
இருதய வறைகளி லிடுகிற வரையமை தியுமேதோ?
*
இழுத்து மூடிய தேனடி யேமனம்
இக்கட் டுறுவதி லின்சுவை யென்பது
இளகிய மனமுன திலையென எழுதிட வழிதானோ?
*
சிரிக்கி யேஒரு சேதியை நீசொலு
சித்தத் தொடுவுன தன்பெனு முன்பனி
சிதறிட வழிவிடு சிறுநகை மழைவர வரமேதா
*
சிலுப்பி யேசெலு வாயதி லேஉயிர்
சிக்கிக் கொளுதடி நெஞ்செனு மண்புழு
சிதைவுற
தென்னை வரையும் குழந்தை
குள்ளமாகி வருகிறது
சீவும் பென்சில்
(சிறுகதை)
பத்தாம் இலக்க மலையில் தேயிலைக் கொழுந்து கிள்ளிக் கொண்டிருந்த ஆனந்திக்கு மனசெல்லாம் பிள்ளை மடுவத்திலேயே இருந்தது. பிரசவம் முடிந்த ஒரு மாதத்திலேயே குழந்தையை ஆயாவிடம் கொடுத்துவிட்டு வந்தவளுக்கு குழந்தையின் நினைவாகவே இருந்தது. வீட்டிலிருந்திருந்தால் இப்போதைக்கு இரண்டு முறைக்கு மேல் பால் புகட்டியிருப்பாள். பிள்ளையை நினைக்க நினைக்க அழுகையாய் வந்தது. கூடவே பால் சுரந்த மார்பு விம்மிப் புடைத்து வேதனையைக் கூட்டியது. பாலூட்டும் தாய் என்பதால் கங்காணி பதினொரு மணிக்குத்தான் அனுப்புவார். இப்போது மணி பத்து. இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கின்றது. அதற்குள் ஒரு ஐந்து கிலோ தேயிலையாவது கிள்ளியாக வேண்
முத்தத் துறைமுகம் தேடி
மோகக்கடலில் தத்தளிக்கும்
என் காதல் கப்பலுக்கு
உன் மூக்குத்தி வெளிச்சம்
கலங்கரை விளக்கம்!
*****************
முடிந்தவரைத் தன்பேரை முன்நிறுத்தப் பார்ப்பார்
முழங்குகின்ற வார்த்தைகளில் முழுப்பொய்யை வார்ப்பார்
இடிவிழுந்த மரப்பூவில் எழில்மாலைக் கோப்பார்
இரவின்மேல் பனித்துளியை இட்டதுதா னென்பார்
வடிந்துவிட்ட வெள்ளத்தில் வள்ளங்கள் ஓட்டி
வகைவகையாய் உதவியதில் வள்ளல்தா னென்பார்
கடிந்துநிற்கும் கேட்போரைக் கண்ணெடுத்தும் பாரார்
கதைமுடிக்கச் சொன்னாலும் காதெடுத்துக் கேளார்.
*
அடுத்தவரின் நேரத்தை அபகரிக்கச் செய்யும்
அடுக்கடுக்காய் பொய்களினால் அரங்கமழை பெய்யும்
எடுத்ததற்கும் குறைகுற்றம் ஏதேனும் நெய்யும்
இருப்போரின் செவியுணர்வை எரிச்சலிட்டுக் கொய்யும்
தடுப்பதற்கு ஆளிலையேல் தன
பூங்குயிலுக் துத்தேன் குரல்கொடுத்துக் காட்டிலுள்ள
மூங்கிலுக்குள் சங்கீதம் மூடிவைத்து – தீங்கிலாத்
தேனை மலருக்குள் தேக்கிவைத்துப் பார்த்தவனே
பூனைக் கெலிபடைத்தான் பார்.
நாணா திருப்பாளை நாவால் வலைத்திழுக்கும்
ஆணா னவர்தம் அகந்தைக்கோ - ஓணானை
வீணா யிழுத்தெடுத்து வேட்டிக்குள் ளிட்டதுவாய்
வாணா ளுலழுமொரு வாழ்வு
*******************
பங்கெடுக்க வா! பங்கெடுக்க வா!******************* பங்கெடுக்க வா!*******************வாடிக்கை யாக வருபவளே! வஞ்சியே!வாடிக்'கை யேந்தும் வசதியிலார் - தாடியொடு ஏங்கிக் கிடப்பதுபோல் ஏந்திழை யுன்னன்பிற் கேங்கிக் கிடக்குமனக் கூடு.*கூடும் மணநாளைக் கொண்டாட வென்றிதயக் கூடும் அலைபாய்ந்து கொல்லுதடி - ஊடுறுவி அம்புவிடும் காதலில் அன்புசெய நீயன்றோநம்பிவந் தென்னிதயம் நாடு. *நாடு குறிப்பிடும் நல்வயது கொண்டவளே!நாடுமென் னுள்ளம் நரகத்தே! - வீடு இருள்நீங்க வேண்டி இதயத்தே நீதான் திருவிளக் கேற்றியெனைத் தீட்டு*தீட்டுப் படுமென்றே தீண்டாமல் போகாதே தீட்டுன் விழியாலே தேவதையே! - மாட்டும் திருக்கயிறு ம
ஊன்றி எழுந்தே உயர்
நேரிசை வெண்பா
முன்னேறு மெண்ணம் முளைத்திடும் காலத்தில்
பின்தங்கி டாதே! பெரும்பயம் - உன்முன்னே
தோன்றி உடன்படா தோர்நிலைக் குட்படுத்தும்.
ஊன்றி எழுந்தே உயர். - மெய்யன் நடராஜ்
வாழ்த்துகள் மெய்யன் நடராஜ்!
வெண்பாப் புனைய முனைவோர் மேலேயுள்ள பாவினை வாசியுங்கள்.
தகுந்த எதுகையும், பொழிப்பு மோனையும் அமைத்தும், தக்க ஈற்றடியும் அமைத்தும் எழுதியிருக்கிறார்.
எந்த முயற்சியும் எடுக்காமல், தான் எழுதியதே பா என்று விவாதம் செய்யாமல், சீர்களையும், தளைகளையும், புணர்ச்சி விதியையும் அறிந்தும், காய்ச்சீர் வருமிடங்களில் இரு மாச்சீர்களை இணைக்காமலும், விளாங்காய்ச்சீர் வராமலும், கண்டபடி வகையுளி செய
======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்கள
மெய்யன் நடராஜ்
பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட
இன்னும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுகிறது..... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் ஒரு முறை காதலிக்கத் தோன்றுகிறது.....
"காதல் காதல் காதல்...... போயின்....... சாதல் சாதல் சாதல்...."
"அது................... சொல்லாமல்........ ஏங்க ஏங்க.......... அழுகை வந்தது...........................எந்தன் காதல் சொல்லும் போது சொல்லாமல் வந்த அழுகை நின்றது......"
"வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா.................. வந்து தழுவுது பார்......"
காதல்.........ம்ம்ம்ம்ம்............
கவிதைக்குள் நுழைந்து வெளி வராமலே போகும் காதலுக்குள்..... அவள்....
அவளுக்குள் நான்....
எங்களுக்குள் காதல்...
காதலுக