Samraj T - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Samraj T |
இடம் | : Bangalore |
பிறந்த தேதி | : 18-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 0 |
உங்கள் நண்பன்
அழகு அன்பை
அடியோடு மிதித்து
காசெனும் கனவை
கண்ணில் வைத்து
கற்பாய் காப்போம்
சட்டை வரியிலும்
வன்முறை செய்வோம்
ஆயுதமெனும்
ஆடை ஏந்தி
அசிங்கத்தின் அரசனாவோம் ..!!
அர்த்தமுள்ள சிந்தையை
தொட்டு பார்ப்பது
சிறுமை என்போம் ...!!
தேடி வரும்
மேலைநாட்டு கழிவை
வாங்கி வளர்ப்பது
பெருமை என்போம் ..!!
வாழ்க்கை வண்ணத்தை
வரிகளில் தந்த வானவில் - இனி
வண்ணமின்றி வறண்டு போகும்
எங்கள் வாசலில் ..!!
சிலவற்றை படிப்போம்
பலவற்றை திணிப்போம்
ஏதோ ஒன்றை படைப்போம்
படைப்பின் அர்த்தம் அறியோம் .!!
விழி அறியா சாதியை
வீதிக்கு ஒன்றாய் வைத்து
வெறிக்கொண்டு வாழ்வோம் ..!
மது
துர்நாற்றத்தால்
தூக்கி வீச முடியா
குப்பைகளை
தன்னறைலிருந்தே
தாமதமாய்
பாலிதீன் பையில்
கைது செய்து
தெரு முனையில்
சிறை வைத்தாய் ..!
அதை விடுதலை செய்து
அள்ளி செல்லும் அன்பனை
ஏளன பார்வையில்
ஏன் வைத்தாய் !!
நான்
பகலில் எல்லாம்
பழக்கடையாய்
இரவு முழுதும்
கொசு கடியில் ..!!
என்மேல்
குவித்த குப்பைகளை
குறைக்க வரும்
குணநலமே - உன்
நலத்தை காக்கும்
பொதுநலம் ..!!
அதோ
புயலின் அறிகுறி
இனி என்னோரம்
ஓடைகள் தினசரி ..!
என்னருகே
சத்தமில்லா சாக்கடைகள்
உடைந்தவுடன்
நதியை போல் நடமாடும்
அளவில்லா பாசத்தால்
அடிக்கடி ..!!
இதோ தடியுடன் ஒருவன்
சம்பள பணத
இமையோரம்
நின்ற நினைவுகளில்
சிலவற்றை சிறைபிடித்தேன் ..!
கோபமெனும் குழந்தை என்
தூக்கத்தை
துரத்தியப் போது ..!!
ஒரு துளி தேனே - உனை
வித விதமாய் காதல் செய்வேன்
பல வித பார்வையுடன் !!
அடிவான் நிலவை
அறுத்து எடுத்து
அருகில் வைத்தேன்
நீயென நினைத்து ..!!
அது அற்ப வாழ்வை
அழகாய் காட்ட
நீயதை
கருவிழியில்
கட்டி வைத்து
கலகம் செய்கிறாய் ..!!
உன் நினைவெனும்
என் போர்வையை
குளிரில் எரிந்து
சாம்பலாக சாபமிட்டாய் ..!!
சிந்தாமல் சிதறாமல்
விரல் தொட்டு - என்
புருவங்களுக்கிடையில்
திலகமானது அச்சாம்பல் ..!
கருமையின் பெருமை - உன்
கூந்தலின் கருமை - அ
தோழியே...
நீயும் நானும் ஒன்றாய் நடை
போட்ட வயல் வெளி...
ஓடி விளையாண்ட
பள்ளி வளாகம்...
நாம் சிரித்து பேசி மகிழ்ந்த
கல்லூரி வளாகம்...
ஒன்றாய் அமர்ந்து சென்ற
கல்லூரி பேருந்து...
என்முன்னே கை
நீட்டி பேசிய பெண்ணொருத்தியை...
நீ கை நீட்டி
அடித்தது...
கவலைகளை மறந்து
நாம் சந்தோசமாக சிறகடித்த...
நம் நட்பின் நினைவுகள்...
எனக்கு என்ன
தேவை என்று...
என் முகம் பார்த்தே
தெரிந்து கொள்வாய்...
அகத்தின் அழகு முகத்தில்
தெரியும் என்பார்கள்...
இதுதானோ...
சோகம் என்றால்
என் தோல் தட்டி...
உன் தோலில் சாய்ந்து
கொள்ள சொல்வாய்...
இன்று மைகள் ப
நான்
சாஞ்சி நிக்கும்
கதவோரம்
என்
நாணம் நவுந்து
தீவிரமா தீட்டும்
ஒத்த வெரல்
ஓவியம் ஏனோ ...??
உன்
வார்த்த செஞ்ச
வசியம் தானோ ...??
சேர்த்து வச்சுத
கொஞ்சம் கோர்த்து
தினமும் சூடி மகிழுறன் - நீ
சிதறி போன சிரிப்புகள ..!!
முகம் பாக்கும் கண்ணாடியிய
முத்தமிட்டு மொறைக்குறேன் ..!!
உன் கன்னமாச்சு கண்ணாடி
கன்னி என் கண்ணுக்கு ..!!
உன்
கன்னம் வேணா
காதும் வேணா
அந்த இதழு மேல
எட்டி பாக்கும்
ஒத்த முடி போதும்
கட்டி வச்சி
காதல் செய்ய ...!!
மொட்டாய் போன
என் முகமோ
மலர வேணும்
உன் முகம் பாத்து!
மங்கை என் மனச
மாயம் செஞ்ச கண்ணா ..!!
உன்
கூண்டில் பெண்மை
இருள்வானில் எழுந்துநிற்கும்
நிலவு தானே பெண்என்றாய்,
இருள் வாழ்வில் தனித்து நிற்பாய் என்று
ஒரு போதும் கூறவில்லையே!
மாவிலைத் தோரனத்துடன்
சொந்த பந்தம் சுற்றம் சூழ
வெட்கிச் சிவந்து கொண்டே நான்
மஞ்சள் தாலிக்குள் குடி புகுந்தேன்!
மாதம் மூன்று முடியும் முன்பே
மஞ்சள் தாலி காயும் முன்பே
மங்கலமான என் முகம்
மங்கிப் போனது ஏனோ!
சுவரொன்றில் தூசி கண்டு
சுட்டெரித்தாள் மாமியார்
சுவையொன்றும் இல்லையென்று
சுமை கொடுத்தாள் நாத்தனார்!
சுகந்திரம் கேட்டு நான்
சூறாவளியாய் எழுந்து நின்றேன்
சுமை தாண்டி வசந்தம் வருமென
எனை சுமந்தவள் சுகம் கொடுத்தாள் !
ஆகுமென்று கற்
குழந்தை வரம் வேண்டி
பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தாள் பத்தினி..
பொலி காளையாய்
எக்காளமிட்டு கெக்கெலி கொட்டி
உறுமுகிறான் மேகக்காரன்...
இடி !
வானப் பெண்ணின் விழித் தீயாய்
விட்டு விட்டு எரியுது...
மின்னல் !
அந்த மின்னல் தீயில்
உருகி ஊத்துது அந்த மேகமெல்லாம்
மழையாய்!
ஆனந்தக் கண்ணீருடன்
மோகனமாய் சிரிக்கிறாள்
வானப் பெண்
வானவில் !
நண்பர்கள் (6)

ஆக்னல் பிரடரிக்
சென்னை

rajathi rajasekaran
Coimbatore

ஆரோக்ய.பிரிட்டோ
இடையாற்றுமங்கலம்
