confidentkk - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  confidentkk
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  09-Nov-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  264
புள்ளி:  145

என்னைப் பற்றி...

அழகான வலிகளையும்,ஆழமான வரிகளையும் நேசிக்கும் இதயம் நான்......

என் படைப்புகள்
confidentkk செய்திகள்
confidentkk - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2014 11:45 pm


கவிதை ரசிக்க வந்தேன் அன்று.- ஒரு
கவிதையே ரசிக்கிறது எனை இன்று

--------------------------
இணையதளத்தில் இணைந்தேன்
ஓர் இதயத்தில் விழந்தேன்.

--------------------

-இரா.சந்தோஷ் குமார்.

மேலும்

ஹா ஹா... நீங்கள் தான் தோழரே மன்னா நான் வெறும் ஜின்னா 14-Nov-2014 10:35 pm
அருமை அண்ணா... 14-Nov-2014 6:51 pm
அப்படியா யாழ்மொழி :) மகிழ்ச்சி :) 14-Nov-2014 2:31 pm
என்ன யாழ்.? மிரட்டல் தொனியில் இருக்கிறதே..? :) 14-Nov-2014 2:02 pm
confidentkk - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 6:35 pm

அதிகம் யோசிக்கவேண்டாம்
இது கவிதையென்று
நான் சொல்லவில்லை.
ஆனாலும்
இது க’விதை..!


”கத்தி ”பேசினால்
சத்தம் வெடிக்கும்
யுத்தம் கிழிக்கும்
பதட்டம் வரும் -பின்பு
கெளரவம் உடையும்.

எந்த கத்தி ?
யோசிக்க வேண்டியது
உங்கள் புத்தி..!!!

-இரா.சந்தோஷ் குமார்

மேலும்

ஹா ஹா ஹா நன்றி அக்கா 06-Nov-2014 7:34 pm
அட ...!இதுகூடத் தெரியாதா? நா சொல்லமாட்டேன் என் நாக்கால .....அவ்ளோதான் என் கதியும் ....கத்திப் பேசமாட்டேன்.. 01-Nov-2014 11:04 pm
ஹா ஹா ... ம்ம்ம்ம் சமாளிப்புகேசன் ... :) நன்றி பிரியா 01-Nov-2014 12:59 pm
ஹா...ஹா...எனக்கும் தெரியுமே அண்ணா...! சொல்லமாட்டேனே??? ஏன்னா உங்களுக்கும் தெரியுமே. 01-Nov-2014 12:48 pm
confidentkk - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2014 9:17 pm

இப்போதெல்லாம்
எப்போதோ வீசும்
தென்றல் வினோதங்கள்
எந்தன் மேனியில்
உரசி சிலாகித்து
இனிப்பு ருசியறிந்து
பசியாறுகிறது.

பாவம்.!
இதற்கு முன்
தேனீக்களின் காட்டில்
தென்றல்
சென்றதில்லையாம்..!

ஓ தென்றலே...!
எப்போதும் நான்
கெளரவ கதவடைத்து
ஆசை ஜன்னலை
திறந்தே வைத்திருக்கிறேன்.

என் மீது
யாருமறியாமல்
மெளனாய் வீசு.
சத்தமாய் காதலி.
ஆனால்
மொத்தமாய் இல்லாமல்
கொஞ்சமாய் கொஞ்சமாய்
ரசனையோடு
என்னை கொன்றுவிடு.

நான்
இன்னும் இன்னும்
வாழ வேண்டும்
வாழ்ந்தே தீர வேண்டும்.

என் கன்னித்தென்றலே...!
எப்போதாவது வந்துவிடாமல்
எப்போதும் வந்துவிடு
யாரும் சொல்லத்தயங்கும்
ஆசைகளை கவிதையாய

மேலும்

என் மீது யாருமறியாமல் மெளனாய் வீசு. சத்தமாய் காதலி. ஆனால் மொத்தமாய் இல்லாமல் கொஞ்சமாய் கொஞ்சமாய் ரசனையோடு என்னை கொன்றுவிடு. நான் இன்னும் இன்னும் வாழ வேண்டும் வாழ்ந்தே தீர வேண்டும். வரிகள் அருமை அண்ணா..... 27-Oct-2014 7:47 pm
ரசனையான கவி அருமை தோழரே! 29-Sep-2014 5:13 pm
மிக்க நன்றி தோழமையே.. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு தளத்தில் தங்களை பார்க்கிறேன். நலமா ? 28-Sep-2014 11:04 pm
நன்றி தங்கையே :) 28-Sep-2014 11:03 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Oct-2014 3:44 pm

என் தேவதையின் கவிதை.

இசையொன்று
இசைத்திடும்
இசைகேட்டு - உன்னிதயம்
இசைந்துவிடக்கூடுமோ - யானதில்
இதம் காணலாகுமோ ?

வண்ணத்துப்பூசியென
வாலிபம்தான்
வசந்ததத்தை நாடுதே
வசப்படுமோ?

அசைவின்றி கிடந்தாலும்
சிலையழகு
அடித்துவிட்டு சென்றாலும்
அலையழகு

கடுந்தேறு
கொடுக்கெனவே - எனை
வெடுக்கேன்றுக் கொட்டினாலும்
உன் விழியழகு

உச்சிக்கிழனாக - எனை
உஷ்ணத்தில் நனைத்தாலும்
உள்ளாடும் அன்புதனில்
உயிர்குளிரச் செய்யும் - உன்
உறவழகு

கேட்கிறதா?

கண்ணனின் மறுபிறப்பே !
காமனுக்கு கலைகள்சொன்ன
கட்டழகே !

கேட்கிறதா?


உன்னிதயத் தின் வாசமெனை
இழுக்கிறதே !- என்
இளமையத னோசை

மேலும்

இதயத்தின் வாசம் எதுவோ? நுகர்ந்து விட்டீர்களா??? இளமையது யாழாக நாணம் அதன் நரம்பாக இச்சைராகம் மீட்கிறேன்.... எழுந்த இச்சை ராகம் என்னது அண்ணா??? 28-Dec-2014 9:41 pm
மிக மிக அருமை... அழகான வரிகளில் தேவதை ...அழகு.... இது கற்பனை என்பதுதான் குழப்பமா இருக்கு.....கற்பனையில் நிஜத்தை விட அழகா இருக்குது... 26-Dec-2014 11:31 pm
ஹா ஹா... ம்ம்ம்ம் நீ நடத்துமா நடத்து...!! 10-Nov-2014 10:33 am
அது கல்கட்டா காளி- பிழை பொறுக்கவும் ! 10-Nov-2014 10:29 am
confidentkk - confidentkk அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2014 7:32 pm

தனிமையின் வழியில்
நகர்கிறது
என் வாழ்நாட்கள்...

விழியோரம்
வலிகளின் ஈரம்
துளிகளாய் வழிய...

விடியும் பொழுதுகளில்
ஏக்கங்கள் நிறைய ..
வாழ்வோ கனலாக
வாழும் நாட்களோ
கானலாக..
சுற்றித்திரிகிரேன்
சுற்றமற்று .....

தோள் சாய்ந்திட யாருமில்லை
தோளில் சாய்ந்திட நீயும் இல்லை....

நான் போக பாதை இல்லை..
உடன் பயணிக்க எவரும் இல்லை...

எனக்கே
நான் யாரோ
எனக்காய் இனி யாரோ ?
என தோன்ற
என் தோற்றமோ
பொய்யாய் போக
நான் போகிறேன் !
மெய் மறந்து
என் பாதைகளில்,
விழிகளின் ஈரம் காயாமல் ,
நெஞ்சின் காயம் ஆறாமல்,
கண்ணீர்த் துளி வரையும்
கவிதைகளில்
வரி(லி)களாக .......

மேலும்

confidentkk - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2014 7:32 pm

தனிமையின் வழியில்
நகர்கிறது
என் வாழ்நாட்கள்...

விழியோரம்
வலிகளின் ஈரம்
துளிகளாய் வழிய...

விடியும் பொழுதுகளில்
ஏக்கங்கள் நிறைய ..
வாழ்வோ கனலாக
வாழும் நாட்களோ
கானலாக..
சுற்றித்திரிகிரேன்
சுற்றமற்று .....

தோள் சாய்ந்திட யாருமில்லை
தோளில் சாய்ந்திட நீயும் இல்லை....

நான் போக பாதை இல்லை..
உடன் பயணிக்க எவரும் இல்லை...

எனக்கே
நான் யாரோ
எனக்காய் இனி யாரோ ?
என தோன்ற
என் தோற்றமோ
பொய்யாய் போக
நான் போகிறேன் !
மெய் மறந்து
என் பாதைகளில்,
விழிகளின் ஈரம் காயாமல் ,
நெஞ்சின் காயம் ஆறாமல்,
கண்ணீர்த் துளி வரையும்
கவிதைகளில்
வரி(லி)களாக .......

மேலும்

confidentkk - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2014 7:25 pm

இயலாமை
இல்லாமை ஆகும் நாள்
எந்தநாளோ ?
அந்தநாளே
மானுடப்பிறப்பின்
உண்மையான வாழ்நாள்.....

மேலும்

confidentkk - kavitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2014 10:35 am

எனக்காக எதுவுமே இல்லை
என்று நானிருந்த வேளை
எனக்கான எல்லாவுமாய் வந்த
முதல் அன்பு
என் காதல்....

அதுவரை ரசித்ததில்லை
எதையும் நான்
அக்கணமே ரசிக்க ஆரம்பித்தேன்
என்னையே நான்....

என் உயிரின் உருவம்
எதிரே கண்டேன் !
மெய் சிலிர்த்து
நான் நின்றேன்....

விலக நினைத்த
நிமிடங்களில்,
விரும்பி நடந்தேன் ..
என் காதலின்
கரம் பிடித்து...

மறுமுறை பிறந்தேன் !
புதிதாக..
கருவறை சுகத்தை
மீண்டும் தந்த
என் காதலால்...
கல்லறை நான் சேரும் வரை
இதயக் கருவில்
பூத்திருக்கும் என்
காதல் பூக்கள் உதிராமல்
ஆதலால்....

அன்பின் தேடலுக்கு
எல்லை இல்லை..
என் தேடலுக்கு,
இமை படித்

மேலும்

உண்மைதான்.... நன்றி... 17-Nov-2014 6:35 pm
நன்றி.... 17-Nov-2014 6:35 pm
sகாதல் உங்கள் சுகம் சொந்தம் உரிமை இனிமை எல்லாமே உணர்ந்து விட்டால் சொர்க்கமாகும் உங்கள் வாழ்வு 16-Nov-2014 1:34 pm
காதல் இனிமை! காதலை உணர்ந்துகொள்வதே வாழ்க்கை!.. 16-Nov-2014 1:20 pm
confidentkk - confidentkk அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2013 9:18 pm

பிரிவின் தவம் கலைத்து
உன்னை பார்க்கும் அந்த நிமிடம்
வார்த்தை மௌனமாகும்
கண்ணீர் வார்த்தையாகும்..
என் நலம் நீ கேட்க
உன் நலம் நான் சொல்ல
உன்னை பார்க்கும் கனவு
நனவான சந்தோஷத்தில்
இதயம் துள்ளிகுதிக்க
இதழ்களை புன்னகை நனைக்க
இமைகள் உன்னை பார்த்தபடி
இமைக்காமல் என் நொடிகள் நகர
துடிக்காமல் என் சுவாசம் நிகழ
வசந்தம் வந்து அருகில் அமர
வாழ்க்கை வானை எட்டிபிடிக்க
கைகள் உன்னை பிடித்து
கால்கள் நலமாய்
நடைபோடும்
அன்பின் பாதையில்
அந்நாளில் உன்னோடு சேர்ந்து ....

மேலும்

நன்றி.. எப்போதும் இணைந்திருங்கள் நண்பா எழுத்துக்களில் கருத்தாய் 13-Nov-2013 5:48 pm
வாழ்த்துக்கு நன்றி தோழரே .. நம்பிக்கையோடு தொடர்வோம் நம் எழுத்து பயணத்தை 13-Nov-2013 5:46 pm
நன்றி தோழி.. உங்கள் கருத்து எப்போதும் வேண்டும் 13-Nov-2013 5:45 pm
நன்று! 09-Nov-2013 1:52 pm
confidentkk - confidentkk அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2014 5:24 pm

என் நாட்கள்
காகிதப்பூக்கள் ..

உன் நினைவெனும்
(சு)வாசம் தந்தாய்
ஆகையால் என்
நாட்கள் இன்று
உயிர் கொண்ட
வண்ணப்பூக்கள்...

மேலும்

நினைவே ஒரு சங்கீதம் என்று தூரத்தில் இருக்கும் என் மனைவிடம் தொலைப்பேசியில் தினம் பேசி ஆறுதல் கூறுவேன். நினைவே என் சுவாசம் என்று தோன்றியதில்லை. இன்றுமுதல் dialog change..! நினைவே என் சுவாசம்! 30-May-2014 6:37 pm
நன்று 30-May-2014 6:33 pm
மிக்க நன்றி 30-May-2014 5:48 pm
நன்றி 30-May-2014 5:48 pm
confidentkk - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2014 12:25 pm

உனக்காக வாழும்
நிமிடங்கள்
உணர்வுள்ளது..
உன்னோடு வாழும்
நிமிடங்களில் என்
உயிர் உள்ளது...

மேலும்

நன்றி... 27-Oct-2014 7:38 pm
அழகு... 18-Oct-2014 6:01 pm
confidentkk - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2014 1:00 pm

மலர்வதாய் நினைத்து
உதிரும் பூக்கள்
நாம் வாழும் நாட்கள்....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (18)

thozhi

thozhi

நாகர்கோயில்
Santha kumar

Santha kumar

சேலம்
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (18)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
மேலே