தமிழரண் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழரண்
இடம்:  நெடுவாசல் புதுக்கோட்டை
பிறந்த தேதி :  31-Dec-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Nov-2017
பார்த்தவர்கள்:  250
புள்ளி:  21

என்னைப் பற்றி...

உறவுகள் செறிந்த நட்பு கூட சாதிக்காற்றில் உதிர்ந்துதான் போகிறது .

என் படைப்புகள்
தமிழரண் செய்திகள்
தமிழரண் - எண்ணம் (public)
23-Dec-2021 1:10 am

கவிதை பயணம் ......

முகயிதழ் தழுவும் விரல்என  வருடும்   முதலில்

கல் சிகள்  வருடும் நகம்என  நெருடும்   முடிவில்
.....என் கவிதை பயணம்


னிதம் பிளவுபட மதம் 
 
இவன்  பிரிந்துபோக இறைவன்

கட்டிப்போட கட்டுப்பாடுகள் 

பிறரைச்சாரா கலாச்சாரம்

அன்பை அழிக்கும் பண்பாடு 

ஒற்றுமையை எரிக்க சாதீ

நட்பை முறிக்கும் நாகரிகம்..

இவற்றிற்கிடையில்

இனிமையாய் தொடங்கிய என் கவிதை பயணம் 

இத்தனையும் கடக்கும்போது வன்முறையாய் மாறிப்போகிறது...


மென்மை திளைக்கும் பூந்தமிழில் 

வன்மை நிறைந்த வார்த்தைகளும் உண்டு ....

மேலும்

தமிழரண் - எண்ணம் (public)
02-May-2018 3:50 pm

இந்தியா மதம் சார்ந்த நாடுதான்
மதசார்பற்ற நாடு அல்ல

மதங்களையும் கடவுளையும் பின்பற்றி 
மதசார்பற்ற நாடென்பது முறையல்ல

மதசார்பற்ற எனும் சொல்லுக்கே அர்த்தம் மாறிப்போகிறது .

மதங்களை கடந்த ஒற்றுமை வேண்டாம்

மதங்களை களைந்த  இந்தியா வேண்டும்

வேற்றுமையில் ஒற்றுமை வேண்டாம் ....


மேலும்

அரசியல் சூது காரணமாக மதம் நம்மை தொற்றிக்கொண்டது. முன்னோர்கள் எதிர்த்து இருக்க வேண்டும். தவறிவிட்டது. மதப்பழி விழுந்து நிறைய வருடம் போய் விட்டது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. 04-May-2018 3:54 pm
தமிழரண் - RANJEETHA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2018 9:37 am

கண்டதும் காதலில்
நம்பிக்கை இல்லை என்றிருந்தேன் ,
உன் கண்களில் விழும் வரை ..
நொடிகளில் விழ செய்தாய்
ஏனோ
இன்றும் எழ முடியாமல் ,
உருவம் இல்லா உன்னுடனான
என் முதல் காதல்
என்றும் உனக்காக ...

மேலும்

👍👍 03-May-2018 8:58 pm
உருவம் இல்ல மனதை போல என்னுள் நீ..... உணர்வுகளாய் 02-May-2018 12:57 pm
தமிழரண் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2017 2:21 am

=====================
தன்னை யார் குடிக்கவேண்டும் என்று
தண்ணீர் தீர்மானிப்பதில்லை.

தண்ணீர் யார் யார் எப்போது
குடிக்கவேண்டும் என்பதை
தாகமே தீர்மானிக்கிறது.

தாகிப்பவர்கள் எல்லோரும்
தண்ணீரை மட்டும் நம்பியில்லை.
தண்ணீரை மட்டும் நம்பி
தாகங்களும் இல்லை.

தாகங்கள் பலர் வாழ்க்கையைக் குடிக்கிறது
தண்ணீரும் பலர் வாழ்க்கையைக் குடிக்கிறது

பலர் உயிரைக் குடிக்கும் தாகம்
தாகத்திற்கும் தண்ணீருக்கும் இருக்கிறது.

தண்ணீர் குடித்து தாகம் தீர்த்த எவரும்
தண்ணீரின் தாகத்தை அறிந்ததுண்டோ..
தண்ணீரை பருகிவிடும் தாகம்
தாகத்திற்கு இருக்கிறது
தாகத்தைப் பருகிவிடும் தாகம்
தண்ணீருக்கும் இ

மேலும்

நன்றி 11-Dec-2017 2:23 am
உண்மைதான் ஐயா. 11-Dec-2017 2:23 am
இரைப்பையின் ஈரமின்றி காய்ந்து போகிறது தூர தேசத்தில் பல மனித உயிர்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 8:46 am
தண்ணீரும் தாகமும் உயிரினங்கள், செடிகொடிகள் அனைத்தும் உயிர்வாழத் தண்ணீர் மிகமிக அவசியம். ஆனால் ஆறறிவு படைத்த மனிதனுக்கே குடிக்கத் தண்ணீர் தர மறுத்தது . . விலங்குகளிடமும் அன்பு செலுத்துகிறவர்கள் என்று பெருமை பேசுகின்றவர்கள்தான் மனிதன் தாகத்தால் தவிக்கும்போதுகூடத் தண்ணீர் தர மறுத்தார்கள் 08-Dec-2017 5:30 am
தமிழரண் - தமிழரண் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2017 11:20 pm

கன்னி தமிழே தண்ணீருக்குள்....... 
பன்னி கூட்டங்கள் என் ஊருக்குள்... 
எத்தனை  வேறுபாடுகள் எம் சமூகத்தில் 
தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்ல இயலவில்லை இந்நேரத்தில்..... 
எம் ஆதி தமிழ் இனமே இருப்பிடமற்று அலறும் வேளையில் 

இங்கு 
இவர்களுக்கு மட்டும் எப்படி அருவியாய் கவிதை எழுத சிந்தனை தெளிவாகிப்போனது.. 

நாட்கள் கடந்து நம்பிக்கை நழுவிக்கொண்டு நாநீர் படாமல் நடுவீதியில் என் குடும்பங்கள்.. 

இங்கு 
நாய்களை அலங்கரித்து நடுவீதியை வழிமறித்து 
நாடக கூட்டங்களின் 
நாட்டை விற்கும் அரங்கேற்றத்திற்கு 
ஒத்திகை ஓட்டு சேகரிப்பு... 

இதற் மேல் எழுத தமிழே தடுமாறி அழுகிறது 

மேலும்

அருமை கோபமும் அழகு. கோபம் கொள் இல்லையேல் இந்த கயவர்கள் நம்மை இரையாக்கிவிடுவார்கள்.. 04-May-2018 3:32 pm
தமிழரண் - எண்ணம் (public)
08-Dec-2017 11:20 pm

கன்னி தமிழே தண்ணீருக்குள்....... 
பன்னி கூட்டங்கள் என் ஊருக்குள்... 
எத்தனை  வேறுபாடுகள் எம் சமூகத்தில் 
தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்ல இயலவில்லை இந்நேரத்தில்..... 
எம் ஆதி தமிழ் இனமே இருப்பிடமற்று அலறும் வேளையில் 

இங்கு 
இவர்களுக்கு மட்டும் எப்படி அருவியாய் கவிதை எழுத சிந்தனை தெளிவாகிப்போனது.. 

நாட்கள் கடந்து நம்பிக்கை நழுவிக்கொண்டு நாநீர் படாமல் நடுவீதியில் என் குடும்பங்கள்.. 

இங்கு 
நாய்களை அலங்கரித்து நடுவீதியை வழிமறித்து 
நாடக கூட்டங்களின் 
நாட்டை விற்கும் அரங்கேற்றத்திற்கு 
ஒத்திகை ஓட்டு சேகரிப்பு... 

இதற் மேல் எழுத தமிழே தடுமாறி அழுகிறது 

மேலும்

அருமை கோபமும் அழகு. கோபம் கொள் இல்லையேல் இந்த கயவர்கள் நம்மை இரையாக்கிவிடுவார்கள்.. 04-May-2018 3:32 pm
தமிழரண் - Reshma அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2017 7:43 pm

படித்ததில் பிடித்தது ............................
உன்னிடம் பேச நினைக்கும்
வார்த்தையெல்லாம் பேசாமல்
புதைத்து வைக்கிறேன்.......................
இன்று..என் இதயமே
கல்லறையாக..........................

மேலும்

அருமை !!!!!!!!!! 06-Dec-2017 3:14 am
காதல் 02-Dec-2017 1:57 am
தமிழரண் - Reshma அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2017 7:55 pm

ஒரு வார்த்தையாவது அவனைப்பற்றி
பேசமாட்டேனா என ஏங்குகிறான்...!
பாவம் அவனுக்கு தெரியவில்லை........................
நான் எழுதும் எல்லா
வார்த்தைகளும் அவனுக்காகவே...........என்று !

என்..
மௌனம் உன்னை கொல்லுகிறது.............
மனம் என்னை கொல்லுகிறது..........
இப்படி பேசாமல் போகிறாயே பாவி .........என்று !

உன்னை மட்டுமல்ல ..
உன்னை சார்ந்த எதை பார்த்தாலும்
என் இதயம் துடிக்கிறது.....
உன்னையயே பார்த்தது போல் ............

உயிரே சொல்லாமல் போகிறேன்.....
உன் நினைவுகளை என்
வாழ்நாள் முழுவதும் அள்ளிக்கொண்டு..........!

மேலும்

நன்றி anna 06-Dec-2017 6:29 pm
அருமையான வெளிப்பாடு தோழி !!!!! இன்னும் பல கவிதைகள் எழுதுங்கள் வாழ்த்துக்கள் !!!! 06-Dec-2017 3:12 am
நன்றி அண்ணா ......நான் தீக்குளிக்க செல்லும் போது அவன் நினைவுகள் தண்ணீரை மாறி தடுக்கிறது .... 03-Dec-2017 11:30 am
நான் தண்ணீரில் மூழ்கும் போதும் அவள் நினைவுகள் என்னை தீக்குளிக்கச் செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 10:58 am
தமிழரண் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2017 1:23 am

சாதியை கொண்டாடும்
எந்த ஒரு அற்பனும்
தமிழனின் கலாச்சாரம் பண்பாட்டை
பேச தகுதி அற்றவன்தான்.

இன்று,
எம் தமிழ் கலாச்சாரமும் பண்பாடும் சிதைவுற்று போனதற்கு காரணமே
இந்த
சாதிய கூட்டம்தான்.
ஒன்றிணைந்த எம் மரபில்
சாதிய நஞ்சினை கலந்து பிரிவினை செய்து விட்டு ஒவ்வொருவனுக்கும் தனி குலத்தொழில், வாழ்வுமுறை, சாதிப்பெயர், வேறுபட்ட பழக்கவழக்கம், வெவ்வேறு கலாச்சாரத்தை புகுத்திவிட்டு,
ஒவ்வொருவனையும் அடித்து கொள்ளச்செய்துவிட்டு பல நூற்றாண்டுகளாய் பல்வேறு பண்பாடு தோன்ற காரணமே எங்கிருந்தோ வந்து இன்று பண்பாடு பேசும்
இந்த
சாதிய நாய் கூட்டம்தான்,....


ஒவ்வொரு தமிழனும் உணர்ச்சிவடபடாமல் சற்ற

மேலும்

தமிழரண் - தமிழரண் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2017 1:15 am

சாதி முக்கியம்
சாதி அடையாளம்...................................................... . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . .  

சாதியை கொண்டாடும் 
எந்த ஒரு அற்பனும் 
தமிழனின் கலாச்சாரம் பண்பாட்டை
 பேச தகுதி அற்றவன்தான். 

இன்று, 
எம் தமிழ் கலாச்சாரமும் பண்பாடும் சிதைவுற்று போனதற்கு காரணமே
 இந்த 
சாதிய கூட்டம்தான். 
ஒன்றிணைந்த எம் மரபில் 
சாதிய நஞ்சினை கலந்து பிரிவினை செய்து விட்டு ஒவ்வொருவனுக்கும் தனி குலத்தொழில், வாழ்வுமுறை, சாதிப்பெயர், வேறுபட்ட பழக்கவழக்கம், வெவ்வேறு கலாச்சாரத்தை புகுத்திவிட்டு,
ஒவ்வொருவனையும் அடித்து கொள்ளச்செய்துவிட்டு பல நூற்றாண்டுகளாய் பல்வேறு பண்பாடு தோன்ற காரணமே எங்கிருந்தோ வந்து இன்று பண்பாடு பேசும்   
இந்த 
சாதிய நாய் கூட்டம்தான்,.... 


ஒவ்வொரு தமிழனும் உணர்ச்சிவடபடாமல் சற்று சிந்திக்க வேண்டும். 
நம் தமிழ் பல்லாயிரம் வருட பாரம்பரியம் கொண்டதென்று சொல்கிறோம். 
நம் மொழி தோன்றியபோது எத்தனை மனிதன் வாழ்ந்திருப்பான். 
இன்றைய மக்கள்தொகை வளர்ச்சியினை அப்படியே பின்னோக்கி கழித்து பாருங்கள். 
ஒரு சிறு கூட்டம்தான் இன்று இவ்வளவு வளர்ந்திருக்கிறது. 
இதில் சாதி எப்போது தோன்றியது
 ஒரு வேளை சாதியும் மதமும் அப்போதே தோன்றியிருந்தால்
 இன்று சாதியின் எண்ணிக்கையை எண்ண முடியாதல்லவா. 

சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் இனத்தில் புகுந்த நயவஞ்சக கூட்டம் இறுகிய இத்தமிழ் சமூகத்தினை சாதியால் வெவேறாக பிரித்து மோதிக்கொள்ள செய்து தனது இனத்தை நிலைநிறுத்தி கொண்டது. 
அந்த ஈன சமூகம்தான் இன்று சாதியை வீதிகளாய் பிரித்து வைத்துள்ளது. 
சாதி வீழ்ந்து விட்டால் தமிழினம் ஒன்றிணைந்து மிகப்பெரும்   வலிமை அடைந்துவிடும். 
இதில் உண்மை இல்லையா? 

வெவ்வேறு சாதிக்காரன் தொட்டுக்கொண்டல் அவர்கள் இறந்து போவதில்லை. அவன் வீடு இடிந்து போவதில்லை. ஒரு சாதிக்காரனின் கால் பட்ட நெல்தான் இன்னொரு சாதிக்காரனின் சாப்பாட்டில் உள்ளது அதனால் தீட்டுப்பட்டு அவன் மாண்டு போவதில்லை. 

ஆனால் இது நடந்துவிட்டால்  இன்று வரை சாதிய தீயில் குளிர் காயும்  அந்த நாறிய சமூகம் நடுங்கியே செத்துப்போகும் இதுதான்  உண்மை.


இதை விட்டு விட்டு
 சாதி உயர்ந்தது பரம்பரியமானது வரலாறு கொண்டது என்று அந்த அற்பர்களின் சூழ்ச்சி வார்த்தைகளை பற்றிக்கொண்டு வீழ்ந்து விடாதீர்கள்.
 
சாதியும் மதமும் உன் கலாச்சாரம் இல்லை
தமிழுணர்வை மிஞ்சிய வீரமும் இல்லை
 
தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க இயலாதவனே 
சாதியை அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்கிறான்

உலகறியவேண்டிய நல்ல தலைவர்களின் வரலாறுகூட சாதிக்கூட்டத்தால் வீதியின் பெயர்பலகையோடு முடிந்துபோகிறது

மேலும்

தமிழரண் - மனிதன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 6:39 pm

ஜாதியை ஒழிக்க என்ன வழி?

மேலும்

அவனவன் தமிழ் கலாசாரம் என்கி றான். ஆனால் எது தமிழ் கலாசாரமென்று இதுவரை எவனும் நிர்ணயம் செய்யவில்லை. அவனவன் சொல்வதை அவனே ஏற்று நடப்பதில்லை. பழையனக் கழி ந்து பல காலம் ஆகிறது. 31-Dec-2019 10:57 am
உ ங் கள் கருத்தை ஏற்கன்வே MGR சொன்னதற்கு எல்லா கட்சியும் சேர் ந்து எகிறினார்கள் அது உமக்கு தெரியாது போலும் 31-Dec-2019 10:50 am
சொட்டு மருந்தால் எப்படி மொத்தப் போலியோவையும் ஒழிக்க முடியாதோ அதுபோலதான் ஜாதியும். ஜாதி அப்படியும் உயிர் வாழும். 31-Dec-2019 10:44 am
பெட்டி பெட்டியாக பணத்தை கொடுத்து சாதிய கட்சிகளை உருவாக்கிய, சாதிய கட்டமைப்புகளை உருவாக்கிய திராவிடக்கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். 18-Nov-2019 12:06 pm
தமிழரண் - Kathit அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2017 6:20 am

En ammavai nan oppatha sariya tavara

மேலும்

எழுத்தே இந்தக் கேள்வியை நீக்கிவிடலாம் . ஏன் கட்டத்தில் பிளாஷ் செய்து கொண்டிருக்கிறது ? தெரிந்து செய்த செயலா அல்லது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ? அண்ணாச்சி திருத்தினால் சரி . 21-Nov-2017 9:22 am
உங்கள் கேள்வியை திருத்தும் செய்யுங்கள் .அல்லது நீக்கிவிடுங்கள். 20-Nov-2017 6:36 pm
அம்மாவை ஆத்தா அப்பாத்தா என்று சொல்வது வட்டார வழக்குகள் , தவறொன்றும் இல்லை . ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை என்று அபிராமி பட்டர் அச்சொல்லை இலக்கியப் பாடலிலேயே பயன்படுத்தியுள்ளார் . 20-Nov-2017 9:36 am
புரியும்படிச் சொல்லுங்கள்; பேசுவதாவது தெளிவாகப் பேசுவீர்கள் அல்லவா? 19-Nov-2017 7:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
HSHameed

HSHameed

Thiruvarur

இவர் பின்தொடர்பவர்கள் (31)

semina

semina

coimbatore
PRIYA

PRIYA

புதுக்கோட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (30)

வாசு

வாசு

தமிழ்நாடு
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
சுரேஷ் சிதம்பரம்

சுரேஷ் சிதம்பரம்

பென்னகோணம், பெரம்பலூர் மா

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே