கௌரிசங்கர் மாது - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கௌரிசங்கர் மாது
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  05-Aug-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Aug-2015
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  37

என் படைப்புகள்
கௌரிசங்கர் மாது செய்திகள்
நவின் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Nov-2015 1:28 pm

தன்னவளை
காணவில்லை
கோபத்தில்
கத்துகிறான் இடியாக.....
காதலால்
கதறுகிறான் மழையாக.....
(அழுகிறான்)
அவனும் அறிந்திருக்கவில்லை
அவளும் அறிவிக்கவில்லை
அம்மாவாசை அன்று
அவள் விடுப்பு என்று

மேலும்

நன்றி அண்ணா... 02-Nov-2015 4:34 pm
நல்ல சிந்தனை 02-Nov-2015 2:23 pm
நன்றி அண்ணா, 02-Nov-2015 1:46 pm
இந்த ஒருதலைக் காதல் அமில வீச்சுக்கு ஆட்ப்படாது. 02-Nov-2015 1:25 pm
கௌரிசங்கர் மாது - மு குணசேகரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2015 12:44 pm

சமீப காலமாக இணைய தளத்தின் வாயிலாக அறிமுகமாகும் நட்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது அப்படிப் பட்ட நட்புகளை நம்பி உதவுவது சரியா ? தவறா ?...

மேலும்

சரியாகச் சொன்னீர்கள் 👏👏👏 04-Nov-2015 11:11 pm
SUMMA Senji than parungalen..(shothappina freeya udunga.) 04-Nov-2015 11:12 am
கெல்வியெ தவரு இணி உத்வினாலும் அது சேராது, 02-Nov-2015 1:43 pm
ஆழம் தெரியாமல் காலை விடாதே. 31-Oct-2015 10:43 am
பி.வேலுச்சாமி அளித்த படைப்பில் (public) Anuananthi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Oct-2015 12:59 am

ஆதாம் ஏவாளை
சந்தித்த போது
அவர் ரத்த நாளங்களில்
ஏற்பட்ட அதிர்வுகள்
என் மொத்த நாளங்களிலும்
எதிரொலிக்கிறது
உன்னை கண்டதில்


நீ இமை
திறக்க வேண்டாம்
இதழ் திறக்க
வேண்டாம்
முகம் காட்டு போதும்
முற்போக்கு சிந்தனையாளன்
முட்டாள் ஆவான்


நீ ஓரப்பார்வை
வீசும் போது
இதயத்தில் இடியே
இறங்கினாலும்
இதமாக தான் இருக்கும்

உன்னை சந்தித்த பின்
என் நாட்காட்டியின்
நாட்கள் குறைகிறது
கடிகார முட்கள்
பின்னோக்கி நகர்கின்றன


என் இமைகள்
பகலை இரவாகவும்
இரவை பகலாகவும்
நம்பி கொண்டு இருக்கிறது



உன் கண்கள்
சிவப்பதற்கும்
உன் கண்ணம்
சிவப்பதற்கும்
அர்த்தம்
அறியாதவனா நான் ???

மு

மேலும்

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி என் நட்பூக்களே 13-Nov-2015 6:20 pm
வரிகள் இழுக்கிறது வா வா நீ காதல் செய் என ... வாழ்க வளமுடன் 09-Nov-2015 1:10 pm
படைப்பு நன்று . வாழ்த்துக்கள் 09-Nov-2015 10:21 am
அடடா! அழகு..... 08-Nov-2015 10:48 pm
கௌரிசங்கர் மாது - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2015 3:19 pm

`கடவுளுடைய திருநாமம் பேசப்படும் இடமெல்லாம் புண்ணியத் தலங்களே’.
இவ்வாறு இருக்க, அவர் திருநாமத்தைக் கூறுகிறவர் எவ்வளவு புண்ணிய வடிவாய் இருக்க வேண்டும்?

தெய்விக உண்மையைப் புலப்படுத்தும் அவரிடம் நாம் எவ்வளவு பக்தியுடன் இருக்க வேண்டும்?

ஆனால், உலகத்தில் ஆன்மிக உண்மையை அளிக்கும் மகான்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்கள் இல்லாமல் உலகம் ஒருமிக்க வாழவும் இயலாது. மானிட வாழ்க்கையின் அழகுமிக்க மலர்கள் அவர்கள்; `தமக்கென்று நோக்கமெதுவுமில்லாத கருணா சமுத்திரம்!’.

`குருவை நான் என்று அறி’ என்று கிருஷ்ண பகவான் பாகவதத்தில் பகருகிறார். இத்தகையோர்கள் எந்தக் கணம் முதல் இல்லாமல் போகிறார்களோ அப்பொழுதே உலகம் ப

மேலும்

வசந்த நிலா அளித்த படைப்பில் (public) vasantha nila மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Oct-2015 12:59 pm

விலா எழும்பு உடைய பயணித்து
விழா கொண்டாடி
விருதும் வாங்கி..
நண்பர்கள் சந்தித்து..
புகைப்படம் எடுத்து..
வீடுதிரும்புகையில்..
இரயிலில் ஜன்னல் இருக்கை கிடைத்து..
உறங்கிச்சாயும்போது கைநழுவியது..
யாரும் கைதட்டாமல்
வாங்கியவிருது.!

மேலும்

களைப்பில் பறிபோனதோ சற்று வருத்தம்தான் வாழ்க்கைப் பயணம்........ 24-Dec-2015 9:33 pm
கௌரிசங்கர் மாது அண்ணா நன்றி அனுஆனந்திக்கும் என் நன்றி 23-Oct-2015 3:29 pm
நன்று 23-Oct-2015 2:37 pm
அடடா!! சூப்பர்... 23-Oct-2015 1:45 pm
கௌரிசங்கர் மாது - கௌரிசங்கர் மாது அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2015 8:12 am

இக்கால
நட்பென்பது
எதிர்பாராமல்
தொடங்கி
எதிர்பார்ப்புடன்
முற்றுகிறது
எதையோ
எதிர்பார்த்து
கிடைக்காமல்!

மேலும்

கௌரிசங்கர் மாது - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2015 8:12 am

இக்கால
நட்பென்பது
எதிர்பாராமல்
தொடங்கி
எதிர்பார்ப்புடன்
முற்றுகிறது
எதையோ
எதிர்பார்த்து
கிடைக்காமல்!

மேலும்

கௌரிசங்கர் மாது - இராசேந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2015 9:16 am

குழப்பமாய் இருந்தாலும்
இலக்கணம் இப்போதெல்லாம்
நன்றாகப்புரிகிறது
உன்னைக்காதலிக்க
ஆரம்பித்த பிறகு...!

செயலைக்குறிக்கும் சொல்
வினைச்சொல்லாமே....
இருந்தாலும் புரியவில்லை..

காதல் என்பது வினைச் சொல்லா ?
அல்லது
காதலித்தல் என்பது வினைச்சொல்லா ?

வயல்வெளி அரங்கத்தில்
ஆயிரக்கணக்கான பயிர்களின்
மத்தியில் முடிவுறாப் பட்டிமன்றம் நடக்கிறது
மூன்றாம் கட்ட அறுவடையும்
முடிந்து போனது..!
முடிவு தெரியாமல் இன்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது பட்டிமன்றம்....!..!

ஒருவேளை காதல் என்பது
கா....த்...த்...த்...த்...திருப்பு
என்று சொல்வது இதனால்தானோ..!

குடும்பச்சூழ்நிலை விதிவிளையாட்டில்

மேலும்

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. என் சிறு அறிவுக்கு எட்டியவைகளையும், வயல்வெளிப் பணியில் மனதில் தோன்றுபவைகளையும் கோர்த்து சாதாரணமாக எழுதுகிறேன். நிச்சயம் எழுத்துப்பிழை இருக்காது என நினைக்கிறேன்.. பள்ளிப்படிப்பும் பாதியில் நின்றுபோய் விட்டதால் இலக்கணத்தில் கருத்தில் பிழை இருக்கலாம். பிழை எங்கிருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.என் படைப்புகளை செப்பனிட நிறை குறை சொல்லி வழிப்படுத்துங்கள். 17-Oct-2015 11:37 pm
உங்கள் விவசாய அனுபவ அறிவின் முன், புத்தக அறிவு ஒன்றுமேயில்லை ! அப்புறம்...அவங்கதான் உங்க படிப்பு ஆர்வத்துக்கு காரணமா ? படிக்க வில்லையென்று சொல்லிக்கொண்டு...கவிதையும், காதலும் கலந்து.... இலக்கணத்தில் பெரிய ஆராய்ச்சியே பண்ணியிருக்கீங்க ! காதல் இலக்கணத்தில்...கவிதை...கலக்கிடீங்க ! 17-Oct-2015 11:16 pm
கடிதத்தை பார்க்க ஆவலுடன்....காத்திருக்கிறேன்....அண்ணா.... 17-Oct-2015 9:29 pm
அருமை! 4 வரிகள் படித்தவுடனே எழுதியது நீங்களாக தான் இருக்கும் என்று நினைத்தேன். இலக்கணம் அருமை. இலக்கண கவிதையும் அருமை. 17-Oct-2015 9:06 pm
உதயகுமார் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Oct-2015 5:14 pm

என் புவியுலக பயணம்
முடியும் தருணத்தில்
மிஞ்சியிருந்த சில மாதங்களை
நான் எண்ணிக்கொண்டிருந்தேன்

எவர் எவரோவின்
தேவைகளையெல்லாம் தேடி கண்டுபிடித்தும்
நிம்மதி மட்டும் என் தேவைகளின் பட்டியலில்
நீண்டுகொண்டே இருந்தது

மிச்சமிருந்த நாட்களிலாவது
நிம்மதியை கண்டுபிடிக்க
துறவு வாழ்வில்
புகுந்துவிட்டேன்

மாளா ஆசைவொன்று
மீண்டும் என்னை
புதியதோர் பட்டியலில்
அணைத்துக்கொண்டது

துறவினை வெறுத்து இன்றே
என் பயணத்தை முடித்துக்கொள்ள
என் வாழ்வின் இறுதி
நொடிகளை நோக்கி பயணித்தேன்

எவனோ ஒருவன்
என் பாதையில் குறுக்கிட்டு
எதையோ சொல்லி சொல்லி
தன் வயிறினைத் தட்டிக் காட்டினான்

மேலும்

உண்மைதான் அம்மா அறிவேன் நானும் தங்களின் வாழ்த்தில் மிக்க மகிழ்ச்சி தாங்கள் கூறிய அந்த கவிஞ்சன் என்ற ஒரு மகுடத்திற்க்காக தான் இவ்வளவு போராட்டம் நான் கவிஞ்சனோ இல்லையே என்னால சில மனதினை எழுத்தால் கவர முடிகிறது அதுவே போதும் எனக்கு மிக்க நன்றி அம்மா வருகைக்கும் புரிதலான கருத்திற்கும் 20-Oct-2015 8:40 pm
தங்கள் வருகைக்கும் புரிதலான கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா 20-Oct-2015 8:34 pm
நீங்கள் கொடுத்த அந்த சில ரூபாய் நோட்டுக்கள் நிம்மதி தரும் துளிகள், ஏழையின் வயிற்றுப் பசி ஆற்றிட கொடுத்திட்ட மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கவிஞரே 20-Oct-2015 8:33 pm
தத்துவம் மிளிரும் அருமையான சிந்தனை நண்பரே 20-Oct-2015 8:19 pm
கௌரிசங்கர் மாது - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2015 2:23 pm

உன்னழகினை
பார்த்து பணிந்து தான்
இயற்கையே
கர்வ மிறங்கி
வானவில்லின்
வண்ணங்களை
உந்தன்
நிறம் தவிர்த்து
ஏழாக
குறைத்து கொண்டதோ?

மேலும்

நன்றி 22-Oct-2015 2:04 pm
ஏழாக குறைத்து கொண்டதோ? இருக்கலாம் கவிதை படித்த பின்பு...வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 22-Oct-2015 10:27 am
மிக்க நன்றி 16-Oct-2015 5:17 pm
மிகவும் அருமை...! 16-Oct-2015 5:12 pm
கௌரிசங்கர் மாது - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2015 7:18 pm

உன்னழகினை ரசிக்கும்
மனம் இல்லை!
நீ எனை ரசித்திடவே
ஏக்கம் கொண்டேன்!
உன்னை கற்பனையில்
காதலிக்க ஆசை இல்லை!
உனக்குள் கரைந்திடவே
நான் கற்பனை கொண்டேன்!
யாரோ ஒருத்தி யென்று
ஏற்கும் எண்ணம் இல்லை!
கடைசி நொடியும்
உனக்கென வாழ்ந்திடவே
காதல் கொண்டேன்!

மேலும்

கௌரிசங்கர் மாது - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2015 2:26 pm

நீயில்லா
தனிமை தரும்
உனது நினைவுகள்
ஏனோ
சுகமானது தான்!
வலிகள் தரும்
கண்ணீர் துளிகள்
மனதினை கடந்து
கண்களையும் தாண்டி
பயணிக்கிறது
பாதைக ளின்றி
உன் அன்பிற்காக!

மேலும்

வரிகளில் காதலின் வலி ! கவிதை நன்று ! வாழ்த்துகள் தோழமையே ! 06-Jan-2016 4:43 pm
நன்றி 13-Oct-2015 2:56 pm
வலி சுமக்கும் வரிகள் ........நன்று 13-Oct-2015 2:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மதன்ராஜ்

மதன்ராஜ்

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (22)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (21)

கவின்

கவின்

ஈரோடு
ராஜா ஜெயங்கொண்டம்

ராஜா ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்ட சோழபுரம் ,
மேலே