Nicholas patrick - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Nicholas patrick |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 01-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 8 |
உன்னை நினைக்கும் நேரங்களின்
இசையும் கவிதையும்,
அந்தக் கணங்களில் பெருகும் அன்பும்,
என் மனதின் சுவர்களில் படரும் வலியும்,
எனக்கும் என் அறையில் நிறைந்திருக்கும்
காற்றுக்குமே தெரியும்.
என்றாவதோர் நாள்
அந்தக் காற்றை நீயோ,
அக்காற்று உன்னையோ
சந்திக்க நேர்ந்தால்
அதனிடம் எதுவும் கேட்டு விடாதே.
ஒருவேளை நீ கேட்டு விட்டால்
நமக்குள்ளான இடைவெளியின் நீளத்தை,
நம் அன்பின் நரம்புகளில் வழியும்
இசையின் துயரத்தை,
உன் காதலின்
வெம்மையால் தகிக்கும்
என் ஆன்மாவின் சிறகடிப்பை
நான் உன்னை நினைக்கும்
நேரங்களின் கவிதையை
அக்காற்று கூறக் கேட்டால்..
இதயத்தின் நாண்களில்
துயரம் ஏற
உன்னை நினைக்கும் நேரங்களின்
இசையும் கவிதையும்,
அந்தக் கணங்களில் பெருகும் அன்பும்,
என் மனதின் சுவர்களில் படரும் வலியும்,
எனக்கும் என் அறையில் நிறைந்திருக்கும்
காற்றுக்குமே தெரியும்.
என்றாவதோர் நாள்
அந்தக் காற்றை நீயோ,
அக்காற்று உன்னையோ
சந்திக்க நேர்ந்தால்
அதனிடம் எதுவும் கேட்டு விடாதே.
ஒருவேளை நீ கேட்டு விட்டால்
நமக்குள்ளான இடைவெளியின் நீளத்தை,
நம் அன்பின் நரம்புகளில் வழியும்
இசையின் துயரத்தை,
உன் காதலின்
வெம்மையால் தகிக்கும்
என் ஆன்மாவின் சிறகடிப்பை
நான் உன்னை நினைக்கும்
நேரங்களின் கவிதையை
அக்காற்று கூறக் கேட்டால்..
இதயத்தின் நாண்களில்
துயரம் ஏற
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....
பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....
இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட
கிழிந்து தொங்குமென் கோமணத்து
ஓட்டைகளைத் தைக்க...தேடினால்
"காதறுந்து கிடக்கின்றன ஊசிகளும் "
எம் வாழ்வைப் போல் ..?
எலிக்கறித் திண்ணும்
எம் வாழ்வாதாரம் மறந்து
எம் தேசத்து கனவுகளையெல்லாம்
எட்டிமிதித்து ...நாளும்
ஊமைவேசம் போடுகின்றன
அரசியல் நையாண்டிகள் ?
நாற்காலியின் நான்கு கால்களுக்கு
உரமாகப் பலியிட்ட
உயிர்களின் வலிமறந்து
வீராப்பு பேசுகின்றன
வீணர்க்கூட்டம் ...
வயல்களையும் ..வரப்புகளையும்
வெட்டிக் கூறுபோட்டு
சுட்டுச் சுடுகாடாக்கிவிட்டு
சுயநலமீசை முறுக்குகின்றன
தொழிற்கூடங்கள் ...
மொத்த தலைமுறைக்கும்
சொத்து சேர்த்தும்
கடைசிப் புறம்போக்கையும்
கரம்பற்றத் து
கௌரவத்திற்காகக் கொல்லப்பட்ட பெண்ணின்
அழுகிய தேகத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது சாதிவெறி;
மனிதக்கழிவை கையால் சுத்தம் செய்யும்
சாதிக்காரனின் நாற்றத்தில் மணக்கிறது மனிதம்;
திருமணமான முதல்நாளில் திடீரென மூண்ட மதச்சண்டையில்
கணவனின் கண்ணெதிரே வன்புணர்வு செய்யப்பட்ட
அச்சகோதரி இறந்து விடக்கூடும் இன்னும்சில நொடிகளில்;
காய்ந்த விழியில் ஏக்கம் வழியக் காத்திருக்கும்
அத்தாயில்லா சிறுமிக்குத் தெரியாது
சாதிக்கலவரத்தில் அவள்தந்தை மாய்ந்த செய்தி;
இதுபோல் துயரம் இன்னும் ஆயிரம் சாதிமதத்தால்;
சாதிமத துயரம்கண்ட இறைவன்
புது அவதாரம் பூண்டான்; பூமிக்கு வந்தான்;
‘சாதி மதமென்று தருக்கித்
கௌரவத்திற்காகக் கொல்லப்பட்ட பெண்ணின்
அழுகிய தேகத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது சாதிவெறி;
மனிதக்கழிவை கையால் சுத்தம் செய்யும்
சாதிக்காரனின் நாற்றத்தில் மணக்கிறது மனிதம்;
திருமணமான முதல்நாளில் திடீரென மூண்ட மதச்சண்டையில்
கணவனின் கண்ணெதிரே வன்புணர்வு செய்யப்பட்ட
அச்சகோதரி இறந்து விடக்கூடும் இன்னும்சில நொடிகளில்;
காய்ந்த விழியில் ஏக்கம் வழியக் காத்திருக்கும்
அத்தாயில்லா சிறுமிக்குத் தெரியாது
சாதிக்கலவரத்தில் அவள்தந்தை மாய்ந்த செய்தி;
இதுபோல் துயரம் இன்னும் ஆயிரம் சாதிமதத்தால்;
சாதிமத துயரம்கண்ட இறைவன்
புது அவதாரம் பூண்டான்; பூமிக்கு வந்தான்;
‘சாதி மதமென்று தருக்கித்
இமயமுதல் குமரிவரை தமிழ்கூறிய நல்லுலகு
கல்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழர்
நலிந்து போவரோ நாளை இவரென
நெஞ்சு பதைக்குது தமிழரே கேளீர்
காப்பியனும் வள்ளுவனும் சங்கப்புலவர் பெருமக்களும் கைப்பிடியாய்க் கூட்டிவர
இளங்கோவும் சாத்தனும் கவியுயர்க் கம்பனும் கன்னியவளைக் கரைசேர்க்க
திருமுறையும் திவ்யபிரபந்தமும் ஊட்டி வளர்த்துஉருக் கொண்டவள்
எம்பாரதியும் அவன்தாசனும் எண்ணிலா தீந்தெய்வப்பெருமக்களும்
தேனமுதும் பாலமுதும் தந்துயர, கலையொளியும் நல்லகமொளியும்
தேகமுழுக்க வீசித் தென்பரதக் கண்டமிதில்
தேவாட்சி நடத்தியஎம் தெய்வப்பெண் தேய்ந்துபோன நிலைபாரீர்
பொன்மஞ்சளும் பூச்சூடிய கூந்தலுமி
வணக்கம் தோழர்களே....
மீண்டுமொரு புத்தாண்டின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
வருடாவருடம் அண்ணன் நிலாசூரியனின் அர்ப்பணிப்பிலும் அக்கறையிலும் விளைந்த “தைத்திருநாள் கவிதைத் திருவிழா”வினை இம்முறை ஏற்று நடாத்தும் பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இயந்திரமாய்ச் சுழலும் உலகில் சொற்ப நேரத்தைக் கூட ஒதுக்கிக் கொள்ள முடியாத சூழலில் நின்று இந்த போட்டியினை நடாத்த தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
போட்டிகளில் தோழர்கள் பலரும் கலந்துக் கொள்வதோடு, சக தோழர்களை இணைத்துக் கொள்ளவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சினைகள