பாலாசுப்ரமணி மா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/yvigb_37582.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாலாசுப்ரமணி மா |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 03-Nov-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 403 |
புள்ளி | : 34 |
சேது பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் 4ம் ஆண்டு
அந்த நேரம்
மர்மமாய் மாறிக்கொண்டிருந்தது
கவிழ்க்கப்பட்ட
குட்டைகளில்
முகங்கள் புதைக்கப்பட்டுக்
கொண்டிருந்தன.......,
முண்டியடித்து
கிடைத்த இடங்களெங்கும்
காற்றும் கூட
துரத்தப்பட்டது......,
ஆங்காங்கே மரத்தில்
பூக்கள்
தற்கொலை
செய்து கொண்டிருந்தன.....,
வெளிகளெங்கும்
மர்மம் கூடிக்கொண்டிருந்தது.....,
அந்தநேரத்தில்
என் ஜன்னல் கண்ணாடிகளை
சில தூரல்கள் உடைத்துக் கொண்டிருந்தன
சற்றே திறந்திருந்த
ஜன்னலின் பிளவுகள் வழி
எஞ்சி இருந்த இரவின்
துண்டுகள்
இடறி விழுந்து கொண்டிருந்தது
ஒரு புகைப்படம்
அந்த
இரவின் ஏனைய துண்டங்களை
விழுங்கி முடித்திருந்தது .......,
அது
பசுமையான நினைவுகளின்
ரேகைகளை சுமந்திருந்தது .......,
அதை விரல்கள்
தீண்டும்போதெல்லாம்
ஏனோ நகக்கணுக்களில்
சில வேதிய மாற்றங்கள்
கனத்த வலிகளின்
ரணங்கள் அதில் புதைக்கப்பட்டன
ஏனோ
அதன் நிழல்களின் ஆழத்தில்
கரிசல் மண்ணில் பூத்த கருவாச்சி -என்
காதல் முழுசும் உனக்காச்சு !
கன்னிப்பொண்ணு உன்னைப்பார்த்து
ரெம்பவே நாள் ஆச்சு !
கவிதை ஒன்னு எழுத தான் ரெம்ப ரெம்ப யோசிச்சு
என் மனசு முழுக்க உன் நினைப்பு நிறைஞ்சாச்சு !
காலையில குளத்துல தண்ணி எடுக்க நீ வருவேன்னு
கால் கடுக்க உன் மாமன் காத்திருந்து காத்திருந்து
என் காலெல்லாம் வலிச்சு தான் போச்சு !
கருவாச்சி உன் முகம் தான் என் கண்ணுக்குள்ள பொத்தி வச்சு
இரா முழுக்க தூக்கம் கெட்டு தூக்கத்த உன் மாமன் தொலைச்சாச்சு !
கடைக்கண் பார்வை ஒண்ணு அப்போ அப்போ பார்ப்பியே
அப்போவே உன் உசுரு உனக்குதான்னு முடிவாச்சு !
கத்திரிபூ பூ போட்ட கண்டாங்
இரவும் பகலும் இடமாறிச்சென்றாலும்,
நம்
இதயமிரண்டும் தடுமாறிநின்றாலும்,
சூரியக்கதிர்கள் பனி மாரிப்பொழிந்தாலும்,
சந்திர மதியது கனல்வீசிச்சென்றாலும்,
கங்கையும் காவிரியும் கானல்நீராயானாலும்,
அம்மாவாசையன்று முழு நிலவு வந்தாலும்,
பௌர்ணமி இரவில் பால்நிலா தோற்றாலும்..
நான்!!
நீ !!
என்ற நிமிடங்கள்தாண்டி,
நாம்மென்று
வாழ்ந்து
நாம்மறைந்தாலும் ,,
கிரகங்கள் தாண்டி,
யுகங்கள் மீண்டு,
உருவங்கள் மாறி
வந்தாலும்....
என்றுமே நாம் "காதலர்களே"!!
நீ எந்த நொடியில்
என்னில் நுழைத்தாய்...
அக்கனமுதல்
என்னை மறந்து
உன் நினைவில் வாழ்கிறான்...
என்னை சுற்றி நீ மட்டுமே
ஆள்கிறாய்...
நிஜமாகவும் நிழலாகவும் ...
உன்னில் தொலைந்த
என்னை எப்பொழுது
திருப்பி தருவாய்
நான் ...
நானாக வாழ....
நீ ஒன்றும்
அவ்வளவு அழகில்லை...
ஆனால் ...
உன்னை நேசிக்க
தொடங்கிய முதல்
உன்னை தவிர
எதுவும் அழகில்லை..
என் பார்வையில் ....
என் கண்கள் காணும்
அத்தனையையும்...
என் நினைவுகள் சுவாசிக்கும்
அத்தனையையும்...
உன் பிம்பமாய் மட்டுமே
என்னுள் அழகாய்
உயிர் கொள்கிறது...
இதுதான் காதலா....
நீயும் நானும்
பயணித்த பாதையில்
நீயின்றி .,...
உன் நினைவுகள்
மட்டுமே பயணிக்கிறது
இன்று என்னுடன் ....
உன் அருகில்
நொடிகளாய் கடந்த பயணம்
இன்று நீயின்றி
ஏனோ நீண்டுகொண்டே செல்கிறது ...
என் தனிமைக்கு ..
உன் நினைவுகள்
தருகிறது துணையாக
யாரும் என்னை கண்டிறாத
நேரத்தில் விழியோர நீராய்...
என் இன்பம் உன்
அருகில்
என் துன்பம் உன்
தொலைவில்
என் தோல்வி உன்
தோளில்
என் துயரில் உன்
துணை
என் விழிக்கு நீ
மொழி
என் வலிக்கு நீ
நெறி
என் காதல் நீ
கவிதை
என் பாசம் உன்
நேசம்
என் நினைவு உன்
கனவு
என் தேடல் உன்
பாடல்
என் பாதை உன்
பயணம்
என் வண்ணம் உன்
எண்ணம்
என் ஏக்கம் உன்
பக்கம்
என் தேவை உன் நட்பு
(காதல்)
வேலையை இலகுவாக்க வந்த இயந்திரங்கள்
வேலையின்மைக்கு
இலக்காகி விட்டது
BE (Eee) So SaD
கருவில் சுமக்கா தாய்
தான் தந்தையும்
பிறக்கும் தருணத்தில்
தாயைவிட அதிகம்
துடித்தவனும் நீயே
மார் இட்டு வளர்த்ததும்
நீயே
தோளில் தூக்கி துமந்ததும்
நீயே
என் கிறுக்கலை நீ
ஒவியம் என்பாய்
என் மழலை மொழியை நீ
கவிதை என்பாய்
உரத்த குரலும்,
மரத்த விரலும்
வியர்வை வரியும்,
நேர்மை நெறியும்
உனது அடையாளம்
வெளி காட்டா அன்பும்
கட்டுபடுத்திடா
கட்டுப்பாடுகளும் உன்
கைவண்ணம்
கற்பனைக்கு எட்டாத
நாட்கள் தான் நீ கை பிடித்து
நடைபழக்கிய நாட்கள்
விற்பனைக்கு எட்டாத
நிமிடங்கள் தான்
உன் தோளில் தாங்கிய
நிமிடங்கள்
உனக்கு எட்டா ஏட்டு
கல்வியும் எனக்கு
கிடைத்
அமைதியான எனக்குள்ளும்
ஆயிரம் ஆர்பரிப்புகள்
உன்னை காண்டால்
உன்னை பார்த்தும்
பார்க்காதது போல்
நடிக்கிறேன்!
தனியே சிரித்து
மறைகிறேன்!
உன் பெயரை எழுதி
ரசிக்கிறேன்!
ஊடல் என்றால் கண்ணீர்
இரைக்கிறேன்!
இதை காதல் என்று
சொல்வதா?
இல்லை
நட்பின் எல்லை என்று
கொள்வதா?
எதையும் எதிர்பார்க்கா
உன்னிடம்!
எப்படி காதலை
எதிர்பார்ப்பது?
சொன்னால்
மவுனமாய் ஏற்பாயா?
இல்லை
வார்த்தையால் வெறுப்பாயா?
இல்லை
விமர்சனங்கள் கோர்பாயா?..
சேமித்த காதலை சேர்காமல்
தவிக்கிறேன்!
உயிர் கோர்க்காமல்
துடிக்கிறேன்!
உடல் வியர்காமல்
இளைக்கிறேன்!
தெரிந்தும் தெரியா
நண்பர்கள் (21)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![அருணன் கண்ணன்](https://eluthu.com/images/userthumbs/f2/nxczq_24759.jpg)
அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி
![சுரேஷ்ராஜா ஜெ](https://eluthu.com/images/userthumbs/f3/yktua_32644.jpg)
சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
![மகேஷ் முருகையன்](https://eluthu.com/images/userthumbs/f3/lvijm_39288.jpg)
மகேஷ் முருகையன்
தஞ்சை மற்றும் சென்னை
![நிவேதா சுப்பிரமணியம்](https://eluthu.com/images/userthumbs/f3/cpsnh_37626.jpg)