பர்ஷான் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பர்ஷான்
இடம்:  இலங்கை (சாய்ந்தமருது)
பிறந்த தேதி :  19-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Oct-2013
பார்த்தவர்கள்:  582
புள்ளி:  196

என்னைப் பற்றி...

பெயர்: முஹம்மது பர்ஷான்
இடம்: இலங்கை
முகநூல் முகவரி: https://www.facebook.com/mohamed.rifarzkan

என் படைப்புகள்
பர்ஷான் செய்திகள்
பர்ஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Feb-2020 10:29 am

அன்பான மனைவிக்கு ஆழமான கவிதை ஒன்றை கிறுக்குகிறேன் இப்போது...

கவிதையாகிறது உன் காதல் கற்பனையில் உன்னை சுவாசிக்கையிலே...

என் ஆழ்மனதில் வேரூன்றி வளர்ந்த உன் காதலும் ஓர் காவியமே...

மேலும்

பர்ஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2019 7:46 pm

சிகரம் தொட சற்று ஆசை,
காற்றாக நீ வந்தால் தூசாக பறந்தேனும் தொட்டு விடுவேன் என்கிறேன், நீயோ என்னை விட்டு விடு என்கிறாய்...

மர உச்சியில் ஏற்றிவிட்டு இடைநடுவில் வெட்டி விடப் பார்க்கிறாய்...

பாரமாக இருந்தால் இறக்கி விடு அல்லது இறங்க விடு உன் பாதமே சரணமென முடங்கிக் கிடக்கிறேன்...

மேலும்

பர்ஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2019 5:55 pm

நீ தொலைத்துவிட்டுச் சென்ற காகிதங்கள் எல்லாம் என்றோ நான் உனக்கு கிறுக்கிய கவிதைகள்...

கவிதைகள் பொய்யாகலாம் ஆனால் அதில் புதைந்துள்ள அர்த்தங்கள் அவ்வளவும் ஆழமானவை ஆத்மார்த்தமானவை...

இன்று நீ வீசியெறிந்த என் கவிதைத்துளிகளால் உன் காதல் பொய்யாகலாம் ஆனால் என் காதல், என் காதல் காகிதங்களால் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டியை விட அழகானவை அர்த்தமானவை...

மேலும்

பர்ஷான் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2019 12:24 pm

விடியாத இரவு வேண்டும் அதில் விடியும் வரை கனவு வேண்டும் அந்த கனவில் நீ வர வேண்டும்...

மேலும்

பர்ஷான் - பர்ஷான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2019 10:58 pm

நினைவுகளாலே என் உள்ளம் நிறைத்தது நீதானே
உனக்காய் துடிப்பதில் சோர்வுறாதது என் இதயம்தானே....

மேலும்

nanri thangalin karuththu pahirvukku 27-Jan-2019 10:54 am
இனிமை . பாடலின் பல்லவிபோல் இனிமையாகச் செல்கிறது . மேலும் சில ரெட்டை வரிகள் ஆண் பெண் கேள்வி பதில் போல் கற்பனை செய்யுங்கள் . முழுப்பாடல் ஆகிவிடும் . வாழ்த்துக்கள். 24-Jan-2019 8:55 am
பர்ஷான் - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2018 9:20 am

தமிழ்ப்பற்று...

அறிவென்னும் சுடரை ஏற்றி வைத்தது...

ஆழமான உண்மைகளைப் புரிய வைத்தது..

இன்பம் தரும் வாழ்வியலைக் கற்றுத் தந்தது..

ஈகைத் தன்மையைப் பெருகச் செய்தது...

உலகம்போற்றும் தமிழை உயிராக்கித் தந்தது...

ஊரெல்லாம் போற்றும்படி உழைக்கச் சொன்னது....

எல்லாம் மாயை என்று எதார்த்தம் சொன்னது...

ஏட்டுப் படிப்போடு திருப்திகொள்ள வேண்டாம் என்றது...

ஐயமிட்டு உண்பதே சிறப்பெனச் சொல்லித் தந்தது...

ஒண்டியாக வாழ்வது கடினம் என்றது...

ஓய்வை நாடி புத்துணர்ச்சி பெறச் சொன்னது...

ஒளவை சொன்ன ஆத்திச்சூடியில் வாழ்க்கையை கற்பித்தது....

மேலும்

நன்றி நண்பரே 21-Aug-2018 4:38 am
இனிமை 20-Aug-2018 5:06 pm
தரமான பதிவு மேலும் எழுதுக 18-Aug-2018 1:38 am
அருமையான படைப்பு, வாழ்த்துக்கள். 17-Aug-2018 10:06 pm
பர்ஷான் - பர்ஷான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2018 8:49 pm

கடலோரம் இவள் சென்றால்
கடலலைகளெல்லாம் கூச்சலிடுகின்றன
இவள் பாதம் தொட...

மழை முகில்களெல்லாம் மோதிக்கொள்கின்றன
மழைத்துளியென மாறி இவள் மேனி கழுவ...

மாலை நேரத் தென்றல் காற்றெல்லாம்
தேடி அலைகின்றன
இவள் தேகமெல்லாம் தொட...

மேலும்

நன்றி தோழரே... 02-Aug-2018 11:13 pm
நன்றி தோழரே.... 02-Aug-2018 7:18 pm
இவள் மீது காதல் கொண்டதால் ...அருமை.. 02-Aug-2018 3:18 pm
பர்ஷான் - பர்ஷான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2018 10:04 pm

உனக்காக காத்திருக்கும் போது
எனது கனங்களும் உன்னை காதலிக்கின்றது...

உன்னோடு பேசும் போது
எனது மொழிகளும் இனிமை பெறுகின்றது...

உனக்கென கடிதம் எழுதும் போது
எனது கைய்யெழுத்துகளும் அழகு பெறுகின்றது...

உன்னை நினைக்கும் போது
என் உள்ளங்களிலும் கவிதை பிறக்கின்றது...

கண்ணுறங்கும் போது
எனது கனவுகளும் உன்னை சுமக்கின்றது...

மேலும்

Aamaam nanbare 18-Jul-2018 11:08 pm
கண்ணுறங்கும் வேளையிலே சுமந்திடும் கனவுகள் கவிதையை பெற்றெடுக்கும் . சரிதானே 18-Jul-2018 12:41 am
பர்ஷான் - பர்ஷான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2013 3:23 pm

தூரத்தில் நிலா அருகினில் நிழல்...
தொட துடிப்பது நிலாவை தொட்டுக்கொண்டிருப்பதொ நிழல்...
நிலா நீ மறைந்து போ என் நிழல் ஒழிந்து போகட்டும்..
இருள் மட்டும் போதும் நான் மறைந்து கொள்கிறேன்...
பர்ஷான் ......

மேலும்

பர்ஷான் - அனுசா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2016 12:44 pm

நீ தந்த ஏமாற்றங்களின்
வலிகளை கொண்டு
என் கரத்தை கூர்தீட்டி
உன் கல் நெஞ்சை
இருமுறையேனும் குத்தி,
இன்னும் என் காதல்
எத்தனை ஆழமானது என
நீ உணரும் விதமாய்
உனை இறுகப்பற்றி
வேதனைகள் மொத்தமும்
என் விழிகள் சிந்தும்
செந்நீரில் கரைத்து விட்டு
உன் சட்டையினை இழுத்து
என் கண்ணீரை
துடைத்துக் கொண்டு
" சரி தான் போ டா" என்று
உன்னை தூக்கி
எறிந்து விட்டு
வரவேண்டும் நான்!!!!
இப்படியாக ஒருமுறையேனும்
நான் உனை
பழிதீர்க்க வேண்டும்.....

மேலும்

அருமை 25-Nov-2016 1:33 pm
அருமை வாழ்த்துக்கள் 16-Jan-2016 5:21 pm
வித்தியாசமான பார்வை ... ஆனால் காதலில் மட்டும் இவை சாத்தியம் ... வாழ்த்துகள் 11-Jan-2016 4:02 pm
புதுவிதமான புரட்சி சிந்தனை .. வரிகளில் தான் கொஞ்சம் கவித்துவம் இருந்திருக்கணும் ... 11-Jan-2016 3:54 pm
பர்ஷான் - பர்ஷான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2013 3:06 pm

மகன் என்று அழைக்கும் உங்கள் அழைப்பில் என்றுமே அன்பின் அளவு குறைந்ததே இல்லை...
நிஜத்தினில் மறைந்தாலும் நினைவினில் நிஜங்களாய் இன்னும் என்னுள் வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள்...
தனிமையை உங்கள் நினைவு கண்ணீர்களாக்கினாலும் உங்களுக்காக பிறார்த்திக்கும் கணம் போதும்...
ஆயிரமாயிரம் தடவை எனக்காய் இறைவனிடம் ஏந்திய உங்களுக்கு என் ஆயுள் வரை ஏந்தி கொண்டே இருப்பேன் உங்கள் சுவன வாழ்க்கைக்காக..

பர்ஷான்

மேலும்

நன்றி nilamagal 16-Nov-2013 11:46 am
தாய்மையை மதிக்கும் தங்களுக்கு நன்றிகள் பல 15-Nov-2013 12:01 pm
நன்றி annaa 03-Nov-2013 3:43 pm
தாய் மறைந்தும் தாய்மை மறவா தனயன்..! தாய் பெற்ற பாக்கியம்..! 03-Nov-2013 3:32 pm
Shahmiya Hussain அளித்த படைப்பை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
12-Dec-2015 9:35 am

எனக்குள் எனை நான்
தேடினாலும்- கிடைப்பதோ
விடையாய் நீயொருவனே...

துடிக்கும் இதயம்தனில்
சிரிக்கும் கண்ணனாய்
துளிர்ப்பவனும் நீயொருவனே...

அனைத்தும் நீயாய்
மாறியதன் மாயமோ,
அறியேன் நான்...

தூறும் நினைவினுள்
நானும் நனைகிறேன்
தாகம் தீராமலே...

நீளும் மௌனங்களில்
நாளும் அடைகிறேன்
நரக வேதனையே ...

தேடும் உயிர் அது(வு)ம்
தேய்பிறை காட்டுதே
தேகம் சேராமலே...

வாழும் ஆசை அது(வு)ம்
வாடிச் சரியுதே
வார்த்தை கேளாமலே...

பேசி விடு உயிரே,
அன்றேல் - எனை
கொன்று விடு இன்றே..!

மேலும்

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நட்பே.. 13-Dec-2015 2:01 pm
ஆஹா அருமையான படைப்பு வாழ்த்துக்கள் கவிஞரே ......... 13-Dec-2015 8:14 am
😊 நன்றி... 13-Dec-2015 6:16 am
நல்ல படைப்பு வன்முறைத் தலைப்பு 12-Dec-2015 11:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (121)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
அஷ்றப் அலி

அஷ்றப் அலி

சம்மாந்துறை , இலங்கை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (126)

நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
I Farzan

I Farzan

Akkaraipattu - Sri Lanka

இவரை பின்தொடர்பவர்கள் (120)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே