பா.வாணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பா.வாணி
இடம்:  தஞ்சை
பிறந்த தேதி :  12-May-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Aug-2013
பார்த்தவர்கள்:  188
புள்ளி:  5

என் படைப்புகள்
பா.வாணி செய்திகள்
பா.வாணி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2015 11:04 am

ஒரு நாட்டில் விவசாயிகள் தற்கொலைகளை விட சாபம் வேற இல்லை


நன்றி
சீ திஸ் ரிப்போர்ட்.,..

மேலும்

ராம் மூர்த்தி அளித்த படைப்பை (public) ராம் மூர்த்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Aug-2014 4:34 pm

அண்ணன்களே அக்காக்களே...
அன்றொரு நாள்
அதே நிலவில்

நாங்கள் ஹவனா
வீதிகளில்
அடிப் பந்தாட்டம்
ஆடிக் கொண்டிருந்தோம்.

அப்போது
அவர்கள் வந்து
எங்கள் அப்பாவை
அடித்தே கொன்றனர்.!

அதுவரை இருந்தது வாழ்க்கை...
எங்களில் பலருக்கு.

பின்னாட்களில் நாங்கள்...
சாவ் பள்ளதாக்கில்
கால் பந்தாட்டம்
ஆடிக் கொண்டிருந்தோம்.

அவர்கள் வந்து
எங்கள் சின்ன அக்காளை
ஆயுதம் தேடுதலில்
அம்மணப் படுத்தினர்!

அதுவரை இருந்தது வாழ்க்கை...
எங்களில் பலருக்கு.

அப்புறம் ஒரு நாள்,
திரிபோலி கடற்கரையில்,..
ஓடிப்பிடித்து
ஆடிக் கொண்டிருந்தோம்.

தீடிரென இரைச்சல்கள்..
தாக்கிய குண்ட

மேலும்

உருக்கமான படைப்பு மிக அருமை நட்பே...! 30-Oct-2014 2:23 pm
மிக்க நன்றி டாக்டர். "இறைவா ஒரு சொல் கேளாய்" எழுதியவராயிற்றே ! எனவே ஒத்த சிந்தனைகள் பிடிக்கிறது . 29-Aug-2014 12:36 pm
அருமை சகோதரே கவிதையும்........இந்த கருத்தும்................ 29-Aug-2014 12:21 pm
மிக அருமை ! வாகை சூட வாழ்த்துக்கள் !! 27-Aug-2014 8:57 am
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) athinada மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Apr-2014 10:16 pm

சாதிமதம் சிரமேற்றி
சாதிக்க மாட்டேன் - துவேட
சத்தமிட்டு உரமேற்றும்
சாத்தானாக மாட்டேன் !

அறியாமை தலைசூடி
ஆட்டம்போட மாட்டேன் - சிறு
அகங்காரம் மனம்சூடி
அலைபாய மாட்டேன் !

உறவுக்காக உணர்வழித்து
உளறிநிற்க மாட்டேன் - வெறும்
உணவுக்காக பாட்டெழுதி
உயிர்சுமக்க மாட்டேன் !

வாய்முழுக்க பொய்நிறைத்து
வாழ்த்துரைக்க மாட்டேன் -தினம்
வாடும்பயிர் சோகம்பாடி
வாகைச்சூட மாட்டேன் !

காசுபரிசு மோகம்கொண்டு
காலில்விழ மாட்டேன்-வெறும்
காதல்மட்டும் பாடிவிட்டு
காடுபோக மாட்டேன் !

தீமைக்கொண்டு சாற்றினாலும்
தீர்ந்துப்போக மாட்டேன் - சினத்
தீயெடுத்து கொளுத்தினாலும்
தீய்ந்துப்போக மாட்டே

மேலும்

வெறும் உணவுக்காக பாட்டெழுதி உயிர்சுமக்க மாட்டேன் ! அற்புதமான வரிகள் !!! 30-Oct-2014 1:14 pm
மிக அற்புதம்!!! 30-Oct-2014 1:13 pm
உணர்ச்சி ததும்பும் வார்த்தைகள் . சிறப்பு ! 22-Apr-2014 8:43 pm
"சோகம்எனை வாட்டினாலும் சொல்லியழ மாட்டேன் - பெரும் சோதனைகள் தூற்றினாலும் சொல்லில்விழ மாட்டேன் !" அருமையான வரிகள் அண்ணா 12-Apr-2014 8:18 pm
ப்ரியா அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Oct-2014 12:47 pm

கல்லூரிக்கு சென்றேன்
கலகலப்பாய் பேசினேன்
வாயாடி என்றனர்....!

பேசாமல் இருந்தேன்
ஊமை என்றனர்....!

அமைதியாய் இருந்தேன்
தலைக்கனம் பிடித்தவள் என்றனர்...!

தனித்து இருந்தேன்
ஆணவக்காரி என்றனர்....!

வீட்டிற்கு திரும்பினேன்,
விரைவாய் நடந்தேன்
யாரோ காத்திருப்பதால்
விரைவாய் செல்கிறாள் என்றனர்....!

மெதுவாய் நடந்தேன்
யாரின் வரவையோ காத்து
மெதுவாய் நடக்கிறாள் என்றனர்...!

திரும்பி பார்த்தேன்
யாரையோ தேடுகிறாள் என்றனர்...!

செல்போனில் மெதுவாய் பேசினேன்
காதலனிடம் பேசுகிறாள் என்றனர்...!

உறவு முறை அண்ணனோடு
சிரித்து பேசினேன்
கூத்தடிக்கிறாள் என்றனர்....!

கொஞ்சம் அல

மேலும்

தங்கள் வரவிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன் தோழி...! 01-Dec-2014 12:48 pm
sorry நம்மை 01-Dec-2014 12:05 pm
என்ன தோழி செய்வது ----இதை சொன்னா நாமளா ஒரு மாறியாயாயா ......... பாக்குதுங்க 01-Dec-2014 12:05 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன் நட்பே....! 30-Oct-2014 1:20 pm
பா.வாணி - ப்ரியா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2014 12:48 pm

அன்னதானம் சிறந்ததானம்;

உலகிலேயே மிகச்சிறந்த தானம் அன்னதானம் அப்டீன்னு முன்னால(நான் சின்னபுள்ளையா இருக்கும்போது) நிறையபேர் சொல்லுவாங்க ஆனால் அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கமாட்டேன், அப்போது அறியாத வயசு என்பதாலோ என்னவோ அதுல எனக்கு ஈடுபாடும் இல்லை..

இப்போதுகூட நான் அலுவலகத்தில் பணிபுரியும் போது மதியம் சாப்பிட்டு முடிஞ்சதும் மீதி சாப்பாட வெளில கொட்டிடுவேன் என்னோட உயர் அதிகாரி முதல் பியூன் வரைக்கும் இதை பார்க்கும் போதெல்லாம் சொல்லுவாங்க இப்டி எல்லாம் வேஸ்ட் பண்ணாதீங்க பணத்த கீழப்போட்டாலும் ப (...)

மேலும்

மகிழ்ச்சித்தோழி..........நானும்தான்! 27-Nov-2014 2:35 pm
மகிழ்ச்சி வித்யா......நானும் இப்போதான் இந்த முடிவெடுத்தேன். மற்றமாதிரி சின்ன சின்ன ஹெல்ப் அல்ரெடி செஞ்சிட்டுதான் இருக்கேன்மா... 27-Nov-2014 2:34 pm
ஓ அப்டியா........ஓகே ஓகே. 27-Nov-2014 2:33 pm
நல்ல எண்ணம் தோழி வாழ்த்துக்கள் .....எனக்கும் எல்லா புதுவருடப்பிறப்பு தைபொங்கல்..தீபாவளி போன்றவை கருணை இல்லங்களோடு முடிகிறது...கொடுப்பதற்கு என்னிடம் பெரிதாக ஒன்றும் இல்லை ...அதனால் அந்த ஒரு நாளை அவர்களோடு செலவளிக்கின்றேன் 05-Nov-2014 3:36 pm
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த எண்ணத்தை (public) சிவநாதன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Oct-2014 7:16 am

பேரழிவு ! சுடுகாடாய் ஆகியது எங்கள் ஊர் !

நேற்று காலை (Oct 29 – 2014) 7.15 மணியளவில் இடம்பெற்ற கொடூர மண் சரிவொன்றின் காரணமாக “கொஸ்லாந்தை” என்ற என் பிறந்தவூரின் குடியிருப்பு தொகுதியொன்று முற்றாக மண்ணுள் புதைந்து போய்விட்டது. இதுவரைக்கும் ஆறுபேரின் சடலங்களே மீட்கப் பட்டுள்ளன.

முன்னூறுக்கும் மேற்பட்ட மனிதவுயிர்கள், கால்நடை விலங்குகள், வீட்டு வளர்ப்பு பிராணிகள், வீடுகள் (ஏழு லயன் குடியிருப்புகள்) முற்றாக இருக்கும் இடம் தெரியாது மண்ணுக்குள் புதையுண்டு போன பேரழிவு நடந்தேறியுள்ளது.

அடிப்படை வசதிகள் சீராக இல்லாத இந்த தோட்டப் பிரதேசத்தில் மீட்பு பணிகளுக்காக இராணுவத்தினர் குவிக்கப் பட்டாலும் மிக மோசமான விதத்தில் நிலைமை இருகின்றது.

இருபது அடிகளுக்கும் கீழ் குடியிருப்பு புதையுண்டுப் போயிருக்கின்றதாய் அறிய முடிகிறது. எந்த உயிரையும் காப்பாற்ற முடியாது என்ற அவலத்தை நினைக்கையில் பதறித் துடிக்கின்றேன்.

தற்சமயமும் மண்சரிவு நடந்துக் கொண்டிருப்பதாக தான் அறிய முடிகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் நிலைமை இன்னும் மோசமாகும்.

மேலதிக செய்திகளுக்கு இலங்கையின் ஊடக செய்திகளைப் பாருங்கள்.




மேலும்

வருந்தத்தக்க நிகழ்வே! இம்மலையக மக்களின் வாழ்வு இனியாகிலும் ஸ்திரமான அஸ்திவாரத்த்ன் மேல் கட்டமைக்கப்பட்டு எழும்பட்டுமென்றும், இறந்தவர்களின் நல்லாத்மாக்கள் சாந்தியடையவும், இருப்பவர்களின் துயரங்கள் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். 30-Oct-2014 6:11 pm
திரும்ப திரும்ப அழிவு,,, அதுவும் தமிழர்களை நோக்கியே அழிவு......இயற்க்கைக்கும்கூட தமிழர்கள் மேல்தான் கோபம் போல.................... வருத்தமும் வேதனையும் மட்டுமே மிஞ்சுகிறது....... அரசாங்கம் எப்பவுமே இப்படித்தான், தனது முறையான கடமையைத் தவறிவிடும். பிறகு மீட்புப்பணி அது இதுன்னு பூடகம் போடும். தன தவறை தப்பி தவறியும் ஒப்புகொள்ளாது. தமிழர்கள் செறிந்து வாழ்கிற பகுதியாக இருந்தால் இலங்கை அரசுக்கு என்னக்கவலை?......... 30-Oct-2014 5:17 pm
அந்த நிமிடம் ஒவ்வொருவரின் மன நிலைமை எப்படி இருந்திருக்கும் நினைக்கவே முடியவில்லை தோழரே! மனைவி மகள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் நலமா.... அச்சச்சோ பாடசாலை சென்ற குழந்தைகளின் பெற்றோர்கள்... குழந்தைகளின் நிலைமை என்னாவது யாராவது வந்து நடவடிக்கை எடுக்கிறார்களா இல்லையா... வருத்தமாக இருக்கிறது தோழரே! குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்... 30-Oct-2014 9:36 am
எங்கள் வீட்டிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த கொடூர அனர்த்தம் நடந்திருகிறது சிவா ! நேற்று முன்தினம் தான் இந்த மலையக தமிழரின் அவலங்கள் குறித்து எழுதினேன் ! இன்று எங்கள் ஊரே நாசமாய்ப் போய்விட்டது ! ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் இதே போல ஒரு மண்சரிவு ஆனால் இதைவிட பாரிய அளவில் நடந்தது. அதில் குடியிருப்புகள் இல்லாத பகுதி என்பதால் எந்த உயிர்களும் காவுகொள்ளப் படவில்லை ! ஆனால் இந்த முறை ஒட்டுமொத்த ஊரையும் விழுங்கிக் கொண்டுவிட்டது ! நிறுவனங்கள் எச்சரிக்கை செய்வது போதாது..அத்தனை குடும்பங்களையும் முறையான விதத்தில் இடம்பெயர்த்திர்க்க வேண்டிய கடமையை செய்ய தவறிவிட்டார்கள் ! 30-Oct-2014 9:10 am
பா.வாணி - சு.அய்யப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2014 6:58 pm

இணையில்லா காவிரியில் ஆடிப் பெருக்கு
இன்றுகண்டேன் பொதிகையிலே ஆடிப் பெருக்கு
கணக்கில்லா கால்வாய்கள் கொண்டு சிரிக்கும்
காவிரியை முக்கொம்பு மூன்றாய் பிரிக்கும்
உணவூட்டும் காவிரியின் பாசப் பயணம்
ஊர்தோறும் நடத்துகிறாள் பாசனப் பயணம்
வணங்குகிற இறையாக நதியை மதிப்போம்
வா! ஆடிப் பெருகின்று நதியைத் துதிப்போம்
மணல் அள்ளும் வாகனத்தில் மண்ணீரை சொட்டும்
மனதிலிதை நினைந்தவுடன் கண்ணீரே முட்டும்
மணற்கொள்ளை போகாமல் நாளும் தடுப்போம்
மகா நதிகள் காயாமல் நாமே தடுப்போம்
உணவுதரும் பயிர்களுக்கு உணவாகும் தண்ணீர்
ஓடிநடை பயின்றுவர நதியாகும் கண்டீர்
உணர்வுடையோர் எல்லோரும் நதியை மதிப்போம்
ஓ! ஆடிப் பெருக்கின்

மேலும்

நன்றி 04-Aug-2014 6:08 pm
நன்றி 04-Aug-2014 6:06 pm
நன்றி 04-Aug-2014 6:06 pm
நதிகள் பாடட்டும் .. நல்ல கவிதை 04-Aug-2014 5:39 pm
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) athinada மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-May-2014 1:57 am

பயிர்செய்கைக்கொவ்வாத
கட்டாந்தரை பிளந்து
உள்ளே விழுந்து
உயிர் பூண்டு
வேரூன்றி கிளர்ந்தெழக் கூடிய
அற்புத வித்து நீ

உனக்குள்
உறங்கிக் கிடக்கும்
உன் விருட்சத்தை
உணராமல் மாற்றான்
மரத்திலிருந்து உதிர்ந்த
சருகுகளுக்காக
உன்னை தேய்த்துக்
கொள்ளும்போது நீ
யாருக்காகவோ
பாதரட்சையாகிறாய்.

உன்னைச் சிறகாக்கி
உன்னிலும் ஊனப்படவர்களை
உல்லாச பறவையாய்
பறக்க வைக்கும்
வித்தை படி.

துணிச்சல் விளக்குகளின்
துணை கொண்டு
அந்தகாரம் கிழித்து
சூரியனாய் பூத்துவிடு.

பீதிகளை அணிந்துகொண்ட
உன் தைரியங்களை
சலவைக்குப் போடு

மரணத்தின்
வாசல்களை மூடும்
கதவுகள் செய்வதற்கு

மேலும்

நன்றிகள் வாணி 01-Aug-2014 12:43 pm
மிக அழகான கற்பனைகளுள் இளையதலைமுறைக்கான அதிக ஆழமான கருத்துகள்...அற்புதம்.. 01-Aug-2014 11:27 am
நன்றிகள் pazhani 27-May-2014 8:23 pm
நன்றிகள் சந்தோஷ் 27-May-2014 8:23 pm
பா.வாணி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2014 12:52 pm

வளநாடெல்லாம் நச்சு வெடியால் சுடலைக்காடாய்ப் புதைந்து
வண்டாடும் மலரொன்று இல்லாமல் வீணாய்ப் போய்விடினும்
விரிந்த நுதலினிலிட்டத் திருநீற்றீன் மணம் சுகம் தரும்

வயலினிலே வளப்பமோடிருந்த நெற்கதிரெல்லாம் செங்குருதியின் தேக்கத்தால்
வாடியே எங்கள் வயிறெல்லாம் பசியெட்டும்போது நாவினில்
வண்டமிழ் அள்ளி தெளிக்கும் அமுதம்
சுவை கூட்டும்

வெள்ளம் பெருக்கெடுத்து எங்கும் கொடுங்குளிர் காலம்
வரும் போழ்தினில் உடுக்க உடையில்லாமல் போனால்
விலைபோகாத தன்மான ஆடை மானம் காக்கும்

வரைகளில் இருந்து ஒழுகிடத் துளிநீரும் இல்லாமல்
வியர்வை யாக்கை எங்கும் சிந்தும் தருணத்தில்
விரோதியின் உதிரத்திலுள்ள ஈரப்பதம் தாகம்

மேலும்

மிக்க நன்றி தோழமையே! 01-Aug-2014 12:00 pm
அருமையான படைப்பு 01-Aug-2014 11:22 am
தஞ்சை மண்ணின் மைந்தர் அல்லவா ... கொஞ்சும் தமிழும் அஞ்சும் வண்ணம் மிளிர்கிறது உங்கள் தமிழ் .. வாழ்த்துக்கள் வாணி 21-Feb-2014 11:24 am
நல்ல தமிழில் தந்த நல்ல படைப்பு. தொடருங்கள். 20-Feb-2014 10:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (56)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (56)

karthikjeeva

karthikjeeva

chennai
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (56)

karthikjeeva

karthikjeeva

chennai
RAGHUL93

RAGHUL93

நாமக்கல்
மேலே