gowthami - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  gowthami
இடம்:  tenkasi
பிறந்த தேதி :  10-Aug-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Mar-2014
பார்த்தவர்கள்:  787
புள்ளி:  333

என்னைப் பற்றி...

நான் ஒரு டாக்டர்
கவிதை
ஆர்வம்
நிறைய
உண்டு


என் படைப்புகள்
gowthami செய்திகள்
gowthami - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2017 8:02 am

குரலை நெரிப்பதே
குலதொழிலாக்கி கொண்டிருக்கும்
அரசாங்கத் தலைமைக்கு
ஒரு
குரலற்றவன்
அவன் தாகத்தை
ஒரு மொழியில் ஒலிக்க துடித்த
சமயத்தில் தான்
ஜனநாயக தேவியின்
கழுத்து நரம்பு
உடைப்படும் சத்தம் கேட்டது.

நீதி தேவதையின்
கருப்பபை உடையத் துவங்கியது.

அப்போதெல்லாம்
மக்கள் நாம்
உறக்கத்திலிருந்தோம்..
தெரியுமா ?
அல்லது
மயக்கத்திலிருந்தோம்
புரியுமா ?

மேலும்

அருமையாக சொன்னீர் தோழரே . இன்னும் உரக்க சொல்லுவோம், ஒன்றிணைந்து சொல்லுவோம், வெல்லும் நாள் விரைவில் கை கூடும். 28-Jun-2020 4:11 pm
ஆதிக்கம் என்ற சொல் நீதியையும் குருடாக்கி விட்டது. வெளிச்சமான கண்ணாடிகள் எல்லாம் இரவில் தான் தங்கள் முகம் பார்த்துக்கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 6:28 pm
கருணாநிதி அளித்த எண்ணத்தில் (public) Bharath selvaraj மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Apr-2016 7:01 am

திரு.அகன் சார் அவர்களுக்கு 
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 
*************************************

இயல்பான புன்னகை
 
தவழும் இனியவரே 

நலமான ..வளமான 

பெருவாழ்வு ..நீங்கள் 

எந்நாளும்  பெற்று 

எமக்கெல்லாம் 

உளமார்ந்த ஆசிகள் 

வழங்கிடுவீர் ..

உமது  இல்லத்தாரும் 

எப்போதும்  உங்கள் 

அன்புமழைதனில் 

நனைந்திருக்க 

எல்லாம் வல்ல 

இறைவனை  வேண்டுகிறேன் ..

உமது  பிறந்த நாள் 

நூறினைத்  தாண்டிடவே..

வணங்குகிறேன்  !


அன்புள்ள 


அகன் சார் !

*************************************

என்றும் அன்புடனும் நட்புடனும் 

ச.கருணாநிதி 

மேலும்

. இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.., இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நன்றி காலதாமதத்துக்கு ஏன் கணினிபயன்பாடு காரணம் . ******************************************** 25-May-2016 5:22 pm
கவிஞர் அகன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 29-Apr-2016 5:47 pm
என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு அகன் அவர்களுக்கு. இன்று போல் என்றும் இனிதாக வாழ வாழ்த்துகிறேன் ,[ ஹாப்பி பர்த்டே டு அகன் சார் ] 29-Apr-2016 8:26 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா.... 28-Apr-2016 11:58 pm
கவிஜி அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Mar-2016 10:41 am

பாரதிக்கா....
---------------------------

'நல்லா பாட்டு பாடுவியேக்கா'
உதட்டை சுழித்தாள்...

'ஸ்டேட் பஸ்ட்தானக்கா 12த்ல'
தலையை மட்டும் ஆட்டினாள்...

'பாஸ்கட் பால் செமையா விளாடுவீல்ல'
கண்களை அழுந்த மூடித் திறந்தாள்...

'ஆமா லவ் பண்ணீல்லக்கா என்னாச்சு'
கண்களைத் தவிர்த்தாள்....

'அகழ்வாராய்ச்சி படிக்கதான ஆசைப் பட்ட'
சரிந்து சோபாவில் அமர்ந்தவள்
சட்டென என் மடியில்
தலை சாய்த்து படுத்து விட்டாள்...

அறையெங்கும் நீண்ட
மௌனம்.....

இத்தனை வருடங்களுக்குப் பின்
இச்சந்திப்பும் உரையாடலும்
நடந்தேயிருக்க கூடாதோ
என்று சங்கடப்பட்ட கணத்தில்
என் தொடை நனைக்கத்
துவங்கியிருந்தது

மேலும்

கால வெள்ளத்தில் எல்லாம் கடந்தோடி விடுமாம் சொல்கிறார்கள் எல்லோரும் எத்தனை காலமும் ஓடலாம் எல்லாமும் கடந்து ஓடலாம் ஆனால் நினைவுகளை மட்டும் நெஞ்சில் கரையொதுக்கியே செல்லும் 30-Mar-2016 5:26 pm
அவளின் காலத் துளிகள்... // வார்த்தையிலுள்ளது கவிக்கான கோலம்.. அவள் கோலம்.. அருமை ஜி 30-Mar-2016 4:12 pm
அருமை. கடைசி நான்கு வரிகள் இதயம் தொடுகிறது. வாழ்த்துக்கள் கவிஜி 30-Mar-2016 6:59 am
நீண்ட மௌனம்..... ...... வாசிக்கும் ஒவ்வொருவர் மனத்திலும் ! 29-Mar-2016 6:22 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பொள்ளாச்சி அபி மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
11-Feb-2016 1:40 am

பக்கத்து வீட்டில் தீ!
பார்வையாளன் டி-ஷர்ட்டில்
சே-குவேரா..!

--

கற்பு பொதுவாகியிருந்தால்
தேவையிருந்திருக்காது
கண்ணகி சிலை.!

--

துகிலுரித்தேன்.
நிர்வாணமானது
சாளரம்.

--

சாதீயம்
செய்கிறது பொதுவுடைமை(க்)
கொலைகள் !

--

தீ சுட்டது.
உயரோசையில் தாய்
தோலிசைக்கருவி.!

-

தலைக்கணம்
பாரம் தாங்குகிறது
தலையணை..!

--

அய்யகோ! நிற்காதோ?
இரயில் தண்டவாளத்தில் ஒடுகிறது
தலித்துகளின் செங்குருதி..!

--

அரசியல் நாக்குகள்!
தேர்தல் நேரத்தில் நக்குகிறது-
ஈழத்தின் கண்ணீரை.!

--

விஞ்ஞானபூர்வமானக் கொலை.
இனி ஒவியங்களில் மட்டும்
குருவிகள்..?

--

இப்போதே அழைக

மேலும்

கவி நல்ல சிந்தனை கவிஞரே 05-Apr-2016 8:25 am
நன்றி நண்பா 30-Mar-2016 3:42 pm
நன்றி தங்கையே 30-Mar-2016 3:42 pm
நன்றி நித்யா 30-Mar-2016 3:42 pm
agan அளித்த எண்ணத்தில் (public) kayal vilzhi மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Dec-2015 5:42 pm




மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது -2015

விருதாளர்கள்

தோழமைகள் :

சியாமளா ராஜசேகரன்

நிஷா மன்சூர்

சொ.சாந்தி

வீ .திலகவதி

மு .ரா

வளர்மதி

அமுதா அம்மு

பனிமலர்

முதல்பூ

கே .இனியவன்

ஜெயாராஜரத்தினம் 

மகிழினி

எ கே கார்த்திகா

தருமன்

நிலாகண்ணன் 

முகமது சர்பான்

கயல்விழி

குமார் பாலகிருஷ்ணன்

அன்புடன் ஸ்ரீ

நுஸ்கி மு எ மு


சரஸ்வதி பாஸ்கரன்


விருதாளர்களுக்கு வாழ்த்துகள்


பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளுடனும்

அகன்





மேலும்

விருது பெரும் உறவுகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வாழ்த்திய உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள். 06-Jan-2016 9:48 am
விருது பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....... 05-Jan-2016 11:03 am
விருது பெறும் அனைவருக்கும் அகம் மகிழ் வாழ்த்துகள் 05-Jan-2016 10:10 am
விருதுபெறும் அணைத்து கவிஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 04-Jan-2016 7:31 am
agan அளித்த எண்ணத்தை (public) அன்புடன் ஸ்ரீ மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Dec-2015 5:42 pm




மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது -2015

விருதாளர்கள்

தோழமைகள் :

சியாமளா ராஜசேகரன்

நிஷா மன்சூர்

சொ.சாந்தி

வீ .திலகவதி

மு .ரா

வளர்மதி

அமுதா அம்மு

பனிமலர்

முதல்பூ

கே .இனியவன்

ஜெயாராஜரத்தினம் 

மகிழினி

எ கே கார்த்திகா

தருமன்

நிலாகண்ணன் 

முகமது சர்பான்

கயல்விழி

குமார் பாலகிருஷ்ணன்

அன்புடன் ஸ்ரீ

நுஸ்கி மு எ மு


சரஸ்வதி பாஸ்கரன்


விருதாளர்களுக்கு வாழ்த்துகள்


பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளுடனும்

அகன்





மேலும்

விருது பெரும் உறவுகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வாழ்த்திய உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள். 06-Jan-2016 9:48 am
விருது பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....... 05-Jan-2016 11:03 am
விருது பெறும் அனைவருக்கும் அகம் மகிழ் வாழ்த்துகள் 05-Jan-2016 10:10 am
விருதுபெறும் அணைத்து கவிஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 04-Jan-2016 7:31 am
ஜி ராஜன் அளித்த எண்ணத்தில் (public) kavithasababathi மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Dec-2015 9:12 am

              எழுத்துலகத்தில் கட்டாரி என்றறியப்படும் நமதுநண்பர் நல்லை சரவணாவின் இனிய பிறந்தநாள் இன்று. மலேசியாவில் இப்போது வசித்துக்கொண்டிருக்கும் இந்த பட்டுக்கோட்டை சரவணாவின் மனம் முழுவதும் தன் கிராமத்துமண்ணின் மனம்தான். முதுகெலும்பி, உழவு நாடன் என்கிற வட்டார வழக்குத் தொடர்களின்எழுத்து நாயகன் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நடவண்டி ஒரு ஏவுகணையின் வேகத்தில்நமது நெஞ்சை தொட்டுவிட்டதை நாம் அறிவோம்.



           அந்தஅன்பு நண்பர்  எழுத்துலகத்திலும் இல்லறவாழ்விலும் எல்லா நலன்களையும் பெற்று இனிதே வாழ நண்பர்கள் அனைவரின் சார்பாக நான்உளமார வாழ்த்துகிறேன் !!!! 


                                                                                                                                                             ராஜன் மற்றும் நண்பர்கள் 

மேலும்

வாழ்த்துக்கள் .. முதுகெலும்பி நூல் வெளியீட்டை ஆவலுடன் எதிப்பார்க்கிறேன் 05-Jan-2016 2:26 pm
அன்பிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி... நன்றி... 29-Dec-2015 9:28 am
அன்பிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி... நன்றி... சகோ 29-Dec-2015 9:28 am
அன்பிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி... நன்றி... தோழமையே 29-Dec-2015 9:28 am
கவிஜி அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Dec-2015 7:49 am

மூன்று முறையல்ல முதல்முறை
மறுதலித்தாலே போதும் நான் மரணிக்க.

அற்புத விளக்காக காத்திருக்கிறது
நீ தொட வேண்டிய என் வீட்டு விளக்கு.

நீ கொன்று விட்டு போன பின்னும்
நான் இருக்கிறேன்..!இது உன் உயிர்.

"என்ன வேணாலும் நினைச்சுக்கோ...
உன்ன இப்போ பிடிக்கல"
என்று சொல்லி நீ போனபோதுதான்
நிலவில் காற்றில்லை என்பது
ஞாபகம் வந்தது சம்பந்தமேயில்லாமல்....

நீ அலுவலகம் சென்றபிறகு
வந்து விட்ட பின்மதிய மழையில்
கொடியில் காயும் உன் ஆடைகளோடு
நானும் நனைகிறேன்...

எத்தனை முறைதான் கொல்வாய்?
ஒரு முறையாவது கொள் ளேன்...

நான் அன்புக்கு கை நீட்டுகிறேன்
மசூதியில் ஆலயத்தில்
கோவிலில் அப்புறம் உன்னிட

மேலும்

நன்றி தோழர்... 05-Feb-2016 2:37 pm
நன்றி தோழர்... 05-Feb-2016 2:37 pm
அடித்து எழுதிய அனைத்தையும் கவிதையாக்க பிள்ளையார் சுழியாக உன் பெயர் எழுதினால் போதும்.... இதை விட காதலை எந்தக் கவிஞரால் அழகாக சொல்ல முடியும் கவிஜியை தவிர ? 18-Jan-2016 1:30 pm
அருமை. எத்தனை முறை மறுதலிக்கப் பட்டாலும் உண்மை காதல் மட்டும் மரணிப்பதில்லை ! 18-Jan-2016 12:31 am
gowthami - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2015 1:50 pm

*** இயற்கை இணைத்தது
சாதியும், மதமும் கடந்த
மனிதர்களாக ....ஆனால்
அனைத்தும் இழந்தவர்களாக....

***சாதியும்,மதமும் சாக்கடை என
பேசி திரிந்த என் நா - இன்று
அடங்கியே கிடக்கிறது....

*** மனிதமே பெரிதென
இன்றும் மரிக்காத - நல்
மனித வெள்ளம் கண்டு
ஆனந்தம் அடைகிறேன்!

***' சமுதாய மருத்துவன் ' நான்
என சொல்லி திரிந்த நான்
எதை செய்தேன் ...
சில கண்ணீர் துளிகள் தவிர
வெட்கி குனிகிறேன்!

***உங்களுக்கும் இது இடைவேளை
எனக்கும் இது இடைவேளை
மீண்டு வரும் போது அனைத்தையும் விட்டு விடுங்கள்...
நானும் விட்டு விடுகிறேன் ...

மேலும்

gowthami - எண்ணம் (public)
17-Sep-2015 7:01 pm

பெரியார் பிறந்த தின நல்வாழ்த்துகள்.....


பகுத்தறிவு மலரட்டும்....

மேலும்

gowthami - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2015 11:46 am

*** இல்லை,இல்லை எனும்
பகுத்தறிவின் குரல்வளை நெறிக்க
வரச் சொல்லுங்கள் உங்கள்
கடவுளர்களை.................

***கருத்தை,கருத்தால் எதிர்கொள்ளும்
வீரமற்ற கடவுளின் தூதுவர்களே!
அறிவால் வெல்லும் திறனற்ற கோழைகளே!
நிறுத்திக் கொள்ளுங்கள் உங்கள் பாசிசத்தை !

***அறிவிற்கு எதிரான சவாலில் உங்கள்
ஆண்டவனே தோற்றுப் போவான் என்ற பயமா?
கிளர்ந்தெழும் கல்புர்கிகள் ஆயிரம் பேர் வரலாம்
இந்துத்துவாவின் வேரை அறுக்கலாம் _ இனி
ஆயத்தமாய் இருங்கள் உங்கள் வானரப் படையுடன்!

மேலும்

தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி தோழரே ! 07-Sep-2015 1:37 pm
பட்டையை கிளப்பிடும் பதிப்பு !! சாட்டை சுழற்சியில் சற்றும் வேகம் கூட்டியிருக்கலாம் !! 07-Sep-2015 12:20 pm
வரவிற்கும் ,கருத்திற்கும் மிக்க நன்றி 07-Sep-2015 11:56 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Sep-2015 11:53 am
gowthami - எண்ணம் (public)
11-Aug-2015 1:19 pm

மிஷன் இம்பாசிபிள் 5:

1.உலகையே காக்கும் அமெரிக்க அண்ணாச்சியின் அதிரடியும்,சாகசமும்....

2.IMF இன் முக்கிய உளவாளி,அறிவாளி டாம் க்ருஸ்[ஈதன் ஹன்ட் ] சிண்டிகேட் எனும் தீவிரவாத அமைப்பை எப்படி முடக்குகிறார் என்பதே கதை .......


என் கேள்வி என்னவென்றால்,IMF எனும் அமைப்பு அமெரிக்காவில் உள்ளது போன்று 'சிண்டிகேட் 'டும் அமெரிக்க தீவிரவாத அமைப்பு என காட்சி படுத்தி இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்..........

இந்த தீவிரவாத அமைப்பு மற்ற நாடுகளில் உள்ளது போன்று காட்டப் பட்டத்தின் நோக்கம் என்னவாக இருக்க மு (...)

மேலும்

பதில் தர நான் முனையவில்லை ..சுழி என்று நீங்கள் சொன்னதால் சொல்கிறேன் ... உலக அரசியல் வரை செல்லும் எண்ணம் எனக்கில்லை ... உள்ளூர் அரசியல் போதும் ... அதுவே பெரும்பாடு .. பொய்யை உண்மையானதாக நம்ப வைக்கப்படும் தொழில்நுட்பம் சினிமா ... இது தான் என் பகுத்தறிவு ... படத்தின் முன்னே சொல்லிவிடுகிறார்கள் இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று .. கற்பனையில் உலகஅரசியல் பேசுவது தான் பகுத்தறிவா ???!!! பதில் வேண்டாம் என்று எந்த பகுத்தறிவாளனும் சொல்ல மாட்டான் .. நீங்கள் தாரளமாக பதில் தரலாம் ...!!! 12-Aug-2015 2:14 pm
1.எது பகுத்தறிவு என்று நீங்கள் தெரிந்து கொண்டு வந்து பின்பு என்னை விமர்சியுங்கள் தோழரே......... 2.தன்நாட்டை பற்றி பெருமை பேசுவது தவறு இல்லை தான்..........முதல் காட்சி [அந்த படத்தில்] நடக்கும் இடம் ரசியா...விமானாதில் ........அந்த விமானம் போர் ஆயதங்கள் கொண்டு செல்லும் விமானம் ...அதை முறியடிப்பார் அமெரிக்க சாகச டாம் கிருஷ்........... இதில் அர்த்தம் புரிய வில்லை என்றால் நீங்கள் உலக அரசியசில் சுழி.................அவ்வளவே...... 3.எனக்கு சாதாரண அறிவு கிடையாது.........சாதாரண அறிவுடனே பிறந்து,அப்படியே செத்து போகும் எண்ணமும் கிடையாது............. பதில் வேண்டாம் தோழரே.........நன்றி.......... 12-Aug-2015 12:01 pm
படத்தை படமாக பார்க்காமல் அதில் உள்நோக்கம் கற்பிக்கும் எண்ணம் எதில் இருந்து வருகிறது ??!!! இது தான் பகுத்தறிவா ??!! அவன் நாட்டில் எடுக்கும் படத்தில் அவன் நாட்டை பெருமையாக தான் சொல்வான் ...நம் நாட்டை போல இழிவு படுத்த மாட்டான் .. இதில் என்ன தவறு இருக்கிறது ??!!!! படம் அருமை .. டாம் க்ருஸ் சண்டை காட்சிகள் அருமை .. இது தான் சாதாரண அறிவு உள்ளவனின் படம் பற்றியான சிந்தனை ... படம் பார்பவருக்கு இது போன்ற சாதாரண அறிவு போதும் .. 12-Aug-2015 9:39 am
சினிமா என்பது இரண்டு மணி நேர பொழுது போக்கு மட்டுமே...... முதல் நான்கு பகுதி தொலைக் காட்சியில் பலமுறை காண்பிக்கப் பட்டுள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. அதே போல் Taken, Home alone.... 11-Aug-2015 5:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (71)

அருண்ராஜ்

அருண்ராஜ்

ஈரோடு
கிருத்திகா தாஸ்

கிருத்திகா தாஸ்

தமிழ்நாடு
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
எமதர்மன்

எமதர்மன்

பூலோகம்
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)

இவர் பின்தொடர்பவர்கள் (72)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Shyamala

Shyamala

Pudukkottai

இவரை பின்தொடர்பவர்கள் (78)

user photo

கவிப் பறவை

சென்னை
R.Raguraaman

R.Raguraaman

coimbatore
vinoo

vinoo

Chennai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே