ckவசீம்அன்வர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ckவசீம்அன்வர் |
இடம் | : இராமநாதபுரம் |
பிறந்த தேதி | : 04-Feb-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 257 |
புள்ளி | : 43 |
எழுதிய வார்த்தைகளை
உயர வைத்து ரசிப்பவன்....
தாய் மொழியை உயிர்
கொடுத்து சுமப்பவன்...
இந்தியா ஊடகத்துறை யை
இதை விட எவராலும் கேவல படுத்தி விட முடியாது.
இயற்கை பேரிடர் காலங்களில் கூட தனது கேவலமான ஈன பிறவி குணத்தை காண்பித்த இந்திய ஊடகங்களுக்கு
நேபாள் வாழ் வெளிநாட்டினர் கொடுத்த செருப்படி தான் இந்த புகைபடம்
வெட்கமாக இருக்கிறது இவர்களை நினைத்து ..
உதவி செய்ய முன்வந்தவர்களை கூட மதவெறியை தூண்டி விட்டு
தனது ஈன புத்தியை தீர்த்து கொண்ட இந்திய ஊடகத்திற்கு சமர்ப்பணம்.
பாகிஸ்தான் நேபாளுக்கு மாட்டிறைச்சி அனுப்பியது என்று மத அரசியலை திணித்து தம் அரிப்பை தீர்த்துக் கொண் (...)
[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]
உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?
உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?
அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய
முற்றத்திலே கொத்தோடு மலர்
பக்கத்திலே மொட்டையாக
#விதவை
எண்ணில் அடங்கா மலர்
கண் எதிரே கனத்த மனசுடன்
#விதவை
விதை போட்டவனும் புதையுண்டான்
நன்றியுடன் மலர் மாலையாக
#புகைப்படத்தில்
சுட்டெரிக்கும் சூரியனையும்
விட்டு விடவில்லை
#காதல்
கள்ளிப் பாலுக்கு தப்பி உயிர்
கற்பழிப்புக்கு பலியானது
#பெண்
இதயம் அற்றவன் கட்டளைப்படி
எரித்தது மொட்டுக்களை
#துப்பாக்கி
வலி எடுத்து அம்மா அழுதாள்
வெளியே வந்ததும் நான் அழுதேன்
இவைதான் தொப்புள் கொடி வந்தமோ
#குழந்தை
ஏதாவது ஒன்றை
எழுதி விட வேண்டுமென்று
துடிக்கும் என் பேனா....
அதன் துடிப்பே
இந்த தொடக்கம்...
கண்டதையும்
எழுத முடியாமல்
கண்டபடி கசக்குகிறேன்
மூளையை...
அங்கும் இங்கும்
தலை திருப்பி
தவியாய் தவிக்கிறேன்...
இரவும் பகலும்
உணரக்கண்டேன்
சிந்தனையில்
மாறுபடும் செயல்திறனை..
ஒரு படைப்பு சிறக்க
பார்வைகள் வேண்டும்
பார்வைக்கும் மேலாக
கருத்துரை வேண்டும்
அதன் பின்பு
அங்கீகாரம்
கவிஞன் என்றொரு அந்தஸ்து
இவைகளை தாண்டமுடியாமல்
தவிக்குது
படகு போல் என் படைப்பு...
விரிந்த வானில்
பறக்கும் பறவைகள்
அது போல்
என் படைப்புகளும்
சிறகு விரிக்க
ஆசைகொள்கின்றேன்...
இடைவிடாத உழைப்பு
இடை
ஏதாவது ஒன்றை
எழுதி விட வேண்டுமென்று
துடிக்கும் என் பேனா....
அதன் துடிப்பே
இந்த தொடக்கம்...
கண்டதையும்
எழுத முடியாமல்
கண்டபடி கசக்குகிறேன்
மூளையை...
அங்கும் இங்கும்
தலை திருப்பி
தவியாய் தவிக்கிறேன்...
இரவும் பகலும்
உணரக்கண்டேன்
சிந்தனையில்
மாறுபடும் செயல்திறனை..
ஒரு படைப்பு சிறக்க
பார்வைகள் வேண்டும்
பார்வைக்கும் மேலாக
கருத்துரை வேண்டும்
அதன் பின்பு
அங்கீகாரம்
கவிஞன் என்றொரு அந்தஸ்து
இவைகளை தாண்டமுடியாமல்
தவிக்குது
படகு போல் என் படைப்பு...
விரிந்த வானில்
பறக்கும் பறவைகள்
அது போல்
என் படைப்புகளும்
சிறகு விரிக்க
ஆசைகொள்கின்றேன்...
இடைவிடாத உழைப்பு
இடை
விடியல் இல்லை இனிமேல்,
இருளோடு போய்விட்டது - இவள்
இளமையின் வெளிச்சம்...
அலையென கொதிக்கும்
அவன் நினைவுகளுடனே
அஸ்தமித்துவிட்டது இவள் இதயம்..!
'விட்டு விடு' என்று நான் புலம்ப
தொடர்ந்தாய் நீயும்
நமதான காதலுக்கு -ஆயிரம்
நியாயங்கள் கூறியே!
இன்று துணையின்றி யாசித்தேன்
உந்தன் அன்பை - எறிந்தாய்
நேசித்த நெஞ்சை ,இரண்டாய் பிளந்தாய்!
பிச்சை கேட்டு பிழைப்பது
மானத்துக்கு கேடாம் - அதைவிட
உயிரை விட்டு விடுவது மேலாம்...
உயிரை விட மேலாக,
உன்னை நேசித்த நானும் - இன்று
பிச்சை கேட்கும் நிலைமையில்!
சொல்லடா, உயிரை விட்டுவிடவா?
காலம் தோன்றியது முதல்
கால் ஊன்றிய நிலை வரை
பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும்
இடையில் நகர்ந்துகொண்டேயிருக்கும்
ஒரு நடைவண்டியை போல் நாம்..
நன்றிகெட்ட ஜென்மங்களாய்
தொன்றுதொட்டு தொடர்வதனால்
நமக்கும் நட்புக்கும் நடுவில்
மறைந்து கொண்டேயிருக்கும்
மாலைநேர கதிரவனைப் போல்..
காவலுக்கு கற்களை கடவுளாய்
படைத்த மனிதநாகரீகம்
காப்பகத்தில் பெற்ற தெய்வங்களை
மிருகமாய் அடைப்பது
எவ்வகை நியாயம்..
உறவுகளை சுமையென ஒதுக்கி
உணர்வுகளை தனக்கென செதுக்கி
காண்பதெல்லாம்
கையகப்படுத்தும் கயவர்களின் நிலை
இன்று
மூட்டைகள் சுமக்கும் கழுதைகளாய்..
நட்பின் போர்வையில் நரிகளென
கொத்திக் கொறிக்கும் குருவிகளென
அ
கற்கண்டு சாலையை
மொய்க்கின்ற வாகனம்.
நெஞ்சுக்குள் ஏதோ
மின்சார அதிர்வுகள்.
விழிமூடி உறங்கிட
அரங்கேறும் நடனம்.
உள்ளங்கை உராய்ந்து
ஒழுகின்ற உதிரம்.
உற்சாகம் குறைந்து
எழுகின்ற மிருகம்.
வழி தவறிய சாலைகள்
வசந்தத்தின் தவறுகள்.
வார்த்தைகள் தடுமாறும் விந்தை
விரசங்களும் அதற்க்கு உடந்தை.
வற்றாத பாசம்
தழும்பாகும் நேசம்.
நாளெல்லாம் நந்தவனமாகும்
பூவெல்லாம் நடைபிணமாகும்.
தூரவொளிச்சத்தம் மூர்க்கமாகும்.
பிறை தேடிய வானம்
பிரியத்தில் காணும்.
பிரியாமல் நாமும்
சரிபாதியாவோம்.........
ஜனவரி 26
இந்திய குடியரசு தினம் ;
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும்.
ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர்.நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர்.இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக (...)
இது தான் சமத்துவம் சகோதரத்துவம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தாழ்த்தப்பட்டவன் பிணம் கூட எங்கள் வீதி வழியாக வரக்கூடாது என்று சொல்லுபவர்கள் மத்தியில்....
தேவிப்பட்டிணத்தில் "இந்து சகோதரனின்" உடலை சுமந்து செல்லும் "முஸ்லீம்கள்" மற்றும் இந்து சகோதரர்கள்.
இந்த ஒற்றுமையை குலைக்க நினைக்கும் குள்ளநரிகளுக்கு இப்படம் சமர்ப்பணம்!
டெல்டா மாவட்டத்தில் நடக்கும் மீதேன் குழாய் பதிப்பிற்கான எதிர்ப்பை தெரிவியுங்கள்............
08030636336 என்ற எண்ணிற்கு missed call மட்டும் கொடுங்கள் ................
டெல்ட்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் ..........